search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OPS Protest"

    • கொடநாடு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருமங்கலத்தில் ஓ.பி.எஸ். அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆயிரக்கணக்கா–னோர் கலந்துக் கொண்ட–னர்.

    மதுரை

    கொடநாடு கொைல மற்றுமு கொள்ளை வழக்கு–களில் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரியும், இதுவரை குற்ற–வாளிகளை கண்டுபிடிக் காமல் மெத்தனப்போக் கோடு செயல்படும் தி.மு.–க.வை கண்டித்தும் இன்று மதுரை மாவட்டம் திருமங்க–லம் தாலுகா அலுவலகம் ராஜாஜி சிலை அருகே ஓ.பி.எஸ். அணி சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடை–பெற்றது.

    மதுரை தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு மாவட்ட கழக செயலா–ளர்கள் ஐயப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், அமைப்பு செயலாளர் ஜி.ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் அ.ம.மு.க. மாவட்ட செய–லாளர் பேராசிரியர் ஜெய–பால், ராஜலிங்கம், மேலூர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற் றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் பேசுகையில், இங்கே கூடியி–ருக்கும் நாளை நமது வெற் றியை நிர்ணயிக்கும் கூட்டம் என்றும் முன்னாள் முதல் வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு பங்களா கொலை, கொள்ளைகளை கண்டுகொள்ளாமல் இருக் கும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம். கொலை–யாளியை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று பேசினார்.

    இதனை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் பேசுகையில், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜி–னாமா செய்ேவன் என்று கூறிய உதயகுமார் இன்று வரை எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லையே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வேண்டியதுதானே என்றார்.

    மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலி–தாவின் மன உளைச்சலுக்கும் மரணத்தின் காரணம் தி.மு.க.வும், அரசு போட்ட பொய்யான வழக்கும் தான் என்று குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது டெண்டர் அணி என்றும், ஓ.பி.எஸ்சிடம் இருப்பது தொண்டர் அணி என்றும் பேசினார்.

    மதுரையை தெற்கு மாவட்ட செயலாளர் உசி–லம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப் பன் பேசுகையில், எடப்பாடி–யிடம் தான் மக்கள் செல் வாக்கு இருக்கிறது என்று சொல்லும் உதயகுமார், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும், நானும் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடுகிறேன். உசிலம் பட்டியில் யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப் போமா என்று சவால் விட் டார்.

    இன்று தமிழகம் முழுவ–தும் அனைத்து மாவட்டங்க–ளிலும் ஓ.பி.எஸ். ஆணைக்கி–ணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். இதேபோன்று அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலா–ளர்கள் மேலூர் சரவணன், பேராசிரியர் ஜெயபால், ராஜலிங்கம் ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் மாணவரணி மாநில துணைசெயலாளர் ஒத்தக் கடை பாண்டியன், முன் னாள் எம்.எல்.ஏ. பாண்டி–யம்மாள், வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண் ணன், உசிலை சசி–குமார், பிரபு, திருமங்கலம் சிவா, ஜெயகுமார், பன்னியன் ஊராட்சி தலைவர் காசி–நாதன்,

    பாரப்பத்தி முத்தையா, ஆட்டோ கருப்பையா, கொம்பையா, புல்லட் ராமமூர்த்தி, சாத்தன உடை–யார், பத்ரி முருகன், ராஜமாணிக்கம், சுந்தரா, வக்கீல் சரவணன், ஜோதி–முருகன், கோடீஸ்வரன், லோகநாதன், பாலசுப்பி–ரமணியன், மாவூத்து வேலன், துதி திருநாவுகரசு, வி.கே.எஸ்.மாரிச்சாமி, திருமங்கலம் நகர செயலாளர் ராஜாமணி, மாவட்ட பொருளாளர் ரவி உள்பட ஆயிரக்கணக்கா–னோர் கலந்துக் கொண்ட–னர்.

    ×