search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Anganwadi"

    • புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்பட்டது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி மேட்டுப்பட்டி 15-வது வார்டு வண்ணார் புதுத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், சேத்தூர் பேரூராட்சியில் அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் சாலை வசதி செய்து தரப்படும். முக்கிய இடங்க ளில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்க நீர்தேக்க தொட்டி கட்டப்படும் என்றார்.

    மேலும் சேத்தூர் பேரூ ராட்சிக்கு சாஸ்தா கோவில் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என எம்.எல்.ஏ. கூறினார்.

    ெதாடர்ந்து அன்னதா னத்தை அவர் தொடங்கி வைத்தார். இதில் சேத்தூர் பேரூராட்சி சேர்மன் பால சுப்பிரமணியன், செயல் அலுவலர் சந்திரகலா,தி.மு.க செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர் மன் காளீஸ்வரி மாரிச் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் குமார், கவுன் சிலர் ராஜசோழன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×