search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புரட்டாசி சனிக்கிழமையில் அலைமோதிய கூட்டம்: பக்தர்கள் 45 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம்
    X

    புரட்டாசி சனிக்கிழமையில் அலைமோதிய கூட்டம்: பக்தர்கள் 45 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம்

    • பிரசாத லட்டு கவுண்டர்களிலும் லட்டு வாங்குவதற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
    • ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் இருந்து ரிங் ரோடு, நாராயணகிரி ஷெட், சீலா தோரணம் தாண்டி 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் தரிசனத்திற்காக வரிசையில் காத்துநின்றனர்.

    இதேபோல் பிரசாத லட்டு கவுண்டர்களிலும் லட்டு வாங்குவதற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.

    திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாஸ் ஆகிய கவுண்டர்களில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்படுகிறது. இதனை பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.

    நேர ஒதுக்கீடு இலவச தரிசனம் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 5 முதல் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 40 முதல் 45 மணி நேரம் காத்திருந்தனர்.

    திருமலையில் 40 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தங்குவதற்கு அறைகள் உள்ளன. அதற்கு மேலும் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வந்து அறைகள் கிடைக்காமல் அவதி அடைவதை தவிர்க்க வேண்டும்.

    கீழ்திருப்பதியில் தங்கி இருந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    இதேபோல் நடைபாதை அருகே சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் நடைபாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    நடைபாதை மற்றும் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணவில்லை.

    இதனால் தற்போது இரவு 12 மணி முதல் 2 மணி வரை மட்டும் நடைபாதை மூடப்படுகிறது. முன்பு போல் பக்தர்கள் நடை பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    இதனால் நடைபாதையில் செல்லும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 66, 233 பேர் தரிசனம் செய்தனர். 36,486 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×