search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலங்குளம்"

    • பீடித்தொழி லாளர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும்.
    • தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை பி.எப். ஆக செலுத்த வேண்டும்.

    நெல்லை:

    தென்காசி மாவட்ட பீடி தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மகாவிஷ்ணு தலைமையில் கிளை அமைப்பு கூட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் நடை பெற்றது. பீடித்தொழி லாளர்க ளுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பாக கடந்த 2022-2023-ம் ஆண்டுக்கான போனஸ், விடுமுறை சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை பி.எப். ஆக செலுத்த வேண்டும். வாரந்தோறும் சனிக்கிழமை பீடி சுற்றியதற்கான சம்பளம் வழங்க தனியார் பீடி கம்பெனி நிர்வாகத்தை வலிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் மருதம்புத்தூர் கிளை தலைவர் ராமகிருஷ்ணன், துணை தலைவர்கள் சந்திரா, சரஸ்வதி, செயலாளர் தனலெட்சுமி, துணை செயலாளர்கள் கவிதா, நாராயண லெட்சுமி, பொருளாளர் கிருஷ்ண நவமணி, சம்மேளனக்குழு உறுப்பினர் வள்ளிமயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
    • நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரி புதிய கட்டிட வளாகத்தில் அசுரா நண்பர்கள் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு அசுரா நண்பர்க ளின சமூக பணிகளை பாராட்டினார்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஷீலா, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் ஆகியோர் முன்னி லை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால், பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தரம், ஆலங்குளம் அரிமா சங்கம் ஆதித்தன், முன்னாள் பேரூ ராட்சி துணை தலை வர் தங்கசெல்வம், சமூக ஆர்வலர்கள், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அன்ப ழகன், ஒன்றிய இளைஞர் அணி அரவிந்த் ராஜ் திலக், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அய்யம்பெருமாள், ஓன்றிய கவுன்சிலர் நாகராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமை ப்பாளர் அசோக், மாரியப்பன், சோனா மகேஷ், தொழிலதிபர் செல்வகுமார்,ராஜன், அசுரா நண்பர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், குறிப்பன்குளம் இளந்தளிர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊத்துமலையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    ஆலங்குளம்:

    தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஊத்துமலையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டி யன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எச்.எம்.பாண்டியன் தொகுப்புரை ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர் மருதப்பபுரம் பாண்டியராஜன், அவைத்தலைவர் சண்முக சுந்தரம், துணை செயலாளர் முத்துலெட்சுமி, பசுவதி, வீராணம் வீரபாண்டியன், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், நெல்லை வீரபெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட மகளிர்அணி செயலாளர் சந்திரகலா, மாவட்ட மாணவரணி செய லாளர் பிரேம்குமார், மாவட்ட தொழிற்சங்க செய லாளர் குத்தாலிங்கம், மாவட்ட விவசாய அணி கிருஷ்ணசாமி, மாவட்ட ஐடி விங் மகபூப் மசூது, ஒன்றிய செயலாளர்கள் தென்காசி சங்கரபாண்டியன், கீழப்பாவூர் மேற்கு அமல்ராஜ், கிழக்கு இருளப்பன், ஆலங்குளம் தெற்கு பாலகிருஷ்ணன், கடையம் வடக்கு அருவேல் ராஜ், கடையம் தெற்கு முருகேசன், பாப்பாக்குடி டி.கே.சுப்பிரமணியன், கடையநல்லூர் தெற்கு ஜெயக்குமார், நகர செயலாளர்கள் தென்காசி சுடலை, சுரண்டை சக்திவேல், பேரூர் செயலாளர்கள் மேலகரம் வக்கீல் கார்த்திக் குமார், குற்றாலம் சேர்மன் கணேஷ் தாமோதரன், சுந்தரபாண்டியபுரம் முத்துராஜன், ஆலங்குளம் கேபி சுப்பிரமணியன், கீழப்பாவூர் ஜெயராமன், முக்கூடல் சகாய அருள் வில்சன், பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, வக்கீல் அணி சிவக்குமார், ஆலங்குளம் சாந்தகுமார், ராமச்சந்திரன், சதீஷ்குமார், ஜோதி முருகன், முத்துராஜ், வீரபாண்டியன், திருமலைக்குமார், வேல்துரை, ஊத்துமலை இளைய ராஜா குமரேசராஜா, ஊத்துமலை கிளை செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கருவந்தா தானியேல் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் கருப்பசாமி நன்றி கூறினார்.

    • பூபால சமுத்திரம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்தார்.
    • புதிய கட்டி டத்திற்கு முன்பாக நுழைவு வாயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் தாலுகா பூலாங்குளம் மற்றும் நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 59 லட்சம் நிதி பெற்று தந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு அந்தந்த பள்ளி களின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

    விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். ஓ.பி.எஸ். அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, ஓய்வுபெற்ற எஸ்.ஐ. சங்கர், அய்யனார்குளம் பஞ்சாயத்து தலைவர் நீதி ராஜன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். ஆசிரியர் அப்துல் காதர் வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வுக்கு தங்கள் ஊர் பள்ளிக்கு கூடுதலாக 20 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 2 லட்சம் நிதி பெற்று தந்ததற்கு நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றியும், பாராட்டு தல்களை தெரிவிக்கப் பட்டது.

    விழாவில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணிசெயலாளர் சேர்ம துரை உட்பட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜாஸ்மின் ஹெலன் நன்றி கூறினார்.

    முன்னதாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பூலாங் குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 20 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ. 1.57 கோடி நிதியை தமிழக அரசிட மிருந்து பெற்று தந்ததற்கு பூலாங்குளம் பள்ளியின் சார்பாகவும் ஊர் பொது மக்கள் சார்பாகவும் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக் கப்பட்டது. தொடர்ந்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றி யம் பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து பூபால சமுத்திரம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன் புதிய கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்தார். தொடர்ந்து ஆலங் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டி டத்திற்கு முன்பாக நுழைவு வாயில் கட்டுவதற்கு ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கு அடிக்கல் நாட்டி னார்.

    விழாவில் ஓ.பி.எஸ். அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, அண்ணா தொழிற்சங்க மாநில அமைப்பு செயலா ளர் சேர்மதுரை, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் பாலையா பாண்டியன், ஆலங்குளம் நகர செய லாளர் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய செயலாளர் செல்லத் துரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.
    • போட்டிகளில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் நெல்லை, தென்காசி மாவட்ட மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டி, விளையாட்டு போட்டி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரம் நடும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    தி.மு.க.மாநில சுற்றுச்சூழல்அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் சக்பி சுலைமான், சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் உசிலம்பட்டி அருணன், ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரி கல்லூரி டிரஸ்டி காவியா பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலடி அருணா லிபரல் கல்லூரி முதல்வர் முத்தமிழ் செல்வன் வரவேற்று பேசினார்.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கபடி, கைப்பந்து, வாலிபால் கோக்கோ, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து மரக்கன்றுகள் நட்டு பேசினார்.

    விழாவில் தென்காசி மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை, மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லப்பா, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, கடையம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் மாயவன். ஜெயக்குமார், முக்கூடல் பேரூர் செயலாளர் லெட்சு மணன், ஆழ்வார்குறிச்சி அழகேசன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிருஷ்ண ராஜ், கீழப்பாவூர் பேரூர் முன்னாள் தலைவர் பொன் அறிவழகன், வக்கீல் சிவக்குமார் ரஞ்சித், பஞ்சு அருணாச்சலம், ஜெபராஜன், மணிகண்டன், ஆலடி அருணா லிபரல் கல்லூரி பேராசிரியர்கள், ஆலடி அருணா நர்சிங் கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரை யாளர்கள் மாணவ -மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலடி அருணா லிபரல் கலை அறிவியல் கல்லூரியில் மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற விளையாட்டு கலை இலக்கிய போட்டிகளில் தென்காசி, ஆலங்குளம், மருதம்புத்தூர், மாறாந்தை, நெட்டூர், நல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில்,சுந்தரபாண்டியபுரம், பாவூர்சத்திரம் அகரக்கட்டு, ஆவுடை யானூர், செங்கோட்டை வீரசிகாமணி, அம்பாச முத்திரம் விக்கிரமசிங்கபுரம், கல்லிடைகுறிச்சி பகுதிகளில இருந்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, கல்லூரி டிரஸ்டி காவியா பாலாஜி ஆகியோர் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    • பெரியகுளத்தில் 30 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடை பெற்றது.
    • கலெக்டர் ரவிசந்திரன், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் பனை விதைகளை நட்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகுளத்தில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் ஏற்பாட்டில் 30 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி யின் தொடக்க விழா நடை பெற்றது.

    ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிசந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு பனைமரத்தின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு நெட்டூர் ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் கணே சன், திலக ராஜ் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், முத்தையா, விவசாய சங்க தலைவர் முப்புடாதி, செயலாளர் வேலாயுதம், கணேசன், அருணாசலபுரம் இசக்கி துரை, வார்டு உறுப்பினர் கணேசன், ஊராட்சி செயலாளர் அறுமுகப் பாண்டியன், இளம் தளிர் பூ உலகை காப்போம், பொழில், நம்மாழ்வார் நடுவர் அமைப்பு தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தொட்டியான்குளம் குளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பூ உலகை காப்போம் மன்றத்தின் சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தொட்டியான்குளம் குளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு பணியை தொடங்கி வைத்தார். இதில் ஆலங்குளம் யூனியன் முன்னாள் துணை சேர்மன் தங்கசெல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் மோகன் லால், ராஜதுரை, மாவட்ட பிரதிநிதி அன்பழகன், பூ உலகை காப்போம் மன்றத்தின் அங்கத்தி னர்கள், அசுரா அமைபின் பொறுப்பாளர்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வ லர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பூ உலகை காப்போம் மன்றத்தின் தலைவர் ராஜா வரவேற்று பேசினார். ஆலோசகர் இளங்கோ, அசுரா மன்றத்தின் ராஜா, பிரபாகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சி க்கான ஏற்பாட்டி னை செய்திருந்தனர்.

    • புதுப்பட்டியில் உள்ள தனியார் பீடி நிறுனத்தின் கீழ் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர்.
    • பீடிக்கடை முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியில் உள்ள தனியார் பீடி நிறுனத்தின் கீழ் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொழி லாளர்களுக்கு விடுமுறை ஊதியம், வருங்கால வைப்பு நிதி, போனஸ் மற்றும் வார ஊதியத்தை சரியாக செலுத்தவில்லையாம். இதுகுறித்து பலமுறை கேட்டும் நிர்வாகம் தரப்பில் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அந்த பீடிக்கடை முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால் விநாயகம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்கள் மற்றும் பீடி நிறுவன அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என அப்போது முடிவு செய்யப்பட்டது.

    • மாரிமுத்துவுக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.
    • கடந்த 8-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மாரிமுத்து மயங்கி கிடந்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி சந்தனமாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 48). தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்துவுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 8-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவர் இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார், அரி பால சுப்பிரமணியன் ஓட்டி வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.
    • ரூ. 1.30 லட்சம் மதிப்புள்ள புகையிலை உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தை சேர்ந்தவர் அரி பால சுப்பிரமணியன் (வயது 33). பீடி வியாபாரி.

    இவர் தனது ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவ தாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு புகார் சென்றது.

    இதையடுத்து நேற்று மாலை தனிப்படை போலீசார், குருவன்கோட்டை - துத்தி குளம் சாலையில் அரி பால சுப்பிரமணியன் ஓட்டி வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.

    அப்போது, ஆட்டோவில் பீடி மூட்டைகளுக்கு நடுவில் 544 புகையிலை பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரி பால சுப்பிரமணியனை போலீசார் பிடித்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, ரூ. 1.30 லட்சம் மதிப்புள்ள புகையிலை உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அரி பாலசுப்பிர மணியனை ஆலங்குளம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? அரி பால சுப்பிரமணியனுக்கு புகையிலை கிடைத்தது எப்படி? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி பக்கத்து வயல்களுக்கும் பரவியது.
    • அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்து தங்கையாவை மீட்க முயன்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கையா (வயது 65). விவசாயி. இவருக்கு சொந்த மான தோட்டம் ஊருக்கு வட புறமாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை இனி தொடங்கும் என்பதால் வயலில் முளைத்திருந்த முட்செடிகளை அப்புறப் படுத்தி நெல் நடவுக்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ள அவர் முடிவு செய்தார். இதற்காக நேற்று மாலை அவர் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், குப்பைகளுக்கு அவர் தீ வைத்தார்.

    அப்போது காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி பக்கத்து வயல்களுக்கும் பரவியது. தீ பற்றி எரிந்ததால் தென்னை ஓலைகளை கொண்டு அதனை அணைக்க தங்கையா முயற்சி செய்து உள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர் தீயில் தடுமாறி விழுந்தார்.

    இதில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. அவர் கத்தி கூச்சலிட்ட நிலையில் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார். 

    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனத்தை வழங்கி அதன் சேவையை தொடங்கி வைத்தார்.
    • நிர்வாகிகள் கூட்டத்தில் தென்காசி தெற்கு தொகுதிக்கு கலைஞர் படிப்பகம் அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 88 ஆயிரத்தில் 58 வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வரவேற்று பேசினார்.தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டரியில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனத்தை வழங்கி அதன் சேவையை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக ஆலங்குளம் வந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை, ஆலங்குளம் சேர்மன் திவ்யா மணிகண்டன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது செண்டை மேளம் முழங்க பெண்கள் பூரணகும்ப மரியாதை செலுத்தி அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்வி போஸ், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, சிவன் பாண்டியன், அன்பழகன், சீனித்துரை, மாரி வண்ணமுத்து, ஜெயக்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பி.எஸ். அண்ணா மலை, ஆலங்குளம் பேரூர் செயலாளர் நெல்சன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மருதம்புத்தூர் ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா, துணை அமைப்பாளர் சரஸ்வதி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் செல்வக்கொடி, ஊராட்சி தலைவர்கள் சந்திரசேகர், அய்ய னார்குளம் பஞ்சாயத்து தலைவர் நீதிராஜன், நல்லூர் பஞ்சாயத்து தலைவர் சிம்சோன், மருதம்புத்தூர் பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை மற்றும் சாந்தி ஆண்டி, வளர்மதி அய்யனார், பால்தாய், தானியேல், ஸ்நாபக அந்தோணி, கருப்பசாமி, மாலதி சுரேஷ், வெங்கடேஸ்வரி முரு கேசன், பாலசுப்பிர மணியன், மருதநாச்சியார், மீனா சுப்பிரமணியன், செல்வி மணிமாறன், மகரஜோதி சரவணன், முருகன், ஜெயராணி குமார், பூசத்துரை, பொன்ராஜ், புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பால்விநாயகம், முத்துலெட்சுமி முருகன், ராஜேஸ்வரி பால சுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி செயலர்கள், உதவி யாளர்கள், ஆலங்குளம் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடு களை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் செய்திருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஆலங்குளம் ஏ.ஜே. மகாலில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தென்காசி தெற்கு தொகுதிக்கு கலைஞர் படிப்பகம் அமை த்திட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வரவேற்று பேசினார். அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை தாங்கினார். அமைச்சர் கே .கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை, மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, அன்பழகன், சீனித்துரை, சிவன் பாண்டியன், மாரி வண்ணமுத்து, இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ், மகளிரணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மாணவரணி ரமேஷ் கதிர்வேல், ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் பேரூ ராட்சி தலைவர் பொன் அறிவழகன், இளைஞர் அணி கோமு, தளபதி, மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×