search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைக்குழந்தை"

    • பத்திரமாக பிடிக்க ஏதுவாக துணியை லாவகமாக பிடித்துக் கொண்டனர்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4 ஆவது மாடியில் இருந்து ஏழு மாத கைக்குழந்தை ஹைரின் தவறி தகர சீட்டில் விழுந்தது. தவறி விழுந்த குழந்தையை அதே குடியிருப்பில் வசிப்பவர்கள் பத்திரமாக மீட்க முடிவு செய்தனர்.

    அதன்படி அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தை விழுந்த தகர சீட்டின் கீழ் தரை தளத்தில் சிலர் ஒன்றுகூடி பெரிய துணியை விரித்து பிடித்தனர். ஒருவேளை குழந்தை தகர சீட்டில் இருந்து கீழே விழும் பட்சத்தில் அதனை பத்திரமாக பிடிக்க ஏதுவாக துணியை அவர்கள் லாவகமாக பிடித்துக் கொண்டனர்.

    அதே சமயம் சிலர், குழுந்தையை மீட்க தகர சீட்டின் கீழ் தளத்தில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து பால்கனிக்கு விரைந்தனர். பல்கனி வழியே வெளியே வந்த நபர் ஒருவர், அங்கிருந்த தடுப்பின் மீது ஏறி குழந்தையை தகர சீட்டில் இருந்து பத்திரமாக மீட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து தவறி விழுந்த குழந்தையின் பெற்றோர் வெங்கடேஷ் மற்றும் ரம்யா தம்பதியினரிடம் திருமுல்லையாவயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

    • ஆண்டிபந்தல் அருகில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
    • கணவனை இழந்து கைக்குழந்தையோடு இருக்கும் கனக வள்ளிக்கு, அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 29ம் தேதி ஆண்டிபந்தல் அருகில் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், ரமேஷின் மரணத்தை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்.

    விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்ததை மர்ம மரணம் என பதிவு செய்து விசாரிக்க வேண்டும். கணவனை இழந்து கைக்குழந்தையோடு இருக்கும். கனக வள்ளிக்கு, அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும். ரமேஷ் மரணம் சார்ந்த, சில சந்தேகநபர்கள் உள்ளார்கள். அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள்.

    தகவலறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிர ண்டு இளங்கோவன், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்து, பேச்சுவார்த்தை நடத்தி உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததையடுத்து. ஆர்ப்பாட்டத்தை கைவி ட்டனர்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் லிங்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முகமது உதுமான், மாவட்ட செய ற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டியன், சேகர், தியாகு ரஜினிகாந்த், மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி, உள்ளிட்டோர் பங்கே ற்றனர்.

    ×