என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குப்பைகளை அகற்றியபோது தீயில் தடுமாறி விழுந்து விவசாயி சாவு
- காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி பக்கத்து வயல்களுக்கும் பரவியது.
- அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்து தங்கையாவை மீட்க முயன்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கையா (வயது 65). விவசாயி. இவருக்கு சொந்த மான தோட்டம் ஊருக்கு வட புறமாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை இனி தொடங்கும் என்பதால் வயலில் முளைத்திருந்த முட்செடிகளை அப்புறப் படுத்தி நெல் நடவுக்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ள அவர் முடிவு செய்தார். இதற்காக நேற்று மாலை அவர் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், குப்பைகளுக்கு அவர் தீ வைத்தார்.
அப்போது காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி பக்கத்து வயல்களுக்கும் பரவியது. தீ பற்றி எரிந்ததால் தென்னை ஓலைகளை கொண்டு அதனை அணைக்க தங்கையா முயற்சி செய்து உள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர் தீயில் தடுமாறி விழுந்தார்.
இதில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. அவர் கத்தி கூச்சலிட்ட நிலையில் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்