search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக விரோதிகள் அட்டகாசம் சுகாதார வளாகத்துக்கு பூட்டு
    X

    சமூக விரோதிகள் அட்டகாசம் சுகாதார வளாகத்துக்கு பூட்டு

    • சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள சந்தியூர் ஊராட்சியில் சமீபத்தில் 2 லட்சும் ரூபாய் மதிப்பில் இந்த சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
    • சமூக விரோத கும்பல் முகாமிடுவதால் பாதுகாப்பு காரணங்க ளுக்காக சுகாதார வளாகத்தை பூட்டி வைத்துள்ளோம் என்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பன மரத்துப்பட்டி அருகே உள்ள சந்தியூர் ஊராட்சி யில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்ற னர். அங்கு ஏரிக்கரை அருகே சுகாதார வளாகம் உள்ளது. அதை ஊராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ள தால், மக்கள் பயன்படுத்த முடியவில்லை.

    இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், சமீபத்தில் 2 லட்சும் ரூபாய் மதிப்பில் இந்த சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால் கதவு, பைப் உள்ளிட்டவற்றை சமூக விரோதிகள் உடைத்த னர்.

    மேலும் சுகாதார வளாகத்தில் மது அருந்து கின்றனர். இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த மக்கள் தயங்கு கின்றனர். சமூக விரோத கும்பல் முகாமிடுவதால் பாதுகாப்பு காரணங்க ளுக்காக சுகாதார வளாகத்தை பூட்டி வைத்துள்ளோம் என்றனர்.

    Next Story
    ×