search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்"

    • காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.
    • ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.

    முத்தூர்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 4 விவசாயிகள் 8 மூட்டைகள் (338 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.92-க்கும், குறைந்த பட்சமாக ரூ.50-க்கும், சராசரியாக ரூ.90- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார். 

    • திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்துக்கு 1,035 மூட்டைகள் நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
    • பச்சை நிலக்கடலை ரூ.4,500 முதல் ரூ.5,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.22.51 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானது.

     அவிநாசி:

    அவிநாசியை அடுத்த சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்துக்கு 1,035 மூட்டைகள் நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

    இதில், குவிண்டால் ஒன்றுக்கு முதல் தர நிலக்கடலை ரூ.8,000 முதல் ரூ 8,340 வரை, இரண்டாம் தரம் ரூ.7,450 முதல் ரூ.8,000 வரை, மூன்றாம் தரம் ரூ.6,500 முதல் ரூ.7,450 வரை, பச்சை நிலக்கடலை ரூ.4,500 முதல் ரூ.5,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.22.51 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானது.

    தீபாவளியையொட்டி நவம்பா் 13 ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் நவம்பா் 14 ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நிலக்கடலை ஏலம் நடைபெறும் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    • மொத்தம் 2245 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. 46 விவசாயிகள் பங்கேற்றனர்.
    • ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 27.45 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.85 ரூபாய்க்கும், சராசரி 26.55 ரூபாய்க்கும் ஏலம் போனது.

    முத்தூர்:

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி நடந்த கொப்பரை ஏலத்தில் 2245 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ 85.45 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.60.15 க்கும், சராசரியாக ரூ.82.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2245 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. 46 விவசாயிகள் பங்கேற்றனர்.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 32 பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 7579 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 27.45 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.85 ரூபாய்க்கும், சராசரி 26.55 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.83 ஆயிரத்துக்கு ஏலம் போனது என விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார்.

    • முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும்.
    • மொத்தம் 1330 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

    முத்தூர்:

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.10 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 1330 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 91.10 க்கும், குறைந்த பட்சமாக ரூ.63.10 க்கும் ஏலம் போனது. மொத்தம் 1330 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் 23 பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 6517 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.27.80 -க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.24.15-க்கும், சராசரி ரூ.27.30-க்கும் ஏலம் போனது. 2.7 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.74 ஆயிரத்துக்கு ஏலம் போனது என விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார்.

    • விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது.
    • சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    அவிநாசி:

    அவிநாசியை அடுத்த சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

    ஏலத்தில் முதல் தர நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.7,850 முதல் ரூ.8,260 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.7,400 முதல் ரூ.7,650 வரையிலும், மூன்றாம் தரம் ரூ.6,820 முதல் ரூ.7,400 வரையிலும், பச்சை நிலக்கடலை ரூ.2,730 முதல் ரூ.3,930 வரையிலும் விற்பனையானது.

    ஏலத்தில் மொத்தமாக ரூ.15 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

    • வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாள்தோறும் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
    • சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் எள், தேங்காய், கொப்பரை உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

     ெவள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாள்தோறும் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பொருள்களை கொள்முதல் செய்கின்றனா்.

    இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் எள், தேங்காய், கொப்பரை உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், 21 மூட்டை எள், 61 மூட்டைகள் கொப்பரை, 11 ஆயிரம் தேங்காய் என மொத்தம் 9 டன் விளைபொருள்களை வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். இதன் மூலம் ரூ.4.39 லட்சம் வா்த்தகம் நடைபெற்றுள்ளதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தங்கவேல் தெரிவித்துள்ளாா். 

    • கொப்பரை கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையானது.
    • நிலக்கடலை ஏலத்தில் ரூ.4.80 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று கொப்பரைகளை கொள்முதல் செய்கின்றனா்.இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த 10 விவசாயிகள் 2,071 கிலோ கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். கொப்பரை கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையானது. மொத்தமாக ரூ.1.62 லட்சத்துக்கு கொப்பரைகள் விற்பனையாயின. இத்தகவலை காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ராமன் தெரிவித்துள்ளாா்.

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் அருகிலுள்ள கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பொருள்களை கொள்முதல் செய்கின்றனா்.

    இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.4.80 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. இதில் குவிண்டால் ஒன்றுக்கு முதல்ரக நிலக்கடலை ரூ.7,300 முதல் ரூ.7,600 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ.7,000 முதல் ரூ.7,300 வரையிலும், மூன்றாவது ரகம் ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும் விற்பனையானது.

    • 19 மூட்டை சிவப்பு எள் வரத்து இருந்தது. எடை 1,396 கிலோ. சராசரி விலையாக கிலோ ரூ.136க்கு விற்பனையானது.
    • மொத்தம் 77 விவசாயிகள், 12 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 6.70 டன் எள், தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

    19 மூட்டை சிவப்பு எள் வரத்து இருந்தது. எடை 1,396 கிலோ. சராசரி விலையாக கிலோ ரூ.136க்கு விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ. 1.89 லட்சம் ஆகும். 9,489 தேங்காய்கள் வரத்து இருந்தன. எடை 4,288 கிலோ. கிலோ ரூ. 16.75 முதல் ரூ. 20.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 20.10 ஆகும். 38 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,007 கிலோ. கிலோ ரூ. 55.15 முதல் ரூ. 75.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 73.70 ஆகும்.

    மொத்தம் 77 விவசாயிகள், 12 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 3.43 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

    • ஏலத்துக்கு 115 மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனா்.
    • நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ. 7,450 வரையில் ஏலம் போனது.

    அவினாசி :

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 115 மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனா். குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ. 7,450 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    • 1.61 கோடி ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்பட்டுள்ளது.
    • 15 ஆயிரத்து 500 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அவிநாசி :

    சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் முதன்முறையாக கொப்பரை கொள்முதல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 148 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு 1.61 கோடி ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்பட்டுள்ளது.

    ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் தற்போது நாபெட் வாயிலாக கொப்பரை கொள்முதல் நடந்துவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, அலங்கியம், மூலனூர், உடுமலை என 6 மையங்களில் கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு மொத்தம் 15 ஆயிரத்து 500 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இதில் அவிநாசி, குன்னத்தூர் சுற்றுவட்டார விவசாயி கள் பயன்பெறும் வகையில் அவிநாசி, சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை கொள்முதல் அனுமதிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் அங்கு 1,000 மெட்ரிக்., டன் அளவுக்கு கொப்பரை கொள்முதல் செய்ய மார்க்கெட்டிங் கமிட்டி அனுமதி வழங்கியது. இதையடுத்து அங்கும் கொப்பரை கொள்முதல் நடந்து வருகிறது.கண்காணி ப்பாளர் சந்திரமோகன் கூறுகையில், கொப்பரை கொள்முதலில்160 விவசாயிகள்பதிவு செய்துள்ளனர். இதுவரை 106 விவசாயிகளிடம் இருந்து 2,965 மூட்டையில் 148 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    நாபெட் கொள்முதல் விலை அடிப்படையில் 1.61 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தேவையான குடோன் வசதி இருப்பதால் விவசாயிகள் கொப்பரைக்கு அரசின் கொள்முதல் விலை பெறலாம் என்றார்.

    • 1,406 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • ஒரு கிலோ ரூ. 60.40 முதல் ரூ. 82.35 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 50.37 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு வரை ஏலம் நீடித்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 157 விவசாயிகள் தங்களுடைய 1,406 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 70 டன். காங்கயம், வெள்ளக்கோவில், நஞ்சை ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆா்.எஸ், சிவகிரி பகுதிகளைச் சோ்ந்த 11 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

    ஒரு கிலோ ரூ. 60.40 முதல் ரூ. 82.35 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 79. கடந்த வார சராசரி விலை ரூ. 79.65. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 50.37லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா். 

    • அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
    • உரிமத்தை புதுப்பித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை 1987-ம் வருட தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை (ஒழுங்குபடுத்தல்) சட்டம் பிரிவு 8 (1). 1991-ம் வருட தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை (ஒழுங்குபடுத்தல்) விதிகள் பிரிவு 24,25,27-ன் படி திருப்பூர் விற்பனைக்குழுவின் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்மை விளைபொருட்களை அடிப்படையாக கொண்டு காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உரிமம் பெற்று இயங்கிவரும் நிறுவனங்கள் உரிமத்தை புதிப்பிக்காமலும், வணிகம் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் மாதாந்திர கணக்கறிக்கையாக சமர்பிக்காமலும், விற்பனைக்கூடத்திற்கு செலுத்த வேண்டிய சந்தைக்கட்டணம் செலுத்தாமலும் உள்ளன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    எனவே இம்மாத இறுதிக்குள் (நாளைக்குள்) உரிமம் பெறாத நிறுவனங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம், உரிமம் பெற்று புதிப்பிக்காத நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×