search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை
    X

    ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

    • மாரிமுத்துவுக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.
    • கடந்த 8-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மாரிமுத்து மயங்கி கிடந்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி சந்தனமாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 48). தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்துவுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 8-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவர் இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×