என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கஜா புயல் பாதிப்பு
நீங்கள் தேடியது "கஜா புயல் பாதிப்பு"
கொடைக்கானலில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்ததால் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்று கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #GajaCyclone #KarunanidhiStatue
கொடைக்கானல்:
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக நான் ஏற்கனவே பயணதிட்டம் தயார் செய்து நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி இருந்தேன். புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்ததால் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #GajaCyclone #KarunanidhiStatue
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடைக்கானல் கீழ் மலை கிராமங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு உள்ள பழங்குடியின மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்றடையவில்லை. ஒரு சில தன்னார்வலர்கள் மட்டுமே உதவி செய்து உள்ளனர். நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலை மாற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #GajaCyclone #KarunanidhiStatue
கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 791 ரூபாய் குவிந்தது. #GajaCyclone
சென்னை:
பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 791 ரூபாய் குவிந்தது. #GajaCyclone
“கஜா” புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது.
வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
கஜா புயல் பாதிப்புக்கு முழுமையாக நிதி வழங்காதது ஏன்? என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டனர். #GajaCyclone #HCMaduraiBench
மதுரை:
மதுரை மேலூரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், புயலில் சாய்ந்த தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே போல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்பவரும் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘கஜா’ புயல் பாதித்த பகுதியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், மீட்பு பணியில் முப்படையினரையும், துணை ராணுவத்தினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
செல்வராஜ் தாக்கல் செய்த மனுவில் புகைப்பட ஆதாரம் இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 5-ந் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புகைப்பட ஆதாரம் இல்லாவிட்டாலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 12-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு வக்கீலிடம், கஜா புயல் பாதிப்புக்கு முழுமையாக மத்திய அரசு நிதி வழங்காதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
அதற்கு மத்திய அரசு வக்கீல் பதில் அளிக்கும் போது, தமிழக அரசு தகவல் தராமல் காலம் தாழ்த்துகிறது. அதனால் உரிய முடிவு எடுக்க முடியவில்லை என்றார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. #GajaCyclone #HCMaduraiBench
மதுரை மேலூரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், கஜா புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், புயலில் சாய்ந்த தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே போல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்பவரும் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘கஜா’ புயல் பாதித்த பகுதியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், மீட்பு பணியில் முப்படையினரையும், துணை ராணுவத்தினரையும் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தஞ்சை பேராவூரணியைச் சேர்ந்த முருகேசன், புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 5-ந் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புகைப்பட ஆதாரம் இல்லாவிட்டாலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 12-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு வக்கீலிடம், கஜா புயல் பாதிப்புக்கு முழுமையாக மத்திய அரசு நிதி வழங்காதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
அதற்கு மத்திய அரசு வக்கீல் பதில் அளிக்கும் போது, தமிழக அரசு தகவல் தராமல் காலம் தாழ்த்துகிறது. அதனால் உரிய முடிவு எடுக்க முடியவில்லை என்றார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. #GajaCyclone #HCMaduraiBench
கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு உடனே நிதி ஒதுக்க கோரி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை அ.தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து வலியுறுத்தினார்கள். #GajaCyclone #ArunJaitley #ADMKMPs
சென்னை:
கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஏராளமான பேர் வீடுகளை இழந்ததுடன், லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை, பலா மரங்களும் சாய்ந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும் நாசமானது.
ஆனால் சேத மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்பதால் மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய குழுவினரும் நேரில் வந்து பார்வையிட்டு சேத விவரங்களை அறிந்து சென்றனர். ஆனால் இன்னும் மத்திய அரசு நிதி ஒதுக்காமல் உள்ளது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட இன்னும் ஒதுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை இன்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரணத்துக்கு உடனே நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர். #GajaCyclone #ArunJaitley #ADMKMPs
கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஏராளமான பேர் வீடுகளை இழந்ததுடன், லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை, பலா மரங்களும் சாய்ந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும் நாசமானது.
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு பொதுமக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். தமிழக அரசும் ரூ.1000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட இன்னும் ஒதுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை இன்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரணத்துக்கு உடனே நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர். #GajaCyclone #ArunJaitley #ADMKMPs
கஜா புயல் நிவாரணத்துக்கு இன்னும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். #GajaCyclone #CentralGovt #MinisterUdhayakumar
கோவில்பட்டி:
தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிதி கமிஷன் மூலமாக மத்திய அரசு, ஆண்டு தோறும் தேசிய பேரிடர் பணிக்காக 2 கட்டமாக நிதி வழங்கி வருகிறது. வழக்கமாக ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் தேசிய பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கும், ஏற்கனவே ஜூன் மாதத்திற்கான நிதியை வழங்கிவிட்டது.
தற்போது டிசம்பர் மாதத்திற்கான 2-வது கட்ட நிதியை தான் முன்கூட்டி வழங்கியுள்ளது. ஆனால் சிலர் இதனை தவறுதலாக புரிந்து கொண்டு மத்திய அரசு வழங்கிய 354 கோடி ரூபாய் கஜா புயல் நிவாரணத்துக்கு போதாது என்று கூறுகின்றனர். கஜா புயல் நிவாரணத்துக்கு இன்னும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை.
மத்தியக்குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை அரசுக்கு கொடுத்துள்ளது. ஆகையால் நல்ல அறிவிப்பு வரும் என்று நம்புகிறோம். கேரளாவிற்கு 3458 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். அதே போன்று 12 மாவட்டங்கள் தமிழகத்தில் கஜா புயலால் சேதமடைந்துள்ளன. அதில் 4 டெல்டா மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து முதல்வர், பிரதமரிடம் எடுத்து கூறி நிவாரணம் கேட்டுள்ளார்.
அரசியல் என்றால் விமர்சனங்கள் வருவது இயற்கை தான். ஆலைக்கு முதலீடு செய்தவர்கள் திறக்க முயற்சி செய்வார்கள். அதற்கு நாங்கள் பொறுப்பு ஆக முடியாது. ஆனால் அரசு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆலையை அரசு மூடி உள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் இணையலாம் என்று ஏற்கனவே முதல்வர், துணை-முதல்வர் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களும் இணைவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது, இணைந்தால் வரவேற்போம், யார் வேண்டுமானாலும் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #CentralGovt #MinisterUdhayakumar
தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிதி கமிஷன் மூலமாக மத்திய அரசு, ஆண்டு தோறும் தேசிய பேரிடர் பணிக்காக 2 கட்டமாக நிதி வழங்கி வருகிறது. வழக்கமாக ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் தேசிய பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கும், ஏற்கனவே ஜூன் மாதத்திற்கான நிதியை வழங்கிவிட்டது.
தற்போது டிசம்பர் மாதத்திற்கான 2-வது கட்ட நிதியை தான் முன்கூட்டி வழங்கியுள்ளது. ஆனால் சிலர் இதனை தவறுதலாக புரிந்து கொண்டு மத்திய அரசு வழங்கிய 354 கோடி ரூபாய் கஜா புயல் நிவாரணத்துக்கு போதாது என்று கூறுகின்றனர். கஜா புயல் நிவாரணத்துக்கு இன்னும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை.
மத்தியக்குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை அரசுக்கு கொடுத்துள்ளது. ஆகையால் நல்ல அறிவிப்பு வரும் என்று நம்புகிறோம். கேரளாவிற்கு 3458 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். அதே போன்று 12 மாவட்டங்கள் தமிழகத்தில் கஜா புயலால் சேதமடைந்துள்ளன. அதில் 4 டெல்டா மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து முதல்வர், பிரதமரிடம் எடுத்து கூறி நிவாரணம் கேட்டுள்ளார்.
மத்திய அரசு தரும் என்ற நம்பிக்கையுள்ளது. முதல்வர் ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உதவுகிறது என்பது தவறான குற்றச்சாட்டு. மக்களின் உணர்வுகளை மதித்து 22 ஆண்டுகள் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் இணையலாம் என்று ஏற்கனவே முதல்வர், துணை-முதல்வர் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களும் இணைவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது, இணைந்தால் வரவேற்போம், யார் வேண்டுமானாலும் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #CentralGovt #MinisterUdhayakumar
ஒரத்தநாடு அருகே கஜா புயலால் சேதமடைந்த வீட்டை சீரமைக்க முடியாத மனவேதனையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கிழக்கு முக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ராமையன். இவரது மகன் பாண்டியன் (வயது39). கூலித்தொழிலாளி. திருமணமாகாதவர்.
இவர் தனது தந்தை ராமையனுடன் கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 16-ந்தேதி தாக்கிய கஜா புயலில் இவருடைய கூரை வீடு சேதமடைந்தது.
புயலால் சேதமான வீட்டை சீரமைக்க பணம் இல்லாமல் பாண்டியன் மிகவும் வேதனைப்பட்டு வந்தார். மேலும் வேலையும் இல்லாமல் இருந்து வந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
நேற்று அதே பகுதியில் ஒரு விவசாயிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றின் குறுக்கே இருந்த கம்பத்தில் பாண்டியன் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாப்பாநாடு போலீசார் அங்கு சென்று பாண்டியனின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கிழக்கு முக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ராமையன். இவரது மகன் பாண்டியன் (வயது39). கூலித்தொழிலாளி. திருமணமாகாதவர்.
இவர் தனது தந்தை ராமையனுடன் கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 16-ந்தேதி தாக்கிய கஜா புயலில் இவருடைய கூரை வீடு சேதமடைந்தது.
புயலால் சேதமான வீட்டை சீரமைக்க பணம் இல்லாமல் பாண்டியன் மிகவும் வேதனைப்பட்டு வந்தார். மேலும் வேலையும் இல்லாமல் இருந்து வந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
நேற்று அதே பகுதியில் ஒரு விவசாயிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றின் குறுக்கே இருந்த கம்பத்தில் பாண்டியன் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாப்பாநாடு போலீசார் அங்கு சென்று பாண்டியனின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்று உறுதி செய்த பின்னர் தான் சென்னை செல்வேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #Vijayabaskar
புதுக்கோட்டை:
‘கஜா’ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புயல் பாதித்த பகுதிகளில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் அரசால் அமைத்து தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது தவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு சேத விபரங்கள் துல்லியமாக அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஏற்கனவே 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தற்போது 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. குக்கிராமங்கள் மற்றும் விவசாய மின் இணைப்புகளை 100 சதவீதம் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.
தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை கூறுகையில், அவர்களின் குறைகளை காது கொடுத்து கேட்க வேண்டியது அரசின் கடமை. அவர்களின் கோரிக்கையை முடிந்த அளவுக்கு அரசால் செய்து கொடுக்க வேண்டும். அல்லது சொந்த முயற்சியால் அதை நிறைவேற்றித்தர வேண்டும். முடியவில்லை என்றால் அவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு நான் செய்ததால் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணியின் போது என்னுடைய காரை யாரும் மறிக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத் தில் 95 சதவீதம் மீட்பு பணிகள் முடிந்து உள்ளது. குறிப்பாக மின்சாரம் 95 சதவீதம் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 5 சதவீதம் பணிகள் 2 அல்லது 3 நாட்களில் முடிவடையும். அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்று உறுதி செய்த பின்னர் தான் நான் சென்னை செல்வேன்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் இருந்து புதுக்கோட்டை விரைவாக மீண்டதற்கு அரசு மற்றும் அரசுடன் இணைந்து பொதுமக்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் பணியாற்றியது தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Vijayabaskar
‘கஜா’ புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புயல் பாதித்த பகுதிகளில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் அரசால் அமைத்து தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது தவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு சேத விபரங்கள் துல்லியமாக அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஏற்கனவே 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தற்போது 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. குக்கிராமங்கள் மற்றும் விவசாய மின் இணைப்புகளை 100 சதவீதம் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.
தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை கூறுகையில், அவர்களின் குறைகளை காது கொடுத்து கேட்க வேண்டியது அரசின் கடமை. அவர்களின் கோரிக்கையை முடிந்த அளவுக்கு அரசால் செய்து கொடுக்க வேண்டும். அல்லது சொந்த முயற்சியால் அதை நிறைவேற்றித்தர வேண்டும். முடியவில்லை என்றால் அவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு நான் செய்ததால் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணியின் போது என்னுடைய காரை யாரும் மறிக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத் தில் 95 சதவீதம் மீட்பு பணிகள் முடிந்து உள்ளது. குறிப்பாக மின்சாரம் 95 சதவீதம் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 5 சதவீதம் பணிகள் 2 அல்லது 3 நாட்களில் முடிவடையும். அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்று உறுதி செய்த பின்னர் தான் நான் சென்னை செல்வேன்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் இருந்து புதுக்கோட்டை விரைவாக மீண்டதற்கு அரசு மற்றும் அரசுடன் இணைந்து பொதுமக்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் பணியாற்றியது தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Vijayabaskar
கஜா புயல் நிவாரண நிதி வழங்கியதில் மத்திய அரசு எந்த பாகுபாடும் காட்டவில்லை என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #GajaCyclone #PonRadhakrishnan #CentralGovt
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தான் அங்கு அணை கட்ட தொடர் முயற்சி செய்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்த தி.மு.க. முயற்சிக்க வேண்டும்.
மேகதாது பிரச்சனையில் தி.மு.க.வினரும், காங்கிரசாரும் வேஷம் போடுகிறார்கள். இந்த பிரச்சனையை பேசித்தீர்க்க தி.மு.க. கூட்டணியை தமிழக முதல்வர் கர்நாடகத்திற்கு அனுப்பி இருக்க வேண்டும். அப்படி செய்யாதது தவறு.
புயல் நிவாரண நிதி வழங்கியதில் மத்திய அரசு எந்த பாகுபாடும் காட்டவில்லை. புயல் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு நேரில் ஆய்வு செய்கிறது. அதன்பிறகு அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நிதி ஒதுக்கப்படுகிறது.
தமிழகத்தில் குட்கா விவகாரம் மட்டுமல்ல எந்த ஊழலாக இருந்தாலும் அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குட்கா விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் வெளிநாட்டினர் வந்து எல்லா இடங்களையும் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளார்கள். இது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
வெளிநாட்டினர் விருந்தினராக வந்தால் அவர்களை வரவேற்கலாம். அழிக்க வருபவர்களை மகுடம் சூட்டி அழகு பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #PonRadhakrishnan #CentralGovt
நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தான் அங்கு அணை கட்ட தொடர் முயற்சி செய்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்த தி.மு.க. முயற்சிக்க வேண்டும்.
காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இது தொடர்பான முழு ஆய்வு மேற்கொள்ள சொல்லப்பட்டிருக்கிறது.
புயல் நிவாரண நிதி வழங்கியதில் மத்திய அரசு எந்த பாகுபாடும் காட்டவில்லை. புயல் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு நேரில் ஆய்வு செய்கிறது. அதன்பிறகு அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நிதி ஒதுக்கப்படுகிறது.
பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் விகிதாச்சாரத்திற்கு ஏற்பவே தமிழகத்திற்கும் நிதி ஒதுக்கப்படுகிறது.
குட்கா விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் வெளிநாட்டினர் வந்து எல்லா இடங்களையும் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளார்கள். இது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
வெளிநாட்டினர் விருந்தினராக வந்தால் அவர்களை வரவேற்கலாம். அழிக்க வருபவர்களை மகுடம் சூட்டி அழகு பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #PonRadhakrishnan #CentralGovt
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஆடு, மாடு, கோழிகள் வழங்கப்படும் என்று சென்னிமலையில் நடந்த விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #GajaCyclone #UdumalaiRadhakrishnan
சென்னிமலை:
சென்னிமலையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகமாக இருந்தது. அதற்கு 85 மருத்துவ குழுக்களை உருவாக்கி சிகிச்சை கொடுத்து தற்போது கோமாரி நோய் கட்டுக்குள் உள்ளது.
அதே போல் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில் நோய் தாக்குதல் இருந்தது. அங்கும் 50 சிறப்பு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு நோய் கட்டுக்குள் உள்ளது.
மேலும் நோய் பரவாமல் தடுக்க இன்னும் 15 நாட்களுக்கு கால்நடை சந்தைகள் நடப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் நோய் பரவாமல் தடுக்கப்படும். சத்தியமங்கலம் பகுதியில் நோய் பரவல் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கும் மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர்.
ஈரோடு, திருப்பூர் உள்பட 6 மாநகராட்சிகளில் 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை பாலி கிளினிக்குகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தற்போது கோமாரி நோய் தாக்குதலில் இறந்த கால்நடைகளை கணக்கெடுத்து வருகிறோம். இவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி முதலமைச்சருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.
கஜா புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு நிதி கொடுத்த பின்பு விலையில்லா ஆடுகள், மாடுகள், கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #UdumalaiRadhakrishnan
சென்னிமலையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகமாக இருந்தது. அதற்கு 85 மருத்துவ குழுக்களை உருவாக்கி சிகிச்சை கொடுத்து தற்போது கோமாரி நோய் கட்டுக்குள் உள்ளது.
அதே போல் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில் நோய் தாக்குதல் இருந்தது. அங்கும் 50 சிறப்பு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு நோய் கட்டுக்குள் உள்ளது.
மேலும் நோய் பரவாமல் தடுக்க இன்னும் 15 நாட்களுக்கு கால்நடை சந்தைகள் நடப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் நோய் பரவாமல் தடுக்கப்படும். சத்தியமங்கலம் பகுதியில் நோய் பரவல் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கும் மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர்.
ஈரோடு, திருப்பூர் உள்பட 6 மாநகராட்சிகளில் 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை பாலி கிளினிக்குகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தற்போது கோமாரி நோய் தாக்குதலில் இறந்த கால்நடைகளை கணக்கெடுத்து வருகிறோம். இவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி முதலமைச்சருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.
கஜா புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு நிதி கொடுத்த பின்பு விலையில்லா ஆடுகள், மாடுகள், கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #UdumalaiRadhakrishnan
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Thangamani
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் ஆகியோர் கறம்பக்குடி, மழையூர், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் நகர பகுதிகளில் 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. கிராம பகுதிகளில் 80 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.
தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் மின்சாரமும், ஊராட்சி பகுதிகளில் 40 சதவீதமும் வழங்கப்பட்டுவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டத்தை பொறுத்தவரை வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வழங்கப்பட வேண்டியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வார காலத்திற்குள் 100 சதவீத மின்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவிடும்.
வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பணியாற்றும் மின்சார ஊழியர்களுக்கு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒரு சில சம்பவங்கள் விபத்துக்கள் நடந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட வாரிய ஊழியர்களுக்கு தமிழக முதல்வரி டம் கலந்து பேசி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்கள் நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது அரசின் கொள்கை முடிவு. இருப்பினும் அவர்களின் கூலியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி பரிசீலனை எடுக்கப்படும்.
இயற்கை பேரிடரின் போது எவ்வாறு அவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை நாங்கள் கண்கூடாக தற்போது பார்த்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் மின் வாரிய ஊழியர்களை சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினர். #GajaCyclone #Thangamani
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் ஆகியோர் கறம்பக்குடி, மழையூர், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் நகர பகுதிகளில் 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. கிராம பகுதிகளில் 80 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.
தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் மின்சாரமும், ஊராட்சி பகுதிகளில் 40 சதவீதமும் வழங்கப்பட்டுவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டத்தை பொறுத்தவரை வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வழங்கப்பட வேண்டியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வார காலத்திற்குள் 100 சதவீத மின்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவிடும்.
வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பணியாற்றும் மின்சார ஊழியர்களுக்கு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒரு சில சம்பவங்கள் விபத்துக்கள் நடந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட வாரிய ஊழியர்களுக்கு தமிழக முதல்வரி டம் கலந்து பேசி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு ஐந்தாம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களில் மின்சார கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய பணியாளர்களை அமைச் சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கந்தர்வக் கோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகம் ஆகியோர் சந்தித்து அவர்களுடன் உணவருந்திய காட்சி.
மின்வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்கள் நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது அரசின் கொள்கை முடிவு. இருப்பினும் அவர்களின் கூலியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி பரிசீலனை எடுக்கப்படும்.
இயற்கை பேரிடரின் போது எவ்வாறு அவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை நாங்கள் கண்கூடாக தற்போது பார்த்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் மின் வாரிய ஊழியர்களை சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினர். #GajaCyclone #Thangamani
நாகை மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட்ட 181 கிராமங்களில் இதுவரை 157 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார். #GajaCyclone #OSManian
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணிணியில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியினை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் உள்ள 236 கிராம புறங்களில் 181 கிராமங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது.
இதுவரை 157 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி முழுமையாக முடிக்கப்பட்டு 82 கிராமங்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 75 கிராமங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகின்றன. 24 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தித்துறை ஆணையர் சுகன்தீப் சிங் பேடி, மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். #GajaCyclone #OSManian
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணிணியில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியினை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் உள்ள 236 கிராம புறங்களில் 181 கிராமங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது.
இதுவரை 157 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி முழுமையாக முடிக்கப்பட்டு 82 கிராமங்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 75 கிராமங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகின்றன. 24 கிராமங்களில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தித்துறை ஆணையர் சுகன்தீப் சிங் பேடி, மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். #GajaCyclone #OSManian
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கணக்கு எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #Nallakannu
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை தாலுகாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு சென்றும் 15 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிவாரணமாக 353 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. மத்திய அரசு குறைவான தொகை ஒதுக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. புயலால் 8 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. விவசாயிகள் தங்களிடம் இருந்த பொருட்களையும் இழந்து விட்டனர். இந்த புயல் மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்துவிட்டது. மீனவர்கள் ஏராளமான படகுகளை இழந்து விட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து மத்திய அரசு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும்.
தென்னைக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிவாரணம் போதுமானதல்ல. தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கணக்கு எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் மின் இணைப்பு உடனே வழங்க வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வக்கீல் பாரதி, முன்னாள் மாவட்ட செயலாளர் திருஞானம், மாவட்ட விவசாய சங்க செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர். #GajaCyclone
பட்டுக்கோட்டை தாலுகாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு சென்றும் 15 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிவாரணமாக 353 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. மத்திய அரசு குறைவான தொகை ஒதுக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. புயலால் 8 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. விவசாயிகள் தங்களிடம் இருந்த பொருட்களையும் இழந்து விட்டனர். இந்த புயல் மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்துவிட்டது. மீனவர்கள் ஏராளமான படகுகளை இழந்து விட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து மத்திய அரசு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும்.
தென்னைக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிவாரணம் போதுமானதல்ல. தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கணக்கு எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் மின் இணைப்பு உடனே வழங்க வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வக்கீல் பாரதி, முன்னாள் மாவட்ட செயலாளர் திருஞானம், மாவட்ட விவசாய சங்க செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர். #GajaCyclone
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X