என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவர் இறந்த 4 நாட்களில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கணவர் இறந்த 4 நாட்களில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

    • கணவர் இறந்த 4 நாட்களில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45). இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த 11-ந் தேதி வேல்முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கணவரின் இந்த முடிவால் செல்வி மிகவும் வேதனையடைந்ததாக தெரிகிறது. சோகத்தில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வாரத்தில் கணவன்-மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மற்றொரு தற்கொலை

    டி.கல்லுப்பட்டி ராம்முன்னி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65). மதுப்பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த பன்னீர்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பேரையூர் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனிமையில் இருந்த தங்கராஜூக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவத்தன்று அவரது மகன் மாசாணம், தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அழைப்பை ஏற்கவில்லை. உடனே வீட்டுக்கு சென்று பார்த்த போது தங்கராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×