என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வங்கி பெண் அதிகாரி"
- ராஜபாளையத்தில் வங்கி பெண் அதிகாரியிடம் நூதன முறையில் நகை திருடப்பட்டது.
- இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சிவசக்தி (வயது 43). இவர் அங்குள்ள அரசு வங்கியில் வணிக தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கி கணக்கு தொடங்க துரைசாமிபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் மனைவி ராணி (35) என்பவர் வங்கிக்கு வந்தார். அப்போது தங்கள் பகுதியில் பலருக்கு வங்கி கணக்கு தொடங்க வேண் டும் என்று கூறியுள்ளார்.
இதனால் சிவசக்திக்கும் ராணிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஊர் ஊராக சென்று புதிதாக பலருக்கு வங்கி கணக்கை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத் தன்று ராணியின் கணவர் சசிகுமார், வடக்கு மலையடி பட்டியைச் சேர்ந்த முரு கேஸ்வரி(32) ஆகியோர் சிவசக்தியை சந்தித்து ரெட்டியபட்டி கிராமத்தில் பலருக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதையடுத்து சிவசக்தி தனது காரில் 2 பேரையும் அழைத்துச் சென்றார்.
ரெட்டியபட்டி அருகே சென்றபோது 2 பேரும் சிவசக்தியிடம் கழுத்தில் நகை அணிந்து இருந்தால் கிராம மக்கள் புதிதாக வங்கி கணக்கு தொடங்க தயக்கம் காட்டுவார் கள் என கூறியுள்ளனர்.
இதையடுத்து சிவசக்தி தான் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் செயினை கழற்றி அவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது நகையுடன் சசிகுமார், முருகேஸ்வரி ஆகியோர் மாயமாகி இருந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.
- வங்கி பெண் அதிகாரியை தாக்க முயன்ற கணவன்-மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை உத்தங்குடி, அம்பலக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்த மச்சக்காளை மகள் திவ்யா (வயது 27). இவர் மதுரை தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் திவ்யா மாட்டுத்தாவணி போலீசில் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், நான் சென்னை வங்கியில் வேலை பார்த்தேன். அப்போது வளசர வாக்கத்தைச் சேர்ந்த ராம்பிரபு என்பவர் என்னி டம் தகாத முறையில் நடந்தார். இது தொடர்பாக சென்னை வடபழனி போலீசில் புகார் செய்தேன். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், நான் உத்தங்குடி பகுதியில் நடந்து சென்றேன். அப்போது அங்கு வந்த ராம்பிரபு, அவரது மனைவி மகா சூரிதா ஆகிய 2 பேரும் என்னை அவதூறாக பேசி அடிக்க பாய்ந்தனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்