search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheers"

    • தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டத்தின்படி ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையம் வந்தார்.
    • சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்,சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    சேலம்:

    'தமிழகத்தில் கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தின்படி ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையம் வந்தார். முதல்-அமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின்தனிப்பிரிவு செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் உடன் வந்தனர். விமான நிலையம் முன்பு காவல்துறை சார்பில் நடந்த அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்,சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    விமான நிலையத்தில் முதல்-அமைச்சருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து முதல்-அமைச்சர் கள ஆய்வில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்து காரில் புறப்பட்டு சேலம் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    • தொடர் விடுமுறை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாகத்துடனும் மகிழ்சியுடனும் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    தீபாவளிவிடுமுறையை யொட்டி வேளாங்கண்ணி யில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்நாகப்பட்டிணம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றதும் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மிக தளமாகவும், சுற்றுலா தளமாகவும் அமைந்துள்ளது அதன்படி நேற்று தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர் பேராலய த்தில் நடைபெறும் திருப்பலி களிலும், பழைய மாதாஆலயம், நடுத்திட்டு, தியானகூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா, , உள்ளிட்ட இடங்க ளிலும் கடற்கரையில் குடும்பத்து டனும், நண்பர்க லுடனும் கடலில் நீராடியும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர் இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    • கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தது.
    • தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களிடம் ஜோதி வழங்கப்பட்டது.

    சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் சென்னை மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளார்கள். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


    இந்தநிலையில் நேற்று கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தது. ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திறந்தவெளி வாகனத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் ஏந்தி சென்று மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து ஒலிம்பியாட் ஜோதி ஊர்வலமாக சேரிங்கிராசுக்கு வந்தது.


    அப்போது சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களிடம் ஜோதி வழங்கப்பட்டது. பின்னர் இந்த ஜோதியானது ஊட்டி மத்திய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து செஸ் ஒலிம்பியாட்டி போட்டியை முன்னிட்டு, தமிழகத்தின் உயர்ந்த மலை சிகரமான தொட்டபெட்டாவில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே செஸ் போட்டி நடத்தப்பட்டது.


    மேலும் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டு இருந்த செல்பி ஸ்பாட்டில் மாணவ -மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஊட்டி ஆர்.டி.ஓ‌. துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் மலர்விழி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×