search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kovai news"

    • தொண்டாமுத்தூர் ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேச்சு.
    • 19 மாதங்கள் ஆகிவிட்டது.

    வடவள்ளி

    சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற வில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. தொண்டாமுத்தூர் தொகுதிக்கும், கோவை மாவட்டத்திற்கும், தமிழக த்துக்கும் எதுவும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி திட்டங்களுக்கு தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. தற்போது அமைச்சராகி உள்ள உதயநிதி ஸ்டாலின் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்.

    அ.தி.மு.க. அரசு கட்டிய பாலங்களில் தி.மு.க. போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். ஆனால் தி.மு.க. அரசோ சொத்து வரி, மின் கட்டண உயர்வால் மக்களை வாட்டி வதைக்கிறது.

    குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 கொடுப்பதாக சொன்னார்கள். 19 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை அந்த திட்டம் பற்றி பேச்சே இல்லை.

    இங்கு இருக்கும் காவல்துறை என் கட்சி காரர்கள் மீது பொய் வழக்கு பதிய வேண்டாம். நடுநிலையாக செயல்படுங்கள். தமிழகத்தில் கஞ்சா அதிக அளவில் விற்பனை நடைப்பெறுகிறது.

    அ.தி.மு.க. போராட்டம் அறிவித்த பிறகே, பொங்கல் பரிசாக கரும்பு கொடுக்கிறார்கள். தி.மு.க.விற்கு வாக்கு அளித்தவர்கள் எதற்கு வாக்களித்தோம் என்று வேதனைப்படுகின்றனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 40 இடங்களையும் வெல்வோம். சட்டமன்றதேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் மக்களுக்கு நல்லது செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்
    • 10 லட்சம் பேரையாவது கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் .

    கோவை:

    ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பகுதி,நகர,ஒன்றிய, பேரூராட்சி அமைப்பா ளர்கள் துணை அமைப்பா ளர்கள் கூட்டம் நவ இந்தியாவில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

    கூட்டத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா என்ற கிருஷ்ணன் ,மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 23-ந்தேதி கோவை வருகிறார். 24-ந் தேதி கிணத்துக்கடவில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு ஒரே மேடையில் 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். அதன் பின்னர் பொள்ளாச்சியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    தமிழக முழுவதும் 234 தொகுதியிலும் திராவிட மாடல் பயிலரங்கம் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் வருகிற 12,13,14 ஆகிய தேதிகளில் 10 சட்ட மன்ற தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேரையாவது கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் .

    கோவை அவினாசி ரோட்டில் புதிதாக கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அந்த பணிகள் விரைவில் தொடங்கும். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அதில் கோவை - பொள்ளாச்சி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற நிலையை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டம் 100 யூனிட் இலவச மின்சரம், விவசாயிகள், விசைத்தறி, குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை வாபஸ் பெற தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தும்.

    எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்ற பச்சை பொய்யை சொல்லி இருக்கின்றார். அ.தி.மு.க ஆட்சியில் உயர்த்தப்பட்டது அவருக்கு தெரியவில்லையா.

    அ.தி.மு.க.வினரின் எஜமானர்கள் பா.ஜனதாவினர்.

    அவர்கள் சொல்வதைதான் அ.தி.மு.க செய்யும், சுயமாக யோசிக்க முடியாது.கோவையை பொறுத்த வரை வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு மாவட்டத்தில் உள்ள 3041 பூத் வாரியாக பணிகளை தொடங்கி இருக்கின்றோம்.

    கோவை மாவட்டத்தில் உள்ள 31 லட்சம் வாக்காளர்களில் 10 லட்சம் வாக்காளர்கள் தி.மு.க.வினர் என்ற நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு பணிகளை செய்து வருகின்றோம் . இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, நாகராஜசோழன், அசரப் அலி, சபரி கார்த்திகேயன், விஜயகுமார், துணை அமைப்பாளர் திருமலை ராஜா, மாணவரணி அமைப்பாளர் விஜி கோகுல் முன்னாள் எம்.பி.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×