என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விபத்தில் காலை இழந்த வீரரின் தாயார் கலெக்டரிடம் கோரிக்கை
- விபத்தில் காலை இழந்த வீரரின் தாயார் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
- மின்மாற்றி கிரேனில் இருந்து கழன்று அவரது இடது கால் மீது விழுந்தது.
மதுரை
மதுரை கோச்சடை பகுதியில் கடந்த 26-ந் தேதி மாலை 3 பழுதடைந்த மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் சீரமைத்து கொண்டிருந்தனர். அதுசமயம் அந்த வழியாக ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஸ்வரன் (வயது18) என்பவர் நடந்து வந்துள்ளார். மின்மாற்றி கிரேனில் இருந்து கழன்று அவரது இடது கால் மீது விழுந்தது. இதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக ஆம்பு லன்ஸ் உதவியுடன் இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கணுக்கால் வரையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர் விக்னேஸ்வரனை, அமைச்சர் தங்கம் தென்ன ரசு மதுரை அரசு மருத்துவ மனைக்கு சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சமும், மின்வாரியம் சார்பில் 3 லட்சமும் நிவாரண உதவி அறிவிக்கப் பட்டது. அப்போது விளை யாட்டு வீரரின் தாயார் தீர்த்தம் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டு மென கோரிக்கை வைத் தார்.
இந்த நிலையில் மின்வாரியம் சார்பில் அறிவித்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்த பரிதி விக்னேஸ்வரனின் தாயார் தீர்த்தம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளித்தார். அப்போது, பணம் தேவையில்லை. எனது மகனுக்கு அரசு வேலை தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்