search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "round wall"

    • உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாமாகவே முன்வந்து செய்திட வேண்டும்.
    • சட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திறந்த வெளி கிணறுகள், பழுதடைந்த ஆழ்துளை குழாய் கிணறுகள் மற்றும் காலாவதியான குவாரிகள் அமைந்துள்ள இடங்களின் உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களுக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ள மேற்படி ஆபத்து விளைவிக்கும் நீர்நிலைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாமாகவே முன்வந்து செய்திட வேண்டும்.

    திறந்தவெளி கிணறுகளை சுற்றிலும் உயரம் அதிகமுள்ள தடுப்புச் சுவரினை அமைத்தும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை கடினமான இரும்பு மூடிகள் அமைத்தும், குவாரி பள்ளங்கள் மற்றும் திறந்தவெளி பள்ளங்களை பொருத்த மட்டில் கம்பி வேலி அமைப்புகளை ஏற்படுத்தியும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்

    அனைத்து அரசு துறை மாவட்ட நிலை அலுவலர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட மேற்படி அமைப்புகள் குறித்த பட்டியலினை ஒரு வார காலத்திற்குள் எடுத்து, அவற்றின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்த அறிக்கையினை 10 தினங்களுக்குள் சமர்பித்திட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக சாலைகளை ஒட்டி அமைந்துள்ள பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாடற்ற திறந்தவெளி கிணறுகள் மற்றும் பள்ளங்களை பொறுத்தமட்டில் தொடர்புடைய அரசு துறையினர் 10 தினங்களுக்குள் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரித்தல் தேவையான இடங்களில் புதியதாக ஏற்படுத்துதல் மற்றும் சாலைகளின் எல்லைகளில் இரும்பு பாதுகாப்பு தகடுகள் அமைத்தல், இரவு நேரங்களில் ஒளிரும் அமைப்புகளை ஏற்படுத்துதல், சாலைகளில் தேவையான இடங்களில் கூடுதல் வெள்ளை மற்றும் மஞ்சன் நிற கோடுகள் அமைத்து அதன் அறிக்கையினை 28-ந்தேதிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். நில உடைமையாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட தவறினால் அவர்களுக்கு எதிராக பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களுக்கு உடந்தையாக இருப்பதாக கருதி சட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் முடியவில்லை.
    • சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தைச் சுற்றி சுவர் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் முடியவில்லை. இதனால் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் விளையாடும்போது அந்த பள்ளங்களில் தவறி விழும் நிலை அடிக்கடி நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் அந்த பள்ளத்தில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அங்கன்வாடி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஜெயங்கொண்டம் வெத்தியார்வெட்டு கிராமத்தில் அரசு பள்ளியில் ரூ. 24 லட்சம் மதிப்பில் சற்றுசுவர் கட்டும் பணி நடை பெற்று வருகிறது.
    • திருச்சி கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் காதர் பாட்ஷா உள்ளிட்டோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி அறிவுறுத்தி சென்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தாட்கோ மூலம் பள்ளியின் சுற்றி சுவர் அமைக்கும் பணி 24.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணியை சென்னை தாட்கோ தலைவர் மதிவாணன், மற்றும் திருச்சி கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் காதர் பாட்ஷா உள்ளிட்டோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி அறிவுறுத்தி சென்றனர். இதில் ஒப்பந்ததாரர் கணேசன், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×