search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெட்டூர் பெரியகுளத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி
    X

    விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பனைவிதைகளை நட்ட காட்சி. அருகில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் உள்ளார்.

    நெட்டூர் பெரியகுளத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி

    • பெரியகுளத்தில் 30 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடை பெற்றது.
    • கலெக்டர் ரவிசந்திரன், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் பனை விதைகளை நட்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகுளத்தில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் ஏற்பாட்டில் 30 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி யின் தொடக்க விழா நடை பெற்றது.

    ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிசந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு பனைமரத்தின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு நெட்டூர் ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் கணே சன், திலக ராஜ் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், முத்தையா, விவசாய சங்க தலைவர் முப்புடாதி, செயலாளர் வேலாயுதம், கணேசன், அருணாசலபுரம் இசக்கி துரை, வார்டு உறுப்பினர் கணேசன், ஊராட்சி செயலாளர் அறுமுகப் பாண்டியன், இளம் தளிர் பூ உலகை காப்போம், பொழில், நம்மாழ்வார் நடுவர் அமைப்பு தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×