search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாவட்டம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள்
    X

    எஸ்.ஆர். தங்கப்பாண்டி

    மதுரை மாவட்டம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள்

    • மதுரை மாவட்டம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்படுகின்றன.
    • விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை

    மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பா ளர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இளைய தளபதி விஜய் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    தொகுதி, பகுதி வாரியாகவும், கிராம பகுதிகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு நிர்வாகிகள் இனிப்புகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களுக்கு நல உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    நாளை (22-ந்தேதி) காலை 11மணிக்கு உசிலம் பட்டி நகர தலைவர் எஸ்.ஓ.பிம்.விஜய் ஏற்பாட் டில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளில் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா, நலத்திட்ட விழா நடைபெறு கின்றன. தெற்கு மாவட்ட பொருளாளர் விக்கி ஏற்பாட்டில் மதுரை வடக்கு மாசி வீதியில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் பகுதியில் அமைந்துள்ள மனநிலை வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகத்தில் கைத்தறிநகர் சூர்யா விஜய் ஏற்பாட்டில் மதியம் 1 மணிக்கு அன்ன தான விழா நடை பெறுகின்றன.

    மாவட்ட பிரதிநிதி கல்லணை குமார் ஏற்பாட்டில் விளாச்சேரி பகுதியில் மக்கள் இயக்க பெயர் பலகை திறப்பு விழா இனிப்பு வழங்கும் விழா நடக்கிறது.

    மேற்கு பகுதியில் மாடக்குளம் ரோகித் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் மாவட்ட இளை ஞரணி, தொண்டரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, தொழிற்சங்க அணி, வர்த்தக அணி, கொள்கைபரப்பு அணி, மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி விவசாய அணி நிர்வாகிகள் ஏற்பாட் டில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகின்றன.

    இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    Next Story
    ×