என் மலர்

    நீங்கள் தேடியது "team"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை.
    • ஜோதிடர் சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம்.

    மும்பை:

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய வீரர்களின் திறமையை பரிசீலிக்காமல், ஜோதிடரை அணுகி வீரர்களின் ராசி பலன்களை பார்த்து தேர்வு செய்தது தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் இந்திய அணி விளையாடிய போது இந்திய கால்பந்து சங்கத்தின் அதிகாரி ஒருவரின் மூலம் ஜோதிடரை, அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அணுகியிருக்கிறார். அந்த தகுதிச்சுற்றின் ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம், எந்தெந்த வீரர்கள் எப்படி ஆடுவார்கள் என அணியின் விவரங்கள் அத்தனையையும் ஜோதிடரிடம் கொடுத்தே இகோர் ஸ்டிமாக் ஆலோசனை பெற்றிருக்கிறார்.

    கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங்11 பட்டியலை 2 நாள்களுக்கு முன்னதாகவே ஜோதிடருக்கு பயிற்சியாளர் அனுப்பியுள்ளார்.

    ஒவ்வொரு வீரரின் நட்சத்திரத்தை ஆராய்ந்து , இவர் இன்று நன்றாக விளையாடுவார். இவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பயிற்சியாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த ஆட்டத்தில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. ஏனென்றால் அன்றைய தினம் அவர்களது நட்சத்திரங்கள் சாதகமாக இல்லை என்று ஜோதிடர் கூறியது தான் காரணம்.

    மேலும் ஜோதிடர் சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம். மேலும், இந்திய அணிக்காக ஆலோசனை வழங்கியதற்காக அந்த ஜோதிடருக்கு ரூ. 15 லட்சம் சன்மானமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த விசயம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொடநாடு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருமங்கலத்தில் ஓ.பி.எஸ். அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆயிரக்கணக்கா–னோர் கலந்துக் கொண்ட–னர்.

    மதுரை

    கொடநாடு கொைல மற்றுமு கொள்ளை வழக்கு–களில் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரியும், இதுவரை குற்ற–வாளிகளை கண்டுபிடிக் காமல் மெத்தனப்போக் கோடு செயல்படும் தி.மு.–க.வை கண்டித்தும் இன்று மதுரை மாவட்டம் திருமங்க–லம் தாலுகா அலுவலகம் ராஜாஜி சிலை அருகே ஓ.பி.எஸ். அணி சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடை–பெற்றது.

    மதுரை தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு மாவட்ட கழக செயலா–ளர்கள் ஐயப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், அமைப்பு செயலாளர் ஜி.ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் அ.ம.மு.க. மாவட்ட செய–லாளர் பேராசிரியர் ஜெய–பால், ராஜலிங்கம், மேலூர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற் றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் பேசுகையில், இங்கே கூடியி–ருக்கும் நாளை நமது வெற் றியை நிர்ணயிக்கும் கூட்டம் என்றும் முன்னாள் முதல் வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு பங்களா கொலை, கொள்ளைகளை கண்டுகொள்ளாமல் இருக் கும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம். கொலை–யாளியை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று பேசினார்.

    இதனை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் பேசுகையில், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜி–னாமா செய்ேவன் என்று கூறிய உதயகுமார் இன்று வரை எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லையே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வேண்டியதுதானே என்றார்.

    மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலி–தாவின் மன உளைச்சலுக்கும் மரணத்தின் காரணம் தி.மு.க.வும், அரசு போட்ட பொய்யான வழக்கும் தான் என்று குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது டெண்டர் அணி என்றும், ஓ.பி.எஸ்சிடம் இருப்பது தொண்டர் அணி என்றும் பேசினார்.

    மதுரையை தெற்கு மாவட்ட செயலாளர் உசி–லம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப் பன் பேசுகையில், எடப்பாடி–யிடம் தான் மக்கள் செல் வாக்கு இருக்கிறது என்று சொல்லும் உதயகுமார், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும், நானும் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடுகிறேன். உசிலம் பட்டியில் யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப் போமா என்று சவால் விட் டார்.

    இன்று தமிழகம் முழுவ–தும் அனைத்து மாவட்டங்க–ளிலும் ஓ.பி.எஸ். ஆணைக்கி–ணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். இதேபோன்று அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலா–ளர்கள் மேலூர் சரவணன், பேராசிரியர் ஜெயபால், ராஜலிங்கம் ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் மாணவரணி மாநில துணைசெயலாளர் ஒத்தக் கடை பாண்டியன், முன் னாள் எம்.எல்.ஏ. பாண்டி–யம்மாள், வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண் ணன், உசிலை சசி–குமார், பிரபு, திருமங்கலம் சிவா, ஜெயகுமார், பன்னியன் ஊராட்சி தலைவர் காசி–நாதன்,

    பாரப்பத்தி முத்தையா, ஆட்டோ கருப்பையா, கொம்பையா, புல்லட் ராமமூர்த்தி, சாத்தன உடை–யார், பத்ரி முருகன், ராஜமாணிக்கம், சுந்தரா, வக்கீல் சரவணன், ஜோதி–முருகன், கோடீஸ்வரன், லோகநாதன், பாலசுப்பி–ரமணியன், மாவூத்து வேலன், துதி திருநாவுகரசு, வி.கே.எஸ்.மாரிச்சாமி, திருமங்கலம் நகர செயலாளர் ராஜாமணி, மாவட்ட பொருளாளர் ரவி உள்பட ஆயிரக்கணக்கா–னோர் கலந்துக் கொண்ட–னர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூடைப்பந்து அணிக்கு 13 வயதுக்குட்பட்டோருக்கான மாணவ- மாணவிகள் அணி தேர்வு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
    • இந்த அணி தேர்வில் வரும் மாணவ - மாணவிகள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு 13 வயதுக்குட்பட்டோருக்கான மாணவ- மாணவிகள் அணி தேர்வு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இந்த அணி தேர்வுக்கு 1.1.2010 தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த அணி தேர்வில் வரும் மாணவ - மாணவிகள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விருதுநகரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு இந்த மாவட்ட வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. மேற்கண்ட தகவல்களை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜயசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக வங்கி குழு நிர்வாகி தினேஷ் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் குழுவினர் இன்று வந்தனர்.
    • நிதிகள் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு உலக வங்கி குழு நிர்வாகி தினேஷ் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் குழுவினர் இன்று வந்தனர்.

    அவர்கள் அரசு ஆஸ்பத்தியில் செயல்படுத்தப்படும் எமர்ெஜன்சி திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகள் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள திட்டஙகள் குறித்தும், அந்த திட்டங்கள் தற்போது எந்த நிலையில் உள்ளது, அதற்காக பெறப்பட்டுள்ள நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர்.

    அப்போது மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்யமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் நடந்தது
    • காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின்கீழ்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் முன்னிலையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது:

    புதுக்கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 474.83 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 150.60 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யப்படவுள்ளது.

    இதில் 19 கிராமங்களில் நில அளவை பணிகள் முடிவுற்று முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் 2013 -ம் ஆண்டு சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தப்படுகிறது.அதன்படி தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் குன்னத்தூர், புலியூர், வத்தனாகுறிச்சி, வாலியம்பட்டி, சீமானூர் மற்றும் பூங்குடி ஆகிய வருவாய் கிராமங்களில் இதுவரை 6 கட்டங்களாக 43.19 ஹெக்டேர் நிலங்கள் ரூ.44.15 கோடி மதிப்பிற்கு கைய கப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விராலிமலை தாலுகா, குன்னத்தூர் கிராமத்தில் நீர்வளத்துறை மூலம் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விராலிமலை தாலுகா குன்னத்தூர், குளத்தூர் தாலுகா புலியூர் மற்றும் வத்தனாக்குறிச்சி கிராமங்களில் நிலமெடுப்பு செய்வதினால் பாதிக்கப்பட்டுள்ள 25 குடும்பங்களுக்கு மறு குடியமர்வுக்கு வழி செய்யும் வகையில், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, கோட்டாட்சியர் அறிக்கை பெறப்பட்டு மாநில மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.

    மேலும் மேற்கண்ட காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புகளூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தனர்.
    • விரைந்து சரி செய்து தருவதாக நிர்வாகம் உறுதி

    கரூர்:

    கரூர் மாவட்டம், புகளூரில் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புகளூர் வாய்க்காலில் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும், விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆலையில் இருந்து வெளியேறும் கரி துகள்களால் மாசு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 7-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து நேற்று புகளூர் தாசில்தார் மோகன்ராஜ், புகளூர் நகராட்சி தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், துணைத் தலைவர் பிரதாபன், நகராட்சி ஆணையர் கனிராஜ், காவல் ஆய்வாளர் வினோதினி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சர்க்கரை ஆலைக்குள் அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது ஆலையில் இருந்து கரி துகள்கள், கரும்பு சக்கை துகள்கள் வெளியேறுவதையும், ஆலையின் கழிவு நீர் புகளூர் வாய்க்காலில் கலக்கப்படுவதையும் பார்வையிட்டனர். அப்போது ஆலை நிர்வாக நிர்வாகிகள் அனைத்தையும் விரைந்து சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்காதவாறு விரைந்து சரி செய்து கொடுக்குமாறு ஆலை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினையில் விஸ்வரூபம்.
    • நெல்லையின் அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு

    நெல்லை:

    அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைைம பிரச்சினையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு குறிப்பிட்ட அளவு ஆதரவு உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தென்மாவட்டங்களிலும் ஏராளமானவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைபாட்டை எடுத்து வருகினறனர்.

    தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்க வலியுறுத்தி தனித்தனியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நெல்லை மாவட்டத்திலும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைபாட்ைட எடுத்து உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 52 பொதுக்குழு உறுப்பினர்களும், 9 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

    இதில் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்கள் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்தனர். ஆனால் தற்போது 61 உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள இன்று புறப்பட்டு சென்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் தற்போது முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 90 சதவீத அ.தி.மு.க. நிர்வாகிகள் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான உள்ளதாக கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை சமாளிக்க பெண் பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். #JammuKashmir #LadyCommandos
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெறும்போது, பாதுகாப்பு படையினரால் அப்பகுதி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

    இதனால், பாதுகாப்பு படையினருக்கு எதிராக பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுக்கின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் தடியடி போன்ற வழிமுறைகள் மூலம் மக்கள் போராட்டத்தை கலைக்கின்றனர்.



    ஆண் பாதுகாப்பு படை வீரர்களே பெரும்பாலும் இருப்பதால் அவர்கள் மீது கல்லெறிந்து பெண்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு படை வீரர்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்களுக்கு, இருளில் செயல்படுவது முதல், துப்பாக்கி சுடுவது வரை அனைத்து விதமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதுகாப்பு படையினர் மீது கல் எறியும் பெண்களை தடுக்க முடியும் என கூறப்படுகிறது. #JammuKashmir #LadyCommandos
    ×