search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் 8-வது வார்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் - செல்வராஜ் எம்.எல்.ஏ.-மேயர் திறந்து வைத்தனர்
    X

     திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.

    திருப்பூர் 8-வது வார்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் - செல்வராஜ் எம்.எல்.ஏ.-மேயர் திறந்து வைத்தனர்

    • போயம்பாளையம் ரோட்டரி சங்கம் அங்கன்வாடி மையத்திற்கு ரூ.7 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர முன்வந்தது.
    • நேரு நகரில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டுக்குட்பட்ட நந்தாநகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து 8-வது வார்டு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி தனியார் பங்களிப்புடன் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டார். இதன் பயனாக போயம்பாளையம் ரோட்டரி சங்கம் அங்கன்வாடி மையத்திற்கு ரூ.7 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர முன்வந்தது. இதை தொடர்ந்து 8-வது வார்டுக்குட்பட்ட நேரு நகரில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதன் திறப்புவிழா நடைபெற்றது. விழாவுக்கு போயம்பாளையம் ரோட்டரி சங்க தலைவர் முத்துராஜ், 8-வது வார்டு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். ரோட்டரி நிர்வாகிகள் தனசேகரன், ஆனந்தராம், மெல்வின்பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முடிவில் ரோட்டரி திட்ட தலைவர் ராஜன், பொருளாளர் ஜெகதீஷ்சந்திரன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

    விழாவில் தி.மு.க. பாண்டியன்நகர் பகுதி செயலாளர் ஜோதி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச்செயலாளர் ஈ.பி.சரவணன், இந்திய ஜனநாயக கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பாரிகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×