search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relief finance"

    கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 791 ரூபாய் குவிந்தது. #GajaCyclone
    சென்னை:

    “கஜா” புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


    பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 791 ரூபாய் குவிந்தது. #GajaCyclone
    ×