search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீடி தொழிலாளர்கள்"

    • பீடித்தொழி லாளர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும்.
    • தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை பி.எப். ஆக செலுத்த வேண்டும்.

    நெல்லை:

    தென்காசி மாவட்ட பீடி தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மகாவிஷ்ணு தலைமையில் கிளை அமைப்பு கூட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் நடை பெற்றது. பீடித்தொழி லாளர்க ளுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பாக கடந்த 2022-2023-ம் ஆண்டுக்கான போனஸ், விடுமுறை சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை பி.எப். ஆக செலுத்த வேண்டும். வாரந்தோறும் சனிக்கிழமை பீடி சுற்றியதற்கான சம்பளம் வழங்க தனியார் பீடி கம்பெனி நிர்வாகத்தை வலிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் மருதம்புத்தூர் கிளை தலைவர் ராமகிருஷ்ணன், துணை தலைவர்கள் சந்திரா, சரஸ்வதி, செயலாளர் தனலெட்சுமி, துணை செயலாளர்கள் கவிதா, நாராயண லெட்சுமி, பொருளாளர் கிருஷ்ண நவமணி, சம்மேளனக்குழு உறுப்பினர் வள்ளிமயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • போலியாக பீடி உற்பத்தி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    அகில இந்திய பீடி தொழிலாளர் சம்மேளன மாநாடு கேரள மாநிலம் கன்னூரில் வருகிற 28, 29-ந் தேதி நடக்கிறது.

    இநனையொட்டி வேலூர் திருப்பத்தூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் சார்பில் சத்துவாச்சாரியில் பிரசார பேரணி நடந்தது.

    தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட பொது செயலாளர் நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பீடி தொழிலை நலிவடைய செய்யும் கொள்கைகளை கைவிட வேண்டும். பீடி மீது விதிக்கப்பட்டுள்ள 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்.

    ஓய்வு பெறும் பீடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.3 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும். போலியாக பீடி உற்பத்தி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்தனர்.

    ×