search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lattu"

    • பிரசாத லட்டு கவுண்டர்களிலும் லட்டு வாங்குவதற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
    • ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் இருந்து ரிங் ரோடு, நாராயணகிரி ஷெட், சீலா தோரணம் தாண்டி 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் தரிசனத்திற்காக வரிசையில் காத்துநின்றனர்.

    இதேபோல் பிரசாத லட்டு கவுண்டர்களிலும் லட்டு வாங்குவதற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.

    திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாஸ் ஆகிய கவுண்டர்களில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்படுகிறது. இதனை பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.

    நேர ஒதுக்கீடு இலவச தரிசனம் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 5 முதல் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 40 முதல் 45 மணி நேரம் காத்திருந்தனர்.

    திருமலையில் 40 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தங்குவதற்கு அறைகள் உள்ளன. அதற்கு மேலும் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வந்து அறைகள் கிடைக்காமல் அவதி அடைவதை தவிர்க்க வேண்டும்.

    கீழ்திருப்பதியில் தங்கி இருந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    இதேபோல் நடைபாதை அருகே சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் நடைபாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    நடைபாதை மற்றும் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணவில்லை.

    இதனால் தற்போது இரவு 12 மணி முதல் 2 மணி வரை மட்டும் நடைபாதை மூடப்படுகிறது. முன்பு போல் பக்தர்கள் நடை பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    இதனால் நடைபாதையில் செல்லும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 66, 233 பேர் தரிசனம் செய்தனர். 36,486 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • ஏலம் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தெலங்கானா மாநிலம், ஐதராபாத்-பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அத்துடன் விநாயகருக்கு லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிலையில், விநாயகர் விஜர்சனம் நடைபெறுவதற்கு முன்பு விநாயகருக்கு வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.

    அதன் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.1.20 கோடிக்கு ஏலம் போனது. இதனை அதே பகுதியில் வசிக்கும் ஒட்டு மொத்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வாங்கிக் கொண்டனர். கடந்த ஆண்டு விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.60.80 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    • புரட்சி தலைவி அம்மா ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்தை ஆலமரமாக உருவாக்கினார்.
    • புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று செல்லும் என தீர்ப்பு வழங்கிய சந்தோசமான தினத்தை எடப்பாடி பழனிசாமியின் தீவிர பக்தனும் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளருமான டாக்டர் சுனில், தொண்டர்களுடன் இணைந்து சுமார் 150 கிலோ எடையுள்ள பிரமாண்டமான லட்டுவை தலைமை கழகத்துக்கு ஊர்வலமாக கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்களுடன் பிரமாண்டமான லட்டை வழங்கி சந்தோசமாக கொண்டாடினார்கள்.

    இது சம்பந்தமாக கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் எடப்பாடியாரின் பக்தன் டாக்டர் சுனில் கூறியதாவது:-

    கழகத் தொண்டர்களாகிய எங்களை பொறுத்தவரை மூன்று தலைவர்கள், ஒன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை எதிர்த்து இந்த இயக்கத்தை உருவாக்கி கட்சியை வளர்த்தெடுத்தார், அதற்குப்பின் புரட்சி தலைவி அம்மா ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்தை ஆலமரமாக உருவாக்கினார்.

    அதற்குப்பின் துரோகிகளின் பிடியிலிருந்து இந்த ஆல மரத்தை ஒன்றரை கோடி தொண்டர்களின் கனவை எடப்பாடியார் கட்டிக் காத்து வருகிறார். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் . மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியில் அமரும் வரை தொடர்ந்து பாடுபடுவோம்.

    இவ்வாறு டாக்டர் சுனில் கூறினார். 

    ×