என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government work"

    • பள்ளி படிப்பை முடித்த மாலா போட்டி தேர்வுக்கு தயாரானார்.
    • மாலாவின் வழிகாட்டியாக சங்கர் பாபா பாபால்கர் என்பவர் இருந்து வருகிறார்.

    மும்பை:

    25 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் ரெயில் நிலையத்தில் பார்வையிட்ட பெண் குழந்தை ஒன்று வீசப்பட்டு கிடந்தது.

    அந்த குழந்தையை போலீசார் மீட்டு ஜல்கானில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர். அந்த குழந்தைக்கு மாலா பாபால்கர் என்று பெயரிட்டனர். பின்னர் அந்த குழந்தை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டது. பிரெய்லில் உள்ள பள்ளியில் மாலா படித்து வந்தார். பள்ளி படிப்பை முடித்த மாலா போட்டி தேர்வுக்கு தயாரானார்.

    தற்போது 26 வயதாகியுள்ள மாலா கடந்த ஆண்டு மே மாதம் மகாராஷ்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் வைஸ்ன் கமிஷன் தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி யடைந்த மாலாவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாக்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணி கிடைத்துள்ளது. அந்த பணியில் மாலா விரைவில் சேரவுள்ளார்.

    மாலா இதற்கு முன்பு தாசில்தார் பணிக்கான தேர்வில் 2 முறை தோல்வியடைந்தார். இருந்தாலும் மனம் தளராமல் போராடி போட்டி தேர்வில் வெற்றி பெற்று வருவாய் உதவியாளராக பணியமர்த்தப்பட உள்ளார்.

    மாலாவின் வழிகாட்டியாக சங்கர் பாபா பாபால்கர் என்பவர் இருந்து வருகிறார். அவர்தான் தனது குடும்ப பெயரை மாலாவுக்கு சூடியுள்ளார். குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தை பசியும், பட்டினியுமாக கிடந்து படித்து வாழ்க்கையில் முன்னேறியுள்ளார்.

    குப்பை தொட்டியில் வீசப்பட்டாலும் கோபுரம் போல் உயர்ந்த நிலைக்கு வந்துள்ள மாலா மகாராஷ்டிரா மாநிலத்தில் மற்ற குழந்தைகளுக்கு முன்மாதிரியாக உள்ளார்.

    • ஆண்டிபந்தல் அருகில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
    • கணவனை இழந்து கைக்குழந்தையோடு இருக்கும் கனக வள்ளிக்கு, அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 29ம் தேதி ஆண்டிபந்தல் அருகில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், ரமேஷின் மரணத்தை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்.

    விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்ததை மர்ம மரணம் என பதிவு செய்து விசாரிக்க வேண்டும். கணவனை இழந்து கைக்குழந்தையோடு இருக்கும். கனக வள்ளிக்கு, அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும். ரமேஷ் மரணம் சார்ந்த, சில சந்தேகநபர்கள் உள்ளார்கள். அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள்.

    தகவலறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிர ண்டு இளங்கோவன், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்து, பேச்சுவார்த்தை நடத்தி உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததையடுத்து. ஆர்ப்பாட்டத்தை கைவி ட்டனர்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் லிங்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முகமது உதுமான், மாவட்ட செய ற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டியன், சேகர், தியாகு ரஜினிகாந்த், மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி, உள்ளிட்டோர் பங்கே ற்றனர்.

    • ஆண், பெண் நோயாளிகள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவதாகவும், மின்விளக்கு வசதி இல்லாமல் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கபட்டது.
    • மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யபடும் என்றும் தெரிவித்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குனருமான அமுதவள்ளி அரசு பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் இரா.லலிதா உடனிருந்தார்.

    தரங்கம்பாடி வட்ட அலுவலகத்தில் இசேவை மையத்தை பார்வையிட்டு அலுவலக கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வட்டாச்சியர் புனிதா தாலுகா அலுவலக பணிகள் குறித்து விளக்கினர்.

    அதனை தொடர்ந்து பொறையார் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையை ஆய்வு செய்து அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவர்கள் ஸ்ரீநாத், சங்கர், ஆகியோர் மருத்துவமனையை சுற்றி காட்டி மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.

    அதை தொடர்ந்து தரங்கம்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்த கழிவறை வசதி, குடிநீர் வசதி இல்லை என்று புகார்கள் தெரிவிக்கபட்டது.

    பொறையார் மருத்துவமனையில் ஆண், பெண் நோயாளிகள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவதாகவும், மின்விளக்கு வசதி இல்லாமல் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கபட்டது.

    அதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் லலிதா தாலுகா அலுவலகத்தில் விரைவில் கழிவறை வசதி, குடிநீர் வசதி செய்யபடும் என்றும் மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யபடும் என்றும் தெரிவித்தார்.

    அதை தொடர்ந்து தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள டேனிஷ் கோட்டைக்கு சென்று அங்குள்ள அருங்காட்சியகத்தையும் கோட்டையையும் சுற்றி பார்த்தார்.

    தரங்கம்பாடியில் பேரூராட்சி உதவி இயக்குநர் கனகராஜ், பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், பேரூராட்சி செயல் அலுவலர் கமலகண்ணன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பேரூராட்சியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கினர்.

    பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சள் பையை மாவட்ட கண்காணிப்பு அலவலர் வழங்கினார்.

    அரசு பணியாகவே ராஜீவ் போர் கப்பலில் சென்றார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். #RahulGandhi #PMModi

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி சமீபத்தில் டெல்லியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, “ராஜீவ்காந்தி கடந்த 1987-ம் ஆண்டு ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பலை தனது குடும்பத்தினர் பயணம் செய்யும் “டாக்சி” போன்று விடுமுறை கால பொழுது போக்குக்காக பயன்படுத்தினார்” என்றார்.

    குறிப்பாக சோனியாவின் இத்தாலி நாட்டு உறவினர்கள் அந்த கப்பலில் பயணம் மேற்கொண்டதாக மோடி குற்றம் சாட்டினார்.

    இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர்களும், 1987-ம் ஆண்டு கடற்படை தளபதியாக இருந்த ராமதாசும் மறுத்துள்ளனர். இந்த நிலையில் மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

    விடுமுறையில் பொழுதை கழிப்பதற்காக யாராவது விமானம் தாங்கி போர்க் கப்பலில் செல்வார்களா? அவர் சென்றது போர்க் கப்பல் அல்ல. மோடி வேண்டும் என்றே எனது குடும்பத்தினர் பற்றி விடாப்பிடியாக சில வெறித்தனமான கருத்துக்களை சொல்லி வருகிறார்.

    1987-ம் ஆண்டு என் தந்தை ராஜீவ், கப்பலில் லட்சத் தீவுக்கு பயணம் மேற் கொண்ட போது நானும் உடன் சென்றேன். அந்த பயணம் விடுமுறையை கழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் அல்ல. பிரதமர் என்ற முறையில் என் தந்தை மேற் கொண்ட அரசு முறை பயணமாகும்.

     


    ஆனால் மோடி திட்டமிட்டு என் தந்தை, பாட்டி பற்றி தொடர்ந்து குறை கூறி வருகிறார். அவர் ஏதோ ஒரு நெருக்கடியில் சிக்கி மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பது போல தெரிகிறது. அதனால்தான் என் குடும்பத்தினர் பற்றி இப்படி பேசி வருகிறார்.

    என் குடும்பம் பற்றி எனக்கு அத்தகைய எண்ணம் இல்லை. ஆனால் என் மூதாதையர்கள் பற்றி பேசினால்தான் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பி தப்பிக்கலாம் என்று மோடி நினைக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்றாலும் எனது மூதாதையர்கள் பற்றி அவர் தொடர்ந்து விமர்சிப்பதை ஏற்க இயலாது. எனவே என் பெற்றோர், பாட்டி பற்றி மோடி கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு இனி நான் எந்தவித பதிலும் சொல்ல விரும்பவில்லை.

    மோடி மட்டுமே தூங்காமல் இந்த நாட்டுக்காக உழைப்பது போல பேசுகிறார். இந்த வி‌ஷயத்தில் நான் பந்தயம் கட்ட தயார். மோடி இதுபற்றி என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா?

    இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

    இதற்கிடையே ராஜீவ் பயணம் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்களை முன்னாள் கடற்படை தளபதி ராம்தாசும் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    1987-ம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் திருவனந்தபுரத்துக்கு வந்தார். பரிசளிப்பு விழா முடிந்ததும் அவர் அரசு முறை பயணமாக லட்சத்தீவுக்கு புறப்பட்டார்.

    லட்சத்தீவில் நடந்த அரசு விழாவில் அவர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ஐ.என்.எஸ். விராட் கப்பல் வரவழைக்கப்பட்டது. அந்த கப்பலில் ராஜீவும் சோனியாவும் சென்றனர்.

    ராஜீவுடன் அந்த கப்பலில் வெளிநாட்டுக்காரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை. அந்த கப்பலில் ராஜீவ் பயணம் செய்த போது அனைத்து நடைமுறைகளும் சரியாக கடை பிடிக்கப்பட்டன.

    எந்த விதி மீறலும் நடைபெறவில்லை. இந்த போர் கப்பலை ராஜீவ் தனது சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்தினார் என்று சொல்ல முடியாது.

    இவ்வாறு கடற்படை முன்னாள் தளபதி ராம்தாஸ் கூறினார். இதே கருத்தை விராட் கப்பலின் முன்னாள் கமாண்டிங் அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

    ஆனால் மற்றொரு முன்னாள் கடற்படை அதிகாரியான வி.கே.ஜெட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜீவும், சோனியாவும் பங்காரம் தீவுக்கு விடுமுறை சுற்றுலா செல்ல போர் கப்பலை பயன் படுத்தினார்கள். இதற்காக கடற்படை பணம் அதிக அளவில் செலவிடப்பட்டது. விராட் கப்பலில் பணி புரிந்தவன் என்ற முறையில் அதற்கு நான் சாட்சியாக உள்ளேன்” என்று கூறியுள்ளார். #RahulGandhi #PMModi

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்நாடு கிராம நிர்வாக வீட்டு வாரிய துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ.3 லட்சத்து 93 ஆயிரம் மோசடி செய்த ஓசூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    ஓசூரில் உள்ள ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு எழில்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தமிழரசன். இவர் தமிழ்நாடு கிராம நிர்வாக வீட்டு வசதி வாரிய துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஓசூர் பகுதியை சேர்ந்த சவுந்திரன், நியாமத்துல்லா, பிரவீன்குமார், ஸ்டெல்லா மற்றும் நந்தினி ஆகியோரிடம் ரூ.3 லட்சத்து 93 ஆயிரம் பணம் பெற்று மோசடி செய்து உள்ளார்.

    மேலும் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அரசு அலுவலகத்திற்கு நேர்முக தேர்வுக்கு செல்லும்படி போலியாக தயார் செய்த அரசு முத்திரையிட்ட கடிதத்தையும் தமிழ்நாடு கிராம நிர்வாக வீட்டு வாரிய துறையின் அடையாள அட்டையையும் கொடுத்துள்ளார். இது அனைத்தும் போலி என்றும், மோசடி என்றும் தெரிந்த சவுந்திரன், நியாமத்துல்லா உள்ளிட்டோர் ஓசூர் டவுன் போலீசில் தமிழரசன் மீது புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தமிழரசனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் அனைவரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணம் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தமிழரசனை கைது செய்தனர்.
    பாபநாசத்தில் அரசு பணிகளை தடுத்ததாக முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் ஒரு குளத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை கலெக்டர் அண்ணாதுரை மற்றும் கும்பகோணம் சப்-கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின்பேரில் அங்கிருந்து நேற்று லாரிகள் மூலம் அள்ளப்பட்டது.

    இந்த குப்பைகளை அருகில் உள்ள உமையாள்புரம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கொண்டு சென்று அலுவலர்கள் கொட்டினர். அப்போது திருமலைராஜன் ஆறு வழியாக லாரிகளில் குப்பைகளை கொண்டு சென்ற போது பாபநாசம் திமுக முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் மணிகண்டன், அக்கரைப் பூண்டி பாலகிருஷ்ணன், படுகை புதுத்தெரு மணிமாறன் உள்பட 6 பேர் அந்த லாரிகளை வழிமறித்து குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொட்டக்கூடாது என தடுத்தனர். இதனால் பாபநாசம் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசு பாபநாசம் போலீசில் அரசு பணிகளை செய்ய விடாமல் தடுத்ததாக புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் மணிகண்டன் உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×