search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அச்சுந்தன்வயல் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணி
    X

    அச்சுந்தன்வயல் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணி

    • அச்சுந்தன்வயல் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.
    • மகளிர் குழு எடுத்த முயற்சியை போல் மற்ற பகுதிகளிலும் மகளிர் குழுவினர் சாதனை படைக்க வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அங்கன்வாடி மையத்திற்கான புதிய கட்டிடம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் கட்டப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களின் பணியை பாராட்டினார். பின்னர் அவர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி தலைமையில் 30 உறுப்பினர்கள் கட்டுமான தொழில் மேற்கொள்வதற்கான பயிற்சியை 2 மாத காலம் பெற்றனர். இந்த பயிற்சியில் புதிதாக கட்டிடம் கட்டுதல், கம்பி கட்டுதல், சிமெண்டு உரை தயாரித்தல், ஹாலோ பிளாக் கல் தயாரித்தல் போன்ற பணியை அனுபவமிக்க பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி பெற்றனர். அதனை தொடர்ந்து தற்பொழுது முதன்முறையாக அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஆண்கள் பார்த்து வந்த கட்டுமான பணி தற்போது பெண்களாலும் முடியும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். இந்த மகளிர் குழு எடுத்த முயற்சியை போல் மற்ற பகுதிகளிலும் மகளிர் குழுவினர் சாதனை படைக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×