search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி மையம்"

    • குழந்தைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர்.
    • குடிநீரை அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி 34 -வது வார்டு பாலன் காலனியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர். கடலூர் மாநகராட்சி சார்பில் தற்போது குடிநீர் போர் போடப்பட்டுள்ளது. இந்த குடிநீர் பைப்பை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக இந்த குடிநீரை அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதில் நிர்வாகிகள் சொக்கு, சரண், கருணையாளன், ராம்ஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் முடியவில்லை.
    • சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தைச் சுற்றி சுவர் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் முடியவில்லை. இதனால் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் விளையாடும்போது அந்த பள்ளங்களில் தவறி விழும் நிலை அடிக்கடி நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் அந்த பள்ளத்தில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அங்கன்வாடி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்பட்டது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி மேட்டுப்பட்டி 15-வது வார்டு வண்ணார் புதுத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், சேத்தூர் பேரூராட்சியில் அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் சாலை வசதி செய்து தரப்படும். முக்கிய இடங்க ளில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்க நீர்தேக்க தொட்டி கட்டப்படும் என்றார்.

    மேலும் சேத்தூர் பேரூ ராட்சிக்கு சாஸ்தா கோவில் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என எம்.எல்.ஏ. கூறினார்.

    ெதாடர்ந்து அன்னதா னத்தை அவர் தொடங்கி வைத்தார். இதில் சேத்தூர் பேரூராட்சி சேர்மன் பால சுப்பிரமணியன், செயல் அலுவலர் சந்திரகலா,தி.மு.க செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர் மன் காளீஸ்வரி மாரிச் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் குமார், கவுன் சிலர் ராஜசோழன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீண்ட தூரத்தில் உள்ள இந்த மையத்துக்கு எப்படி குழந்தைகளை அனுப்ப முடியும்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள நிச்சாம் பாளையம் அடுத்த அண்ணா நகர் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய கூலி தொழில் செய்து வருகிறார்கள்.

    அண்ணாநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்கள் குழந்தைகளை மையத்தில் விட்டு வந்தனர்.

    இதைதொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் அண்ணாநகர் பகுதியில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைத்துக்கு தனி கட்டிடம் கட்டி அதில் அங்கன்வாடி மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    மேலும் கிராம சபை கூடங்களிலும் இது குறித்து அவர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் ஊராட்சி மன்ற கூட்டத்திலும் அங்கன்வாடிக்கு சொந்த கட்டி அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 15-ந் தேதி அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிச்சாம்பாளையம் பகுதிக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் அங்கன்வாடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அண்ணாநகர் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் திடீரென அந்த பகுதியில் பந்தல் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, அண்ணாநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. தற்போது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிச்சாம்பாளையத்துக்கு அங்கன்வாடி மையம் மாற்றபட்டு உள்ளது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. நீண்ட தூரத்தில் உள்ள இந்த மையத்துக்கு எப்படி குழந்தைகளை அனுப்ப முடியும். எனவே எங்கள் பகுதிலேயே சொந்த கட்டிடத்தில் அரசு அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்றனர்.

    இது பற்றி தகவல் கிடைத்தும் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் பெருந்துறை தாசில்தார் பூபதி மற்றும் கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. பவித்ரா மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தி நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • கல்வி தொலைக்காட்சி குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைக்காட்சி வழங்குமாறு ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • குத்தாலிங்கராஜன் என்ற கோபி தனது சொந்த நிதியிலிருந்து வண்ண தொலைக்காட்சி வாங்கி அதனை அங்கன்வாடி மையத்திற்கு வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மாடியனூர் பாளையம் ஆ.பொன்னுச்சாமி நாடார் தொடக்க பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வரும் குழந்தைகளுக்கு கல்வி தொலை க்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கு அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வரும் கவிதா, ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபியிடம் தொலைக்காட்சி வழங்கு மாறு கோரிக்கை விடுத்தி ருந்தார்.

    அதனை ஏற்று ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் தனது சொந்த நிதியிலிருந்து வண்ண தொலைக்காட்சி வாங்கி அதனை அங்கன்வாடி மையத்திற்கு வழங்கினார்.

    தொடர்ந்து அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் திருமலை செல்வன், ராஜாராம், ராதா சிங், தங்க ராஜா, தங்கம், கார்த்திக் ராஜா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • போயம்பாளையம் ரோட்டரி சங்கம் அங்கன்வாடி மையத்திற்கு ரூ.7 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர முன்வந்தது.
    • நேரு நகரில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டுக்குட்பட்ட நந்தாநகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து 8-வது வார்டு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி தனியார் பங்களிப்புடன் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டார். இதன் பயனாக போயம்பாளையம் ரோட்டரி சங்கம் அங்கன்வாடி மையத்திற்கு ரூ.7 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர முன்வந்தது. இதை தொடர்ந்து 8-வது வார்டுக்குட்பட்ட நேரு நகரில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதன் திறப்புவிழா நடைபெற்றது. விழாவுக்கு போயம்பாளையம் ரோட்டரி சங்க தலைவர் முத்துராஜ், 8-வது வார்டு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். ரோட்டரி நிர்வாகிகள் தனசேகரன், ஆனந்தராம், மெல்வின்பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முடிவில் ரோட்டரி திட்ட தலைவர் ராஜன், பொருளாளர் ஜெகதீஷ்சந்திரன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

    விழாவில் தி.மு.க. பாண்டியன்நகர் பகுதி செயலாளர் ஜோதி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச்செயலாளர் ஈ.பி.சரவணன், இந்திய ஜனநாயக கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பாரிகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அச்சுந்தன்வயல் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.
    • மகளிர் குழு எடுத்த முயற்சியை போல் மற்ற பகுதிகளிலும் மகளிர் குழுவினர் சாதனை படைக்க வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அங்கன்வாடி மையத்திற்கான புதிய கட்டிடம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் கட்டப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களின் பணியை பாராட்டினார். பின்னர் அவர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் 30 உறுப்பினர்கள் கட்டுமான தொழில் மேற்கொள்வதற்கான பயிற்சியை 2 மாத காலம் பெற்றனர். இந்த பயிற்சியில் புதிதாக கட்டிடம் கட்டுதல், கம்பி கட்டுதல், சிமெண்டு உரை தயாரித்தல், ஹாலோ பிளாக் கல் தயாரித்தல் போன்ற பணியை அனுபவமிக்க பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி பெற்றனர். அதனை தொடர்ந்து தற்பொழுது முதன்முறையாக அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஆண்கள் பார்த்து வந்த கட்டுமான பணி தற்போது பெண்களாலும் முடியும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். இந்த மகளிர் குழு எடுத்த முயற்சியை போல் மற்ற பகுதிகளிலும் மகளிர் குழுவினர் சாதனை படைக்க வேண்டும் என்றார்.

    • ராமநாதபுரம் 4-வது வார்டில் அங்கன்வாடி மையத்தை நகரசபை தலைவர் திறந்து வைத்தார்.
    • ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி 4-வது வார்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2020-21 நிதியின் கீழ் யானைகல் வீதியில் அங்கன்வாடி மையம் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது.

    4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டியம்மாள் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

    இதையடுத்து நகராட்சி சேர்மன் ஆர்.கே.கார்மேகம், துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம் ஆகியோரது முயற்சியால் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இதன் திறப்பு விழா நடந்தது.

    நகராட்சி சேர்மன் ஆர்.கே. கார்மேகம் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை திறந்து வைத்தார்.4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டி யம்மாள், துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) லட்சுமணன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சுரேந்திரன், உதவி பொறியாளர் செல்வகுமார், மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஜே.ஆர்.பி.மணிகண்டன் நன்றி கூறினார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • இல்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பல குக்கிராம ஊராட்சி களிலும், குறிப்பாக ஆத்திக்காட்டு விளை போன்ற பகுதிகளில் செயல்ப டுகின்ற, கிராம ஊராட்சி அரசு பள்ளிகள் அங்கன் வாடிகளில் மின்கட்டணம் செலுத்த வில்லை என்று மின்வாரியத்தின் மூலம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுபள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிடத்திற்கு தேவை யான தண்ணீர் கிடைக்காமல் சுகாதார கேடு ஏற்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் பல கிராம ஊராட்சிகளில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டதால் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகிக்க முடியாமல் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மின்சார துண்டிப்பின் காரணமாக அழகியபாண்டியபுரம் கூட்டு குடி நீர் திட்டம் மூலம் பயன்பெருகின்ற சுமார் 225 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி யுள்ளனர். இதுபோன்று தோவாளை அரசினர் விருந்தினர் மாளிகையிலும் மின்வாரி யத்தின் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது.

    எனவே கிராம ஊராட்சிகள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பினை உடனடியாக வழங்க மின்சார வாரியமும், அரசும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • காலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டார்
    • மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தார்

    வாணியம்பாடி:

    வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது முதல் தற்போது 4 பிரிவுகளாக மாவட்டங்கள் பிரிந்த பின்பும் சரி இதுவரையில் இருந்த மாவட்ட கலெக்டர்கள் யாரும் ஒரு பள்ளிக்கூடத்தில் இரவு தங்கியது இல்லை.

    ஆய்வு

    இந்த நிலையில் ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் பகுதியில் மிகப் பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும், வனத்துறைக்கு சொந்தமான இடத்திலும், ஐ.எஸ்.ஆர்.ஓ. எனப்படும் மத்திய அரசு மையத்திலும் ஓய்வு விடுதிகள் பிரமாண்டமான அளவில் உள்ளது.

    இந்த ஓய்வு விடுதிகளில் தான் கலெக்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை அரசு துறை உயர் அதிகாரிகளும் இங்கு வந்தால் இரவு தங்குவார்கள்.

    இருப்பினும் ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் அடுத்த பீமகுளம் ஊராட்சியில் உள்ள மந்தாரக்குட்டை அங்கன்வாடி மையத்தில் திடீரென கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இரவு தங்கினார்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய கலெக்டர் நேற்று மாலை மிட்டூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார். பீமக்குளம் ஊராட்சி மந்தாரகுட்டை கிராமத்தில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வகுப்பில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை கற்பித்தார்.

    தொடர்ந்து மழை பகுதி மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டு அறிந்தார். அவர்கள் அளித்த அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    பின்னர் அதே பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இரவு தங்கினார். ஒரு கலெக்டர் மலைப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தங்கியது இதுவே முதல் முறையாகும்.

    கலெக்டர் ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாசில்தார் சம்பத், வட்டார கல்வி அலுவலர்கள் சித்ரா, ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் மேகலா திருப்பதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    பீமகுளம், நாயக்கனூர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு சாலை ஓரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உடன் வந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் பொதுக் குழாய்களில் குடிநீர் வருகிறதா என குழாய்களைத் திறந்து பார்த்தார்.

    மலைப்பகுதிக்கு வரும் மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார். பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரம் கொட்டுவதை தடை செய்தும் அங்கு கொட்டப்பட்டிருப்பதை உடனடியாக அகற்றவும் கூறினார்.

    • அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தைகளுக்கு பழம், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • ஊட்டச்சத்து மிக்க உணவை சிறப்பாக வழங்கிட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

    சென்னை:

    சென்னை ராயபுரம் மண்டலம் 63-வது வார்டுக்கு உட்பட்ட கரீம் மொய்தீன் தெருவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

    பின்னர் அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தைகளுக்கு பழம், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    மேலும், அங்கன்வாடி பணியாளர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குழந்தைகளை நல்ல முறையில் கவனித்து கொள்ளவேண்டும் என்றும், ஊட்டச்சத்து மிக்க உணவை சிறப்பாக வழங்கிட வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ரூ.37லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி-அங்கன்வாடி மையம், ரேசன் கடை அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார்.
    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே  உள்ள மாணிக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 1லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

    மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்து பேசினார். 

    இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா முன்னிலை வகித்தனர். 

    ஊராட்சி செயலர் பெரிச்சி வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், அவை தலைவர் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு தலைவர் முத்தையன், குழந்தைகள் நலதிட்ட அலுவலர் உஷாராணி, ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    இதைத்தொடர்ந்து மாணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மியநாயக்கண்பட்டி கிராமத்தில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.20 மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.

    ஆதனூர் ஊராட்சியில் ரூ.14.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உணவு தானிய கிடங்கினை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார். 

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா செந்தில்குமார், ஊராட்சி செயலர் மாணிக்கம், அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மருது, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×