search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிக்கை"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டத்தில் முதல்- அமைச்சர் என்ற மன நிலையை மறந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாரை வாய்க்கு வந்த வார்த்தை களால் விமர்சித்துள்ளார்.

    மணிப்பூர் சம்பவம் மிக வும் வேதனை தரத்தக்கது தான். இதற்கு அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 21-ந் தேதி எடப்பாடி யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையாக தனது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.

    ஆனால் எடப்பாடியாரின் அறிக்கை வரவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை யாக, முதல்-அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசக் கூடாது.

    எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வரு கிறது என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பேசி உள்ளார். இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக, 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் தலைவராக எடப்பாடியார் உள்ளார்

    எடப்பாடியாரை பழிப்ப தாக பேசிய பேச்சு 2 கோடி தொண்டர்களையும், 8 கோடி மக்களையும் பழிப்ப தாக உள்ளது. திருச்சி கூட்டத்தில் எடப்பாடியாரை கொத்தடிமை என்று விமர் சித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இந்த பேச்சால் 2 கோடி தொண்டர்களின் மனம் புண்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்திறப்பு விழாவிற்கு நாளை (15-ந்தேதி) மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைகளுடன் மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் சார்பில் எழுச்சிமிக்க வரவேற்பு அளிக்கப்ப டுகிறது.

    இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மு.மணி மாறன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    செம்மொழி நாயகர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நூலகம் மதுரையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க நூலகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைத்து பேசுகிறார். இதற்காக நாளை காலை விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைகளுடன் மதுரை விமான நிலையம் முதல் விழா நடைபெறும் இடம் வரை பல்லாயிரக் கணக்கான தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி, எழுச்சிமிகுதியுடன் வரவேற்க வேண்டும்.

    இந்த மாபெரும் வரவேற்பு நிகழ்வில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட கழகத்தினர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர் கள், துணை அமைப்பாளர் கள், கழக முன்னோடிகள், உள்ளா ட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத்தினர், கழக உடன்பிறப்புகள் என பல்லாயி ரக்க ணக்கானோர் பங்கேற்க வேண்டும்.

    இந்த வரவேற்பு நிகழ்வில் பொதுமக்களுக் கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி தி.மு.க.வினர் மிக உற்சாக மாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • ஆகஸ்டு 20-ந் தேதி மாபெரும் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி மாபெரும் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டின் முகூர்த்த கால் மற்றும் பணிகள் தொடர்பாக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோ சனை செய்வதற்காக மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி அளவில் நடைபெறு கிறது.

    இந்த கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி மாநாடு குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன.

    இந்த ஆலோ சனை கூட்டத்தில் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்டக் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள், செயல் வீரர்கள் அனைவரும் திர ளாக பங்கேற்று சிறப் பிக்கும்படி வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • இந்து சமய அறநிலையத்துறை பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
    • வழக்கு விசாரணையை 4 வாரத் திற்கு ஒத்திவைத்தனர்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராம லிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் கோவிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளன. இந்த நிலையில் மலைக்கு போகும் பாதையில் நெல்லித்தோப்பு எனும் பகுதியில் ரம்ஜான் மாதங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், "மலைக்கு மேல் தானே தர்காவும் அமைந்துள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடாது என கருத்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரத் திற்கு ஒத்திவைத்தனர்.

    • மதுரை மாவட்டம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்படுகின்றன.
    • விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை

    மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பா ளர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இளைய தளபதி விஜய் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    தொகுதி, பகுதி வாரியாகவும், கிராம பகுதிகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு நிர்வாகிகள் இனிப்புகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களுக்கு நல உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    நாளை (22-ந்தேதி) காலை 11மணிக்கு உசிலம் பட்டி நகர தலைவர் எஸ்.ஓ.பிம்.விஜய் ஏற்பாட் டில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளில் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா, நலத்திட்ட விழா நடைபெறு கின்றன. தெற்கு மாவட்ட பொருளாளர் விக்கி ஏற்பாட்டில் மதுரை வடக்கு மாசி வீதியில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் பகுதியில் அமைந்துள்ள மனநிலை வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகத்தில் கைத்தறிநகர் சூர்யா விஜய் ஏற்பாட்டில் மதியம் 1 மணிக்கு அன்ன தான விழா நடை பெறுகின்றன.

    மாவட்ட பிரதிநிதி கல்லணை குமார் ஏற்பாட்டில் விளாச்சேரி பகுதியில் மக்கள் இயக்க பெயர் பலகை திறப்பு விழா இனிப்பு வழங்கும் விழா நடக்கிறது.

    மேற்கு பகுதியில் மாடக்குளம் ரோகித் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் மாவட்ட இளை ஞரணி, தொண்டரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, தொழிற்சங்க அணி, வர்த்தக அணி, கொள்கைபரப்பு அணி, மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி விவசாய அணி நிர்வாகிகள் ஏற்பாட் டில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகின்றன.

    இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்த திராவிட முன்னேற்ற கழகம், இன்று செந்தில் பாலாஜியின் காலில் அடமானம் வைத்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு வக்காலத்து வாங்குவதற்கு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றி முதல்-அமைச்சர் தரக்குறைவாக பேசுவதற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

    7 கோடி தமிழர்களுடைய எதிர்காலமாக உள்ள எடப்பாடி பழனிசாமியை வாய்க்கு வந்தபடி நீங்கள் பேசி இருப்பது ஒரு முதல்-அமைச்சருக்கு அழகா? நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை. ஏனென்றால் எங்கள் மடியில் கனமில்லை. செந்தில் பாலாஜிக்கு இதய வலி என்றவுடன் முதல்-அமைச்சருக்கு இதயம் ஆடுகிறது.

    எடப்பாடி பழனிசாமியை பற்றி முதல்-அமைச்சர் பேசுவது ஜன நாயகத்தின் அநாகரீகமாகும். இதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். பலகட்சிக்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக, எங்கள் பொதுச் செயலாளர் மீது நரம்பு இல்லாத நாக்காக பேசிவருவதை நாங்கள் இனிமேல் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

    ஒரு கோடியே 49 லட்சம் மக்கள் எடப்பாடியாருக்கு வாக்களித்து உள்ளார்கள். 2 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தால் எடப்பாடியார் இன்றைக்கு முதலமைச்சராக இருந்திருப்பார்.

    எடப்பாடியார் மக்களுக்காக போராடும் உரிமை அவருக்கு உண்டு. மத்திய அரசு விசாரணை செய்தால் எங்களையும் வம்புக்கு இழுக்கிறீர்கள்? இனிமேல் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் அதற்காக விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள்- தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
    • மருத்துவ பிரிவு டாக்டர் கே .முரளி பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் பா.ஜ.க. மருத்துவ பிரிவு டாக்டர் கே.முரளி பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் மத்திய பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் பயன் பெறும் வகையில் செயல்ப டுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி பேசி வருகின்றனர். இதேபோல் மதுரை அண்ணாநகரில் பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதே போல் பூத் கமிட்டி மாநாடும் நடைபெற உள்ளது.

    இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். எனவே இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சட்டமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
    • பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மீதான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க ரக்ஷனா கோசம் என்ற கடுமையான சட்டம் வகுக்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், ராஜமகேந்திரவரம், வேமகிரியில் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா நடந்தது.

    விழாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சட்டமன்ற தேர்தலுக்கான முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் மகாசக்தி திட்டத்தின் கீழ், 18 வயது நிரம்பிய இளம்பெண்கள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 டெபாசிட் செய்யப்படும்.

    பெண்களுக்கு 59 வயது வரை உதவித் தொகை வழங்கப்படும். தள்ளி வந்தனம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குழந்தையின் கல்விக்காகவும் தாய்மார்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.15,000 டெபாசிட் செய்யப்படும்.

    மாவட்ட எல்லைக்குள் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண வசதி திட்டம் நிறைவேற்றப்படும். தீபம் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளின் துயரத்தை போக்க அன்னதாதா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

    தெலுங்கு தேசம் ஆட்சியின் 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வேலையில்லாத நபருக்கும் ரூ.3 ஆயிரம் வேலைவாய்ப்பின்மை நிவாரணமாக நிதி வழங்கப்படும்.

    மேலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மீதான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க ரக்ஷனா கோசம் என்ற கடுமையான சட்டம் வகுக்கப்படும்.

    மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு 2 குழந்தைகள் என்ற விதிமுறை ரத்து செய்யப்படும்.

    மக்களிடம் கருத்துகளைப் பெற்ற பிறகு தேர்தல் அறிக்கையின் 2-ம் பாகம் தசரா பண்டிகையின் போது வெளியிடப்படும்.

    தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்ததும் இந்த தேர்தல் அறிக்கை முழுவதும் நிறைவேற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கிறேன்.

    வரவிருக்கும் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய வேண்டும்.

    என்னை நம்புங்கள், நான் ஆந்திராவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை தருவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராணிப்பேட்டையில் வருகிற 16-ந்தேதி நடக்கிறது
    • அதிகாரி தகவல்

    ராணிப்பேட்டை:

    வேலூர் மின் பகிர்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தில் மாதம் தோறும் 3-வது செவ்வாய்க்கிழமைகளில் மின் நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம் ராணி ப்பேட்டை மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி மே மாதத்திற்கான கூட்டம் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை, வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அருணாசலம் தலைமையில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தை மின் நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு, ராணிப்பேட்டை மின்சார வாரிய செயற்பொறியாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • சுதேசி விழிப்புணர்வு மாநாட்டிற்கு அணி திரண்டு வர வேண்டும்.
    • மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மதுரை மண்டல தலைவர் மைக்கேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் 40-வது வணிகர் தின விழாவை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. தங்க கடற்கரையில் சுதேசி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் நான் (மைக்கேல் ராஜ்) தலைமை தாங்குகிறேன். சங்கத்தின் பல்வேறு நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில தலைவர் முத்துக்குமார் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கலைநிகழ்ச்சி நடக்கிறது.

    அதனை தொடர்ந்து சுதேசி விழிப்புணர்வு மாநாடு கூட்டம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் நடக்கும் இந்த மாநாட்டில் மதுரை மண்டலத்தின் சார்பில் நிர்வாகிகள் சூசை அந்தோணி, தங்கராஜ், சில்வர் சிவா, குட்டி என்ற அந்தோணி ராஜ், ஸ்வீட் ராஜன், ஜெயக்குமார், தேனப்பன், வக்கீல் கண்ணன், , சுருளி, ஆன்ந்த், அப்பாஸ், ராமர், கரன்சிங், வாசுதேவன், மூங்கில் கடை ரவி, பிச்சைப்பழம், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை மண்டலத்தில் இருந்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் கார், வேன்கள் மூலம் மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • கூடைப்பந்து அணிக்கு 13 வயதுக்குட்பட்டோருக்கான மாணவ- மாணவிகள் அணி தேர்வு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
    • இந்த அணி தேர்வில் வரும் மாணவ - மாணவிகள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு 13 வயதுக்குட்பட்டோருக்கான மாணவ- மாணவிகள் அணி தேர்வு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இந்த அணி தேர்வுக்கு 1.1.2010 தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த அணி தேர்வில் வரும் மாணவ - மாணவிகள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விருதுநகரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு இந்த மாவட்ட வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. மேற்கண்ட தகவல்களை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

    • மக்கள் நலன் கருதி கள்ளர் சீரமைப்பு துறை நிர்வாக மாற்றம் ஏற்கத்தக்கதல்ல.
    • பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றகழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் இன்று வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தமிழக அரசு அண்மையில் அரசு ஆணை மூலமாக பிரமலைக்கள்ளர் சமூகத்தின் உழைப்பாலும் நிதியாலும் உருவாக்கப்பட்ட கள்ளர் பொது நலன் நிதிக் குழுமம் மூலமாக உருவான கள்ளர் சீரமைப்புத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலரிடம் ஒப்படை ப்பது ஏற்கத்தக்கது அல்ல, கண்டிக்கத்தக்கது ஆகும்,

    தென் மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு விடுதிகள் குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் 295 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் 54 கள்ளர் சீரமைப்பு விடுதிகள் செயல்பட்டு வரு கின்றன. இவை அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தி லிருந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக இணை இயக்குனர் (கள்ளர் சீரமைப்பு) நிர்வாகத்தின் கீழ் இதுவரை இயங்கி வந்தன.

    எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மாற்றம் செய்வதற்கான ஆணைப்பிறப்பிக்கப்பட்டு அன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆண்டித்தேவர் போன்ற வர்கள் கோரிக்கையை ஏற்று ஆணை திரும்பப் பெறப்ப ட்டது, தற்சமயம் தி.மு.க. அரசு இந்த ஆணையை பிரமலைக்கள்ளர் மக்களின் நலன்கருதி உடனே திரும்ப பெற வேண்டும் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் காரணமாக கள்ளர் சீரமைப்பு விடுதிகள் அவை செயல்படும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் மூலம் நிர்வகிக்கலாம், ஆனால் கள்ளர் சீரமைப்பு கட்டு ப்பாட்டில் இருந்த போது ஒவ்வொரு விடுதியும் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் இருந்தது.

    ×