search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்கள்"

    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
    • பல்வேறு இடங்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது,

     பல்லடம், செப்.3-

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி போலீஸ் சோதனை சாவடியில், காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.

    இதையடுத்து அவர்களது மோட்டார் சைக்கிளில் சோதனை இட்டபோது அதில் செல்போன்கள் மற்றும் நகைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது, அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கருப்பன்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ரூபன் ராஜா (வயது 21) மற்றும் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டியை சேர்ந்த ஞானப்பிரகாஷ் என்பவரது மகன் ஜெபராஜ் (வயது 22) என்பதும் தெரியவந்தது.

    இவர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது, இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 2.1/2பவுன் தங்கச் செயின், 1/4 பவுன் தங்க மோதிரம், மற்றும் 7 செல்போன்கள், மற்றும் கவரிங் நகைகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சேலத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி செல்லும் சாலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது.

    சேலம்:

    தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ேஹப்பி ஸ்டீரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். வாரம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மற்றும் பணி புரியும் இளைஞர்கள், இளம்பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் ஏராளமானோர் இதில் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சேலத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி செல்லும் சாலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இைத தொடர்ந்து இன்று காலை முதலே ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என ஏராளமானோர் அங்கு திரண்டனர் . பின்னர் அங்கு இசைக்கப்பட்ட பாடல்களுக்கு ஏற்ப அவர்கள் உற்சாகமாக ஆடி, பாடி மகிழ்ந்தனர்.

    தொடர்ந்து டிரம்செட், பேண்ட் வாத்தியங்களும் அங்கு இசைக்கப்பட்டன. அந்த இசைக்கேற்ப அனைவரும் கைகளை உயர்திய படி ஆடி, பாடி அசத்தினர். மேலும் சர்ட்கள் அணிந்த படி ஆடி பாடிய இளைஞர்கள், இளம்பெண்கள் கலர் பேப்பர்களையும் வீசி, விசில் அடித்த படி உற்சாகத்துடன் துள்ளி குதித்து கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக இளம்பெண்கள் பலர் விசில்களை பறக்க விட்ட படி துள்ளி குதித்தது அனைவரையும் வியக்க வைத்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது. சேலத்தில் முதல் நாளாக இன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் அந்த பகுதியே களை கட்டியது.

    இதைெயாட்டி சாரதா கல்லூரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வணிகவரித்துறை அலுவலகம் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையே அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளுக்கான மின் வயரில் இருந்து திடீரென கரும் புகை வெளியேறியது.

    இதனால் மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு அந்த வயர்கள் சரி செய்யப்பட்டது. இதனால் நிகழ்ச்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியதுடன் களை கட்டியது. மேலும் இந்த விழாவை மாதத்திற்கு ஒரு முறை நடத்த முடிவு செய்துள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். 

    • முன்னதாக தஞ்சை ரோட்டரி கிளப் தலைவர் செல்வகுமார் வரவேற்றார்.
    • அடுத்த தலைமுறை இளைஞர்கள் எவ்வாறு சேவை பணியாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் தஞ்சை ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் ரோட்ராக்ட் கிளப் தொடக்க விழா மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் மருது பாண்டியர் கல்வி நிறுவ னங்களின் தலைவர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார்.

    மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்ரமணி யன் மற்றும் மருதுபாண்டியர் கல்லூரி துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் சிறப்பு லிருந்தினர்களாக தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    மேலும், சிறப்பு விருந்தினராக தாமரை இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் உறுப்பினர் ஜெயஸ்ரீபத்ரிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    அப்போது ரோட்டரி சங்கத்தின் பயன்பாடுகள் குறித்தும், மாணவர்களாகிய அடுத்த தலைமுறை இளைஞர்கள் எவ்வாறு சேவை பணியாற்ற வேண்டும் என எடுத்துரைத்தனர். மேலும், ரோட்டரி கிளப் துணை ஆளுநர் கருணா ரோட்டரி சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், உறுப்பினர்களின் பணிகள் குறித்தும் பேசினார்.

    முன்னதாக தஞ்சை ரோட்டரி கிளப் தலைவர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் ரோட்டரி கிளப் செயலாளர் தார்சியஸ் நன்றி கூறினார்.

    விழாவில் ஆசிப்அலி, விஜயகுமார், ரமேஷ்குமார், சங்காரம், கண்ணன், நரேஷ்குமார் ஆகிய ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மருது பாண்டியர் கல்லூரி ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் மற்றும் கல்லூரி மேலாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மத்திய அரசு வேலைவாய்ப்பு முகாம்களில் 5.60 லட்சம் இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடி இந்தோ திபத் எல்லைக்காவல் படை காவலர் பயிற்சி மையத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மத்திய இணை மந்திரி சோபா கரண்ட்லஜே கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் வேலை வாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ் 8-வது முகாம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று அதன் மூலம் மொத்தம் 51 ஆயிரம் இளைஞர்கள் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    அதனடிப்படையில் சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 206 நபர்களுக்கு மத்திய அரசுப் பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக நடைபெற்ற 7 முகாம்களின் மூலம் சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், காவல்துறை துணைத்தலைவர் (சத்தீஸ்கர்) விஜயகுமார் டோக்ரா, கமாண்டெண்ட் சுரேஷ்குமார் யாதவ், மத்திய வேளாண்மை இயக்குநர் வெங்கட சுப்ரமணியன், இந்தோ திபத் எல்லைக்காவல் படையைச் சார்ந்த துணை கமாண்டெண்ட்கள் துர்கேஷ் சந்திரா, தீபக் சிமல்டி, உதவி கமாண்டெண்ட் ராகுல் ராணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப் பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் பயின்று ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்களுக்கு மாதம்

    ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு (BE போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும்.

    தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்க னவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி களுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளை ஞர்கள் பூர்த்தி செய்து வேலை நாட்களில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.

    • குண்டாறு அணைக்கட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
    • அணையின் ஷட்டர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம். தென்மேற்கு, வடகிழக்கு மழையின் போது மாவட்டத்திலேயே முதன் முதலில் நிரம்புவது இந்த அணைதான். குண்டாறு அணைக்கட்டிற்கு நாள்தோறும் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூங்கா, பச்சை பசேல் என்ற ரம்மியமான காட்சி, இயற்கை நெய்யருவி, 6-க்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் இப்பகுதியில் உள்ளதால் குண்டாறு அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் தற்போது படையெடுத்து வருகிறார்கள்.

    கடந்த சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் நேற்று சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் கடந்த 3 நாட்களளாக பொதுமக்களின் கூட்டத்தால் இப்பகுதி களைகட்டி காணப்பட்டது.

    இந்நிலையில் குண்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து உபரியாக வெளியேறும் பகுதியான அணைகளின் மதில் சுவர்களில் சில வாலிபர்கள் நீண்ட வரிசையில் உட்கார்ந்தும், அணைகளில் ஷட்டர்கள் திறக்க பயன்படுத்த நிறுவப்பட்டுள்ள தூண்கள் மேல் ஏறி டைவ் அடித்து குளித்து வருகின்றனர்.

    இந்த அணையின் ஷட்டர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஆபத்தை உணராமல் வாலிபர் டைவ் அடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்க துறையை சார்ந்த அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனனர்.இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

    தற்போது சீசனையொட்டி குற்றாலம், பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குண்டாறு நீர்த்தேக்கத்தைச் சுற்றி அதிகமான அருவிகள் உள்ளதாலும், கெடுபிடிகள் பெரிய அளவில் இல்லை. இங்கு அருவிகளில் நெரிசலின்றி குளிக்கவும், இங்கு ஓடும் ஆற்றில் நீராடவும் வசதியாக உள்ளது.

    பொதிகை மலையோரத்தில் ரம்மியமான சூழலில், வாகன இறைச்சலோ, போக்குவரத்து நெரிசலோ இல்லாமல் இப்பகுதி அமைந்திருப்பதால் குண்டாறு அணைக்கட்டு பகுதிக்கு வந்துள்ளோம். கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்பகுதியில் மழைபெய்தது. இதனால் இங்குள்ள தனியார் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதுடன் இப்பகுதி முழுவதும் தென்றலுடன் கூடிய ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    தற்போது இப்பகுதி ஊட்டியை போனறு காலநிலை நிலவுகிறது. இப்பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகளை அரசு செய்து கொடுத்தால் சுற்றுலாப் பயணிகளை கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.




     


    • மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் “பைக்” ரேசில் இளைஞர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
    • சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

    மதுரை

    மதுரையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்ல வசதியாகவும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை-நத்தம் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சுமார் ரூ.615 கோடி செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் பாலத்தில் ஐயர் பங்களா, திருப்பாலை பகுதிகளில் இறங்குவதற்கு வசதியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி களுக்கும், நத்தம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பகல் நேரங்களில் அதிக அளவில் செல்லுகிறது.

    ஆனால் இரவு நேரங்களில் சொற்ப அளவி லேயே கார், இருசக்கர வாகனங்கள் பறக்கும் பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் பறக்கும் மேம்பால பகுதிகளில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடை பெறுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணிகளிலும் ஈடுபடு கிறார்கள். பறக்கும் மேம்பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்வதால் சாலைகளில் சாகசம் செய்பவர்களின் அட்டகாசமும் அவ்வப் போது அறங்கேறி வருகிறது. அதிவேகத்தில் பைக் ரேஸ் சென்று அந்த காட்சிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிட்டு அதிக 'லைக்'களை பெறுவதும் இளசுகளின் தெளியாத கனவாக உள்ளது. இளம்பெண்களும் பாலத்தின் மையப் பகுதிகளிலிருந்து நடனமாடி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது.

    இதனை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் நான்கு இரு சக்கர வாகனங்களில் வாலிபர்கள் அதிவேகத்தின் சைரன் ஒலிக்க முன்பக்க சக்கரத்தை உயரே தூக்கிய படி அதிவேகத்தில் சென்று சாகசம் என்ற பெயரில் அபாயகரமான பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

    இது அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்களை கடும் பீதிக்கு உள்ளாக்கியது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் இந்த பைக் ரேஸ் இளைஞர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.

    இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். இந்த நிலையில் பறக்கும் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக்ரேஸ் செல்வது சமூக விரோத செயலாகும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதனை மீறி தொடர்ந்து மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் தேவை யின்றி வாகனங்களை நிறுத்துவது பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசம் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, பாலத்தின் மேலே அமர்ந்து கொண்டு கேக் வெட்டுவது, பாலத்தின் இருபுறங்களில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்து பொழுது போக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

    • ஆபத்தான “பைக்” ரேசில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர்.
    • சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

    மதுரை

    மதுரையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்ல வசதியாகவும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை-நத்தம் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சுமார் ரூ.615 கோடி செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் பாலத்தில் ஐயர் பங்களா, திருப்பாலை பகுதிகளில் இறங்குவதற்கு வசதியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி களுக்கும், நத்தம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பகல் நேரங்களில் அதிக அளவில் செல்லுகிறது.

    ஆனால் இரவு நேரங்களில் சொற்ப அளவி லேயே கார், இருசக்கர வாகனங்கள் பறக்கும் பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் பறக்கும் மேம்பால பகுதிகளில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடை பெறுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் இரவு நேரங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணிகளிலும் ஈடுபடு கிறார்கள். பறக்கும் மேம்பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்வதால் சாலைகளில் சாகசம் செய்பவர்களின் அட்டகாசமும் அவ்வப் போது அறங்கேறி வருகிறது. அதிவேகத்தில் பைக் ரேஸ் சென்று அந்த காட்சிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிட்டு அதிக 'லைக்' களை பெறுவதும் இளசுகளின் தெளியாத கனவாக உள்ளது. இளம்பெண்களும் பாலத்தின் மையப் பகுதிகளிலிருந்து நடனமாடி அதனை சமூக வலைத்த ளங்களில் வெளியிடுவதும் சமீப காலமாக டிரெண்டாகி வருகிறது.

    இதனை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நத்தம் பறக்கும் மேம்பா லத்தில் நான்கு இரு சக்கர வாகனங்களில் வாலிபர்கள் அதிவேகத்தின் சைரன் ஒலிக்க முன்பக்க சக்கரத்தை உயரே தூக்கிய படி அதிவேகத்தில் சென்று சாகசம் என்ற பெயரில் அபாயகரமான பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

    இது அந்த வழியாக வாகனத்தில் சென்ற வர்களை கடும் பீதிக்கு உள்ளாக்கியது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் இந்த பைக் ரேஸ் இளைஞர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.

    இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். இந்த நிலையில் பறக்கும் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வது சமூக விரோத செயலாகும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதனை மீறி தொடர்ந்து மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் தேவை யின்றி வாகனங்களை நிறுத்துவது பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசம் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, பாலத்தின் மேலே அமர்ந்து கொண்டு கேக் வெட்டுவது, பாலத்தின் இருபுறங்களில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்து பொழுது போக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

    • ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளனர்.
    • விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றாலோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த தாமரைக்கரையைச் சேர்ந்தவர் பாண்டியன் (23).இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த விஜய் (23), இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று விடுமுறையை முன்னிட்டு இருவரும் அணைப்பாளையம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ெரயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த ெரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் ரெயில்வே காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு மது அருந்திய பின்னர் பாண்டியன், விஜய் மட்டும் ரெயில் வரும்போது ரெயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.

    அப்போது நெல்லையில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 பேர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.'செல்பி' மோகத்தால் வாலிபர்கள் 2 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றாலோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    • பாஸ்ட் புட் மேற்கத்திய கலாச்சாரம் திணிக்கப்பட்டுள்ளதால் பல நோய்கள் இளைஞர்களை தாக்குகிறது.
    • ரத்த சோகை, ரத்த அழுத்தம், இருதய நோய் பிரச்சனைகள் சிறுவயதிலேயே வருகிறது.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவக்குடி கிராமத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி ஒதுக்கீடு செய்த தொகுதி நிதி ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து சிறிது நேரம் விளையாடவும் செய்தார்.

    பின்னர் விழாவில் பேசியதாவது:-

    இன்றைய இளைஞர்களுக்கு விளையாட்டு அவசியமானது.

    ரத்த சோகை, ரத்த அழுத்தம், இருதய நோய் பிரச்சனைகள் சிறுவயதிலேயே வருகிறது.

    30 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பு என்றால் 55 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு தான் வந்ததாக கேள்விப்பட்டி ருக்கிறோம்.

    ஆனால் இன்று பாஸ்ட் புட் மேற்கத்திய கலாச்சாரம் திணிக்கப்பட்டுள்ள தால் பல நோய்கள் இளைஞர்களை தாக்குகிறது.

    எந்த ஒரு உடற்பயிற்சியும் விளை யாட்டும் இல்லாமல் நாள் முழுவதும் கம்ப்யூட்டர், கைபேசியை பார்த்துக் கொண்டிருப்பதை மாற்றி அமைக்க அரசும் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராம்பிரசாத், திருபுவனம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம், துணைத்தலைவர் கமலாசேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ம.க.பாலு, சமிம்நிஷா ஷாஜகான், முத்துபீவி ஷாஜகான், பரமேஸ்வரிசரவணன், பா.ம.க மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், மாநில உழவர் பேரியக்க செயலாளர் ஆலயமணி, பா.ம.க முன்னாள் மாவட்ட செயலாளர் குமார், கிராம நாட்டான்மைகள் இளங்கோவன், பாலகி ருஷ்ணன், அசோக்குமார், ரமேஷ், பாலகுரு, ராமன், பொறுப்பாளர்கள் சாமிநாதன், வினோத், இளஞ்செழியன், ஒப்பந்த க்காரர் ஞானபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ ராமலிங்கர் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இளைஞர்கள் அனைவரும் தீஸ்க்கோ தாயே., தீஸ்கோ.. என்று கூறி கத்திப்போட்டு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் விக்னேஸ்வரா காலனியில் சிம்ம வாகனத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ராமலிங்கர் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடுதல், சக்தி அழைத்தல், கரக ஊர்வலம் படைக்கலம் கொண்டு வருதல் போன்ற பல்வேறு விசேஷ வைபவங்கள் நடத்தப்பட்டன. இதில் அந்த பகுதி இளைஞர்கள் பக்திபரவசத்துடன் கத்தியால் உடலில் அடித்துக் கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    இதில் சிலருக்கு காயம் ஏற்பட்ட போதும் அவர்கள் தொடர்ச்சியாக கத்தி போட்டனர். கத்தி போடும் போது இளைஞர்கள் அனைவரும் தீஸ்க்கோ தாயே., தீஸ்கோ.. என்று கூறி கத்திப்போட்டு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர். இத்துடன் பொங்கல் பானையின் மீது வாள் நிறுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கண க்கான பக்தர்கள் பொங்கல் பானையின் மீது எந்த ஒரு பிடிமானமும் இல்லாத வகையில் வாள் தனித்து நிற்கும் வினோத நிகழ்வை கண்டு ரசித்தனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த வினோத விசேஷம் நடத்தப்படுவதால் கணக்கம்பாளையம் மட்டுமல்லாது பெருமாநல்லூர் திருப்பூர் காங்கேயம் அவிநாசி புளியம்பட்டி சத்தியமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இந்த அதிசய வாளினை காண வந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தொழில் மேம்பாட்டு திட்டத்தில் இளைஞர்கள் சுயதொழில் செய்கின்றனர்.
    • மேற்கண்ட தகவலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ், 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10.00 லட்சம் முதல் 5 கோடி வரை 25சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கப்படுகிறது.

    மேலும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வியாபாரம் , சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்கிட முறையே ரூ.5லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை 25சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பரமக்குடி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் கூறும்போது, குறைந்த பட்சம் 4 நபர்களுக்காவது, வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழில் தொடங்கிட வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் கனவாகவும், லட்சியமாகவும் இருந்தது.

    இந்த நிலையில், தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மிஷின் ஷாப் சேவைகள் தொழில் தொடங்கிட வேண்டி விண்ணப்பித்து ரூ.10 லட்சம் கடனுதவி பெற்றேன். இதற்கு அரசு மானியமாக ரூ.3.84 லட்சம் கிடைத்தது. இதனை கொண்டு தொழில் தொடங்கி தற்போது நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறேன். இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த காளிஸ்வரன் கூறும்போது, நான் பொது சேவை மையம் நடத்துவதற்கு போதிய பண வசதியில்லாமல் இருந்தேன். இந்த நிலையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ரூ.3.95 லட்சம் வங்கி கடன் பெற்றேன். இதற்கு அரசு மானியமாக ரூ.1.04 லட்சம் கிடைத்தது. இதன் மூலம் சேவை மையம் தொடங்கி நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறேன். இதற்கு உதவிய முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    மேற்கண்ட தகவலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் தெரிவித்தனர்.

    ×