search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wild boars"

    • சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது
    • கேரளா மாநிலத்தில் வனவிலங்கு பட்டியலில் காட்டுப்பன்றி நீக்கப்பட்டது.
    சங்கரன்கோவில்:

    அமைச்சர் மதிவேந்தனை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் உள்ளதாகவும், காட்டுப்பன்றிகள் தொடர்ந்து விவசாய நிலங்களை பெரும் அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது எனவும், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலும் இதை வலியுறுத்தி காட்டு பன்றிகளை வன பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அப்போது இருந்த வனத்துறை அமைச்சர் நீக்கி தருவதாகவும் கூறி இருந்தார்.

    அருகிலுள்ள கேரளா மாநிலத்தில் வனவிலங்கு பட்டியலில் காட்டுப்பன்றி நீக்கப்பட்டது போல தமிழகத்திலும் வனவிலங்கு பட்டியலில் காட்டு பன்றியை நீக்க முதல்வரிடமும் வலியுறுத்தி அதை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். வாசுதேவநல்லூர் பகுதியில் ஆடு-மாடு மேய்ச்சலுக்கு குறிப்பிட்ட நேரம் அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வாழை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • தமிழகத்திலும் காட்டுப் பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி, அவை விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருவதை கட்டுப்படுத்தி, எங்களின் வாழ்வா தாரத்தைக் காக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வாழை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்ததாக நெல் மற்றும் கிழங்கு வகைகளை விவசாயிகள் அதிகமாக பயிர் செய்கிறார்கள்.

    களக்காடு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால், இங்குள்ள விவசாயிகள் வனவிலங்குகளின் தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது.

    குறிப்பாக, காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் காலம் காலமாக இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மலையில் இருந்து அடிவாரப் பகுதிக்கு வரும் காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில், விவசா யிகளின் வாழை மற்றும் கிழங்கு பயிர் செய்துள்ள தோட்டங்களுக்குள் பெரும் கூட்டங்களாகப் புகுந்து, மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன.

    வாழைப் பயிர்களின் அடிப்பகுதியைக் கடித்துக்குதறி, அதன் கிழங்கை சாப்பிடுகின்றன.

    சர்க்கரைவள்ளி கிழங்குகளையும் இவ்வாறே சாப்பிடுகின்றன. தென்னங்கன்றுகளையும் இந்தக் காட்டுப் பன்றிகள் விட்டு வைப்பதில்லை.

    தற்போது இந்தக் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை நேரில் சந்தித்த களக்காடு பகுதி விவசாயிகள், கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்த னர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    நாங்கள் வங்கிகளில் கடன் பெற்றுதான் விவசாயம் செய்து வருகிறோம். வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில்தான் விவசாயத் தொழில் உள்ளது. இந்த நிலையில், தற்போது காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக எங்களது வாழைத்தோட்டங்கள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்தக் காட்டுப் பன்றிகள் தமிழக அரசின் வன விலங்குகள் பட்டியலில் இருப்பதால், அவற்றைத் தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், எங்களால் அவற்றை ஒன்றும் செய்ய முடியவில்லை.

    காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தி விவசாயி களை காக்க, கேரள அரசு, இந்தக் காட்டுப் பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது.

    அதேபோல், தமிழகத்திலும் காட்டுப் பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி, அவை விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருவதை கட்டுப்படுத்தி, எங்களின் வாழ்வா தாரத்தைக் காக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    ஏற்கனவே நாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கும் நிலையில், காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் இனியும் தொடர்ந்தால், எங்களால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியே இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது

    மனுவைப் பெற்றுக்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., இதுகுறித்து சட்டமன்றத்தில் உடனடியாகப் பேசுவதோடு, முதல்-அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் பத்து விளைநிலங்களில் நேற்று இரவில் 20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது.
    • வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் பத்து விளைநிலங்களில் நேற்று இரவில் 20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்தது.

    அவைகள் வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றன. இதனால் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயிகள் தெரிவித்தனர். இவைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்த 6 மாத வாழைகள் ஆகும்.

    பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை கள் கீழவடகரையை சேர்ந்த விவசாயிகள் பாலன், பூபேஸ் குப்தா, மகேந்திரன் ஆகியோர்களுக்கு சொந்த மனாது ஆகும்.

    வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, களக்காடு பகுதியில் அதிகரித்து வரும் காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாக விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
    • அதிகாரிகள் பயிர் சேதங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    தென்காசி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கண்ணையா தலைமையில் ஊத்துமலை, ராஜ கோபால பேரி, அச்சங்குட்டம், வாடியூர் மற்றும் வீராணம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    வீரகேரளம் புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஊத்துமலை, ராஜகோபால பேரி மற்றும் ஆலங்குளம் சுற்றியுள்ள மலையடிவாரங்களில் காட்டுப்பன்றிகள் பெரு மளவில் உள்ளன. அவை அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    சேதம் அடைந்த பயிர்கள், நிலத்திற்கான இழப்பீடு தொகையும் இதுவரையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே காட்டுப்பன்றியை வனவிலங்கு சட்டத்திலிருந்து நீக்கவும், ஊத்துமலை பகுதிக்கு வடபுறம் போதிய மழை இல்லாமல் உளுந்து உள்ளிட்ட மானாவாரி பயிறு வகைகள் கருகி உள்ளன. எனவே வனத்துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறையை சேர்ந்த அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பயிர் சேதங்களை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கிட முதல்-அமைச்சருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

    கிடப்பில் போடப் பட்டுள்ள ரெட்டை குளம் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கி விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை உரு வாக்கிடும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


    • களக்காடு தலையணை மலையடிவாரத்தில்காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
    • 1 வாரத்திற்குள் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயி கவலையுடன் தெரிவித்தார்.

    களக்காடு:

    களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை, நெல் சாகுபடி செய்து வருகின்றனர். சமீபகாலமாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    கடந்த 1 வாரமாக வனப்பகுதியில் இருந்து வெளி வந்த காட்டு பன்றிகள் கூட்டம் களக்காடு நாடார் புதுத்தெருவை சேர்ந்த விவசாயி சுரேஷ் (58) என்பவருக்கு சொந்தமான விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.

    மேலும் வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றன. இதனால் 1 வாரத்திற்குள் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயி ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.

    இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்தது ஆகும். இதனால் அவருக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி களக்காடு வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், அதிகரித்து வரும் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

    • குடிமங்கலம் பகுதியில் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
    • அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாப்பாத்தியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 50) .இவர் தோட்டத்து வேலைக்கு சென்றார். அப்போது காட்டுப்பன்றி ஒன்று அவரை கீழே தள்ளி காலில் கடித்தது .அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாப்பாத்தியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடிமங்கலம் பகுதியில் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்வதால் வனத்துறையினர் இதை தடுக்க வேண்டும் அல்லது சுட அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டுப்பன்றி மனிதர்களையே தாக்க ஆரம்பித்துள்ளதால் தோட்ட வேலைக்கு செல்வோர் பீதி அடைந்துள்ளனர் .எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகளின் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது.
    • காட்டுப்பன்றிகளால் விவசாயிகளின் பயிர் சேதமடைந்தால் வனத்துறை சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இருப்பதில்லை.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதிகளில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.இதனால் காய்கறிப் பயிர்களில் பயிர் சேதம், பூச்சி, நோய் தாக்குதல் உள்ளிட்டவற்றால் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போதிய விலையின்மை, பல மடங்கு உயர்ந்த உற்பத்திச் செலவு போன்றவற்றால் தவித்து வரும் விவசாயிகளுக்கு மழை பாதிப்புடன், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் இழப்பும் சேர்ந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    காடுகளில் வசிக்க வேண்டிய காட்டுப் பன்றிகள் காடுகளை விட்டு வெளியேறி கிராமப் பகுதிகளில் தஞ்சமடைந்து, கிட்டத்தட்ட நாட்டுப் பன்றிகளாகவே மாறி விட்டன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அமராவதி, உடுமலை வனச்சரகங்களில் கூட்டம் கூட்டமாக வசிக்கும் காட்டுப் பன்றிகள் தற்போது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் ஊருக்குள் ஊடுருவி விட்டன.பகல் நேரங்களில் புதர்களுக்குள் மறைந்து ஓய்வெடுக்கும் காட்டுப் பன்றிகள் இரவு நேரத்தில் விளைநிலங்களுக்குள் படையெடுத்து பயிர்களைத் தின்றும், கிளறியும், மிதித்தும் சேதப்படுத்துகின்றன.

    தற்போது மடத்துக்குளம், வேடப்பட்டி, கணியூர் உள்ளிட்ட மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மக்காச்சோளம், கரும்பு, நெல், காய்கறிகள் என அனைத்து விதமான பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. தற்போது இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் பொழுதிலும் சில பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தென்படுகின்றன. இதனால் விவசாயிகளின் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. மேலும் கால்நடைகளையும் காட்டுப்பன்றிகள் தாக்கி காயப்படுத்தும் நிலை உள்ளது. ஊருக்குள் உள்ள காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் என்று கருதாமல் சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஒருசில விவசாயிகள் விளை நிலங்களைச் சுற்றி சேலைகளைக் கட்டி வைத்து காட்டுப் பன்றிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். அதையும் தாண்டி காட்டுப்பன்றிகளால் விவசாயிகளின் பயிர் சேதமடைந்தால் வனத்துறை சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இருப்பதில்லை. அதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயிர்களை சேதப்படுத்தும் போது இழப்பீடு பெற முடியாத நிலையே உள்ளது. மேலும் விவசாயிகள் நாய்களைப் பயன்படுத்தியோ, பட்டாசு உள்ளிட்டவற்றை வீசியோ, காட்டுப் பன்றிகளை விரட்டும் போது எதிர்பாராத விதமாக அவை உயிரிழக்க நேரிட்டால் விவசாயிகள் குற்றவாளிகளாகும் நிலை உள்ளது. தற்போது காட்டுப் பன்றிகள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதுடன் படிப்படியாக வெவ்வேறு பகுதிகள் நோக்கி ஊடுருவி வருகின்றன.இதே நிலை நீடித்தால் விவசாயத்தின் மிகப் பெரிய சவாலாக காட்டுப் பன்றிகள் உருவெடுக்கும் நிலை உள்ளது.எனவே உடனடியாக முடிவெடுத்து, வனத்தை விட்டு வெளியேறிய காட்டுப் பன்றிகளை முழுமையாக அழிக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மலையடிவார பகுதியில் அரசபத்து, கட்டுவிளை விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் சாகுபடி செய்துள்ளனர்.
    • பயிர் செய்யப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரகத்தை சேர்ந்த வாழைகளை காட்டு பன்றிகள் நாசம் செய்தன.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மலையடிவார பகுதியில் அரசபத்து, கட்டுவிளை விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் சாகுபடி செய்துள்ளனர்.

    இந்நிலையில் இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவில் வனப்பகுதியில் இருந்து வெளி வந்த காட்டு பன்றிகள் கூட்டம் விளைநிலங்களுக்குள் புகுந்தன.

    இதனை பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பன்றிகள் கூட்டம் நாலாபுறங்களிலும் இருந்து நுழைந்ததால் விவசாயிகள் திணறினர்.

    மேலும் விவசாயிகளை நோக்கி ஓடி வந்ததால் உயிருக்கு பயந்து விவசாயிகள் பின்வாங்கினர். அதற்குள் பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட ஏத்தன் ரகத்தை சேர்ந்த வாழைகளை நாசம் செய்தன.

    இவைகள் மஞ்சுவிளையை சேர்ந்த சில்கிஸ், பிரேட் செல்வின், தங்கராஜ், பாக்கியராஜ், ராஜ், முத்துக்குடி, ஜேம்ஸ் சுந்தர், லுர்கின் ஐசக் உள்பட விவசாயிகளுக்கு சொந்தமானது ஆகும். பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபற்றி மஞ்சுவிளையை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் (காங்கிரஸ்) சிம்சோன் துரை கூறுகையில், 'பன்றிகள் அட்டகாசத்தால் தினசரி வாழைகள் நாசமாகி வருகிறது. விளைநிலங்களுக்குள் புகும் பன்றிகளை விரட்ட முடியாமலும், வாழைகளை பாதுகாக்க முடியாமலும் விவசாயிகள் கடும் துயரத்தில் உள்ளனர்.

    காட்டு பன்றிகள் தொடர்ந்து வாழைகளை துவம்சம் செய்வதால் 24 மணி நேரம் உழைத்தும் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்க நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

    • 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.
    • 5 ஏக்கர் பரப்பில் பயிர் செய்துள்ள மக்காசோளம் பயிரை முற்றிலும் பன்றிகள் நாசம் செய்து உள்ளன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர், வசிஷ்டபுரம் பகுதியில் 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.தற்போது இரவு நேரத்தில் திடீரென காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக வெள்ளாற்று பகுதியில் இருந்து விவசாய விளை நிலத்தில் படை எடுத்து அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளத்தை அழித்து வருகிறது. பாடுபட்டு பயிர் செய்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள மக்கா சோளம் கதிர்களை பன்றி கூட்டம் நாசம் செய்து உள்ளது. நேற்று சுமார் 5 ஏக்கர் பரப்பில் பயிர் செய்துள்ள மக்காசோளம் பயிரை முற்றிலும் பன்றிகள் நாசம் செய்து உள்ளன.

    ஏக்கர் ஒன்றுக்கு உழவு கூலி, விதை, களை எடுத்தல், உரம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் 40 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளதாகவும், இந்த 40 ஆயிரம் ரூபாயும் தற்போது இழப்பாகி உள்ளதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் காட்டு பன்றியிடமிருந்து விவசாய விளைநிலத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாய விளைநிலத்திற்கு வனவிலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்

    • களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் ஊரில் விவசாயிகள் முத்துகிருஷ்ணன் , இளையபெருமாள் , செந்தில்சாமி ஆகியோருக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன.
    • வாழைகளை குதறி பிடுங்கி குருத்துகளை தின்று சேதப்படுத்தியுள்ளன.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் ஊருக்கு மேற்கே தாதாபறையில் மாவடியை சேர்ந்த விவசாயிகள் முத்துகிருஷ்ணன் (வயது45), இளையபெருமாள் (60), செந்தில்சாமி (40) ஆகியோருக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன.

    இதில் வாழை, நெல் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் 50-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளன. வாழைகளை குதறி பிடுங்கி குருத்துகளை தின்று சேதப்படுத்தியுள்ளன.

    இவைகள் 4 மாதமே ஆன ஏத்தன் ரக வாழைகள் ஆகும். இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த காட்டு பன்றிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல், மலையடிவாரத்தில் உள்ள புதர்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அவைகள் இரவு நேரங்களில் விளைநிலங்களை நாசம் செய்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

    மேலும் விளை–நிலங்களுக்குள் உலா வரும் பன்றிகளால் விவசாயிகளின் உயிருக்கும் ஆபத்து நிலவுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே காட்டு பன்றிகளை விரட்டவும், நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பெரும்படையார் கூறியதாவது:-

    களக்காடு மலையடி வாரத்தில் வனவிலங்குகளால் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. வனவிலங்குகள் நாசம் செய்யும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், வனத்துறையினர் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் அலட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரவு நேர ங்களில் காட்டு–ப்பன்றிகளின் கூட்டம் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயங்கர சத்தத்துடன் சென்று வருகிறது.
    • காட்டுப்பன்றி கூட்டத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பாதுகாப்பை காத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நகலூர் ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ெபாதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேர ங்களில் காட்டு–ப்பன்றிகளின் கூட்டம் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயங்கர சத்தத்துடன் சென்று வருகிறது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்பட்டு அச்சத்தோடு இருந்து வரு கிறார்கள்.

    இதனால் வீட்டின் கதவுகளை பொதுமக்கள் மூடி கொண்டு வெளியே வர தயங்குகின்றனர்.அந்தியூர் அருகே உள்ள நகலூரை யொட்டி உள்ள வனப்பகுதியான கொம்பு தூக்கி வனப்பகுதியில் இருந்து இந்த காட்டுப் பன்றிகள் ெவளியேறி அருகே உள்ள ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு பன்றிகள் பெருமாள் பாளையம், முனியப்பன் பாளையம், ஈச்சப்பாறை உள்ளிட்ட பகுதியில் உள்ள கரும்பு தோட்டங்களில் பகல் நேரங்களில் தங்கி விடுகிறது. அவை இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக நகலூர் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    எனவே நகலூர் பகுதியில் ஊருக்குள் வரும் காட்டுப்பன்றி கூட்டத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பாதுகாப்பை காத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • திருக்குறுங்குடி பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி வடகரை பத்துகாட்டில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் 100-க்கும் மேற்பட்ட வாழைகள், தக்காளி, மிளகு, சோளம் ஆகிய பயிர்கள் நாசமடைந்துள்ளன.

    வாழைகள் 3 மாதமான ஏத்தன் ரகத்தை சேர்ந்தவை ஆகும். இவைகள் அப்பகுதியை சேர்ந்த குருநாதன், லெட்சுமணன், சண்முகசுந்தரம், முருகராணி உள்பட விவசாயிகளுக்கு சொந்தமானது ஆகும். காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் காட்டு பன்றிகளை விரட்ட வழியின்றி தவிக்கின்றனர்.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் காட்டு பன்றிகள் அட்டகாசம் குறித்து திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் அவர்கள் பன்றிகளை விரட்ட எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். வனப்பகுதியில் இருந்து வெளி வந்த பன்றிகள் மீண்டும் காட்டுக்குள் செல்லாமல் அங்குள்ள கால்வாய்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே அட்டகாசம் செய்து வரும் காட்டு பன்றிகளை விரட்டவும், நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×