search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்டு"

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்
    • சபரிமலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக நடைபெறுகிறது

    கன்னியாகுமரி, நவ.2-

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணி கள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னி யாகுமரிக்கு சுற்றுலா பயணி கள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும்.

    இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடு முறை என்பதாலும், கிறிஸ்து மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட் டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும். இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை யொட்டியும் சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர் கள் கூட்டம் அலைமோதும்.

    எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டும். கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சபரிமலை சீசனையொட்டி கன்னியா குமரி பகவதி அம்மன் கோவி லில் தினமும் ஆயிரக்க ணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர் களுக்கு வசதியாக திருக்கோ வில் நிர்வாகம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் பக்தர்கள் வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்வதற்கு வசதி யாக "கியூ செட்" அமைந்து உள்ள பகுதியில் சிமெண்ட் தரைத்தளம் அமைக்கும் பணி, மின்விளக்கு வசதி மேல் கூரை சீரமைக்கும் பணி போன்ற பணிகள் நடை பெற்றுள்ளன. கோவிலின் வெளிப்பிரகா ரத்தில் உள்ள நடைபாதை குண்டும், குழியுமாக கிடந்தது. பிரகார நடைபாதையில் சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப் பட்டு சீரமைக்கப் பட்டுள்ளது. கோவிலின் கிழக்கு வாசல் பகுதியும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலை யில் வருகிற 17-ந்தேதி சபரி மலை சீசன் தொடங்குகிறது.

    இந்த சீசனையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வருவார்கள். இதைத்தொ டர்ந்து பக்தர்களுக்கு வசதி யாக கோவிலில் நடை திறக்கும் நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்க திருக்கோவில் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. மேலும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் அய்யப்ப பக்தர்களுக்கு பிரசாதமாக விற்பனை செய்யப்பட்டு வரும் லட்டு, அரவணை, முறுக்கு, பஞ்சா மிர்தம், அதிரசம் போன்ற பிரசா தங்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த சபரிமலை சீசனையொட்டி 1 லட்சம் லட்டு தயாரிக்கும் பணியும் இப்போதே தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார். ஆய்வின் போது நாகர் கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப் பாளரும், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பிரசாத லட்டு கவுண்டர்களிலும் லட்டு வாங்குவதற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
    • ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் இருந்து ரிங் ரோடு, நாராயணகிரி ஷெட், சீலா தோரணம் தாண்டி 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் தரிசனத்திற்காக வரிசையில் காத்துநின்றனர்.

    இதேபோல் பிரசாத லட்டு கவுண்டர்களிலும் லட்டு வாங்குவதற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.

    திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாஸ் ஆகிய கவுண்டர்களில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்படுகிறது. இதனை பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.

    நேர ஒதுக்கீடு இலவச தரிசனம் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 5 முதல் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 40 முதல் 45 மணி நேரம் காத்திருந்தனர்.

    திருமலையில் 40 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தங்குவதற்கு அறைகள் உள்ளன. அதற்கு மேலும் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வந்து அறைகள் கிடைக்காமல் அவதி அடைவதை தவிர்க்க வேண்டும்.

    கீழ்திருப்பதியில் தங்கி இருந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    இதேபோல் நடைபாதை அருகே சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்கள் நடைபாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    நடைபாதை மற்றும் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணவில்லை.

    இதனால் தற்போது இரவு 12 மணி முதல் 2 மணி வரை மட்டும் நடைபாதை மூடப்படுகிறது. முன்பு போல் பக்தர்கள் நடை பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    இதனால் நடைபாதையில் செல்லும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 66, 233 பேர் தரிசனம் செய்தனர். 36,486 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • ஏலம் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தெலங்கானா மாநிலம், ஐதராபாத்-பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அத்துடன் விநாயகருக்கு லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிலையில், விநாயகர் விஜர்சனம் நடைபெறுவதற்கு முன்பு விநாயகருக்கு வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.

    அதன் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.1.20 கோடிக்கு ஏலம் போனது. இதனை அதே பகுதியில் வசிக்கும் ஒட்டு மொத்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வாங்கிக் கொண்டனர். கடந்த ஆண்டு விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.60.80 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    • உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.
    • துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.

    லட்சுமி கடாட்சம் தரும் திருப்பதி

    திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.

    இங்கு கோரகர் சித்தா ஜீவசமாதி அடைந்ததால்தான் இக்கோயில் பிரபலம் அடைந்தது என சொல்வோரும் உண்டு.

    ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் சிலர்.

    கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினைதோஷம் வறுமை போக்கும், சந்ததி விருத்தி உண்டாகும் என்கிறது.

    பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது. இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

    வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமாக மலைகள் உள்ளன.

    வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல் குவியும் என்று கௌரு திருப்பதிரெட்டி தனது வாஸ்து நுலில் எழுதி உள்ளார்.

    உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.

    சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.

    அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

    சந்திரன்சக்தி மிகுந்த கோவில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

    மூலிகைகள் அதிகம் இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.

    மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசி நிறைந்து காணப்படுகிறது.

    திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல திருப்பதி சென்று வந்ததால் கடன் பிரச்சினை தீர்ந்து கல்யாணம் உடனே ஆன கதைகள் உண்டு.

    இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும்.

    துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.

    திருப்பதி கோவில் மகாலட்சுமிக்கு உண்டான கோவில் என பார்க்கப்படுவதால்தான் இவ்வளவு கூட்டம்.

    செல்வம் உண்டியலில் அதிகம் குவிவதால், பணம், என்னும் காட்சி ஐ பார்த்தாலே பரவசம்தான்.

    ஜோதிடப்படி மிதுன லக்னம், ரிசப லக்னம், கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.

    அவர்கள் பெருமாள் வழி பாட்டில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல வசதிகளோடு இருக்கின்றனர்.

    வடநாட்டவர் பெருமாள் தங்கள் பார்ட்டனர் என்று சொல்கிறார்கள்.

    பெருமாள் சிரித்த ஆனந்தமான தனது பார்வைகள் அனைவரையும் ஆனந்தபடுத்தும்.

    அங்கு சென்று வந்தால் மனம், சிந்தனை, குடும்பம் அனைத்தும் அமைதி ஆவதை உணரலாம்.

    குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள்.

    நடந்து நாம் மலை ஏறினால், அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். நிமிர்ந்து மலை ஏறுவதால், நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.

    • புரட்சி தலைவி அம்மா ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்தை ஆலமரமாக உருவாக்கினார்.
    • புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று செல்லும் என தீர்ப்பு வழங்கிய சந்தோசமான தினத்தை எடப்பாடி பழனிசாமியின் தீவிர பக்தனும் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளருமான டாக்டர் சுனில், தொண்டர்களுடன் இணைந்து சுமார் 150 கிலோ எடையுள்ள பிரமாண்டமான லட்டுவை தலைமை கழகத்துக்கு ஊர்வலமாக கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்களுடன் பிரமாண்டமான லட்டை வழங்கி சந்தோசமாக கொண்டாடினார்கள்.

    இது சம்பந்தமாக கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் எடப்பாடியாரின் பக்தன் டாக்டர் சுனில் கூறியதாவது:-

    கழகத் தொண்டர்களாகிய எங்களை பொறுத்தவரை மூன்று தலைவர்கள், ஒன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை எதிர்த்து இந்த இயக்கத்தை உருவாக்கி கட்சியை வளர்த்தெடுத்தார், அதற்குப்பின் புரட்சி தலைவி அம்மா ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்தை ஆலமரமாக உருவாக்கினார்.

    அதற்குப்பின் துரோகிகளின் பிடியிலிருந்து இந்த ஆல மரத்தை ஒன்றரை கோடி தொண்டர்களின் கனவை எடப்பாடியார் கட்டிக் காத்து வருகிறார். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் . மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியில் அமரும் வரை தொடர்ந்து பாடுபடுவோம்.

    இவ்வாறு டாக்டர் சுனில் கூறினார். 

    • சுப்ர பாதம், ஏகாந்த சேவை டிக்கெட் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
    • சமீப காலமாக ரூ.10-க்கு லட்டு விற்பனை செய்யப்பட்டது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தற்போது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலை கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்ட குங்குமார்ச்சனை சேவை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. குங்குமார்ச்சனை சேவை டிக்கெட்டின் விலை ரூ.200-ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே வழங்கப்பட்ட குங்குமார்ச்சனை சேவை டிக்கெட்டில் 2 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது ஒரு பக்தர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

    அபிஷேக சேவை டிக்கெட்டின் விலை ரூ.400 ஆக இருந்தது. தற்போது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாரத்தில் வியாழக்கிழமை தோறும் நடக்கும் திருப்பாவாடை சேவை டிக்கெட் ரூ.600-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் திருமலையைப் போல் சுபதம் டிக்கெட் முறையை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது. சுபதம் டிக்கெட் விலை ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சுப்ர பாதம், ஏகாந்த சேவை டிக்கெட் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அபிஷேக அனந்தர தரிசனத்துக்கான டிக்கெட் ரூ.20 ஆக இருந்தது. தற்போது அந்த டிக்கெட் ரூ.250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பத்மாவதி தாயார் கோவிலில் பல ஆண்டுகளாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் உயர்த்தப்படவில்லை. தற்போது ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை ஒரே அடியாக உயர்த்தி இருப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சமீப காலமாக ரூ.10-க்கு லட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஒரு லட்டு பிரசாதத்தின் விலை ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், லட்டு விலையை உயர்த்துவதற்கு முன்பாக பக்தர்களிடம் கருத்துகளை கேட்க வேண்டும் என அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொரோனா தொற்று பரவலின்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அதிக லட்டு பிரசாதங்களை தயாரித்து, அதை விற்பனை செய்ய முடியாமல் ரூ.50-க்கு விற்பனை செய்த லட்டுவை ரூ.25-க்கு மானிய விலையில் விற்பனை செய்தது. அந்த லட்டு பிரசாதத்தின் எடை 175 கிராம் முதல் 180 கிராம் வரை இருந்தது. ஒரு லட்டுவை தயாரிக்க ஆகும் செலவு தொகை ரூ.40 ஆக இருந்தது. ஆனால், லட்டுவின் விலையை தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    எனினும், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தருக்கு இலவசமாக ஒரு லட்டு பிரசாதம் வழங்கி வருவது நடந்து வருகிறது. இருப்பினும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உயா்த்தப்பட்ட லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்க தேவஸ்தானம் பரிசீலனை செய்ய வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தினையில் அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.
    • அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    தினைமாவு - ஒரு கப்

    நெய் - 1/2 கப்

    நறுக்கிய முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா கலவை - 1/2 கப்

    நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்

    செய்முறை :

    வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா சேர்த்து இலேசாக வறுத்து எடுக்கவும்.

    பின்பு தினைமாவை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.

    அதனுடன் நாட்டுச் சர்க்கரை, நட்ஸ் கலவை சேர்த்து கைகளால் உதிர்த்து இலேசாக பிசிறவும்.

    பிறகு சூடான நெய் விட்டு கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

    இப்போது சுவையான தினை நட்ஸ் லட்டு ரெடி.

    • எள் உடல் எடையை குறைக்க உதவும்.
    • உடலில் கொழுப்பு அளவை குறைக்க உதவும்.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை எள் - அரை கிலோ

    வெல்லம் -அரை கிலோ

    நெய் - 2 டேபிள்ஸ்பூன்

    பொடித்த ஏலக்காய் -1 டீஸ்பூன்

    செய்முறை:

    அடி கனமான பாத்திரத்தில் எள்ளை கொட்டி சிறு தீயில் வறுத்தெடுக்கவும். எள் பொன்னிறமாக மாறும் வரை இடைவிடாமல் வறுத்தெடுக்கவும். ஒருபோதும் எள் கருகிவிடக்கூடாது.

    வறுத்த எள்ளை மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.

    வெல்லத்தையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் சிறு தீயில் வைக்கவும்.

    பின்பு நெய் ஊற்றி அது சூடானதும், வெல்லத்தை கொட்டவும். வெல்லம் பாகு பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    அதனுடன் பொடித்த எள்ளையும், ஏலக்காயையும் சேர்த்து கிளறவும்.

    பின்பு லட்டுகளாக தயாரித்து காற்று புகாத டப்பாவில் 10 நாட்கள் வரை சேமித்து வைத்து சுவைக்கலாம்.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • சத்தானது சுவையானது இந்த ஸ்நாக்ஸ்.

    தேவையான பொருட்கள் :

    பேரீச்சம்பழம் - 1/4 கிலோ

    சாக்லேட் - 100 கிராம் அல்லது சாக்லேட் சிறப்பு - 100 மில்லி

    தேங்காய் - 1/2 மூடி

    செய்முறை :

    பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    தேங்காயை துருவி கொள்ளவும்.

    சாக்லேட்டை உருக்கி கொள்ளவும்.

    உருக்கிய சாக்லேட்டில் பேரீச்சம்பழ விழுது, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இப்போது சத்தான சுவையான சாக்லேட் பேரீச்சம் பழ லட்டு ரெடி.

    • பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஏற்பாடு
    • கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 22-வது ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாநாளை (வியாழக்கிழமை) தொடங்கு கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரைதொடர்ந்து 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டிநாளை அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 5.15 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமும் 7 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராமநாம ஜெபம் நடக்கிறது. கொட்டாரம் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பஜனை குழுவினர் இந்த ஜெபத்தை நடத்துகிறார்கள். மாலை 5மணிக்குபஜனையும் இரவு 7 மணிக்கு தீபாராதனையும் இரவு 7.15 மணிக்குஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது.

    2-வது நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையும், 5.15 மணிக்கு கலச பூஜையும், 8 மணிக்கு பஜனையும், 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அப்போது ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை பழச்சாறு, கரும்புச்சாறு, மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம், விபூதி, களபம், பன்னீர், நெய், பச்சரிசி மாவு, உள்பட 16 வகையான வாசனை திரவியங்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடக்கிறது. 11.15 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது பகல் 11.30 மணிக்கு மகா அன்னதானம் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனமும் 6.30 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, தட்டு வடை, குங்குமம், விபூதி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற கனி வகைகளும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துஉள்ளது. இதற்காக 5 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

    • பக்தர்களுக்கு நேரடியாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இணையதளத்தில் தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நேரடியாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற தகவல் முற்றிலும் தவறாகும். அந்தத் தகவலை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம். லட்டு பிரசாதத்துக்கு ஆன்லைன் பதிவு கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரவையில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று எளியமுறையில் ரவா லட்டு செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - ½ கிலோ

    சர்க்கரை - ½ கிலோ

    நெய் - 6 ஸ்பூன்

    முந்திரி பருப்பு - 50 கிராம்

    தேங்காய் - 1

    ஏலக்காய் - 12

    பால் - 250 மில்லி லிட்டர்

    செய்முறை:

    முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

    பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும்.

    அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும்.

    கைவிடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்

    பின்னர் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும்.

    கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும்.

    சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கலாம்.

    சுவையான ரவா லட்டு தயார்.

    ×