search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு பன்றிகள்"

    • மிளகாய், பருத்தி செடிகளை நாசம் செய்யும் காட்டு பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
    • வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அபிராமம்

    இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மனமுடைந்த நிலையில் மிளகாய், பருத்தி செடிகளை காட்டு பன்றிகள் நாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் என்ன செய்வது? என்ற மனகுழப்பத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து விவசாய சங்க தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், அபிராமம் பகுதியில் உள்ள மிளகாய், பருத்தி செடிகளை காட்டு பன்றிகள் நாசம் செய்து வருகிறது. காட்டு பன்றிகளுக்கு பயந்து இந்த ஆண்டு நிலக்கடலை விவசாயத்தை விவசாயிகள் பயிரிடவில்லை.

    காட்டு பன்றிகள் தொல்லை குறித்து வேளாண் மற்றும் வனத்து றையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காட்டு பன்றிகளால் பாதிக்கப் படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
    • 4 நாட்களுக்கு முன் காட்டுப்பன்றிகள் கூட்டம் நுழைந்தது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் தோலம்பா–ளையம்புதூர், ஆதிமாதையனூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டு யானை, மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் நுழைந்து பொது–மக்களையும் விவசா–யிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் தோலம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்த மயில்சாமி மனைவி முத்தம்மாள் என்பவரின் கரும்பு தோட்டத்திற்குள் கடந்த 4 நாட்களுக்கு முன் காட்டுப்பன்றிகள் கூட்டம் நுழைந்தது.

    அப்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களை காட்டு பன்றிகள் கூட்டம் காலால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியது.

    இதற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்று வரை இழப்பீட்டு தொகை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்க அரசு அதிகாரிகள் முன் வர வில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    காரமடை வனத்து றையினர் மட்டும் பெயரளவிற்கு வந்து பார்த்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு அரசு அதிகாரிகள் இழப்பீடு வழங்கு முன்வருவதில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.

    • 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.
    • 5 ஏக்கர் பரப்பில் பயிர் செய்துள்ள மக்காசோளம் பயிரை முற்றிலும் பன்றிகள் நாசம் செய்து உள்ளன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர், வசிஷ்டபுரம் பகுதியில் 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.தற்போது இரவு நேரத்தில் திடீரென காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக வெள்ளாற்று பகுதியில் இருந்து விவசாய விளை நிலத்தில் படை எடுத்து அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளத்தை அழித்து வருகிறது. பாடுபட்டு பயிர் செய்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள மக்கா சோளம் கதிர்களை பன்றி கூட்டம் நாசம் செய்து உள்ளது. நேற்று சுமார் 5 ஏக்கர் பரப்பில் பயிர் செய்துள்ள மக்காசோளம் பயிரை முற்றிலும் பன்றிகள் நாசம் செய்து உள்ளன.

    ஏக்கர் ஒன்றுக்கு உழவு கூலி, விதை, களை எடுத்தல், உரம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் 40 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளதாகவும், இந்த 40 ஆயிரம் ரூபாயும் தற்போது இழப்பாகி உள்ளதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் காட்டு பன்றியிடமிருந்து விவசாய விளைநிலத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாய விளைநிலத்திற்கு வனவிலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்

    ×