search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ பன்னீர்செல்வம்"

    • அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசி உள்ளார்.
    • தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் உடன் ஒருங்கிணைந்து செயல்பட தி.மு.க. முடிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாக களம் இறங்கியுள்ளன.

    இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு இடம் ஒதுக்கப்படாத நிலையில் மேல்-சபை எம்.பி. பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேல்-சபை எம்.பி. பதவி மட்டுமே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்கப்பட்டிருப்பது அந்த கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


    இருப்பினும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடாத நிலையில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    கமல்ஹாசனை பொறுத்தவரையில் கட்சி தொடங்கிய நாளில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் மோடி எதிர்ப்பை கடுமையாக காட்டி வருகிறார் பாரதிய ஜனதா ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு முன்பு பல்வேறு அறிக்கைகளில் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

    தேர்தல் நேரங்களில் இது தொடர்பாக வீடியோக்களையும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியினரால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிரசாரம் செய்யும் போது மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை அதிக அளவில் விமர்சித்தும் பேச உள்ளார். மோடி எதிர்ப்பை முழுமையாக கையில் எடுக்க அவர் முடிவு செய்து இருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் ஆதரித்து அவர் தேர்தல் பிரசார களத்தில் பேச இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


    இந்திய குடியுரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சமீபத்திய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக விமர்சிக்க உள்ளார்.

    இது பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும் போது, "எங்கள் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு நிச்சயம் வலு சேர்க்கும் வகையில் அமையும். அதே நேரத்தில் அவரது பிரசாரம் மக்கள் மத்தியில் பேசப்படும் வகையிலும் மாறி இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    இதற்கிடையே அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது தேர்தல் பிரசாரத்தில் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் பற்றி இருவரும் பேசி இருக்கிறார்கள்.

    இந்த சந்திப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவையும் வெளியிட்டு உள்ளார். அதில் நாடு காக்கும் ஒற்றை நோக்கம். அதற்கான செயல்பாடுகளின் திட்டம் பற்றி ஆலோசிக்க தமிழ்நாடு அமைச்சர் அன்பு இளவல் டி.ஆர்.பி.ராஜாவை சந்திப்பு. நிறைவான உரையாடல் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் கமல்ஹாசன் சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழை நேசித்து அவரிடமே கலைஞானி என்று பட்டம் பெற்றவர், சமத்துவமும் பகுத்தறிவும் அரசியல் பார்வையாகக் கொண்டிருப்பவர், மதவெறி-மக்கள் விரோத பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட இந்தியா கூட்டணியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து களமாடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பாராளுமன்றத் தேர்தல் களத்திலும்-தளத்திலுமான ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து ஆலோசித்தோம்.

    மகத்தான வெற்றிப் பயணத்தின் தொடக்கம் என்று அதில் கூறி இருக்கிறார். இதன் மூலம் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் உடன் ஒருங்கிணைந்து செயல்பட தி.மு.க. முடிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    • இந்து சமுதாயமே அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
    • தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா ஒரு ஜனநாயக நாடு. தலையை எண்ணுவது தான் ஜனநாயகத்தின் வேலை. எண்ணிக்கையை வைத்து தான் தெருவில், ஊரில், அரசியலில், பாராளுமன்றத்தில் மரியாதை. நம்பர் இருந்தால் தான் ஜெயிக்க முடியும். நான் சமூகத்தைச் சார்ந்து சொல்லவில்லை, மதத்தையும் சேர்த்துதான் சொல்கிறேன்.


    இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டேபோகிறது. இந்து சமுதாயமே அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் சமநிலை இருக்காது என்பதால் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என கூறுகிறேன்.

    பாராளுமன்ற தேர்தல் வருகிறது, நல்லவருக்கு வாக்களியுங்கள். தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார்கள் என நம்பி பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். ஓட்டு போட ரெட்டியார் சமூகம் தயங்க கூடாது. பணம் வாங்காமல் வாக்களியுங்கள். நாங்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என எழுதி கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்களில் உறுதிமொழி பதாகைகள் வைக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்தால் நிச்சயம் பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி இரு தினங்களில் தமிழக பயணத்தை மேற்கொண்டு முடிக்க உள்ளார். அதற்குள் இந்தியாவினுடைய பா.ஜ.க. வேட்பாளர்கள் முழு பட்டியல் வெளியிடப்படும். பா.ஜ.க.வும், கூட்டணி கட்சியும் 39 தொகுதியிலும் பிரதமர் மோடி வேட்பாளராக நிற்கிறார் என எண்ணிதான் நாங்கள் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ளோம். மீண்டும் மூன்றாம் முறையாக மோடி 3.0, அதில் வெற்றி பெறுவோம்.

    தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க.வின் வாக்குகள் பா.ஜ.க.விற்கு நல்ல பலன்களாக வந்தடையும். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' பற்றி அடிப்படை அறிவு இல்லாமல் தி.மு.க. கட்சி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவது. இது ஏற்கனவே இருந்த நடைமுறைதான். இடையில் இந்த நடைமுறை மாறி விட்டது.


    கப்பலூர் சுங்கச்சாவடி யாருடைய ஆட்சியில் வந்தது என மத்திய நெடுஞ் சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கேள்வி கேட்டதற்கு, கனிமொழி மற்றும் மாணிக்கம் தாகூர் இருவரும் வாயை பொத்திக் கொண்டனர். சுங்கச்சாவடி நடைமுறையே வரும் காலத்தில் மாற உள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ஆங்காங்கே சென்சார் மூலம் பயணம் முறையில் மாற்றப்பட்டு எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோமோ அதற்கு ஏற்ப வரி வசூல் செய்யப்படும்.

    இதற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் கப்பலூர் சுங்கச்சாவடி இருக்காது. இந்தப் பகுதி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்லும் பொழுது கப்பலூர் சுங்கச்சாவடி இருக்காது. ஜனநாயகத்தை தி.மு.க. கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே நோட்டுக்கு வாக்களிக்க வேண்டாம் என பா.ஜ.க. சார்பில் வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்வதுடன், ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று பதாகைகளை வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • உலக மக்கள் நலம் பெற சுவாமி தரிசனம் செய்ததாக பதிலளித்தார்.

    திருச்செந்தூர்:

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று இரவு வந்தார்.

    திருச்செந்தூரில் தனியார் விடுதியில் தங்கிய அவர் இன்று அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் தீர்த்தம் எடுத்துகொண்டு நேராக கோவிலுக்கு சென்று காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் சத்ரு சம்கார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து காலை 6 மணிக்கு மூலவருக்கு நடத்த அபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    தீர்ப்பு இன்று வரவுள்ள நிலையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுவாமி தரிசனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், உலக மக்கள் நலம் பெற சுவாமி தரிசனம் செய்ததாக பதிலளித்தார். மேலும் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்ய வந்தபோது எடுத்த படம்.

    • பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
    • தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஓ.பி.எஸ். ஆலோசித்து வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளார்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட ஓ.பி.எஸ். விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினரோ தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வருகிறார்கள்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓ.பி.எஸ். தவித்து வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக கூறிவரும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையில் போட்டியிட்டால் நமது தனித்தன்மையை இழந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

    இதனை ஆமோதித்துள்ள ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்பது பற்றி ஆலோசித்து வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இது ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தல் நேரத்தில் சிக்கலை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. இதனால் தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஓ.பி.எஸ். ஆலோசித்து வருகிறார்.

    ஆனால் அவரது இந்த முடிவை பாரதிய ஜனதா கட்சியினர் விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், "நீங்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால்தான் சரியாக இருக்கும். புதிதாக ஒரு சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் மக்களிடம் அதனை எளிதாக கொண்டு போய் சேர்க்க முடியாது" என்று கூறி வருகிறார்கள்.

    இது ஓ.பி.எஸ்.சுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் சொல்வதை கேட்பதா? ஆதரவாளர்களின் கருத்துபடி செயல்படுவதா? என்று முடிவெடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். திணறி வருகிறார்.

    • பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.
    • நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார்.

    சென்னை:

    கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். ஏறாத நீதிமன்றம் இல்லை. ஆனால் எங்கும் ஓ.பி.எஸ்.க்கு தீர்ப்பு சாதகமாக வரவில்லை. இதனால் அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வுக்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வந்தார். இன்னும் நான் தான் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றும் கூறி வருகிறார்.

    அ.தி.மு.க.வின் சின்னத்தை பயன்படுத்துவது அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்துவது, காரில் அ.தி.மு.க. கொடியை பறக்க விடுவது போன்று அவரது ஆதரவாளர்கள் இருந்தனர்.

    இதுபோன்ற செயல்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்ததால் அ.தி. மு.க. தொடர்பான எதையும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.


    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்திருந்தனர். இதை அடுத்து பிரதான மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்த போது இருதரப்பு வாதங்களுக்கு பின் வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.

    ஆனால் அதற்கு முன்பே செல்லும் இடமெல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் கூறி வந்தார்.

    இந்த நிலையில்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் படிவம் 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில் கையெழுத்திட இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அப்படி கொடுக்க முடியாத பட்சத்தில் இரு தரப்புக்கும் வேறு சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) தொண்டர் மீட்பு குழுவுக்கு பொதுசின்னம் தர வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளார்.

    இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதுவரை பா.ஜனதா கூட்டணியில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்று ஓ.பி.எஸ். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஓ.பி.எஸ். கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அதை பதிவு செய்து கொண்டது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை அங்கீகரித்து அவருக்கு மீட்டிங் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. எனவே இப்போது வரை அ.தி.மு.க. கொடி, சின்னம் என அனைத்தும் எடப்பாடி பழனிசாமி வசம்தான் உள்ளன.

    நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நாளை இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வர உள்ளது.

    இதில் ஓ.பி.எஸ்.க்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் செயல்படும். எனவே இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஓ.பி.எஸ். மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்றனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் விருப்ப மனு வாங்கி உள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது ஆதரவு தெரிவிப்பாரா? என்பது நாளை தெரிந்துவிடும். அதற்கேற்பதான் தேர்தல் கமிஷனில் முடிவும் அமையும்.

    • பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் களத்தில் இருப்போம்.
    • பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினார்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் டி.டி.வி.தினகரனும் சேர முடிவு செய்துள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கு காய் நகர்த்தி வந்தனர்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருவருக்கும் தலா 4 தொகுதிகள் வரையில் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    கட்சியும், கொடியும் இல்லாமல் தவித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் பெரிய கேள்வியாக மாறி இருந்தது.

    பாரதிய ஜனதா கட்சி சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட்டால்தான் 4 தொகுதிகளை ஒதுக்க முடியும் என்றும் வேறு சின்னத்தை நீங்கள் விரும்பினால் 2 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்றும் பாரதிய ஜனதா சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் ஓ.பி.எஸ். இதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டார். அ.தி.மு.க.வை மீட்க இப்போதும் போராடி வருகிறோம். இந்த சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எதிர்கால அரசியலை பாதிக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறியிருப்பதால் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு மட்டும் தெரிவிக்க ஓ.பி.எஸ். அணி அதிரடியாக முடிவெடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி விரைவில் அது தொடர்பான முடிவை அறிவிக்க உள்ளார். இரட்டை இலை சின்னம் கேட்டு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் அதில் தெளிவான முடிவு ஏற்பட்ட பிறகு அரசியல் களத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்த முடிவெடுத்துள்ளார்.

    இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ள இந்த தேர்தல் புறக்கணிப்பு முடிவு அவரது ஆதரவாளர்களை சோர்வடைய செய்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறும் போது, தற்போது எங்களிடம் கட்சி, சின்னம் என எதுவும் இல்லை. இந்த சூழலில் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எங்களது எதிர்கால நலனை பாதிக்கும் என்பதால் இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது என முடிவெடுத்து இருக்கிறோம்.

    விரைவில் அது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிடுவார். இருப்பினும் பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் களத்தில் இருப்போம். பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார் என்றார்.

    • சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.
    • பா.ஜனதா கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என்பது பற்றி விரைவில் தெரிவிப்போம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளார்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 2 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசினர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது ஓ.பன்னீர்செல்வத்திடம் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் அவரோ, நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி வருகிறோம். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இது போன்ற சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் தங்களது தனித்தன்மை போய் விடும் என்று தெரிவித்துள்ளார்.

    இரட்டை இலை சின்னம் தற்போது எடப்பாடி பழனிசாமியிடமே உள்ளது. எனவே பொதுவான சின்னத்தில் போட்டியிடுவதைவிட தாமரை சின்னத்திலேயே களம் இறங்குவது நல்லது என்றும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சந்தித்து பேசினார்கள். இரண்டாம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது போட்டியிடும் தொகுதிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.


    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை எடுத்துக் கூறி அந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம். பா.ஜனதா கூட்டணி மெகா கூட்டணியாக மாறி இருக்கிறது. பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் நாங்கள் நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக வெளியாகி இருக்கும் தீர்ப்பு தற்காலிகமானதுதான். சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

    வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதே என்று கேட்கிறீர்கள்.

    என்னையும்தான் ஒருங்கி ணைப்பாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. எனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பான சாதகம், பாதகங்களை தேர்தல் ஆணையம் விசா ரித்து முடிவை அறிவிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    கூட்டணி என்று வந்து விட்டால் ஒரே தொகுதிகளை இரண்டு, மூன்று கட்சிகள் கேட்பது இயல்பானதுதான். அவற்றையெல்லாம் பேசி சரி செய்து போட்டியிடு வோம். பா.ஜனதா கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என்பது பற்றி விரைவில் தெரிவிப்போம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    • சசிகலாவை நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் பேச வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.
    • பொது சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி புதிய கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, தங்கள் அணிக்கு 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டு பாரதிய ஜனதா கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். இருப்பினும் அதனை வெளிக்காட்டாமல் எத்தனை தொகுதிகளை உங்களுக்கு ஒதுக்குவது என்பது பற்றி பேசி முடி வெடுத்துக் கொள்ளலாம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தில் இருந்தவர். அ.தி.மு.க.வை மீட்பதற்காக சட்ட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற் கொண்டு வருகிறார்.

    அதனால் அவர் 15 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்று எண்ணியிருக்கலாம் என்றார். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தற்போது கட்சியும் இல்லை. கொடியும் இல்லை. எனவே அவருக்கு 15 தொகுதிகளை கொடுப்பது என்பது மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.

    4 அல்லது 5 இடங்களை ஓ.பி.எஸ்.சுக்கு ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தை தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி காய் நகர்த்தி வருகிறது.

    இதுதொடர்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது பா.ஜனதா நிர்வாகிகள் அவரிடம் நேரடியாகவே வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.


    அ.தி.மு.க. விவகாரம் இன்னும் முடிவுக்கு வராமலேயே உள்ளது. நாங்கள் தான் உண்மையான அ.தி. மு.க. என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இது போன்ற சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் தங்களது தனித்தன்மை பாதித்துவிடும் என்றும் எனவே பொது சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியினர் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்கள். இதை தொடர்ந்து அதுபற்றி ஆலோசித்து கூறுகிறேன் என்று ஓ.பி.எஸ். தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி முடிவெடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். குழப்பத்தில் உள்ளார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணிக்கு சசிகலாவின் ஆதரவை கேட்டுப் பெற வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

    சசிகலாவை நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் பேச வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். கூறியுள்ளார். ஆனால் இதனை பாரதிய ஜனதா கட்சியினர் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென் மாவட்டங்களில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றால் டி.டி.வி. தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர் கேட்கும் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கட்சியினரிடம் வலியுறுத்தி உள்ளார்.

    இதனை ஏற்றுக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியினர் டி.டி.வி. தினகரனுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பேச்சுவார்த்தைகளை விரைவாக முடித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

    • முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது.
    • மற்ற கட்சிகளுடன் கேட்டு அனைவரும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, வி.கே.சிங் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடரும்.

    * பாஜக பொறுப்பாளர்கள் எங்களுடைய கோரிக்கைகளை தெளிவாகக் கேட்டுள்ளனர்.

    * தொகுதிகள் குறித்து மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.

    * மற்ற கட்சிகளுடன் கேட்டு அனைவரும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படும்.

    * டிடிவி தினகரன் தனியாக அரசியல் கட்சியை நடத்துகிறார். அவரையும் அழைத்துப் பேச இருக்கிறார்கள் என்று கூறினார்.

    • கல்வித் துறையில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது ஆசிரியரின் கடமை.
    • தி.மு.க. அரசு தன் கடமையை செய்யாமல், குறை கூறிய ஆசிரியரின் குரல்வளையை நெருக்கியிருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி என்பவர் பொதுமக்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறையில் நிகழும் குறைகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி முறை பற்றியும் தனது முகநூல் பக்கத்தில் கட்டுரையாக தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். கல்வித் துறையில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது ஆசிரியரின் கடமை. அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், தி.மு.க. அரசு தன் கடமையை செய்யாமல், குறை கூறிய ஆசிரியரின் குரல்வளையை நெருக்கியிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் தனது கருத்துகளை ஆசிரியர் தெரிவித்து வருகிறார். ஆனால், இவர் எழுதிய கருத்துகள் தி.மு.க. அரசிற்கு எதிராக இருக்கிறது என்பதற்காக அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் ஆகும்.

    அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரே சுட்டிக்காட்டும் அளவுக்கு பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் இருக்கிறது என்றால், அந்த அளவுக்கு மோசமான நிலைமை பள்ளிக்கல்வித்துறையில் நிலவுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல், குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை அடக்குவது என்பது சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு. தி.மு.க. அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. கல்வித் துறையில் நிலவும் குறைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணவும், ஆசிரியரின் தற்காலிக பணிநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்யவும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்காக டி.டி.வி. தினகரனுடன் கைகோர்த்து உள்ள பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து எடப்பாடியை வீழ்த்துவதற்கு வியூகம் வகுத்துள்ளார்.
    • கட்சியும் இல்லை. சின்னமும் இல்லை. இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு கொடியும் இல்லாமல், கட்சியும் இல்லாமல் தவித்து வருகிறார். சட்டப் போராட்டங்கள் மூலமாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை எப்படியும் பறித்து விடலாம் என்கிற எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோல்வி அடைய செய்வோம் என்கிற கோஷத்தோடு களமிறங்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

    டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அரசியல் களம் கண்ட ஓ.பன்னீர்செல்வத்தை காலச்சக்கரம் அவருடனேயே கொண்டு சேர்த்து இருக்கிறது என்றால் மிகையாகாது. அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்காக டி.டி.வி. தினகரனுடன் கைகோர்த்து உள்ள பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து எடப்பாடியை வீழ்த்துவதற்கு வியூகம் வகுத்துள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அரசியல் பயணம் அவருக்கு எளிதாக இருக்கவில்லை. எந்த பக்கம் எப்படி பயணிப்பது என்று தெரியாமல் தவிக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனது தனித்தன்மை பாதிக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார்.

    அதே நேரத்தில் தற்போது அவருக்கு கட்சியும் இல்லை. சின்னமும் இல்லை. இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னமான குக்கர் சின்னத்தில் போட்டியிடலாமா அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிடலாமா என்பது பற்றியும் அவர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அணி நிர்வாகிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனுக்களை ரூ.10,000 செலுத்தி பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் இன்று மாலை 6 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    • அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து அதிமுக உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

    அக்குழுவில் வைத்திலிங்கம், கிருஷ்ணன், பிரபாகர், மனோஜ் பாண்டியன், தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இதனிடையே, பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

    ×