search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric bill"

    • கடைக்கு மாதந்தோறும் ரூ.7000 முதல் 8000 வரை மின் கட்டணம் வரும்.
    • பரிசீலனை செய்து புதிய தொகை கணக்கிடப்பட்டு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    திருப்பதி:

    கோடைகாலம் தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் கூடுதலாக ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மின் கட்டணம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

    ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் உயர்ந்து வருவதை பொதுமக்களும், வியாபாரிகளும் சமாளித்து வருகின்றனர்.

    ஆனால் ஆந்திர மாநிலத்தில் ஒரு சிறிய கடைக்கு ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் வந்ததால் கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் கோட்டூர் நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அங்குள்ள நகரப் பகுதியில் சிறிய கடையில் நகைக்கடை வைத்துள்ளார். இவருடைய கடைக்கு மாதந்தோறும் ரூ.7000 முதல் 8000 வரை மின் கட்டணம் வரும்.

    அதனை வழக்கம் போல செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை மின் கட்டணம் ரூ. ஒரு கோடியே 15 லட்சத்து 56,116 என மின் ஊழியர்கள் கணக்கிட்டு அட்டையில் எழுதிக் கொடுத்தனர். இதனை பார்த்ததும் நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    மின்கட்டணம் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டார் . உடனடியாக அவரது கடையில் இருந்த மின் மீட்டரை சோதனை செய்தனர். அது பழுதாகி அளவுக்கு அதிகமாக மின்சாரம் செலவழிக்கப்பட்டதாக பதிவு செய்தது தெரிய வந்தது.

    பரிசீலனை செய்து புதிய தொகை கணக்கிடப்பட்டு வழங்குவதாக உறுதியளித்தனர். இதனால் நகைக்கடை உரிமையாளர் நிம்மதி அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Thangamani
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் ஆகியோர் கறம்பக்குடி, மழையூர், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் நகர பகுதிகளில் 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. கிராம பகுதிகளில் 80 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் மின்சாரமும், ஊராட்சி பகுதிகளில் 40 சதவீதமும் வழங்கப்பட்டுவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வழங்கப்பட வேண்டியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வார காலத்திற்குள் 100 சதவீத மின்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவிடும்.

    வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பணியாற்றும் மின்சார ஊழியர்களுக்கு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒரு சில சம்பவங்கள் விபத்துக்கள் நடந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட வாரிய ஊழியர்களுக்கு தமிழக முதல்வரி டம் கலந்து பேசி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு ஐந்தாம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களில் மின்சார கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய பணியாளர்களை அமைச் சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கந்தர்வக் கோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகம் ஆகியோர் சந்தித்து அவர்களுடன் உணவருந்திய காட்சி.

    மின்வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்கள் நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது அரசின் கொள்கை முடிவு. இருப்பினும் அவர்களின் கூலியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி பரிசீலனை எடுக்கப்படும்.

    இயற்கை பேரிடரின் போது எவ்வாறு அவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை நாங்கள் கண்கூடாக தற்போது பார்த்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் மின் வாரிய ஊழியர்களை சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினர். #GajaCyclone #Thangamani
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #TamilMaanilaCongress #GKvasan
    சென்னை:

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    அங்கு சுற்றுப் பயணம் செய்த அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னார். இன்று சென்னை திரும்பிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிகப்பேரழிவை கஜா புயல் ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க த.மா.கா. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இந்த தொகை அரசிடம் வழங்கப்படும்.

    புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார வசதி இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    பெரும் கவலையில் மூழ்கியுள்ள அவர்களுக்கு இது மேலும் சுமையாக இருக்கும். எனவே இந்த மாவட்ட மக்களுக்கு இந்த மாத மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இயல்பு நிலை திரும்பும் வரை இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுகடைகளையும் மூட வேண்டும். மது கடைகள் திறந்தால் நிவாரண பணிகளுக்கு இடையூறு ஏற்படும். சீரமைப்புப் பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும்.

    புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாயும், சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாயும், முறிந்து போன தென்னை மரம் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபாயும், சாய்ந்து போன வாழைக்கு ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கவேண்டும்.


    நெல்லுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், கரும்புக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாயும், பிற பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், சேதமடைந்த, இடிந்து போன வீடுகளுக்கு குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாயும் நிவாரணமாக கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கோவை தங்கம், ஜி.ஆர். வெங்கடேஷ், டி.என். அசோகன், டி.எம்.பிரபாகர், மாவட்ட தலைவர் சைதை மனோகரன், முனவர் பாட்சா ஆகியோர் உடன் இருந்தனர். #GajaCyclone #TamilMaanilaCongress #GKvasan
    ×