search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.பி.வேலுமணி"

    • பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். ’டோன்ட் கேர்’ என விட்டுவிடுங்கள்.
    • மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும்

    "3% - 4% வாக்கு வங்கி வச்சிருக்க பாஜகவில் நான் சேருவதாகச் சொல்கிறார்கள். இதுக்குபோய் நான் பதில் சொல்லனுமா? Don't Care-னு விட்டுட்டு போயிடணும்" என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

    கோவை சிங்காநல்லூர் பகுதியில் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் சிங்கை கோவிந்தராஜனின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், சட்டப்பேரவை கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "பாஜக ஐடி விங் வெளியிடும் தகவல்களை எல்லாம் பார்க்க நேரமில்லை. தற்போது மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. உலக அளவில் அதிக தொண்டர்களைக் கொண்ட 7வது கட்சியாக அதிமுக உள்ளது. இந்த கட்சி நமது தாய்வீடு போல. சாதாரணமாக இருந்த நம்மை எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக உயர்த்தி அழகு பார்த்த கட்சி அதிமுக. எல்லோரும் தாய் வீட்டிற்குத் தான் வருவார்கள். தாய் கழகத்தை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். 'டோன்ட் கேர்' என விட்டுவிடுங்கள். கோவைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதை சொல்லியே வாக்காளர்களிடம் மக்களவைத் தேர்தலில் வாக்கு கேட்போம். மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்

    சிறப்பான முறையில் 4 ஆண்டுகள் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றினார். எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வோம். கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறுவோம்" என அவர் தெரிவித்தார்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
    • 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை அ.தி.முக.வில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    கோவை.

    கோவை இதய தெய்வம் மாளிகையில் கோவை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக எதிர்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பிவேலுமணி, கோவை மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பியுமான ஜெயவர்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதா வது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் 5 ஆண்டுகளில் கொண்டு வந்த 50 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

    தற்போது இருக்கின்ற தி.மு.க அரசு எந்த விதமான மக்கள் நல திட்டதங்களையும் கொண்டு வரவில்லை. நாம் ஏற்கனவே உருவாக்கிய திட்டங்களை தங்களுடைய திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

    தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மிக துரிதமாக வேலை செய்து, 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை அ.தி.முக.வில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க செய்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் பொறுப்பாளர் ஜெயவர்த்தனன் பேசும்போது, கோவை மாவ ட்டத்தில் இருக்கக்கூடிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் எளிய மக்களின் துயர் துடைப்பவர்களாக செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வின் நலத்திட்ட ங்களை மக்களி டம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக பெருவாரியான வெற்றிகளை பெற வேண்டும் அதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

    இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர் ஜெயராம், முன்னாள் அமைச்சர் செம.வேலுசாமி, பீளமேடு துரைசாமி, பிரபாகரன், புரட்சி தம்பி, லாலி ரோடு ராதா, செல்வகுமார், சிவகுமார், சாரமேடு சந்திரசேகரன், இலக்கடை ஜெயபால், காலணி கருப்பையா, ராஜ்குமார், மனோகரன், பப்பையா ராஜேஷ், கமலக்கண்ணன், மெட்டல் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் கூடுதலாக 1.5 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாளை கோவையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    கோவை,

    கோவை தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி கொறடாவுமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த கூட்டத்தில் ஆகஸ்டு 20-ந்தேதி மதுரையில் நடக்க உள்ள வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்பது, கோவையில் தி.மு.க அரசுக்கு எதிராக நாளை(20ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் கூடுதலாக 1.5 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதற்காக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

    தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தபடி உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்.

    கோவை மாவட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட வில்லை. ஆளும் தி.மு.க அரசு தொண்டாமுத்தூர் தொகுதியை கடந்த 2 ஆண்டுகளாக புறக்கணித்து வருகிறது.

    எனவே ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாளை கோவையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்.

    ஆளுங்கட்சி எத்தனையோ பொய் வழக்குகள் போட்டாலும், எதற்கும் அஞ்சாமல் அ.தி.முக தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறார்.எனவே தி.மு.க ஆட்சியை தூக்கி வீச மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி மலரும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த ஒரு வார காலமாக காட்டுத்தீ சுமார் 5 கி.மீ சுற்றளவு வனப்பகுதியில் பரவியுள்ளது.
    • காட்டுத்தீ காரணமாக இயற்கை மரங்கள் கருகி விட்டன. வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    கோவை,

    கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி நேற்று சட்ட சபையில் பேசியதாவது:-

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெருமாள்கோவில்பதி, பச்சினான்பதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக காட்டுத்தீ சுமார் 5 கி.மீ சுற்றளவு வனப்பகுதியில் பரவியுள்ளது.

    காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் கடுமையாக போராடி வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின்படி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, கேரள மாநிலம் மலம்புழா அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது காட்டுத்தீ ஒரளவு கட்டுக்குள் வந்துள்ளது. காட்டுத்தீ காரணமாக இயற்கை மரங்கள் கருகி விட்டன. வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    வனப்பகுதியை சுற்றி வாழும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், காட்டுத்தீ இந்த அளவுக்கு பரவ விடாமல் தடுத்து இருக்கலாம்.

    அடுத்த மாதம் வெயில் இன்னும் கடுமையாக இருக்கும். எனவே வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

    மக்களையும், வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தொண்டாமுத்தூர் ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேச்சு.
    • 19 மாதங்கள் ஆகிவிட்டது.

    வடவள்ளி

    சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற வில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. தொண்டாமுத்தூர் தொகுதிக்கும், கோவை மாவட்டத்திற்கும், தமிழக த்துக்கும் எதுவும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி திட்டங்களுக்கு தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. தற்போது அமைச்சராகி உள்ள உதயநிதி ஸ்டாலின் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்.

    அ.தி.மு.க. அரசு கட்டிய பாலங்களில் தி.மு.க. போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். ஆனால் தி.மு.க. அரசோ சொத்து வரி, மின் கட்டண உயர்வால் மக்களை வாட்டி வதைக்கிறது.

    குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 கொடுப்பதாக சொன்னார்கள். 19 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை அந்த திட்டம் பற்றி பேச்சே இல்லை.

    இங்கு இருக்கும் காவல்துறை என் கட்சி காரர்கள் மீது பொய் வழக்கு பதிய வேண்டாம். நடுநிலையாக செயல்படுங்கள். தமிழகத்தில் கஞ்சா அதிக அளவில் விற்பனை நடைப்பெறுகிறது.

    அ.தி.மு.க. போராட்டம் அறிவித்த பிறகே, பொங்கல் பரிசாக கரும்பு கொடுக்கிறார்கள். தி.மு.க.விற்கு வாக்கு அளித்தவர்கள் எதற்கு வாக்களித்தோம் என்று வேதனைப்படுகின்றனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 40 இடங்களையும் வெல்வோம். சட்டமன்றதேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் மக்களுக்கு நல்லது செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

    • வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம்.
    • ஆட்சிமாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்? என நீதிமன்றம் கேள்வி

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான 48 பக்க தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:

    டெண்டர் ஒதுக்கீட்டில் வேலுமணி செல்வாக்கை செலுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. முறைகேடு நடந்ததாக நேரடியாக வழக்கு பதியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அதிகாரிகள் தவறால் அல்லாமல் வேலுமணி செல்வாக்கால் முறைகேடு நடந்ததாக நிரூபித்திருந்தால் வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க மாட்டாது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, தொடர்ந்து விசாரித்து வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம். ஆட்சி மாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்? 

    அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீட்டில் இருந்து காவல்துறையை விடுவிக்க வேண்டும்.

    தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களின் அடிப்படையில் வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதால் ரத்து செய்ய முடியாது, என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மத்திய விவசாயதுறை அமைச்சரை சந்தித்து, உரம், கொப்பரை தேங்காய் விவகாரம் குறித்து மனு அளிக்கப்படும்.
    • இப்போது இருக்கின்ற எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துவிட்டு வருகின்றனர் என விமர்சனம்

    கோவை:

    கோவை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுகவின் 51 வது ஆண்டு விழாவை கொண்டாடுவது குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 300க்கும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி, ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் இருக்கின்றது எனவும், திமுக முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக கொடுத்தது, இப்போது கோவையில் எந்த சாலையிலும் மக்கள் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றது, மாநகராட்சி, நெடுஞ்சாலைகள் மோசமாக இருக்கின்றது. இந்த ஆட்சிமாற வேண்டும். இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும் மக்கள் முடிவு செய்து விட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்.

    எடப்பாடியாரே முதல்வராக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர். இங்கே எப்போதும் இரு மொழி கொள்கைதான், தமிழகத்தில் இந்தி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என பா.ஜ.க தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். பா.ஜ.க தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கின்றது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை எடுக்க சொல்ல வேண்டும்.

    நாளைக்கு கோவை வரும் மத்திய விவசாயதுறை அமைச்சரை சந்தித்து, உரம், கொப்பரை தேங்காய் விவகாரம் குறித்து மனு அளிக்கப்படும். தமிழகத்தின் 39 எம்.பிகள் எதுவுமே செய்வது இல்லை. காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்ற அதிமுக எம்.பிகள் முடக்கினர். இப்போது இருக்கின்ற எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துவிட்டு வருகின்றனர்.

    யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார், முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக அந்த கட்சியினரும் இருக்கின்றனர். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சொத்து வரியை தொடர்ந்து குடிநீர் வரியையும் அதிகப்படுத்தி உள்ளனர்.

    கோவை

    தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே செல்வராஜ், செ.தாமோதரன், கே. ஆர் ஜெயராம், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்பட அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    அ.தி.மு.க ஆட்சியில் எந்த வரியையும் ஏற்றவில்லை. ஆனால் மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக உள்ள இந்த தி.மு.க. அரசு வரிகளை ஏற்றி வருகிறது. சொத்து வரியை தொடர்ந்து குடிநீர் வரியையும் அதிகப்படுத்தி உள்ளனர். அப்போது இருந்த அ.தி.மு.க. ஆட்சியை பலரும் வீழ்த்த நினைத்தனர். தி.மு.க. குறுக்கு வழியில் ஆட்சியில் அமர நினைத்தது. ஆனால் நானும், தங்கமணி, சண்முகம் இன்னும் சிலரும் சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றினோம். அதனால் என் மீது ஸ்டாலினுக்கு கோபம். அப்போதே அவர் எஸ்.பி.வேலுமணியை விடமாட்டோம் என கூறினார்.அதன் தொடர்ச்சியாகவே என்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி சோதனை நடத்தி உள்ளனர். 3 முறை சோதனை நடத்தி உள்ளீர்களே? இதுவரை எனது வீட்டில் இருந்து எந்த பொருட்களை எடுத்து சென்றீர்கள்? ஒன்றும் இல்லை. வெறுங்கையுடன் தான் சென்றுள்ளீர்கள்.நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் கவலை படமாட்டோம். எங்களுக்கு துணையாக எப்போதும் தொண்டர்கள் உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எந்த காரியம் முடிக்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டிய நிலையே இந்த ஆட்சியில் உள்ளது. ஆட்சி அமைத்து சில வருடங்களிலேயே 50 ஆயிரம் கோடிக்கும் மேல் தி.மு.க அரசு லஞ்சம் வாங்கியுள்ளது. இப்படி மக்களை சுரண்டும் ஆட்சியாகவே உள்ளது.

    எங்கள் ஆட்சியின்போது நாங்கள் எந்த கடையிலும் வசூல் செய்யவில்லை. கட்டப்பஞ்சாயத்து நடத்தவில்லை. காவல்துறை யினர் சுதந்திரமாக செயல்பட்டனர். ஆனால் இன்று நிலை அப்படியில்லை. மாறாக கட்டப்பஞ்சாயத்து தலைவிரித்தாடுகிறது. அனைத்து கடைகளிலும் தி.மு.க.வினர் வரி வசூலிக்கி ன்றனர். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை.

    கோவை மாவட்டத்திற்கு நாங்கள் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்தோம். ஆனால் ஆட்சி அமைத்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் தி.மு.க. கோவை மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை. இந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் ஒரு பொம்மை போலவே இருக்கிறார்.எனது வீட்டில் சோதனை நடந்தபோது எம்.எல்.ஏ.க்களையும், தொண்ட ர்களையும் கையை பிடித்து இழுத்து வலுக்க ட்டாயமாக கைது செ ய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

    மு.க.ஸ்டாலின் அரசியல் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார். இதுபோன்ற மோசமான ஒரு தலைவரை இதுவரை பார்த்ததே இல்லை.

    உதயசந்திரன் ஐ. ஏ.எஸ். தி.மு.க.வினரை விட மோசமாக உள்ளார். நேர்மை போல காட்டி கொண்டு கொள்ளை அடிப்பதற்கு துணை போகிறார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றனர். அதன்பின்னர் அவர்களை ஆளையே காணவில்லை. அனைவர் மீதும் பொய் வழக்கு போட்டு வரும் இந்த தி.மு.க ஆட்சி விரைவில் மண்ணை கவ்வும். மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என போராடினர். தற்போது முதல்-அமைச்சராக அவரது ஆட்சி நடைபெறும் வேளையில் திருப்பூரில் லேடீசுக்கு என்று தனி பாரே தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் என்ன பதில் சொல்ல போகிறார்.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும். அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்
    • தென்னைமநல்லூர் ஊராட்சியில் ரூ.3.27 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்தது.

    கோவை 

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்னைமநல்லூர் ஊராட்சி பகுதியில்15 வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.3.27 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியைஅ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜி.கே.விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் டி.பி.வேலுச்சாமி, ராஜா என்ற ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா சிங்காரவேலன், கார்த்திகா பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் தென்னமநல்லூர் டிவி. ஆறுசாமி உள்பட பலர் உள்ளனர். 

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
    • திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் தான்.

    பொள்ளாச்சி

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தாங்கினார். இதில் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செய லாளருமான எஸ்.பி.வேலுமணி பேசி யதாவது:-

    விவசாய குடும்பத்தில் பிறந்து கடந்த 4½ ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியினை கொடுத்துள்ளார். குறிப்பாக பொள்ளாச்சிக்கு மட்டும் 1500 கோடி ரூபாய் அளவுக்கு பல நல்ல திட்டங்களை அ.தி.மு.க. நிறைவேற்றி கொடுத்துள்ளது.

    ஆனால் இந்த தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. எதுவுமே செய்யாத ஆட்சி தான் இந்த தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்சியானது விளம்பர படத்தில் மட்டும் தான் இயங்கி வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க ஒரு நாள் கூட சொத்து வரியை உயர்த்தியது இல்லை. ஆனால் இன்றைக்கு தி.மு.க ஆட்சியில் 25, 50, 100 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கு தி.மு.க அரசு வழங்கிய போனஸ் தான் இந்த வீட்டு வரி மற்றும் மின் கட்டண உயர்வு. இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் இதற்கு மத்திய அரசு தான் காரணம் என்கிறார்கள்.

    நாங்கள் கொண்டு வந்த திட்டத்தில் ஒரு சிறு துரும்பாவது இவர்கள் கொண்டு வந்துள்ளார்களா? மாறாக நமது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் அம்மா உணவகம், அம்மா கிளினிக், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ஆகிய திட்டங்களை முடக்கியது தான் இந்த தி.மு.க. அரசு.

    நம்முடைய கட்சி அலுவலகம் எனும் கோவில் சேதம் அடைந்ததற்கு திமுக தான் காரணம். கள்ளக்குறிச்சி கலவரத்திற்கும் தி.மு.க.வே காரணம். இதுவரை 500-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    மேலும் காவல்து றையானது யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று நீதிபதியே வினவும் அளவிற்கு உள்ளது இந்த தி.மு.க. அரசு. இப்படி சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்ததற்கு தி.மு.க ஆட்சி தான் காரணம்.

    எங்கள் கட்சியினர் மீது போடப்படும் வழக்குகளுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். காவல்துறையினர் தி.மு.கவுக்கு அடிபணிந்து கிடக்கின்றனர். அ.தி.மு.க. தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிந்தால் தக்க சமயத்தில் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும்.

    தற்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை. எந்த வேலையை எடுத்தா லும் லஞ்சம் தான் கேட்கப்படுகிறது.

    திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் தான். டெல்லியில் நடந்த ஜனாதிபதி பதவியேற்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க.வின் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் மட்டும் தான் அழைப்பு வந்தது. மற்ற யாருக்கும் வரவில்லை.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40-40 என்ற கணக்கில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு அனைத்து தொகுதிகளையும் வெல்வோம்.தற்போது அரசு கொண்டு வந்துள்ள மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் இல்லையேல் போராட்டம் இன்னும் கடுமையாக முன்னெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போராட்டத்தில் தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி வி. ஜெயராமன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன், வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, சூலூர் எம்.எல்.ஏ. வி பி கந்தசாமி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் அ.தி.மு.க பொள்ளாச்சி நகர செயலாளருமான கிருஷ்ணகுமார், மாவட்ட அவை தலைவர் வெங்கடாசலம், அ.தி.மு.க நிர்வாகிகள் ஆர்.எ.சக்திவேல், ஜேம்ஸ் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை மாவட்டத்தில் நாங்கள் 9 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருக்கிறோம்.
    • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மக்கள் மட்டுமல்ல. அ.தி.மு.க. தலைவர்கள் என அத்தனை பேரும் எதிர்பார்த்த நிகழ்வு தற்போது நடந்து உள்ளது.

    கோவை

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப் பட்டு உள்ளார்.

    இந்தநிலையில் அவர் சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் அ.தி.மு.க அலுவலக மான இதயதெய்வம் மாளி கைக்கு புறப்பட்டார்.

    வரும் வழியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை- அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு அங்கிருந்து கட்சி அலுவலகத்துக்கு நடந்து சென்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் எஸ்.பி. வேலுமணிக்கு பொன்னாடை அணி வித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். கட்சி அலுவலகத் தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளது மிகப்பெரிய எழுச்சி மட்டுமல்லாமல், தொண்டர்கள் எல்லோரும் கொண்டாடக்கூடிய நிகழ்வாக அமைந்து உள்ளது.

    கடந்த ஒரு ஆண்டாக கோவை மாவட்டத்தில் எந்த பணிகளும் நடக்கவில்லை. எனவே மீண்டும் அத்தனை திட்டங்களும் மக்களுக்கு வர வேண்டும் என்றால் எடப் பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் முடிவு செய்து விட்டனர்.

    அதற்கு அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மக்கள் மட்டுமல்ல. அ.தி.மு.க. தலைவர்கள் என அத்தனை பேரும் எதிர்பார்த்த நிகழ்வு தற்போது நடந்து உள்ளது.

    தலைமை நிலைய செயலாளராக என்னை நியமித்து உள்ளனர். இதற்காக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எனது நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன். கோவை மாவட்டத்தில் நாங்கள் 9 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருக்கிறோம். எனவே விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் 100-க்கு 100 வெற்றி பெறுவோம். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.தாமோதரன், அம்மன் அர்ச்சுனன், கே.ஆர். ெஜயராம், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் மற்றும் புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் செல்வக்குமார், காலனி ராஜ்குமார், மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொரோனா பெருந்தொற்றின் 4-வது அலை பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பரவி வருகிறது.
    • 4-வது அலையை எதிர் கொள்ள, தமிழக அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடி க்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    கோவை:

    தமிழக சட்டமன்ற அ.தி.மு.க கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பெருந்தொற்றின் 4-வது அலை பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

    கொரோனா 3-வது அலை முடிவடைந்து ஓரளவு இழப்புகளில் இருந்து மீண்டு, பொருளாதார ரீதியாக மேம்பட்டு வருகிற சூழ்நிலையில், இப்போது கொரோனா 4-வது அலை பரவி பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்குகிறது.

    இந்த பெருந்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். தற்போது பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின் 4-வது அலையை எதிர் கொள்ள, தமிழக அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடி க்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    கோவை மாவட்டத்தின் எல்லையான அண்டை மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில், சோதனைச்சாவடிகள் மற்றும் விமான நிலையம், ெரயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, பாதிக்கப் பட்டோரை தனிமைப்படுத்த வேண்டும். துரிதமாக செயல்பட்டு, மக்களை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×