search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி மையம் திறப்பு
    X

    அங்கன்வாடி மையத்தை நகரசபை தலைவர் கார்மேகம் திறந்து வைத்தார்.

    அங்கன்வாடி மையம் திறப்பு

    • ராமநாதபுரம் 4-வது வார்டில் அங்கன்வாடி மையத்தை நகரசபை தலைவர் திறந்து வைத்தார்.
    • ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி 4-வது வார்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2020-21 நிதியின் கீழ் யானைகல் வீதியில் அங்கன்வாடி மையம் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது.

    4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டியம்மாள் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

    இதையடுத்து நகராட்சி சேர்மன் ஆர்.கே.கார்மேகம், துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம் ஆகியோரது முயற்சியால் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இதன் திறப்பு விழா நடந்தது.

    நகராட்சி சேர்மன் ஆர்.கே. கார்மேகம் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை திறந்து வைத்தார்.4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டி யம்மாள், துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) லட்சுமணன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சுரேந்திரன், உதவி பொறியாளர் செல்வகுமார், மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஜே.ஆர்.பி.மணிகண்டன் நன்றி கூறினார்.

    Next Story
    ×