search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொலைக்காட்சி"

    • கல்வி தொலைக்காட்சி குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைக்காட்சி வழங்குமாறு ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • குத்தாலிங்கராஜன் என்ற கோபி தனது சொந்த நிதியிலிருந்து வண்ண தொலைக்காட்சி வாங்கி அதனை அங்கன்வாடி மையத்திற்கு வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மாடியனூர் பாளையம் ஆ.பொன்னுச்சாமி நாடார் தொடக்க பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வரும் குழந்தைகளுக்கு கல்வி தொலை க்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கு அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வரும் கவிதா, ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபியிடம் தொலைக்காட்சி வழங்கு மாறு கோரிக்கை விடுத்தி ருந்தார்.

    அதனை ஏற்று ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் தனது சொந்த நிதியிலிருந்து வண்ண தொலைக்காட்சி வாங்கி அதனை அங்கன்வாடி மையத்திற்கு வழங்கினார்.

    தொடர்ந்து அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் திருமலை செல்வன், ராஜாராம், ராதா சிங், தங்க ராஜா, தங்கம், கார்த்திக் ராஜா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×