என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏலம்"
- விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- ஏலம் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்-பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அத்துடன் விநாயகருக்கு லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிலையில், விநாயகர் விஜர்சனம் நடைபெறுவதற்கு முன்பு விநாயகருக்கு வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.
அதன் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.1.20 கோடிக்கு ஏலம் போனது. இதனை அதே பகுதியில் வசிக்கும் ஒட்டு மொத்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வாங்கிக் கொண்டனர். கடந்த ஆண்டு விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.60.80 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
- வெப்பிலி விற்பனைக் கூடத்தில் ரூ.51 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
- ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 72 காசுக்கு விற்பனையானது
சென்னிமலை,
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,460 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 72 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 1 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 23 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 2,176 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 51 ஆயிரத்து 375 ரூபாய்க்கு விற்பனையானது.
- விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது.
- சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
அவிநாசி:
அவிநாசியை அடுத்த சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.
ஏலத்தில் முதல் தர நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.7,850 முதல் ரூ.8,260 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.7,400 முதல் ரூ.7,650 வரையிலும், மூன்றாம் தரம் ரூ.6,820 முதல் ரூ.7,400 வரையிலும், பச்சை நிலக்கடலை ரூ.2,730 முதல் ரூ.3,930 வரையிலும் விற்பனையானது.
ஏலத்தில் மொத்தமாக ரூ.15 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
- பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
- மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 15 ஆயிரத்து 960 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.01க்கும், குறைந்தபட்சமாக 51.99 க்கும்,சராசரியாக ரூ.76.89 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 17ஆயிரத்து 263- க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 10 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 78.99 க்கும் குறைந்தபட்சமாக ரூ 51.48 க்கும், சராசரியாக ரூ 77.49 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.
- பெருந்துறையில் ரூ.1.97 கோடிக்கு கொப்பரை ஏலம் போனது
- அதிக பட்சமாக கிலோ ரூ.83.29-க்கும் விற்பனையானது.
பெருந்துறை,
பெருந்துறை வேளா ண்மை பொருள்கள் உற்ப த்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடை பெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதி களைச் சேர்ந்த விவசா யிகள் 5 ஆயிரத்து 212 மூட்டைகளில் 2 லட்சத்து 53 ஆயிரம் கிலோ கொப்ப ரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். அதில் முதல் தரக் கொ ப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.75.69-க்கும், அதிக பட்சமாக ரூ.83.29-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொ ப்பரை குறைந்தபட்சமாக, ரூ.41-க்கும், அதிகபட்சமாக ரூ.78-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.1.97 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.
- வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது
- சராசரி விலையாக கிலோ 21 ரூபாய் 85 காசுக்கு ஏலம் போனது.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,700 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 70 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 85 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 833 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 18 ஆயிரத்து 218 ரூபாய்க்கு விற்பனையானது.
- கலால் அதிகாரிகள் இடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சரூர் நகர் என்ற பகுதியில் மட்டும் மதுக்கடைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.
தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது.
விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது எனவும் அறிவித்தனர்.
அதன்படி மது கடை ஏலம் எடுப்பதற்காக 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான பெண்களும் மதுக்கடை ஏலம் கேட்டு விண்ணப்பித்தனர்.
விண்ணப்ப படிவம் மூலம் ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் தெலுங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது. இந்த நிலையில மதுக்கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் விண்ணப்பம் செய்தவர்கள் கலந்து கொண்டனர் .
இந்த ஏலத்தில் தெலுங்கானா மாநிலம் முழுவதும் 100 கடைகளை பெண்கள் ஏலம் எடுத்தனர். இது கலால் அதிகாரிகள் இடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நகரப் பகுதிகளில் உள்ள கடைகள் பெண்கள் வசம் வந்துள்ளது. சரூர் நகர் என்ற பகுதியில் மட்டும் மதுக்கடைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அதிகபட்சமாக சரூர்நகர் 14, ஐதராபாத் 13, கேதராபாத் 8, ஷம்ஷாபாத் 7 கடைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முந்தைய காலங்கள் போல் இல்லாமல் இந்த ஆண்டு அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். நல்ல எண்ணிக்கையிலான பெண்கள் ஏலத்திலும் கலந்து கொண்டனர்.
ஒரு சில கடைகள் பெண்கள் பெயரில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் விண்ணப்பித்துள்ளனர் என கலால் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராடிவரும் நிலையில் 100 கடைகள் பெண்கள் வசமாகி இருப்பது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மொத்தம் 4 ஆயிரத்து 133 சாக்கு பைகளும் ஏலமிடப்பட உள்ளது.
- ஒரு நபரிடம் இருந்து ஒரு வங்கி வரைவோலை மட்டுமே பெறப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் நடுவூரில் உள்ள கால்நடை பண்ணையில் காலி தீவன பாலத்தின் சாக்கு பைகள் வருகிற 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை )காலை 11 மணிக்கு பொது ஏலமிடப்பட உள்ளது.
இதில் நல்ல நிலையில் உள்ள 4022 சாக்கு பைகளும் குறைந்த நிலையில் உள்ள 111 சாக்கு பைகளும் என மொத்தம் 4 ஆயிரத்து 133 சாக்கு பைகளும் ஏலமிடப்பட உள்ளது.
ஏலம் கால்நடை பண்ணையில் உள்ள துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடைபெறும்.
ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தனித்தனியாக ஏலத்திற்கான முன் வைப்புத் தொகை ரூ 1000ம் துணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பண்ணை நடுவூர் என்ற பெயரில் வங்கி வரைவோலையாக ஒரத்தநாட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மாற்றத்தக்க வகையில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு நபரிடம் இருந்து ஒரு வங்கி வரைவோலை மட்டுமே பெறப்படும். வரைவோலையுடன் ஆதார் அட்டை ஜெராக்ஸ் பெறப்பட்டு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஏலத்தில் கலந்து கொள்வ தற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படும். வங்கி வரை ஓலைகள் அனைத்தும் 5-ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும்.
ஏல முன்வைப்பு தொகை செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ஏலம் எடுத்தவர்கள் முழு தொகையும் செலுத்த தவறும் பட்சத்தில் அவர் செலுத்திய முன்வைப்புத் தொகை முழுவதும் இழக்க நேரிடும். ஏலம் விடப்படும் சாக்கு பைகளை துணை இயக்குனர் அல்லது பண்ணை மேலாளர் அனுமதி பெற்று பார்வையிடலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீபக்ே ஜக்கப் தெரிவித்துள்ளார்.
- திருவாரூர் ஒழுங்குமுறை விறபனை கூடத்தில் பருத்தி ஏலம் நடை பெற்றது.
- ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7,059க்கு ஏலம் போனது.
திருவாரூர்:
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் வைத்திருந்தனர்.
இந்த ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
அதுசமயம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச் சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர்.
இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.
இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 59 -க்கு ஏலம் போனது.
குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 209 விலையும் கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 612-க்கு விற்பனையானது.
- சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.
- தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.
இதில் சுமார் 152 குவிண்டால் எடையுள்ள 303 மூட்டை தேங்காய் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தர தேங்காய் பருப்புகள் குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ.7,556 முதல் ரூ.7,810 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.6,175 முதல் ரூ.7,475 வரை விலை போனது. இதன்படி மொத்தம் ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்து 771-க்கு தேங்காய் பருப்புகள் விற்பனையானது.
தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 99-க்கும் விலை போனது.
- ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.1.76 கோடி ஆகும்.
கும்பகோணம்:
கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விற்பனைக்கூட கண்காணி ப்பாளர் பிரியாமாலினி தலைமையில் நடந்த ஏலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து பருத்தி விவசாயிகள் 2 ஆயிரத்து 400 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர்.
கும்பகோணம், பண்ரூட்டி, விழுப்புரம், சேலம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 689-க்கும், குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 99-க்கும் விலை போனது. இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.1.76 கோடி என ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் தெரிவித்தனர்.
- காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.
- ஆண்டிற்கு 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.
பல்லடம்:
பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம், அண்ணா வணிக வளாகம், தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் முத்துசாமி, மேலாளர் சண்முகராஜா, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஏலத்தை நடத்தினர்.
காலியாக உள்ள 34 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.இதில் வியாபாரிகள் கலந்துகொண்டு பஸ் நிலையத்தில் 14 கடைகளும், தினசரி மார்க்கெட்டில் 3 கடைகளும், தலா ரூ. 11ஆயிரம் முதல் 11.500 வரை ஏலத்தில் எடுக்கப்பட்டது.
இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டிற்கு 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்