search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருப்பு"

    • எலும்புகளை வலுப்படுத்துவதற்கு கீரை உதவுகிறது.
    • புரதச்சத்து உணவுகளை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

    பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு அலுவலக வேலைக்கும் சென்று வருவது சற்று சவாலான விஷயம்தான். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர். பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்...

     கீரை

    கீரை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

     பருப்பு

    பருப்பு பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் உணவுப் பொருள். இதில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. எனவே இதை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பருப்பு மிகவும் நல்லது.

     ஓட்ஸ்

    ஓட்சில் தினசரி ஆற்றலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன. அவை மற்ற தானியங்களை விட அதிக புரதம் மற்றும் கொழுப்புச் சத்தை கொண்டிருக்கின்றன. மற்றும் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவற்றையும் ஓட்ஸ் கொண்டுள்ளது.

     பால்

    பணிபுரியும் பெண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவதற்கும், எலும்பு அமைப்பு பாதிக்கப்படுவதற்கும் அதிக ஆபத்து உள்ளது. இது அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. பால் கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் புரதம், பாஸ்பரஸ், பி வைட்டமின் காம்ப்ளக்ஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவையும் உள்ளன.

     ப்ரோக்கோலி

    பெண்கள் உண்ணவேண்டிய முக்கிய உணவுகளில் ப்ரோக்கோலியும் முக்கியமானது. ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கிறது. இது புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்று அறியப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கால்சியம் நிறைந்தது, இது எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது.

     பீட்ரூட்

    பீட்ரூட் நார்ச்சத்துக்கான சிறந்த மூலப்பொருளாகும். இது குடலை ஆரோக்கியமாக வைத்து செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. பீட்ரூட் மற்றும் அதன் சாறு மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சிறந்த உடற்பயிற்சி, செயல்திறன் போன்ற பல நன்மைகளுடன் தொடர்புடையது.

     பாதாம்

    பாதாம் ஒரு ஃப்ரீபயாடிக் உணவாகும். அதாவது இது உங்கள் செரிமான அமைப்பு வழியாக செல்லும்போது புரோபயாடிக்குகளை உருவாக்க உதவுகிறது. 1/4 கப் பாதாம் ஒரு முட்டையை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இதில் மெக்னீசியமும் உள்ளது. இந்த உணவுகளை பெண்கள் தங்கள் உணவுகளில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு மிகவும் நல்லது.

    • பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
    • மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 15 ஆயிரத்து 960 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.01க்கும், குறைந்தபட்சமாக 51.99 க்கும்,சராசரியாக ரூ.76.89 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 17ஆயிரத்து 263- க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 10 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 78.99 க்கும் குறைந்தபட்சமாக ரூ 51.48 க்கும், சராசரியாக ரூ 77.49 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

    • சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.
    • தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.

    இதில் சுமார் 152 குவிண்டால் எடையுள்ள 303 மூட்டை தேங்காய் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தர தேங்காய் பருப்புகள் குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ.7,556 முதல் ரூ.7,810 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.6,175 முதல் ரூ.7,475 வரை விலை போனது. இதன்படி மொத்தம் ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்து 771-க்கு தேங்காய் பருப்புகள் விற்பனையானது.

    தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 44 லட்சம் டன் முதல் 45 லட்சம் டன் வரை துவரம் பருப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
    • கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்த விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது.

    சென்னை:

    நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் துவரம் பருப்பு விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

    தென்னிந்தியாவில் சாம்பார், கூட்டு, கடையல், வடை உள்ளிட்ட பல விதமான உணவு வகைகளை தயார் செய்ய துவரம் பருப்பே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    வட இந்தியாவிலும் துவரம் பருப்பு சமையலில் பல விதங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 44 லட்சம் டன் முதல் 45 லட்சம் டன் வரை துவரம் பருப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்த விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு தற்போது துவரம் பருப்பு மொத்த விலையில் ரூ.129-க்கு விற்கப்படுகிறது. ஒரு ஆண்டில் மட்டும் 25 சதவீத அளவுக்கு விலை உயர்ந்து உள்ளது. தற்போது சில்லரை விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த 2021-2022-ம் நிதியாண்டில் இந்தியாவில் துவரம் பருப்பு உற்பத்தி 39 லட்சம் டன்னாக இருந்தது. 2022-2023-ம் நிதியாண்டில் துவரம் பருப்பு உற்பத்தி 30 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இந்த பற்றாக்குறையை சரிசெய்ய நடப்பு நிதியாண்டில் 12 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித்குமார் கூறியதாவது:- இந்தியாவில் துவரம் பருப்பு தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். இந்த ஆண்டு 12 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 6 லட்சம் டன் துவரம் பருப்பு மியான்மர் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

    மீதமுள்ள துவரம் பருப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஆகஸ்டு மாதத்தில் வந்துவிடும்.

    துவரம் பருப்பு விலையை கட்டுக்குள் வைத்திருக்க கையிருப்பில் உள்ள 50 ஆயிரம் டன் துவரம் பருப்பை சந்தையில் விடவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் வரும் வாரங்களில் துவரம் பருப்பு விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது.
    • கடலை எண்ணெய் லிட்டர் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கயம் :

    சமையலில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின் விலை வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.துவரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி திருப்பூர், உடுமலையில் துவரம் பருப்பு கிலோ மொத்த விலை 120 ரூபாய், சில்லறை விலை 140 ரூபாய்க்கு விற்றது. தற்போது மொத்த விலை 140 ரூபாய், சில்லறை விலை 160 ரூபாயாக உயர்ந்துள்ளது.பாசிப்பருப்பு 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. உளுந்து கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 130 ரூபாயில் இருந்து 150 ரூபாயாகியுள்ளது.

    சீரகம் விலை இதுவரை இல்லாத வகையில் கிலோவுக்கு 200 ரூபாய் கூடி கிலோ 600 ரூபாய்க்கு விற்கிறது. மிளகு, 150 ரூபாய் விலை உயர்ந்து கிலோ 800 ரூபாய்க்கு விற்கிறது.கர்நாடக பொன்னி கிலோ 55 ரூபாயில் இருந்து 60, ராஜபோகம் பொன்னி கிலோ 58ல் இருந்து 64, இட்லி அரிசி 40ல் இருந்து 45 ரூபாயாகியுள்ளது.அரிசி பருப்பு விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கவலை அளித்தாலும், எண்ணெய் விலை சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது.

    கடலை எண்ணெய் லிட்டர் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் லிட்டர் 150 முதல் 130 ரூபாய் வரை விற்பனையானது. இம்மாதம் லிட்டருக்கு 40 முதல் 60 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. திருப்பூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை பொருளாளர் சாமி கூறுகையில், நடப்பு மாதத்தில் அரிசி விலை கிலோவுக்கு 5ரூபாய் வரையும், பருப்பு, உளுந்து விலை கிலோவுக்கு 15 முதல் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே நேரம் கடலை எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது. வெளி மாநில வரத்து குறைந்து வருவதால் விலை உயர்ந்துள்ளது. சீரகம் இதுவரை இல்லாத விலை உயர்வை தற்போது எட்டியுள்ளது என்றார். காங்கயம் பகுதியில் 450- க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. மேலும் 150-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகின்றனர். இந்த களங்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரளாவிலிருந்தும் தேங்காய் கொண்டுவரப்பட்டு மட்டை உரித்து, உடைத்து உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. உலர்களங்களில் உலர்த்தப்படும் பருப்பு தனியார் தேங்காய் எண்ணெய் நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள கிரஷிங் யூனிட்டுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

    காங்கயம் கிரஷிங் யூனிட்டுகளில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய்யானது டேங்கர் லாரிகள், டின்களில் அடைக்கப்பட்டு வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்களில் அடைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கடைகள் மூலம் விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் கொப்பரை தேங்காயின் விலை அதிகரிக்கவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.85 முதல் ரூ.86 வரை விற்பனையானது. அதன் பின்னர் தேங்காய் பருப்பு விலை சற்றே குறையத் தொடங்கியது. கடந்த மார்ச் மாதத்தில் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.81 வரை விற்பனையானது. பின்னர் தொடர்ந்து கொப்பரை தேங்காயின் விலை ஏறாமல் குறைந்து கொண்டே வந்தது. தற்போது 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.74 ஆக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1,720 ஆக இருந்த 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் தற்போது ரூ.1,580 ஆக உள்ளது. இதனால் தோப்புகளில் தேங்காய்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.

    இதுகுறித்து காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால் கூறியதாவது:- சோயா எண்ணெய், பாமாயில் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை குறைந்ததால், தேங்காய் எண்ணெய்யின் விற்பனை குறைவானது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் விலை சரிந்துள்ளது. மேலும் தேங்காய் எண்ணெய்யை அதிக அளவில் உபயோகிக்கும் கேரளாவில் தற்போது தேங்காய் எண்ணெய் ஆலைகள் ஆங்காங்கே உருவாக்கி செயல்பட்டு வருகிறது. இதுவே தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தேங்காய் எண்ணெய் விற்பனை குறைவானதற்கு ஒரு காரணமாகும்.

    தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரித்தால் மட்டுமே கொப்பரை தேங்காய் விலை உயரும். அந்த வகையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை வினியோகம் செய்தால் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரிக்கும். கொப்பரை தேங்காயின் விலையும் குறையாது. தோப்புகளில் தேங்காய்களுக்கும் உரிய விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில் விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த சில மாதமாக உரிய விலை கிடைக்காதது, பருவம் தவறி பெய்த மழை, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி பயிர்கள் பாதித்தது. நடவு செய்த பெரும்பாலான விவசாயிகள் தக்காளி செடிகளை அழித்தனர். இந்நிலையில் தற்போது வரத்து குறைவு காரணமாக மீண்டும் தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. உடுமலை சந்தையில் 14 கிலோ கொண்ட பெட்டி 375 ரூபாய் வரை விற்பனையானது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    உடுமலை சந்தைக்கு ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும் நிலையில் கடந்த சில மாதமாக விலை இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால் அழிக்கப்பட்டது.மழை பொழிவும் குறைந்ததால் சாகுபடி பரப்பும் பெருமளவு குறைந்தது. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து தற்போது 6 ஆயிரம் பெட்டிகள் என்ற அளவில் உள்ளது. இதனால் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    பருப்பு தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    நாடு முழுவதும் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் விளைச்சல் குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சர்வதேச சிறுதானிய ஆண்டை ஒட்டி, அவற்றின் சாகுபடிக்கு பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவே பருப்பு சாகுபடி குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே குறுவை பருவத்தில் நெல்லுக்கு மாற்றாக பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் பருப்பு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1,740 ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.

    இதற்கான பயனாளிகள் தேர்வில் வேளாண் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். சென்னை, கன்னியாகுமரி, கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இத்திட்ட மானியம் கிடைக்கும்.இதற்காக உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. சம்பா பருவ நெல் சாகுபடி பருவத்திலும் பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    • தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கடந்த வாரம் 8 ஆயிரத்து 155 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.71- க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 587-க்கு ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 234 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.30-க்கும், குறைந்த பட்சமாக ரூ.55.80-க்கும், சராசரியாக ரூ.82.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 698-க்கு விற்பனை நடைபெற்றது.

    • பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
    • இதில் 7 ஆயிரத்து 857‌ கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

    இதில் 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.

    இ-நாம் செயலி மூலம் ஏலம் நடைபெற்றது, விவசாயிகளுக்கு விற்பனை தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×