search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்சாகம்"

    • தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.
    • பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.

    ஊட்டி:

    தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் அனல்வெயில் கொளுத்தி வருகிறது.

    இதன்காரணமாக மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு சுற்றுலாபயணிகள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

    மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு ஆண்டுதோறும் மக்கள் வருகை இருக்கும். இருந்தாலும் கோடை காலத்தில் அங்கு மக்கள் அதிகம் கூடுவர்.

    தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடைசீசனை முன்னிட்டு எண்ணற்ற மலர் நாற்றுகள் நடவுசெய்யப்பட்டு அங்கு தற்போது மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவர்கள் பூங்காவின் மலர் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். அங்கு பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.

    ஊட்டி படகு குழாம் இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதி வருகிறது. அங்கு அவர்கள் நீண்டவரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டு, ஊட்டி ஏரியில் உள்ள மிதிபடகு, எந்திர படகு ஆகியவற்றின் மூலம் சவாரிசெய்து, ஏரியின் சுற்றுப்புற பகுதிகளில் இடம்பெற்று உள்ள இய ற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    இதுதவிர தொட்டப்பெட்டா காட்சிமுனையம், லேம்ஸ்ராக் காட்சிமுனை, டால்பின்நோஸ் மற்றும் கோத்தகிரி காட்சிமுனையம் ஆகிய சுற்றுலா பிரதேசங்களிலும் திரளான சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.

    குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் கோடை சீசனை முன்னிட்டு அங்குள்ள மலர் மாடங்களில் அலங்கரித்து வைப்பதற்காக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுற்றுலா வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த வண்ணம் இருப்பதால் அங்குள்ள கக்கநல்லா உள்ளிட்ட முக்கிய சோதனைச்சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவந்த வண்ணம் உள்ளன.

    • நவராத்திரி விழாவில் 9 நாட்களும் வீடுகள், கோவில்களில் பல்வேறு வடிவங்களிலான சுவாமி சிலைகளை கொலுவாக வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம்.
    • ஒவ்வொரு ஆண்டும் கொலு பொம்மைகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் உள்ளது.

    தாராபுரம்,அக்.9-

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 10வது நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவில் 9 நாட்களும் வீடுகள், கோவில்களில் பல்வேறு வடிவங்களிலான சுவாமி சிலைகளை கொலுவாக வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம்.

    இந்தாண்டு நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி துவங்குகிறது. இதை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பலரும் வீடுகளில் கொலு வைப்பதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். கொலு என்றால் அழகு என பொருள்.நவராத்திரியை முன்னிட்டு, பொம்மைகளை அழகுற வரிசையாக நிறுத்தி அவற்றுக்கு பூஜைகள் செய்து வழிபடுவது முறை.

    பழைய பொம்மைகளை சுத்தம் செய்து அவற்றை பயன்படுத்தினாலும், புதிதாக பொம்மைகளை வாங்கி வைக்கும் பழக்கமும் உள்ளது. இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது பொம்மைகள் செய்யப்படுகின்றன. இந்தாண்டு, திரவுபதி வஸ்திரம், ஐஸ் வண்டி, பானிபூரி வியாபாரி, பலுான் வியாபாரி, பஞ்சுமிட்டாய் விற்பனை, ஜவ் மிட்டாய் இப்படி பல வகை பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இது குறித்து கொலு பொம்மை வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் கொலு பொம்மைகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் உள்ளது.இந்தாண்டு மூலப்பொருட்கள் விலை உயர்வால் பொம்மைகளின் விலையும் உயர்ந்துள்ளது. இருப்பினும் விற்பனை குறையவில்லை. சிறிய அளவிலான பொம்மைகளை களிமண்ணிலும், பெரிய பொம்மைகளை காகித கூழ் கொண்டும் செய்கிறோம். குறைந்தபட்சம் ரூ.60 முதல் அதிகபட்சம் ரூ.12 ஆயிரம் வரை கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் தசாவதாரம், கண்ணன், ஆர்மோனியம், தம்பூரா, திருமால் செட், வீடு, பொங்கல் செட் உள்ளிட்ட பொதுவான பொம்மைகள் அதிகம் விற்பனையாகும். இந்தாண்டு பூரி ஜெகன்நாதர், சாப்பாடு செட், கேரளா செண்டை மேளம், சபரிமலை செட், கடோத்கஜன், கும்பகர்ணன், அரசமர விநாயகர் செட், பீஷ்மர் அம்பு படுக்கை, கார்த்திகை பெண்கள், முத்தாலம்மன், புஷ்பக விமானம் உள்ளிட்ட பொம்மைகளை அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதேபோல் ஐஸ் வண்டி, பஞ்சு மிட்டாய், ஜவ் மிட்டாய், பானிபூரி, சிவன், பார்வதி சொக்கட்டான் விளையாடும் பொம்மைகள் புதுவரவாக இருந்தன. அவை அதிகளவில் விற்பனையாகியுள்ளன. குறிப்பாக மகாபாரத கதையில் வரும் திரவுபதி வஸ்திரம் பொம்மைகள் அனைவராலும் விரும்பி வாங்கி செல்லப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை.
    • பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது.

    ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை. பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது. உலகெங்கும் பல்வேறு நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கூந்தலை அலங்கரிப்பதோடு அன்பு, பாராட்டு மற்றும் நன்றியை வெளிப்படுத்துவதற்கு ரோஜாக்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் தனித்துவ குணம் கொண்ட சில ரோஜாக்கள் உங்கள் பார்வைக்கு..

    பீச் வண்ண ரோஸ்:

    மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்களின் கலவையை பிரதிபலிக்கும் பீச் வண்ண ரோஜாக்கள் நன்றியுணர்வை குறிக்கின்றன. அடக்கம், அனுதாபம் போன்றவற்றை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    மஞ்சள்:

    மஞ்சள் நிற ரோஜாக்கள் நட்பு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கின்றன. நண்பர்களுக்கிடையேயான அன்பையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்த இவை சிறந்த தேர்வாக அமைகின்றன.

    ஆரஞ்சு:

    ஆரஞ்சு நிற ரோஜாக்கள் உற்சாகம், ஆசை மற்றும் கவர்ச்சியை குறிக்கின்றன. ஈர்ப்பை வெளிப்படுத்துவதற்கு அவை பகிரப்படுகின்றன.

    வெள்ளை:

    வெள்ளை நிற ரோஜாக்கள் தூய்மை, அப்பாவித்தனம் மற்றும் வாழ்வின் புதிய தொடக்கங்களை குறிக்கின்றன. தம்பதியினரிடையே நிலவும் தூய அன்பை குறிக்க திருமண நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    இளஞ்சிவப்பு:

    இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு உணர்ச்சிகளை குறிப்பிடுகின்றன. வெளிர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் போற்றுதலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றன. அதே சமயம் அடர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் நன்றியையும், பாராட்டையும் குறிப்பிடுகின்றன.

    நீலம்:

    நீல நிற ரோஜாக்கள் மர்மம், சாத்தியமில்லாதது போன்ற உணர்வை குறிக்கின்றன.

    சிவப்பு:

    இது காதலின் அடையாள சின்னமாக விளங்குகிறது. இரு மனங்களுக்கு இடையே புதைந்திருக்கும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், காதல், அன்பு, ஆசையின் வெளிப்பாட்டை பகிரவும் உதவும் தூதுவனாக பயன்படுகிறது, சிவப்பு ரோஜா.

    • சோம்பேறியாக இருந்தால் முன்னேற்றமே இருக்காது.
    • ஓய்வுக்கும், சோம்பேறித்தனத்திற்கும் வேறுபாடு உள்ளது.

    சோம்பேறித்தனத்தில் இருந்து நாம் எப்படி வெளியே வருவது என்பதை நாம் கொஞ்சம் சோம்பேறித்தனத்தை தவிர்த்துவிட்டு ஒருசில எளிய வழிகளை பார்க்கலாம்.

    சோம்பேறியாக இருந்தால் முன்னேற்றமே இருக்காது. இந்த சோம்பேறித்தனம் நம்மகிட்ட ஏற்படுவதற்கு முதலில் என்ன காரணம் என்று பார்த்தால் நாம் எடுக்கும் ஓய்வுக்கும், சோம்பேறித்தனம் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. வேலைநிறைய செய்துவிட்டு அத்தகைய வேலைப்பளுவின் காரணமாக எடுப்பது தான் ஓய்வு.

    ஆனால் வேலையே செய்யாமல் வேலைசெய்தமாதிரி ஓய்வு எடுத்துக்கொள்வது தான் சோம்பேறித்தனம். அது ஏன் நமக்கு ஏற்படுகிறது என்றால் பலவகையான காரணங்கள் உள்ளது. அதைவிட்டுவிட்டு சோம்பேறித்தனத்தை எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கலாம்.

    முதல்வழி என்னவென்றால் நாம் நம்மை ஆராய்ந்து பார்த்து தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதிகமாக வேலை செய்வதால் இந்த சோம்பேறித்தனமா அல்லது நீண்டதூரத்துக்கு பயணம் செய்வதால் சோம்பேறித்தனம் வருகிறதா? ரத்த சோகையால் சோம்பேறித்தனமா, ஹார்மோன் இம்பேலன்ஸ்டு என்னும் நோயால் சோம்பேறித்தனம் உள்ளதா, இந்த சோம்பேறித்தனம் ஏன் என்று நமக்கு ஏற்படுகிறது என்று பார்க்க வேண்டும். அதற்கு நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து தெளிவுபடுத்தி அட்டவணைப்படுத்த வேண்டும்.

    இரண்டாவதாக சோம்பேறித்தனம் நம்மை விட்டு அகலவேண்டும் என்றால் நாம் நம்முடைய செயலை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். நம் வேலையை பிறகு செய்துகொள்ளலாம் என்னும் வார்த்தையை சொல்லவே கூடாது. ஒரு விஷயம் சொல்வார்கள் நன்றே செய். அந்த நன்றும் அன்றே செய். நாம சொல்லக்கூடிய நல்ல விஷயங்களை இன்றே செய்ய வேண்டும். அதுவும் அன்றே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம் என்றால் கண்டிப்பாக சோம்பேறித்தனம் அண்டவே அண்டாது.

    மூன்றாவதாக ஓய்வே இல்லாமல் இருப்பது, சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற விஷயங்கள் நமக்கு ஒருவித சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும். நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டுமோ அதே அளவுக்கு தூக்கம் நமது உடலுக்கு மிகவும் முக்கியம். இரவில் நன்றாக உறங்கினால் மட்டுமே பகலில் சோம்பேறித்தனம் நமக்கு வரவே வராது. ஆனால் நாம் தற்போது நமது உடலுக்கு தேவையான உறக்கத்தை கொடுப்பதில்லை. அதற்கு பதிலாக ஸ்மார்ட் போனை கையில் வைத்துக்கொண்டு நீண்டநேரம் செல்போனிலேயே பொழுதை கழிக்கிறோம். அதுவும் ஒரு காரணம்.

    நாம் செல்போனில் பொழுதை கழிப்பதில் ஒரு வரைமுறை வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இல்லையென்றால் நேரம் விரையமாகுமே தவிர எந்த பலனும் இருக்காது. சோம்பேறித்தனம் தான் மிஞ்சும்.

    நான்காவதாக ஒரு செயலை செய்கின்றபோது அதனால் நமக்கு என்ன நன்மை கிடைகிறது என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். உதாரணத்துக்கு உடற்பயிற்சி செய்வதால் நமக்கு உடல் இளைக்கும், பார்ப்பவர்கள் நம்மை பாராட்டுவார்கள், ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் அதைவிடுத்து உடற்பயிற்சி எடுக்கவில்லை என்றால் உடல் கெட்டுவிடும், உடல் எடை அதிகரிக்கும், பார்ப்பவர்கள் எல்லோரும் கேட்பார்கள். அது நமக்கு பலவீனத்தை கொடுக்கும்.

    ஒரு செயலை நாம் எப்போது சிறப்பாக செய்யும் போது அதனால் கிடைக்கும் பலன்களும் அதிகமாக இருக்கும். ஒரு செயலை செய்யாமல் இருந்தால் அதனால் ஏற்படும் இழப்புகளையும் நாம் யோசித்து செயல்பட்டால் சிறப்பாக செயல்பட ஏதுவாக இருக்கும்.

    ஐந்தாவதாக நாம் நம்மை முதலில் உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். நான் சரியாக தான் செய்கிறேன். என்னுடையை வேலையை நான் சிறப்பாக செய்துள்ளேன். என்னால இந்த செயலை செய்ய முடியும். என்னால் வெற்றிபெற முடியும் என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொண்டால் சோம்பேறித்தனத்தில் இருந்து வெளியே வரலாம்.

    ஆறாவதாக நாம நமக்கு ஒரு லட்சியத்தை தேர்வு செய்துகொள்ள வேண்டும். எடுக்கும் லட்சியத்தை சிறிய விஷயத்தில் எடுக்க வேண்டும். ஒருவேளை பெரிய லட்சியத்தை எடுத்து அதை சாதிக்க முடியாமல் சென்றால் அதை இந்த சமூகம் கேளிக்கூத்தாகத் தான் பார்க்கும். எனவே நம்மை இன்னும் சோம்பேறித்தனத்திற்குள் தள்ளிவிடும். நாம் நம் முயற்சியை கைவிட்டுவிடுவோம். அதனால் சிறிய சிறிய லட்சியங்களை தேர்வு செய்து வெற்றிபெறலாம். நமக்கு அது ஒரு உற்சாகத்தை கொடுக்கும். எனவே படிப்படியாக வாழ்த்துகளையும், மற்றவர்களின் பாராட்டுகளையும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியும். சோம்பேறித்தனம் நம்மை அண்டவே அண்டாது என்பதை தெளிவாக நாம் புரிந்துகொள்ளலாம்.

    • சேலத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி செல்லும் சாலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது.

    சேலம்:

    தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ேஹப்பி ஸ்டீரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். வாரம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மற்றும் பணி புரியும் இளைஞர்கள், இளம்பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் ஏராளமானோர் இதில் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சேலத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி செல்லும் சாலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இைத தொடர்ந்து இன்று காலை முதலே ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என ஏராளமானோர் அங்கு திரண்டனர் . பின்னர் அங்கு இசைக்கப்பட்ட பாடல்களுக்கு ஏற்ப அவர்கள் உற்சாகமாக ஆடி, பாடி மகிழ்ந்தனர்.

    தொடர்ந்து டிரம்செட், பேண்ட் வாத்தியங்களும் அங்கு இசைக்கப்பட்டன. அந்த இசைக்கேற்ப அனைவரும் கைகளை உயர்திய படி ஆடி, பாடி அசத்தினர். மேலும் சர்ட்கள் அணிந்த படி ஆடி பாடிய இளைஞர்கள், இளம்பெண்கள் கலர் பேப்பர்களையும் வீசி, விசில் அடித்த படி உற்சாகத்துடன் துள்ளி குதித்து கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக இளம்பெண்கள் பலர் விசில்களை பறக்க விட்ட படி துள்ளி குதித்தது அனைவரையும் வியக்க வைத்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது. சேலத்தில் முதல் நாளாக இன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் அந்த பகுதியே களை கட்டியது.

    இதைெயாட்டி சாரதா கல்லூரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வணிகவரித்துறை அலுவலகம் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையே அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளுக்கான மின் வயரில் இருந்து திடீரென கரும் புகை வெளியேறியது.

    இதனால் மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு அந்த வயர்கள் சரி செய்யப்பட்டது. இதனால் நிகழ்ச்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியதுடன் களை கட்டியது. மேலும் இந்த விழாவை மாதத்திற்கு ஒரு முறை நடத்த முடிவு செய்துள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். 

    • மதுரையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது
    • மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், அதலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்றைக்கு அ.தி.மு.க. பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு, 1½ கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து நீதிமன்றங்க ளாலும், அங்கீகரிக்கப்பட்டு இருப்பவர் எடப்பாடியார் தான்.

    இதை உறுதி செய்கின்ற வகையில், தோழமையில் இருக்கிற தேசிய கட்சியான பா.ஜ.க உள்துறை அமைச்சரை எடப்பாடியார் சந்தித்துள்ளார். இது 1½ கோடி தொண்டர்களுடைய மனதில் புதிய உற்சா கத்தையும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது.

    எடப்பாடியார் மீண்டும் முதல்- அமைச்சராக தமிழகத்தில் வரவேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு வாராத வந்த மாமனியாக, வரப்பிரசாதமாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது. வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது.

    இன்றைக்கு நடைபெறுகிற தி.மு.க. அரசு கையாலாகாத அரசாக, நிர்வாக குளறுபடியில் இருக்கிற அரசாக, ஒட்டு மொத்த குளறுபடியினுடைய அடையாளமாக இருக்கிறது. 12 மணி நேர வேலை என்று சட்டம் இயற்றி அதை நிறைவேற்றிய மசோதாவை நிறுத்தி வைக்கின்றார். இப்படி பல்வேறு குளறு படிகளில் கல்யாண மண்ட பங்களில் மது விற்பனை செய்வோம் என்று ஒரு உத்தரவு போடுகிறார்கள். மக்கள் கொதித்து போராட்ட களத்துக்கு வந்த பிறகு அதை வாபஸ் வாங்கு கிறார்கள்.

    சர்வதேச விளையாட்டு மைதானங்களில் மதுபானம் அருந்தலாம் என்கிற ஒரு உத்தரவு பிறகு கோர்ட்டு தடை விதித்த பிறகு அதை நிறுத்தி வைக்கிறார்கள். தி.மு.க. அரசுக்கு முடிவுரை எழுதுகிற வகையில் தான் எடப்பாடியார் பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா வை சந்தித்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றி வேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
    • போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கட்டுப்பாடுடன் வரவேற்பது அவசியம்.

    நாகர்கோவில்:

    உலக மீனவர் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் முட்டத்தில் விழா நடைபெற உள்ளது. இந்த மீனவர் தினவிழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார்.

    இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வருகை யையொட்டி அவருக்கு அளிக்க வேண்டிய வர வேற்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு அவை தலைவர் எப்.எம்.ராஜ ரத்தினம் தலைமை வகித் தார். சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மேயருமான மகேஷ் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி இரவு தூத்துக்குடி வருகிறார். பின்னர்

    21-ந்தேதி காலை அங்கு திரைப்பட விழாவை தொடக்கி வைத்து விட்டு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கு மதிய உணவை முடித்த பிறகு முட்டத்தில் நடைபெறும் மீனவர் தினவிழாவில் கலந்து கொள்கிறார்.

    நான் மாவட்ட செயலா ளராக புதிதாக பொறுப்பு ஏற்றுள்ளேன். அதோடு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார். எனவே அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்க வேண்டும். கடந்த 7.9.2022 அன்று ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த போது காவல்கிணறு சந்திப்பில் கொடுத்த வரவேற்பை போலவும், அதை விட எழுச்சியுடனும் வரவேற்க வேண்டும்.

    இதுவரை குமரி மாவட்டம் பார்த்திடாத வரவேற்பை அவருக்கு அளிக்க வேண்டும். போக்கு வரத்து நெரிசல் இல்லா மல் கட்டுப்பாடுடன் வர வேற்பது அவசியம்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில், குமரி மாவட்டம் வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக யார் அறி விக்கப்பட்டாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண் டும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாமில் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், செயற்குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, தாமரை பாரதி, சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் லிவிங் ஸ்டன், சுரேந்திரகுமார், பாபு, மதியழகன், பிராங்கி ளின், ரமேஷ்பாபு, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், துணைச் செய லாளர்கள் பூதலிங்கம், சோமு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடர் விடுமுறை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாகத்துடனும் மகிழ்சியுடனும் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    தீபாவளிவிடுமுறையை யொட்டி வேளாங்கண்ணி யில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்நாகப்பட்டிணம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றதும் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மிக தளமாகவும், சுற்றுலா தளமாகவும் அமைந்துள்ளது அதன்படி நேற்று தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர் பேராலய த்தில் நடைபெறும் திருப்பலி களிலும், பழைய மாதாஆலயம், நடுத்திட்டு, தியானகூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா, , உள்ளிட்ட இடங்க ளிலும் கடற்கரையில் குடும்பத்து டனும், நண்பர்க லுடனும் கடலில் நீராடியும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர் இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    • விடுமுறை நாள் என்பதால் மணிமண்டப பூங்காவில் வழக்கத்தை விட பொதுமக்கள் குவிந்தனர்.
    • குழந்தைகள் பல்வேறு விளையாட்டு சாதன பொருட்களிலும் ஏறி விளையாடினர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலாண்டு விடுமுறை விடப்பட்டது.

    மேலும் ஆயுத பூஜை , விஜயதசமியை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இப்படி தொடர் விடுமுறை காரணமாக தஞ்சையில் உள்ள புகழ் பெற்ற மணிமண்டப பூங்காவில் இன்று வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

    தஞ்சை நகர் மட்டுமல்லாத சுற்றி உள்ள ஏராளமான பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளுடன் மணி மண்டப பூங்காவுக்கு வந்தனர்.

    இதேபோல் பெரிய கோவிலுக்கு வந்திருந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மணிமண்டப பூங்காவுக்கு வந்து சுற்றி பார்த்தனர்.

    ஏராளமானோர் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அங்கு உள்ள ஊஞ்சலில் குழந்தைகள் உற்சாகமாக ஆடினர். மேலும் பல்வேறு விளையாட்டு சாதன பொருட்களிலும் ஏறி விளையாடினர்.

    இதேபோல் பெரிய கோவிலிலும் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து கட்டிட கலையை பார்த்து ரசித்தனர்.

    பெரிய கோவில் நுழைவு கோபுரம், ராஜராஜன் கோபுரம், மூலவர் கோபுரம், பெரிய நந்தி உள்ளிட்ட பலவற்றை பார்த்து ரசித்தனர். செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களிலும் தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    • சிறிது நேரம் ஓய்வெடுத்த ராகுல் காந்தி அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை தனி படகில் சென்று பார்வையிட்டார்
    • கன்னியாகுமரியில் இருந்து 3 ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு சென்று முதல் நாள் தனது பயணத்தை நிறைவு செய்தார்

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடந்தது.தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி நேற்று மதியம் 1.45 மணிக்கு கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த ராகுல் காந்தி அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை தனி படகில் சென்று பார்வையிட்டார்.

    காமராஜர் மண்டபத்தையும் ராகுல் காந்தி பார்வையிட்டார். காந்தி மண்டபத்திற்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காந்தி மண்டபம் வந்து சேர்ந்தார். இருவரும் ஒன்றாக காந்தி மண்டபம் உள்ளே சென்றனர்.இருவரும் அங்கு நடந்த பிரார்த்தனையில் பங்கேற்றனர். மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். சுமார் 20 நிமிடம் காந்தி மண்டபத்தில் அவர்கள் இருந்தனர்.

    பின்னர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி இருவரும் காந்தி மண்டபத்தை விட்டு வெளியே வந்தனர். காந்தி மண்டபம் முன்பு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி பாதயாத்திரை தொடங்கி வைத்தார். சுமார் ஐந்து நிமிடம் காந்தி மண்டபம் முன்பு முதல்-அமைச்சரும், ராகுல் காந்தியும் பேசிக் கொண்டிருந்தனர்.

    ராகுல் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார். ராகுல் காந்தி பாதயாத்திரையாக அங்குள்ள பொதுக்கூட்ட மேடைக்கு மாலை 5.10 மணிக்கு வந்தார். தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு ராகுல் காந்தி மேடைக்கு வந்து சேர்ந்தார்.

    இதைத் தொடர்ந்து தேசியக் கொடிக்கு ராகுல் காந்தி மரியாதை செய்தார். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் அருகே பொது கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் ஒரு மணி நேரமாக தலைவர்கள் எழுச்சி உரை ஆற்றினார்கள்.மேடையில் ராகுல் காந்தி அமர்ந்திருந்தார். மாலை 6.10 மணிக்கு தனது பேச்சை தொடங்கிய ராகுல் காந்தி 25 நிமிடமாக பேசினார். 6.35 மணிக்கு தனது பேச்சை நிறைவு செய்தார். அவர் தனது பேச்சில் தேசிய கொடியின் பாதுகாப்பது நமது கடமை என்பதையும், நாட்டை பாதுகாப்பது நமது உரிமை என்பதை பற்றியும் எடுத்துரைத்தார்.

    நாட்டை காக்கவே பாதயாத்திரை மேற்கொள்வதாகவும் பேசினார்.மேலும் ஆர். எஸ். எஸ்., பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து பேசினார். இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கம் குறித்தும் ராகுல் காந்தி எடுத்துரைத்தார். தனது பேச்சை நிறைவு செய்த ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    கன்னியாகுமரியில் இருந்து 3 ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு சென்று முதல் நாள் தனது பயணத்தை நிறைவு செய்தார்.முதல் நாள் கன்னியாகுமரியில் 5 மணி நேரம் ராகுல் காந்தி தனது நிகழ்ச்சியை மேற்கொண்டு உள்ளார்.ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ராகுல் காந்தி தனது பாதயாத்திரை மேற்கொள்ளும் போது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய எழுச்சி கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி சந்திப்பு 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ராகுல்காந்தியின் இந்த பாதயாத்திரை நாடு முழுவதும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கு ஊன்றுகோளாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • ஒரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிக்கு மாணவ-மாணவிகள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்தனர்.
    • நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை சந்தித்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 2065 பள்ளிகள் திறக்கப்பட்டது.‌ இன்று முதல் 2022-23-ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு தொடங்கியது.

    ஒரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிக்கு மாணவ-மாணவிகள் காலையிலேயே ஆர்வத்து டன் வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை சந்தித்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளிகள் திறக்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளிகள் திறப்பு மற்றும் முடியும் நேரம் சிறிது மாறுபட்டது.

    பள்ளிகள் தொடங்கி யதும் மாணவ- மாணவி களுக்கு இலவச பாடப், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதனை அவர்கள் ஆர்வத்துடன் வாங்கி படித்துப் பார்த்தனர். வகுப்பு தொடங்க ப்பட்டதும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்கவில்லை. மாறாக அரசு வழிகாட்டுதல் படி மாணவ- மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. நல்லொழுக்கம் மற்றும் உளவியல்ரீதியான வகுப்புகளும் நடத்தப்ப ட்டன.

    இந்த வாரம் முழுவதும் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.அடுத்த வாரம் முதல் வழக்கமான பாடங்கள் நடத்தப்பட உள்ளன.இதுதவிர பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது. மீண்டும் ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் தஞ்சையில் பள்ளிகள் அமைந்திருக்கும் பகுதிகள் பரபரப்பாக இயங்கின. வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும், 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×