search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்டகாசம்"

    • வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.
    • யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    தருமபுரி:

    ஒற்றை ஆண் யானை ஒன்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு வெளியேறியது. இந்த யானை கிராமப் பகுதிகளில் சுற்றி திரிந்து, கடந்த வாரம் தருமபுரி நகர் பகுதி வரை சென்றது. மேலும் தருமபுரியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனே தருமபுரிக்கு வந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை யானையை தொப்பூர் வனப் பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஒற்றை யானை மீண்டும் பொம்மிடி கிராமப் பகுதியில் நுழைந்தது.

    குறிப்பாக முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, காளிக்கரம்பு வழியாக சுற்றிய யானையை கம்பைநல்லூர் வழியாக கொண்டு சென்று பாலக்கோடு வனப்பகுதியில் விட வன துறை தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த யானை சில்லாரஅள்ளியில் இருந்து கொடகாரஅள்ளி பகுதியில் மைலாப்பூர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தது.

    வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வத்தல் மலை அடிவாரபகுதியில் நேற்று இரவு நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டிலிருந்து வெளியேறிய யானை விவசாய தோட்டங்களை சேதப்படுத்தி உணவை உட்கொண்டது. அப்போது யானைக்கு வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசி செலுத்தினர்.

    உடனடியாக கிரேன் மூலம் யானையை மீட்டு ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப் பகுதிகளுக்குள் விடுவதற்காக யானையை வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.

    கடந்த 3 வாரமாக மக்களை அச்சுறுத்தி வந்த யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
    • வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, வாழை தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் விவசாயி விஜயகுமார் (48) என்பவர் தோட்டத்தில் புகுந்து வாழை மரத்தை சேதம் செய்தது.

    இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகள் உதவியுடன் யானையை விரட்டினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 200 வாழைகள் சேதம் ஆனது.

    வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தொடர்ந்து வனவிலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து சேதம் செய்து வருவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது.
    • யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகர பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. அந்த ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை கடந்த 3 நாட்களாக கிராமப் பகுதிக்குள் புகுந்து காரிமங்கலம் வழியாக அண்ணாமலைஅள்ளி, சவுளுக்கொட்டாய் பகுதி யில் இருந்த கரும்பு தோட் டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது. படுகாயம் அடைந்த அந்தப் பெண் தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் யானை திருப்பத்தூர் சாலை வழியாக சோளக்கொட்டை அருகே மான்காரன் கோட்டை பகுதியை வந்து அடைந்தது அங்குள்ள கரும்பு தோட்டம், தீவனம் பயிர், சோளத்தட்டு உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து, பின்பு இரவு அங்கிருந்து வனத் துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்ட தொடங்கினர்.

    அப்போது அந்த யானை வேறு பகுதிக்கு சென்றது. தொடர்ந்து வனத் துறையினர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 7 மணி அள வில் தருமபுரி திருப்பத்தூர் சாலையை கடந்து செட்டிகரை பகுதி பொறியியல் கல்லூரி பின் பகுதியில் தஞ்சம் அடைந்தது.

    வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை தருமபுரி நகரப் பகுதியான வேடியப்பன் திட்டு, அக்ரஹாரம், சனத்குமார்ஓடை அருகே தற்பொழுது யானை குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிக்கு யானை புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வேறு பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் யானை தற்போது சனத்க்குமார் ஓடை அருகே உள்ள புதர் பகுதியில் புகுந்துள்ளதால் 3 வனக் குழுவினர் வெவ்வேறு பகுதிகளில் நின்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    யானை நகரப் பகுதியில் தற்பொழுது இருப்பதால் இந்த பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டித்துள்ளனர். மேலும் யானை நகரப் பகுதிக்குள் செல்ல நேர்ந்தால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தருமபுரி நகரப் பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
    • மாலைமலர் செய்தி எதிரொலி

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி மற்றும் தேவ சகாயம் மவுண்ட் தேவாலயம் பகுதிகளில் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தொடர்ந்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்து வந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குரங்குகள் தொல்லை அதிகரிப்பது குறித்தும் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    வனத்துறையினர் அசோக், துரைராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதியில் கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வைத்த கூண்டில் குரங்குகள் சிக்கியது. ஒரே நாளில் 46 குரங்குகள் சிக்கி உள்ளது. பிடிப்பட்ட குரங்குகளை அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • 100-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின.
    • மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், மான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை தீவனம் மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து, விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

    தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). இவர் அங்கு உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமாக நஞ்சேகவுண்டன் புதூரில் சுமார் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அஙகு இவர் நேந்திரன் வாழை பயிரிட்டு இருந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு 3 காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்தன. அங்கு இருந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தின. அதன்பிறகு வாழைத்தார்களை மட்டும் பிடுங்கி ருசித்து விட்டு காட்டுக்குள் சென்றன.

    திருநாவுக்கரசு இன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்றார். அப்போது வாழைத்தார்களை மட்டும் யானைகள் ருசித்துவிட்டு சென்றது தெரிய வந்தது. இது திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    விவசாயி திருநாவுக்கரசு கூறுகையில், காட்டுப்பன்றி, காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே அடர்வனத்தில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாத வகையில், ஏற்கனவே வெட்டப்பட்டு உள்ள அகழிகளை ஆழப்படுத்த வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள மின்வேலிகளை முறையாக பராமரிக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இதற்கிடையே சிறுமுகை லிங்காபுரத்தில் பெரிய தந்தங்களுடன் கூடிய ஒற்றைக் காட்டு யானை, வனப்பகுதியில் இருந்து வெளியேறி லிங்காபுரம் சாலையோரத்தில் முகாமிட்டது. இதனை தற்செயலாக பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதனை தொடர்ந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

    சிறுமுகை, லிங்காபுரத்தில் நீண்ட நேரமாக முகாமிட்டு இருந்த காட்டு யானை அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தது. அதன்பிறகு பவானி ஆற்றில் தண்ணீர் குடித்து விட்டு, காந்தையூர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது. இதனால் லிங்காபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • கார் மற்றும் மோட்டார் சைக்கிளை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
    • வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    ஊட்டி

    கூடலூர் அருகே ஓவேலி கிளன்வன்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் காட்டுயானை நுழைந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுயானையும் பொதுமக்களை விரட்டியவாறு இருந்தது. இந்த சமயத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதனால் பரபரப்பு காணப்பட்டது. மேலும் பெண்கள், குழந்தைகள் காட்டு யானையை கண்டு வீட்டுக்குள் ஓடி பதுங்கி கொண்டனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை ஊருக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் வருகின்றனர்.

    • கொளத்தூர் அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது.
    • தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழையை தின்றும், மிதித்தும் நாள்தோறும் நாசம் செய்து வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது.

    இந்த யானை, அந்த பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருடைய தோட்டத்தில் புகுந்து, அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள வாழையை தின்றும், மிதித்தும் நாள்தோறும் நாசம் செய்து வருகிறது.

    இதுகுறித்து செந்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையில் வனவர் வெங்கடேஷ் மற்றும் வனக்காப்பாளர்கள், சின்னத்தண்டா கிராமத்தில் முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு, நீர் தேடி வன எல்லையிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.

    திருமூர்த்தி நகர், வலையபாளையம் கிராமங்களில் இரு குட்டிகளுடன் கூடிய 10 யானைகள் கொண்ட கூட்டம் தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.

    மேலும் மலையடிவாரத்தில் 1 கி.மீ., வரையில் 20க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு பயிர்களை உண்டதுடன் சோலார் மின் வேலிகளையும், நீர்ப்பாசன கட்டமைப்புகளையும் சேதப்படுத்தின. யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதையடுத்து உடுமலை வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். வன எல்லை கிராமங்களில் யானைகள் நுழைவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும், அகழி, சோலார் மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குருமலை, மாவட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள சந்தியூர் ஊராட்சியில் சமீபத்தில் 2 லட்சும் ரூபாய் மதிப்பில் இந்த சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
    • சமூக விரோத கும்பல் முகாமிடுவதால் பாதுகாப்பு காரணங்க ளுக்காக சுகாதார வளாகத்தை பூட்டி வைத்துள்ளோம் என்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பன மரத்துப்பட்டி அருகே உள்ள சந்தியூர் ஊராட்சி யில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்ற னர். அங்கு ஏரிக்கரை அருகே சுகாதார வளாகம் உள்ளது. அதை ஊராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ள தால், மக்கள் பயன்படுத்த முடியவில்லை.

    இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், சமீபத்தில் 2 லட்சும் ரூபாய் மதிப்பில் இந்த சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால் கதவு, பைப் உள்ளிட்டவற்றை சமூக விரோதிகள் உடைத்த னர்.

    மேலும் சுகாதார வளாகத்தில் மது அருந்து கின்றனர். இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த மக்கள் தயங்கு கின்றனர். சமூக விரோத கும்பல் முகாமிடுவதால் பாதுகாப்பு காரணங்க ளுக்காக சுகாதார வளாகத்தை பூட்டி வைத்துள்ளோம் என்றனர்.

    • குடிமங்கலம் பகுதியில் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
    • அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாப்பாத்தியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 50) .இவர் தோட்டத்து வேலைக்கு சென்றார். அப்போது காட்டுப்பன்றி ஒன்று அவரை கீழே தள்ளி காலில் கடித்தது .அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாப்பாத்தியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடிமங்கலம் பகுதியில் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்வதால் வனத்துறையினர் இதை தடுக்க வேண்டும் அல்லது சுட அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டுப்பன்றி மனிதர்களையே தாக்க ஆரம்பித்துள்ளதால் தோட்ட வேலைக்கு செல்வோர் பீதி அடைந்துள்ளனர் .எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • இரவு நேர ங்களில் காட்டு–ப்பன்றிகளின் கூட்டம் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயங்கர சத்தத்துடன் சென்று வருகிறது.
    • காட்டுப்பன்றி கூட்டத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பாதுகாப்பை காத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நகலூர் ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ெபாதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேர ங்களில் காட்டு–ப்பன்றிகளின் கூட்டம் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயங்கர சத்தத்துடன் சென்று வருகிறது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்பட்டு அச்சத்தோடு இருந்து வரு கிறார்கள்.

    இதனால் வீட்டின் கதவுகளை பொதுமக்கள் மூடி கொண்டு வெளியே வர தயங்குகின்றனர்.அந்தியூர் அருகே உள்ள நகலூரை யொட்டி உள்ள வனப்பகுதியான கொம்பு தூக்கி வனப்பகுதியில் இருந்து இந்த காட்டுப் பன்றிகள் ெவளியேறி அருகே உள்ள ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு பன்றிகள் பெருமாள் பாளையம், முனியப்பன் பாளையம், ஈச்சப்பாறை உள்ளிட்ட பகுதியில் உள்ள கரும்பு தோட்டங்களில் பகல் நேரங்களில் தங்கி விடுகிறது. அவை இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக நகலூர் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    எனவே நகலூர் பகுதியில் ஊருக்குள் வரும் காட்டுப்பன்றி கூட்டத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பாதுகாப்பை காத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது.
    • சேதமடைந்த விவசாயப் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (40) இவர் தனது 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

    நேற்று இரவு வனப்பகுதியில்11 மணி அளவில் வந்த காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து வாழையை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தன. இதைப் பார்த்த விவசாயி ஜீவாநந்தம் பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் அளித்தார். விவசாயிகள் ஒன்று சேர்ந்து சப்தம் போட்டும் யானைகளை துரத்தினர்.

    ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் வாழையை தொடர்ந்து சேதபடுத்தியது. அதிகாலையில் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது.

    இதில் யானைகளால் 150 வாழைகள் சேதமடைந்தது. சேதமடைந்த விவசாயப் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×