search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம்
    X

    மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம்

    • மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் நடந்தது
    • காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின்கீழ்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் முன்னிலையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது:

    புதுக்கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 474.83 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 150.60 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யப்படவுள்ளது.

    இதில் 19 கிராமங்களில் நில அளவை பணிகள் முடிவுற்று முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் 2013 -ம் ஆண்டு சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தப்படுகிறது.அதன்படி தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் குன்னத்தூர், புலியூர், வத்தனாகுறிச்சி, வாலியம்பட்டி, சீமானூர் மற்றும் பூங்குடி ஆகிய வருவாய் கிராமங்களில் இதுவரை 6 கட்டங்களாக 43.19 ஹெக்டேர் நிலங்கள் ரூ.44.15 கோடி மதிப்பிற்கு கைய கப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விராலிமலை தாலுகா, குன்னத்தூர் கிராமத்தில் நீர்வளத்துறை மூலம் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விராலிமலை தாலுகா குன்னத்தூர், குளத்தூர் தாலுகா புலியூர் மற்றும் வத்தனாக்குறிச்சி கிராமங்களில் நிலமெடுப்பு செய்வதினால் பாதிக்கப்பட்டுள்ள 25 குடும்பங்களுக்கு மறு குடியமர்வுக்கு வழி செய்யும் வகையில், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, கோட்டாட்சியர் அறிக்கை பெறப்பட்டு மாநில மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.

    மேலும் மேற்கண்ட காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×