search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு வேலை"

    • 2020-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அடிப்படையில், திருமணமான மகள்களுக்கு அரசு வாரிசு பணி வழங்க உரிமை உள்ளது.
    • குடும்ப சூழ்நிலையும், வறுமையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு கருணை அடிப்படையில் 3 மாதத்தில் பணி வழங்க வேண்டும்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கல்பனா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    என் தந்தை கருப்பசாமி, கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியில் இருக்கும் போது கடந்த 2018-ம் ஆண்டு இறந்து போனார். இந்நிலையில் வாரிசு அடிப்படையில் எனக்கு பணி வழங்க கோரி விண்ணப்பித்தேன். ஆனால் எனது விண்ணப்பம் 2020 ஆம் ஆண்டு அரசு தரப்பில் நிராகரிக்கப்பட்டது.

    இதையடுத்து வாரிசு வேலை வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி திருமணமாகிவிட்டதால் எனக்கு வாரிசு வேலை வழங்க உத்தரவிட முடியாதென்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். அதை ரத்து செய்து எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, 2020-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அடிப்படையில், திருமணமான மகள்களுக்கு அரசு வாரிசு பணி வழங்க உரிமை உள்ளது. மேலும் மனுதாரரின் கணவரும் இறந்துவிட்டார். எனவே அவருக்கு வாரிசு அடிப்படையிலான பணி வழங்க வேண்டும் என வாதாடினார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மனுதாரர் தற்போது கணவரை இழந்து தனியாக உள்ளார். மேலும் தனது தந்தை இறப்பிற்கு பிறகு தாயையும் அவர்தான் கவனித்து வருகிறார். இவரின் குடும்பம் முழுவதும் மனுதாரரை வருமானத்தையும் நம்பி உள்ளது.

    எனவே, குடும்ப சூழ்நிலையும், வறுமையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு கருணை அடிப்படையில் 3 மாதத்தில் பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • சட்டீஸ்கர்ஹி மொழியில் அவர் உரையை தொடங்கி வரவேற்பை பெற்றார்
    • மாநில அரசாங்கத்தின் எந்த வேலையிலும் சேரும் தகுதியை இழப்பார்கள்

    இந்தியாவின் மத்திய பகுதியிலுள்ளது சட்டீஸ்கர் மாநிலம். இதன் தலைநகரம் ரய்பூர்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பகேல், அம்மாநில முதல்வராக உள்ளார்.

    இன்று இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரய்பூரிலுள்ள காவல்துறை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பூபேஷ் உரையாற்றினார்.

    அம்மாநிலத்தில் சுமார் 1.6 கோடி மக்கள் பேசும் சட்டீஸ்கர்ஹி மொழியில் அவர் உரையை தொடங்கி வரவேற்பை பெற்றார். அப்போது அவர் பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அப்போது பேசிய அவர் கூறியதாவது, "பெண்களின் பாதுகாப்பு அதி முக்கியம் வாய்ந்தது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும். பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்கள் இனி மாநில அரசாங்கத்தின் எந்த வேலையிலும் சேரும் தகுதியை இழப்பார்கள்" என அறிவித்துள்ளார்.

    அம்மாநிலத்தில் நகரங்களில் இருந்து தொலைதூர பகுதியில் வாழும் மாணவர்களும் மாணவிகளும் இந்தியாவின் முக்கிய நுழைவுத்தேர்வுகளை எழுத தங்களை தயார்படுத்தி கொள்ளும் வகையில் ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், பள்ளி பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற மென்பொருள் துறையின் உயர் தொழில்நுட்பங்களுக்கான பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் அறிவித்தார்.

    இதுபோன்று பல திட்டங்களை பூபேஷ் பகேல் அறிவித்திருந்த போதும், பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்துபவர்களுக்கு அரசு வேலை இல்லை என அவர் கூறியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

    சில நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
    • தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    2023-24-ம் ஆண்டில் இந்திய விமான படையால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு கடந்த 27-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என இந்திய விமானப்படை விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 தேதி முதல் 27.12.2006 தேதி வரை பிறந்தவராக இருக்க வேண்டும். பிளஸ்-2 வகுப்பில் ஆங்கிலம் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகள் எடுத்து 50 சதவீத மதிப்பெண்க ளுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 3-ம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடை யவர் ஆவர்.

    இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு முதற்கட்டமாக ஆன்லைன் வாயிலாக https:// agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்து அக்டோபர் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கட்டணம் ரூ.250 ஆகும்.

    இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் நடைபெறும் உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இத்தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை 6380089119 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் விவேகானந்தனின் மனைவி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரியிருந்தார்.
    • கொரோனா கால கட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்காக விதியை திருத்தம் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்று கோரியவர் மு.க. ஸ்டாலின்.

    அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால், அந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது.

    அப்படி இருக்கையில், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், தங்கள் உயிரை துச்சமென மதித்து, பொதுமக்களுக்காக சேவை புரிந்து, அதன் காரணமாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது, மறுக்கப்படுகிறது என்பது மிகுந்த மன வேதனை அளிக்கும் செயலாகும்.

    உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் விவேகானந்தனின் மனைவி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரியிருந்தார். அந்தப் பணி இதுநாள் வரை வழங்கப்படவில்லை.

    கொரோனா கால கட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்காக விதியை திருத்தம் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது.

    கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், அரசு அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்குவது குறித்து நல்ல அறிவிப்பினை வரும் சுதந்திர தினத்தன்று வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விபத்தில் காலை இழந்த வீரரின் தாயார் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
    • மின்மாற்றி கிரேனில் இருந்து கழன்று அவரது இடது கால் மீது விழுந்தது.

    மதுரை

    மதுரை கோச்சடை பகுதியில் கடந்த 26-ந் தேதி மாலை 3 பழுதடைந்த மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் சீரமைத்து கொண்டிருந்தனர். அதுசமயம் அந்த வழியாக ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஸ்வரன் (வயது18) என்பவர் நடந்து வந்துள்ளார். மின்மாற்றி கிரேனில் இருந்து கழன்று அவரது இடது கால் மீது விழுந்தது. இதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக ஆம்பு லன்ஸ் உதவியுடன் இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கணுக்கால் வரையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டுள்ளது.

    விளையாட்டு வீரர் விக்னேஸ்வரனை, அமைச்சர் தங்கம் தென்ன ரசு மதுரை அரசு மருத்துவ மனைக்கு சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சமும், மின்வாரியம் சார்பில் 3 லட்சமும் நிவாரண உதவி அறிவிக்கப் பட்டது. அப்போது விளை யாட்டு வீரரின் தாயார் தீர்த்தம் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டு மென கோரிக்கை வைத் தார்.

    இந்த நிலையில் மின்வாரியம் சார்பில் அறிவித்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்த பரிதி விக்னேஸ்வரனின் தாயார் தீர்த்தம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளித்தார். அப்போது, பணம் தேவையில்லை. எனது மகனுக்கு அரசு வேலை தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
    • பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் ராஜ்(வயது35). இவர் பழைய பஸ் நிலையம் எதிரில் கடை நடத்தி வருகிறார். ராஜூம், அவரது மனைவியின் தங்கை கார்த்திகாவும் அரசு வேலைக்காக தேர்வு எழுதி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அருப்புக் கோட்டை ஆவின் பால கத்தில் வேலை பார்க்கும் சுந்தரகோபி என்பவருடன் ராஜூக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் தனக்கு தெரிந்த நரிக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமிக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. அவர் மூலம் கிராம நிர்வாக உதவியாளர் பணியை எளிதாக பெற்று விடலாம். அதற்கு பணம் செலவாகும் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பிய ராஜூ, விஜயலட்சுமியிடம் பல்வேறு தவணைகளில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படு கிறது. பணத்தை கொடுத்த பின்பும் ராஜூக்கு அரசு வேலை கிடைக்கவில்லை.

    இதனால் பணத்தை திருப்பி தருமாறு விஜய லட்சுமி, சுந்தரகோபி, இதற்கு உடந்தையாக இவ ரது தந்தை முருகன் ஆகியோ ருடன் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராமல் காலதாமதம் செய்துள்ளனர். மேலும் பணத்தை தர முடியாதென கூறி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ராஜ் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ் திரேட் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி நகர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி விஜயலட்சுமி, சுந்தரகோபி, முருகன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    • 5 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
    • மத்திய அரசின் வருமான வரித்துறை, ரெயில்வே துறைகளில் வேலைவாய்ப்புகள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் கடை யாலுமூடு பகுதி சிற்றாற்றின் கரையை சேர்ந்தவர் ரசல்ராஜ் (வயது 49). இவருக்கும் புதுக்கடை அருகே உள்ள மாராயபுரம் பகுதி ஜெயன் பிரபு (39) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயன் பிரபு, தனக்கு மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அரசி யல்வாதிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார்.

    மேலும் மத்திய அரசின் வருமான வரித்துறை, ரெயில்வே துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், சம்மந்தபட்ட அதிகாரிகள், அரசியல்வா திகள் உதவியுடன் வேண்டியவர்களுக்கு உடனடி வேலை வாங்கி கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய ரசல்ராஜ், தனக்கு வேண்டியவர்களான கருங்கல் பகுதியை சேர்ந்த ஸ்டெம், பாலப்பள்ளம் பகுதி டெய்சி செல்லத்துரை, திக்கணம்கோடு எபிரேம், தொழிக்கோடு பகுதியை சேர்ந்த அருண்குமார் ஆகியோரை ஜெயன் பிரபுவுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

    இதையடுத்து ஜெயன் பிரபு, சென்னையை சேர்ந்த சாய் பிரசாத், இன்பா, ஜெயன் பிரபுவின் சகோதரி ரதிமீனா(26), தாய் ரத்தினபாய் ஆகியோரையும் அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு உடனடி வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.56லட்சத்து 97ஆயிரத்து 100 பெற்றுள்ள னர்.

    இதையடுத்து போலியான மத்திய அரசு வேலை உத்தரவை தயார் செய்து எபிரேம் என்பவருக்கு கான்பூர் ரெயில்வேயிலும், டெய்சி செல்லதுரை, அருண்குமார் ஆகியோருக்கு ஐதராபாத் வருமான வரித்துறையிலும் வேலை கிடைத்ததாக கூறியுள்ளனர். அத்துடன் சம்மந்தபட்ட இடங்களில் ஏதோ அலுவலகத்தில் பணியமர்த்தி உள்ளனர். மேலும் அவர்களுக்கு 2 மாத சம்பளமும் கொடுத்துள்ளனர்.

    அதன் பின்னர் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக கூறி திருப்பி அனுப்பியிருக்கின்ற னர். இதனால் சந்தேகமடைந்த பாதிக்கபட்ட நபர்கள் விசாரித்ததில், போலி அரசு ஆணை தயார் செய்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்டனர்.

    இதையடுத்து எபிரேம், டெய்சி செல்லத்துரை, அருண்குமார் ஆகியோர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் புதுக்கடை போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர்.

    அதில் மத்திய அரசு வேலை உத்தரவை போலியாக தயார் செய்ததும், போலியான இடத்தில் வேலைக்கு அமர்த்தியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஜெயன் பிரபு, சாய் பிரசாத், இன்பா, ரதி மீனா, ரத்தின பாய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

    அவர்களில் ஜெயன் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 45 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டது.
    • அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு பா.ஜனதா ஆட்சியிலேயே அதிகம் அளிக்கப்பட்டது

    புதுடெல்லி :

    பா.ஜனதா ஆட்சியில் இதுவரை 9 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அணுசக்தி, விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 45 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், தற்போது பா.ஜனதாவின் 9 ஆண்டுகால ஆட்சியில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 191 அரசு வேலைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதிலும், பிரதமர் மோடியின் 6 வேலைவாய்ப்பு முகாம்களிலும் (ரோஜ்கர் மேளா) தலா 70 ஆயிரம் நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

    சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 45 ஆயிரத்து 431 பேர் தேர்வு பெற்றனர் என்றும், பா.ஜனதா ஆட்சியில் 50 ஆயிரத்து 906 பேர் நியமனம் பெற்றனர் என்றும் கூறினார். அதாவது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பா.ஜனதா ஆட்சியில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு பெற்றதாகவும் தெரிவித்தார். இதைபோல அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் பா.ஜனதா ஆட்சியிலேயே அதிகம் அளிக்கப்பட்டது என்றும் மந்திரி கூறினார்.

    • திருமங்கலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ேதாழியிடம் ரூ.7 லட்சம் ேமாசடி நடந்துள்ளது.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சோனை மீனா நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது39), அண்ணாநகரை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி வாணி. காளீஸ்வரியும், வாணியும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.

    கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு வாணிக்கு அரசு ேவலை கிடைத்துள்ளதாக காளீஸ்வரியிடம் கூறியுள்ளார். உனக்கும் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார். இந்த வார்த்தையை நம்பிய காளீஸ்வரி, தனது தோழியான வாணி மற்றும் அவரது கணவர் கண்ண னிடம் ரூ.7 லட்சம் பணத்தை வங்கி மூலம் மாற்றி உள்ளார்.

    ஆனால் இதுவரை வேலையும் வாங்கி தரவில்லை, மேலும் பணத்தையும் திருப்பி தரவும் மறுத்துவிட்டார்கள். ஆகவே இதுகுறித்து காளீஸ்வரி திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பே ரில் விசாரணை நடத்திய போலீசார் வாணி மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தை சேர்்நதவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்்ந்த சேதுராமன் மனைவி பாண்டிசெல்விக்கு ஒரு சென்ட் ரூ.60 ஆயிரத்திற்கு கிரையம் பேசி மொத்தம் 6 சென்ட் விற்பதற்காக பேசி ரூ.1 லட்சத்தை முன் பணமாக பெற்றுக்கொண்டனர். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் அவர்கள் அந்த இடத்தை பாண்டிசெல்விக்கு கிரையம் செய்து தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து பாண்டிசெல்வி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • அரசு வேலைக்கான நியமன ஆணைகள் நாளை வழங்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.

    கொல்கத்தா :

    ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாநிலத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தினரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். இதைப்போல விபத்தில் கை, கால்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு பணி வழங்குவதாக அவர் கூறினார்.

    மேலும் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் பயணித்து, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரெயில் விபத்து நடந்த பகுதியை ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்ட மம்தா பானர்ஜி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மேற்கு வங்காளத்தினரை பார்ப்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஒடிசா செல்ல இருப்பதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலை மற்றும் அரசு வேலைக்கான நியமன ஆணைகள் நாளை (புதன்கிழமை) வழங்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 7½ லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை

    சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகள் ஸ்ரீ துர்கா (23). இவரிடம் புதூர் கொடிக்குளம் தனலட்சுமி நகரை சேர்ந்த முத்துக்குமார் (50) அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய துர்கா ரூ. 11 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட முத்துக்குமார் வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதில் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். சில நாட்கள் கழித்து மீதி பணத்தை கேட்டபோது முத்துகுமார் தராமல் குடும்பத்துடன் துர்காவை மிரட்டினார். இது குறித்து புகாரின்பேரில் புதூர் போலீசார் முத்துக்குமார், அவரது மனைவி பிரபா, மகன் ஸ்ரீஹரி, மருமகன் சுரேந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார்.

    • ஆண்டிபந்தல் அருகில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
    • கணவனை இழந்து கைக்குழந்தையோடு இருக்கும் கனக வள்ளிக்கு, அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 29ம் தேதி ஆண்டிபந்தல் அருகில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், ரமேஷின் மரணத்தை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்.

    விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்ததை மர்ம மரணம் என பதிவு செய்து விசாரிக்க வேண்டும். கணவனை இழந்து கைக்குழந்தையோடு இருக்கும். கனக வள்ளிக்கு, அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும். ரமேஷ் மரணம் சார்ந்த, சில சந்தேகநபர்கள் உள்ளார்கள். அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள்.

    தகவலறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிர ண்டு இளங்கோவன், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்து, பேச்சுவார்த்தை நடத்தி உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததையடுத்து. ஆர்ப்பாட்டத்தை கைவி ட்டனர்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் லிங்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முகமது உதுமான், மாவட்ட செய ற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டியன், சேகர், தியாகு ரஜினிகாந்த், மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி, உள்ளிட்டோர் பங்கே ற்றனர்.

    ×