search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife"

    • தனக்குத் தானே தீவைத்து கொண்டதாக வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.
    • பின்னர் முத்துக்குமரன் அவரது சகோதரி கலையரசியும் சேர்ந்து மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாகவும் கூறியுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், அவரது மனைவி சங்கீதா. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனை ஏற்றுக்கொள்ளாத சங்கீதாவின் தாயார் சரோஜா விஷம் குடித்து இறந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 5-ந் தேதி உடலில் தீக்காயங்களுடன் சங்கீதா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தனக்குத் தானே தீவைத்து கொண்டதாக வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நேற்று முதல் சமூக வளைதளங்களில் சங்கீதா வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கணவர் முத்துக்குமரன் தன்னை வரதட்சனை வாங்கி வரச் சொல்லி கொடுமைப் படுத்தியதாகவும், முத்துக்குமரன் அவரது சகோதரி கலையரசியும் சேர்ந்து மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாகவும் கூறியுள்ளார்.மேலும், இதனை வெளியில் கூறினால் உனது பிள்ளைகளையும் மண்ணெண்ணைய் ஊற்றி கொளுத்திவிடுவேன் என்று மிரட்டியதால், என்மீது யாரும் மண்ணைண்ணைய் ஊற்றி கொளுத்தவில்லை. தனக்குத் தானே தீவைத்துக் கொண்டதாக வாக்குமூலம் அளித்தாகவும் கூறியுள்ளார்.

    தனது உறவினர்கள் தன்னிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் இப்போது இந்த உண்மையை கூறுவதாகவும் இந்த வீடியோவில் சங்கீதா கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக உள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சங்கீதா உயிரிழந்தார்.

    இதையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த கண்டமங்கலம் போலீசார் முத்துக்குமரனை கைது செய்து, அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    தீக்குளிக்க முயன்ற மனைவி மீது கணவனே தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடராஜன் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
    • ஊஞ்சல் கயிற்றில், மீனா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே திருநள்ளாறு அத்திபடுகை மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 37). இவர், காரைக்கால் பொதுப்ப ணித்துறையில், என்.எம்.ஆர். ஆக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா (35). இவர்களுக்கு வேதிகா (5) ஹர்சிதா (1) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.நடராஜன் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் நடராஜனின் மனைவி மீனா, தினசரி மது அருந்திவிட்டு வந்தால், எப்படி குடும்பம் நடத்துவது? இப்படியே நீ செய்தால் ஒரு நாள் தற்கொலை செய்து கொள்வேன் என கண்டி த்துள்ளார்.

    சம்ப வத்தன்று பகல் வழக்கம் போல், நடராஜன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவி மீனா நடராஜனை கண்டி த்துள்ளார். அதை கண்டு கொள்ளாத நடராஜன் சாப்பி ட்டுவிட்டு உறங்கிவிட்டார்.மா லையில் நடரா ஜனுக்கு, மீனா டீ போட்டு கொடுத்து ள்ளார். அதை குடிக்க மறுத்து வெளியில் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறை உள் பக்கமாக தழ்பாழ்போ ட்டு இருந்தது. நடராஜன் கதவை தட்டினார் ஆனால் திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த நடராஜன், கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ஊஞ்சல் கயிற்றில், மீனா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த நடராஜன் சப்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்த்தினர் ஓடிவந்தனர்.

    அவர்கள் உதவியுடன், மீனாவை மீட்டு திருநள்ளாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த டாக்கர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து, நடராஜன் திருநள்ளாறு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன்-மனைவி இருவரும் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
    • பல்லடம தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பல்லடம் :

    பொங்கலூர் அருகே உள்ள காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளநத்தம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 61). இவரது மனைவி தமிழரசி (50). இவர்கள் மகன்சம்பத்குமார்(35) மற்றும் மருமகள் கலையரசி (30) ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மகன் சம்பத்குமார் திருப்பூர் சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது வீடு தாழிடப்பட்டிருந்தது. வெகு நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது சம்பத்குமாரின் தந்தை வேலுச்சாமி மற்றும் தாயார் தமிழரசி ஆகியோர் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை திறந்து மயங்கி கிடந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் மருத்துவர் பரிசோதனை செய்தபோது வேலுச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தமிழரசிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவர்களது மகன் சம்பத்குமார் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    மதுரை :

    மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது35). என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த வைஷ்ணவிக்கும்(24) திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

    இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27-ந் தேதி மகளை பள்ளியில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தநிலையில் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவி ஒருவரிடம் பல மணி நேரம் பேசியது தெரியவந்தது. வைஷ்ணவிக்கும், சிவகங்கையை சேர்ந்த அவரது தாய்மாமா மகன் என்ஜினீயரான வெங்கடேசனுக்கும்(25) கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. செந்தில்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததால் அவர்களால் சரிவர சந்திக்க முடியவில்லை. எனவே அவரது ஒரு கை, காலை வெட்டினால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று வைஷ்ணவி கொடூரமாக எண்ணினார். இதுகுறித்து வெங்கடேசனிடம் தெரிவித்தார்.

    எனவே அவர் தனது நண்பரான, கூலிப்படையை சேர்ந்த சாந்தகுமாரிடம் கூறினார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. வைஷ்ணவி தனது நகைகளை கள்ளக்காதலன் வெங்கடேசன் மூலம் சிவகங்கையில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்கள் தெரிவித்தப்படி சாந்தகுமாரும், மற்றொருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து செந்தில்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. எனவே நேற்று இரவு வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள்.

    • வீட்டுக்குள் நுழைந்து மாமனார் முத்து, மாமியார் பானுமதி மற்றும் மனைவி ஜெயகீர்த்தியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினார்.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம், நவ.23-

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்து (73). அவரது மனைவி பானுமதி (66). இவர்களது மகள் ஜெயகீர்த்தி (36).

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெயகீர்த்திக்குக்கும், சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (35) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

    திருமணமான 3 மாத த்தில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஜெயகீர்த்தி சத்தியமங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். உதயகுமார் எடப்பாடியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இரு வீட்டாரும் சமாதானம் பேசி கணவன்-மனைவியை சேர்த்து வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால் கணவன்-மனைவி இருவரும் சமரசம் ஆகவில்லை.

    இந்நிலையில் இன்று காலை உதயகுமார் சத்தியமங்கலத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு உருட்டுக்கட்டையுடன் வந்தார்.

    வீட்டுக்குள் நுழைந்து மாமனார் முத்து, மாமியார் பானுமதி மற்றும் மனைவி ஜெயகீர்த்தியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினார்.எதிர்பாராத இந்த தாக்கு தலால் 3 பேரும் அலறினர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உதயகுமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உதயகுமார் உருட்டு கட்டையால் தாக்கியதில் முத்து, பானுமதி, ஜெயகிரீத்தி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மாமனார், மாமியார், மனைவியை மருமகன் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவர் இறந்த 4 நாட்களில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45). இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த 11-ந் தேதி வேல்முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கணவரின் இந்த முடிவால் செல்வி மிகவும் வேதனையடைந்ததாக தெரிகிறது. சோகத்தில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வாரத்தில் கணவன்-மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மற்றொரு தற்கொலை

    டி.கல்லுப்பட்டி ராம்முன்னி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65). மதுப்பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த பன்னீர்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பேரையூர் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனிமையில் இருந்த தங்கராஜூக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவத்தன்று அவரது மகன் மாசாணம், தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அழைப்பை ஏற்கவில்லை. உடனே வீட்டுக்கு சென்று பார்த்த போது தங்கராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கமல் கிஷோர் மிஸ்ரா ‘தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.
    • போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

    மும்பை:

    மும்பை அந்தேரி மேற்கு நியூ லிங்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாகன நிறுத்தத்தில் கடந்த 19-ந்தேதி இந்தி சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா காரில் இருந்தார். காரில் அவருடன் மாடல் அழகி ஒருவரும் இருந்துள்ளார். மாடல் அழகி தயாரிப்பாளரின் கள்ளக்காதலி என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தயாரிப்பாளரை தேடி அவரது மனைவியும், போஜ்புரி நடிகையுமான யாஸ்மின் அங்கு சென்றார். தனது கணவர் வேறு பெண்ணுடன் காரில் இருந்ததை பார்த்து அவர் ஆத்திரமடைந்தார். மேலும் கணவரை தட்டிக்கேட்டார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் தயாரிப்பாளர் மாடல் அழகியுடன் காரில் தப்பிச்செல்ல முயன்றார். அப்போது மனைவி காரை தடுத்து நிறுத்த முயன்றார். இதில் திடீரென அவர் தவறி விழுந்தார். எனினும் தயாரிப்பாளர் ஈவு இரக்கமின்றி அவா் மீது காரை ஏற்றி விட்டு அங்கு இருந்து தப்பிச்சென்றார்.

    கார் ஏறியதில் யாஸ்மினின் கால், கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. வாகன நிறுத்த காவலர்கள் தயாரிப்பாளர் மனைவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே யாஸ்மின் மீது காரை ஏற்றி செல்லும் காட்சிகள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்தநிலையில் தயாரிப்பாளரின் மனைவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர். கமல் கிஷோர் மிஸ்ரா இந்தியில் வெளியான 'தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.

    • காலை, வழக்கம்போல இவர்கள் வீட்டிற்கு பால் கொடுப்பதற்காக பால்காரர் வந்துள்ளார்.
    • பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தினர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (55) இவரது மனைவி புஷ்பவதி( 50) இந்த நிலையில் இன்று காலை, வழக்கம்போல இவர்கள் வீட்டிற்கு பால் கொடுப்பதற்காக பால்காரர் வந்துள்ளார்.

    நீண்ட நேரமாகியும் அழைத்துப் பார்த்தும் யாரும் வராததால், பக்கத்து வீட்டில் இது குறித்து சொல்லி உள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது தங்கவேல் தூக்கு போட்டு தொங்கிய நிலையில்இருந்தார். அருகே புஷ்பவதி இறந்து கிடந்தார் .இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தினர் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் முதல் கட்ட விசாரணையில் நேற்று இரவு கணவன்- மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

    இதனையடுத்து தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகவே மனைவியை கொன்றுவிட்டு தங்கவேல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏது காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தம்பதியர் இடையே, சரியான புரிதல் இருந்தால், வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இருக்காது.
    • கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் இருக்காது.

    திருப்பூர் :

    திருப்பூர் அமர்ஜோதி நகர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா, மணி மஹாலில் நடந்தது. மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார்.

    மேயர் தினேஷ்குமார், உலக சமுதாய சேவா சங்க மண்டல தலைவர் கருணாநிதி, அறக்கட்டளை செயலாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். முதுநிலை பேராசிரியர் விவேகானந்தன், தம்பதியர் உயிர்க்கலப்பு தவம் நிகழ்த்தினார்.சச்சிதானந்தா ஜோதி நிகேதன்பன்னாட்டுப்பள்ளி செயலாளர் கவிதாசன் பேசியதாவது:- திருமணமான பிறகே சமுதாயத்தில் மதிக்கப்படும் நிலை உருவாகிறது.வாழ்க்கை சிறப்பாக மாற்றப்படுகிறது. மனைவி ஒரு பல்கலைக்கழகம். குடும்பம் சிறப்பாக இருக்க, மனைவி சிறப்பாக இருக்க வேண்டும்.தம்பதியர் இடையே, சரியான புரிதல் இருந்தால், வாழ்க்கையில் எந்த பிரச்னையும் இருக்காது. கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் இருக்காது. இருந்தாலும் கூட, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மனநிறைவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

    சட்டம் பேசுபவர் வழக்கு நடத்தலாம். வாழ்க்கை நடத்த முடியாது. குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட மனைவியை கணவன் மனதார பாராட்டினால், பிரச்னையே இருக்காது. வாரம் ஒருமுறையாவது பாராட்டினால் வாழ்க்கை இனிமையாக அமையும்.தொழிலில் வெற்றியடைந்தவன் வாழ்வே முழுமை பெறும். அதற்கு மனைவியின் உறுதுணை அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

    • தூத்துக்குடி முத்தை யாபுரம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சதீஷ்சுடலை (வயத25). இவர் முத்தையாபுரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
    • நாங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி எனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் முத்தையாபுரத்தில் வசித்து வந்தோம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தை யாபுரம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சதீஷ்சுடலை (வயத25). இவர் முத்தையாபுரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    காதல் திருமணம்

    நான் தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். நானும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நவ்சின்பானு என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அதற்கு அவர்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் நாங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி எனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் முத்தையாபுரத்தில் வசித்து வந்தோம்.

    இந்நிலையில் கடந்த மாதம் எங்கள் வீட்டிற்கு வந்த எனது மனைவியின் பெற்றோர் பழைய சம்பவங்களை மறந்து விட்டோம் என கூறினர். பின்னர் அவர்கள் திரும்பி செல்லும் போது நவ்சின்பானுவை அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் போன் செய்து எனது மனைவியை அழைத்த போது அவர் என்னுடன் வரமாட்டார் என அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே நவ்சின்பானு எனக்கு போன் செய்து அவரை துன்புறுத்துவதாகவும், நான் அவரை அழைத்து செல்லுமாறும் கூறினார். எனவே எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இது தொடர்பாக டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பா ர்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் விசாரணை நடத்தி வருகிறார். 

    • வங்கி பெண் அதிகாரியை தாக்க முயன்ற கணவன்-மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உத்தங்குடி, அம்பலக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்த மச்சக்காளை மகள் திவ்யா (வயது 27). இவர் மதுரை தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் திவ்யா மாட்டுத்தாவணி போலீசில் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், நான் சென்னை வங்கியில் வேலை பார்த்தேன். அப்போது வளசர வாக்கத்தைச் சேர்ந்த ராம்பிரபு என்பவர் என்னி டம் தகாத முறையில் நடந்தார். இது தொடர்பாக சென்னை வடபழனி போலீசில் புகார் செய்தேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில், நான் உத்தங்குடி பகுதியில் நடந்து சென்றேன். அப்போது அங்கு வந்த ராம்பிரபு, அவரது மனைவி மகா சூரிதா ஆகிய 2 பேரும் என்னை அவதூறாக பேசி அடிக்க பாய்ந்தனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
    • கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .

    திருப்பூர் : 

    திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ,பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுசீலா. இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சுசிலா வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவன் கோபாலுக்கு தெரிந்ததால் அவரை கொலை செய்ய மனைவி சுசீலாவும் கள்ளக்காதலன் மாரீஸ்வரனும் முடிவு செய்தனர்.

    அதன்படி இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கோபாலை கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கோபாலின் மனைவி சுசீலா ,கள்ளக்காதலன் மாரீஸ்வரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மதன் குமார், மணிகண்டன், வினோத், லோகேஸ்வரன், விஜய் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .அந்த உத்தரவையடுத்து கோவை சிறையில் உள்ள 7 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை வழங்கினர்.

    ×