search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weight loss"

    • முதலில் தர்பூசணி தோலை நீக்கிக்கொள்ள வேண்டும்.
    • ஜூசை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும்.

    உடல் எடையை குறைக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தர்பூசணி- அரை பழம்

    எலுமிச்சி சாறு- ஒரு ஸ்பூன்

    இஞ்சி- 1 துண்டு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் தர்பூசணி தோலை நீக்கிக்கொள்ள வேண்டும். அரை தர்பூசணி பழத்தின் விதை மற்றும் தோல்களை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு இஞ்சியின் தோலை நீக்கிக்விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இஞ்சியுடன் தர்பூசணி துண்டுகளையும் போட்டு அரைத்து எடுத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இந்த வடிகட்டிய ஜூசில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இந்த ஜூசை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறைவதில் நல்ல மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.

    • ஃபிளாக்சீட் நமது உடம்பிற்கு மிகவும் நல்லது.
    • சருமத்திற்கும், தலைமுடிக்கு மிகவும் நல்லது.

    இந்த ஃபிளாக்சீட் நமது உடம்பிற்கு மிகவும் நல்லது. சருமத்திற்கும், தலைமுடிக்கும் மிகவும் நல்லது. இதில் ஒமேகா-3 அதிகம் இருப்பதால் இடுப்பு வலி, மூட்டுவலி இதற்கெல்லாம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதேபோன்று சியா சீடிலும் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால் உடல் எடை குறைவதற்கும், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றுவதற்கும் பயன்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    ஃபிளாக் சீட்- 50 கிராம்

    சியா சீட்- 2 ஸ்பூன்

    நிலக்கடலை- 50 கிராம்

    எள்- 2 ஸ்பூன்

    பாதாம்- 20

    ஏலக்காய்- 5

    வெல்லம்- 50 கிராம்

    சுக்கு- ஒரு துண்டு

    செய்முறை:

    அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் ஃபிளாக்சீடை பொரிந்து வரும், நன்றாக மணம் வரும்வரை வறுத்து எடுக்க வேண்டும். இதனை ஒரு பிளேட்டிற்கு மாற்றிவிட்டு ஆரவிட வேண்டும். அதன்பிறகு ஷியா சீடை அதே வாணலியில் போட்டு வறுக்க வேண்டும். மீண்டும் அதே வாணலியில் 2 ஸ்பூன் எள் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் பாதாம் சேர்த்து வறுக்க வேண்டும்.

    நிலக்கடலையையும் போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். (குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    முதலில் பிளாக்சீடையும், சியா சீடையும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிவிட்டு அதே ஜாரில் நிலக்கடலையை தோல் நீக்கிவிட்டு சேர்க்க வேண்டும். அதனுடன் எள், ஏலக்காய், சுக்கு, பாதாம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பிளாக்சீட், சியாசீட் பொடியுடன் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொடித்த வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து வெல்லப்பாகு தயார் செய்துகொள்ள வேண்டும். அதனை பாகுபதத்திற்கு இல்லாமல் வெல்லம் கரைகிற அளவிற்கு காய்ச்சி அதனை வடிகடிவிட்டு இந்த வெல்லக்கரைசலை தயார் செய்து வைத்துள்ள பொடியுடன் சேர்த்து கிளற வேண்டும். இளம்சூட்டிலேயே கலந்துகொள்ள வேண்டும்.

    அதன்பிறகு இந்த கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி தயார் செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான் அருமையான வெயிட்லாஸ் லட்டு ரெடி. இந்த மாதிரி லட்டுவை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடைகுறையும், நன்றாக முடி வளரும், கண்ணுக்கும் நல்லது.

    இதில் பிளாக்சீட் இருப்பதால் கண்பார்வையும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். எலும்பு தேய்மானத்திற்கும் மிகவும் நல்லது. எலும்புகளுக்கு வலுவூட்டக்கூடியது இந்த பிளாக்சீட் லட்டு. வெயிட் லாஸ் ஃபாலோ பண்றவங்க, டயட்டில் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவரும் இந்த லட்டுவை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்சாக இந்த ஊட்டச்சத்து நிறைந்த லட்டுவை கொடுக்கலாம்.

    • உணவு பழக்கத்தை தவறாக கடைபிடிக்கிறீர்கள்.
    • சர்க்கரை மிக அதிக கலோரிகளை கொண்டது.

    இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பொதுவான ஒன்றாகி விட்டது. உடல் பருமனை குறைக்க சிறந்த வழி, சில வெள்ளை உணவுகளை ஒதுக்கி வைப்பதாகும்.

    கடுமையான உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையவில்லை என்றால், நீங்கள் உணவு பழக்கத்தை தவறாக கடைபிடிக்கிறீர்கள் என்று அர்த்தம். மிக முக்கியமாக சில வெள்ளை உணவுகளை உங்கள் டயட்டில் இருந்து முற்றிலுமாக அகற்றினால், உடல் பருமன் வேகமாக குறையும்.

    என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லை என்றால் அதற்கு தவறான உணவுப்பழக்கமே காரணம். மிக முக்கியமாக சில வெள்ளை உணவுகளை உங்கள் டயட்டில் இருந்து முற்றிலுமாக அகற்றினால், உடல் பருமன் வேகமாக குறையும்.

    மைதா ஊட்டசத்து இல்லாத காப்போஹைட்ரேட் நிறைந்த மாவு. மைதாவால் செய்யப்பட்ட உணவுகளான பரோட்டா, பிரட்டுகள் என அனைத்துமே, நார்ச்சத்து புரதம் எதுவுமே இல்லாதவை. இவை கலோரிகள் அதிகம் கொண்டவை. எனவே இதனை விலக்குவது மிக அவசியம்.

    உடல் பருமன் குறைய வேண்டும் என்றால் சர்க்கரையை விலக்காமல் சாத்தியமில்லை. சர்க்கரை மிக அதிக கலோரிகளை கொண்டது. எனவே சர்கக்ரை உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக வெல்லம் எடுத்துக் கொள்ளலாம்

    உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் உணவுப்பட்டியல்

    முதல் நாள்

    தினமும் காலை டீ, காபி, பால் போன்றவை குடிக்காமல் வெள்ளரி தண்ணீர் குடிக்க வேண்டும். காலை உணவாக ஒரு கிண்ணம் ஓட்ஸ் கஞ்சியில் பால் சேர்த்து சாப்பிடலாம். மதிய உணவாக ஒரு சிறிய கப் பருப்பு, ஏதாவது ஒரு கப் காய்கறி, ஒரு சப்பாத்தி மற்றும் ஒரு கப் சாதம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவாக ஒரு சப்பாத்தி மட்டும் சாப்பிட வேண்டும். பசி அடங்கவில்லை என்றால் பழம் அல்லது ஒரு டம்ளர் மோர் குடிக்கலாம்.

    இரண்டாவது நாள்

    காலை உணவாக 2 சோளமாவு தோசை, அரை கப் தயிர்சேர்த்து சாப்பிடுங்கள். மதிய உணவிற்கு ஒரு சிறிய கிண்ணம் அளவுக்கு பருப்பு, ஒரு சப்பாத்தி, காய்கறி ஒரு கப் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவிற்கு இரண்டு சப்பாத்தி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மூன்றாவது நாள்

    காலை உணவாக ஒரு கப் பழங்கள் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மதிய உணவிற்கு பன்னீருடன் காய்கறிகள் மட்டும் ஒரு கப் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவாக ஒன்று அல்லது 2 சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம்.

    நான்காவது நாள்

    காலை உணவாக 2 ஆம்லேட் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மதியத்திற்கு ஒரு கப் காய்கறி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவாக அரை கப் சாதம் எடுத்துக்கொள்ளலாம்.

    ஐந்தாம் நாள்

    காலை உணவிற்கு காய்கறி உப்புமா, மதியத்திற்கு காய்கறி அல்லது பன்னீரால் சேர்க்கப்பட்ட சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவிற்கு ஒரு சப்பாத்தி மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

    • குருத்துகளை பறித்து பதப்படுத்தாமல் தயாரிக்கப்படுவதே ஒயிட் டீ.
    • ஒயிட் டீ பல்வேறு மருத்துவ பண்புகள் கொண்டதாகும்.

    தேயிலை செடியில் உள்ள இலைகளின் இளம் குருத்துகளை பறித்து, அதிகமாக பதப்படுத்தாமல் தயாரிக்கப்படுவதே ஒயிட் டீ. தேயிலை செடியின் இலைகள் குருத்துகளாக இருக்கும்போது, முடிகள் போன்ற வெள்ளை நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும். அந்த பருவத்திலேயே, இந்த இலைகள் பறிக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் இதற்கு 'ஒயிட் டீ' என்ற பெயர் உண்டானது.

    ஒயிட் டீ பல்வேறு மருத்துவ பண்புகள் கொண்டதாகும். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். சருமம். இதயம் மற்றும் மூளை போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செரிமானத்தை சீராக்கும். புற்றுநோயை தடுக்கும். உடல் எடையை குறைக்க உதவும். ஒயிட் டீ தரக்கூடிய பல்வேறு நன்மைகள் இங்கே...

    சரும பாதுகாப்பு:

    ஒயிட் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் உடலில் உள்ள ஃபிரீரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது. சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற புரதங்களை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள பாலிபீனால்கள் சருமத்தின் இளமை மற்றும் மிருதுவான தன்மையை பாதுகாக்கிறது.

    ஒயிட் டீயில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க வயதான தோற்றம் உண்டாவதை தாமதப்படுத்தும். தோல் நோய்களால் சருமம் சிவப்பதையும், வீங்குவதையும் குறைக்கும். தினமும் 2 கப் ஒயிட் டீ குடுப்பதால் சருமம் சுத்தமாகும்.

    எடை குறைப்பு:

    ஒயிட் டீ, உடலில் தேங்கி இருக்கும் கெட்டக் கொழுப்பை எரிக்க உதவும். புதிய கொழுப்பு செல்கள் உருவாகுவதைத் தடுக்கும். இதில் காணப்படும் கேட்சின்கள் செரிமான செயல்முறைகளை துரிதப்படுத்தும்.

    தலைமுடியின் ஆரோக்கியம்:

    ஒயிட் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் முடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கும். பாக்டீரியாவால் ஏற்படும் உச்சந்தலை தோல் நோய்களை குணப்படுத்தும். முடி வறட்சியை தடுத்து கூந்தலுக்கு இயற்கையான பொலிவை அளிக்கும். ஒயிட் டீயில் காணப்படும் எல்-தியானைன் எனும் ரசாயனம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

    பற்கள் பாதுகாப்பு:

    ஒயிட் டீயில் பிளேவனாய்டுகள், டானின்கள் மற்றும் புளோரைடுகள் உள்ளன. இவை பற்கள் ஆரோக்கியமாகவும். வலுவாகவும் இருக்க உதவுகின்றன. பல் சிதைவு மற்றும் பிளேக் உருவாகுவதை தடுக்கின்றன. ஒயிட் டீயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றன.

    சர்க்கரை நோய் கட்டுப்பாடு:

    ஒயிட் டீயில் உள்ள கேடசின்கள் மற்றும் பிற ஆக்சிஜனேற்றிகள், டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஒயிட் டீ ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்து இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    இதய பாதுகாப்பு:

    ஒயிட் டீ இதயத்தில் ஏற்படும் ரத்த உறைவு, பக்க வாதம் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட நோய்களைத் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தைக்குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

    ஒயிட் டீ தயாரிப்பு:

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து அந்த தண்ணீரில் 2 டீஸ்பூன் ஒயிட் தேயிலை இலைகளை சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து அந்த இலைகளை வடிகட்டி ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றி குடிக்கவும். இனிப்பு சேர்க்காமல் குடிப்பது நல்லது.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம்.
    • உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    வரகு அரிசி- 50 கிராம்

    பாசிபருப்பு- 25 கிராம்

    வெந்தயம்- கால் டீஸ்பூன்

    சீரகம்- கால் டீஸ்பூன்

    சின்ன வெங்காயம்- ஒரு கப்

    பட்டை- ஒரு துண்டு

    பிரிஞ்சு இலை- 1

    பூண்டு- 4 பல்

    செய்முறை:

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் வரகு அரசி மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த இரண்டையும் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். இதில் வெந்தயம், சீரகம், சேர்த்து பொரிந்ததும் அதில் பட்டை, பிரிஞ்சு இலை, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் ஏற்கனவே களைந்து வைத்துள்ள அரிசியையும், பருப்பையும் சேர்க்க வேண்டும்.

    மேலும் கஞ்சி என்பதால் இதற்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். கஞ்சி நன்றாக வந்ததும் இதில் கொத்தமல்லி தலை, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் உடல் எடையை குறைக்கக்கூடிய வரகு அரிசி கஞ்சி தயார்.

    இந்த மாதிரி நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் கெட்ட நீரினை வெளியேற்ற உதவும். இதை உங்களது டயட்டிலும் சேர்த்துக்கொள்ளலாம். அதிகநேரம் பசிக்காது. பசியை அதிக நேரம் தாங்கும். உடல் எடையை குறைக்கவும் இந்த கஞ்சி பயன்படுகிறது.

    இதே செய்முறையில் நீங்கள் காய்கறிகளை சேர்த்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் செய்து கொடுக்கலாம்.

    • உடல் எடை அதிகரிப்பு குறித்த கவலை அனைவரிடமும் அதிகரித்துள்ளது.
    • தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

    உடல் எடை அதிகரிப்பு குறித்த கவலை அனைவரிடமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக 30 வயதை கடந்த பெண்கள் பலருக்கும் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது. உடல் எடையை குறைக்க எப்படி அனைவரும் வாக்கிங், ஜாக்கிங், யோகா போன்றவற்றை செய்யலாமோ அப்படித்தான் கிரீன் டீ குடிப்பதும்.

    கிரீன் டீ உடல் எடையை குறைக்க, கொழுப்பை கரைக்க, தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது. கிரீன் டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும், அதை குடிப்பதற்கான சரியான நேரம் குறித்தும் பார்க்கலாம்.

    நன்மைகள்

    * கிரீன் டீயில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.

    * அதே போல் கிரீன் டீ தொப்பை கொழுப்பை குறைக்கவும் கைக்கொடுக்கிறது.

    * கிரீன் டீயில் மிகக் குறைந்த அளவு காஃபின் உள்ளது. கிரீன் டீயில் கேடசின் எனப்படும் பாலிபினால் வகை உள்ளது.இந்த கேடசின்கள் ஆன்டிஆக்சிடென்ட்கள் ஆகும். இவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

    * கிரீன் டீயில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் காஃபின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கவும் மற்றும் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

    எப்போது குடிக்கலாம்?

    * எடை இழப்புக்கு கிரீன் டீ காலை உணவு எடுத்து கொண்ட பிறகு 1 மணி நேர கழித்து கிரீன் குடிக்கவும்.

    * அதேபோல் மதிய உணவுக்கு பிறகு 2 மணி நேரம் கழித்து கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 3 அல்லது 4 கப் கிரீன் டீ குடிக்கலாம்.

    * வெறும் வயிற்றிலும் கிரீன் டீயை அருந்தலாம். சாப்பிட்டு 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு கிரீன் டீ குடித்தால், அது உணவை ஜீரணிக்க உதவும்.

    • பொதுவாக உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.
    • முறையான உடற்பயிற்சியின் மூலமே இதனை குறைக்க முடியும்.

    பொதுவாக உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஒருதடவை உடல் எடை அதிகரித்துவிட்டால் அதனை குறைப்பது கடினம் தான். அப்படி முழு உடல் எடையை குறைப்பதே அவ்வளவு கடினம் என்றால் உடலில் உள்ள ஒரு பாகத்தின் எடையை குறைப்பது என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல.

    முறையான உடற்பயிற்சியின் மூலமே இதனை குறைக்க முடியும். ஒரு பயிற்சியை செய்வதற்கு முன்பு நாம் அதனை கடைசிவரைக்கும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் நாளாக நாளாக நமக்கு ஒரு சோம்பேறித்தனம் வந்திடுகிறது. இதனால் அது நமக்கு கைகொடுக்க முடியாமல் போய்விடுகிறது.

    இந்த தொடை சதை என்பது நம் உடலில் உள்ள ஒரு பகுதிதான். இதில் சிலருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். அதாவது குடும்ப அமைப்பாகவோ கூட இருக்கலாம். இது ஒன்றுடன் ஒன்று உரசுவதால் அவர்கள் நடப்பதற்கே மிகவும் பயப்படுவார்கள். அதனால் அதை குறைப்பதற்கு முதலில் என்ன வழி என்றால் உணவு முறைதான் இதற்கு சிறந்த தீர்வு. உணவுமுறைகளால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும்.

    முறையான உணவு பழக்கவழக்கங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். காரம் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வறுத்தது, பொறித்தது, மசாலா பொருட்கள் ஆகியவற்றை தவிர்த்துவிட வேண்டும். அதிகமாக காய்கறிகள், கீரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு முக்கியமான விஷயம் என்னவென்றால் உடற்பயிற்சிகள் தான். இந்த தொடை தசைகள் மிகவும் பெரியதாக இருக்கிறது என்றால் அதற்கென்று கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு ஸ்கிப்பிங், சைக்கிளிங் ஆகியவற்றின் மூலம் இந்த தசைகளை குறைக்க முடியும்.

    தசைகளை இறுகச்செய்யக்கூடிய யோகாசனங்களான படுத்துக்கொண்டே சைக்கிளிங் செய்வது, பட்டர்பிளை எக்சசைஸ். இதில் பட்டர்பிளை எக்சசைஸ் தொடையில் உள்ள தசைகளை இறுகச்செய்வதற்கு மிகவும் ஏற்றது. அல்லது சூரிய நமஸ்காரம் செய்யலாம். அல்லது இதற்கென்றே பிரத்தியேகமாக இருக்கக்கூடிய உடற்பயிற்சி என்னவென்றால் ஸ்குவாட். இந்த ஸ்குவாடை முறைப்படி செய்து வந்தால் நிச்சயமாக தசைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

    ஒரு சேரில் கையை நீட்டி அமர்ந்து இருப்பதுபோல் சேரே இல்லாமல் அமர்ந்த நிலையில் கைகளை நீட்டி அமர்ந்து இருப்பது ஸ்குவாட். இந்த பயிற்சியை ஆரம்பத்தில் எடுப்பது கடினமாக தான் இருக்கும். ஆரம்பத்தில் கால்கள் மிகவும் வலியாக இருக்கும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்ய வேண்டும். இதுபோன்ற உடற்பயிற்சிகளின் மூலம் இந்த தொடை தசைகளை குறைக்க முடியும். நல்ல சாப்பாடு, நல்ல உடற்பயிற்சியும் தான் தொடையில் உள்ள தசையினை குறைக்க ஒரே வழி.

    • துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும்.
    • கருப்பை சுத்தமாகி புத்திர பாக்கியம் கிட்டும்.

    மூலவியாதியை விரட்டும்

    துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும். இதை செய்யும் முறை மிகவும் எளிதானது. சித்த மருத்துவ கடைகளிலும், துளசி தோட்டங்களிலும் துளசி விதை தாராளமாக கிடைக்கும். இதில் ஒரு பங்கு எடுத்துக் கொண்டு அந்த அளவில் மூன்று மடங்கு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு (மண் சட்டி என்றால் மிகவும் நல்லது) கால் படி தண்ணீர் ஊற்றி, ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்தால் பாயாசம் போல் இருக்கும். இதை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு நோய் சரியாகும். மூல வியாதி உள்ளவர்களுக்கு இது ஒரு கண்கண்ட மருந்து. இந்த பாயாசத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

    உடல் பருமன் குறைக்கும் துளசி

    துளசி இலை சாறை சூடாக்கி எட்டில் ஒரு பங்கு தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். இதனை ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். பெண்கள் மாதவிடாயின் போது துளசி விதைகளை ஒரு ஸ்பூன் நீருடன் அரைத்து அந்த மூன்று நாட்கள் உட்கொண்டால் கருப்பை சுத்தமாகி புத்திர பாக்கியம் கிட்டும்.

    சிறுநீரகக்கற்கள் நீங்கும்

    துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் படிப்படியாக கரையும். இவ் வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷ நீர் கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

    பெண்களுக்கு...

    துளசி இலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக் கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறிய பின் பத்திரப் படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக் கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந் தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (ரத்தப் போக்கு) குணமாகும்.

    • அதிகப்படியான உடல் எடையும் கொழுப்பும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    • இந்த பயிற்சிகளை தினமும் இரண்டு முறை முயற்சி செய்யலாம்.

    அடிவயிறு மற்றும் உடலின் பிற பகுதிகளில் கொழுப்பு சேர தொடங்கும் போது பல வாழ்க்கை முறை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. நீர்கட்டி, தைராய்டு, ஹார்மோன் சமநிலையின்மை, மாதவிடாய் நிறுத்தம், அசிடிட்டி போன்ற பல காரணங்களால் உடல் எடை அதிகரிக்கலாம்.

    அதிகப்படியான உடல் எடையும் கொழுப்பும் உடலுக்கு நிச்சயமாக தீங்கு விளைவிக்கும். இந்நிலையில் இதை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை செய்ய வேண்டும். இதற்கு உணவில் அதிக கட்டுப்பாடுகள் விதித்து பல மணி நேரங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு சில எளிமையான யோகா பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் உடல் எடையை கணிசமாக குறைக்க முடியும். இந்த பயிற்சிகளை தினமும் இரண்டு முறை பயிற்சி செய்ய முயற்சி செய்யலாம்.

    புஜங்காசனம்

    * முதலில் குப்புற படுத்துக் கொள்ளவும். பின் உங்கள் கால்களை நேராக இணைத்து வைக்கவும்.

    * உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இருபுறமும் வைத்துக் கொள்ளவும்.

    * இப்போது மூச்சை உள்ளிழுத்தவாரே தலை, மார்பு மற்றும் கழுத்து பகுதியை மேலே உயர்த்தி பின்னோக்கி வளைக்க வேண்டும்.

    * 10 வினாடிகளுக்கு இந்த நிலையில் இருக்கவும் பின்பு இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

    ஷலபாசனம்

    * குப்புற படுத்து, உங்கள் கைகளை திறந்து உடலுக்கு அருகில் வைக்கவும்

    * கன்னத்தை முன்னோக்கி சாய்த்து தரையை தொடவும்.

    * கண்களை மூடிக்கொண்டு, உங்களால் முடிந்தவரை கால்களை மட்டும் மேல் நோக்கி தூக்க முயற்சி செய்யவும்.

    * 10 வினாடிகள் வரை இந்த நிலையில் இருக்கவும். பின்பு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

    வசிஷ்டாசனம்

    * இந்த யோகாவை செய்வதற்கு முதலில் பிளாங்க் பயிற்சியின் நிலையில் தொடங்கவும்.

    * உங்களுடைய இடது உள்ளங்கையை தரையில் ஊன்றியபடி, வலது கையை தரையில் இருந்து உயர்த்தவும்.

    * இப்போது முழு உடலையும் வலது பக்கம் திருப்பவும். பின்னர் தரையில் இருக்கும் வலது காலை தூக்கி இடது காலின் மீது வைக்கவும்.

    * வலது கையை வானத்தை நோக்கி மேலே உயர்த்தி விரல்களை நீட்டவும்.

    * உங்களுடைய குதிகால் முழங்கால்கள் மற்றும் பாதங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.

    * மேலும் இரு கைகளும் தோள்களும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.

    * இப்போது தலையை திருப்பி வலது கையை பார்க்கவும்.

    * சிறிது நேரம் இதேநிலையில் இருக்கவும் பின்பு இதே முறையை பின்பற்றி இடது பக்கத்திலும் பயிற்சி செய்யவும்.

    பாலாசனம்

    * இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் முட்டிப்போட்டு உட்காரவும்.

    * பிறகு மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும்.

    * இப்போது மூச்சை வெளியிடும் பொழுது, மேல் உடலை முன்னோக்கி வளைக்கவும்.

    * இடுப்பை கணுக்கால்கள் மீது வைத்து உட்காரவும். இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் நெற்றி தரையை தொட வேண்டும்.

    * இந்த நிலையில் செய்யும் பொழுது பின்புறம் வளைந்து இருக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    * சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பவும்.

    • உடற்பயிற்சிக்கு முன்பு வயிறுநிறைய சாப்பிடக்கூடாது.
    • டீ, காபி குடிப்பது உடலின் நீர்ச்சத்து அளவை குறைக்கச் செய்யும்.

    உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் செய்த பின்னரும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவை பொருத்து, அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். அதோடு உடற்பயிற்சி செய்வதற்கான தசைவலிமையை அந்த உணவுகளின் மூலம் தான் கிடைக்கும். அதனால் என்ன மாதிரியான உணவுமுறை உடற்பயிற்சிக்கு முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

    எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறோம், என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்கிறோம் என்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல அதற்கு முன்னும் பின்னும் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

    காலையில் வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வது, பெட்ரோல் இல்லாமல் காரை ஓட்ட முயற்சி செய்வது போன்றது. நம்முடைய உடலுக்கு உடற்பயிற்சி செய்யும்போது அதிக எனர்ஜி தேவைப்படும். அதனால் கட்டாயமாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

    உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான சக்தி இல்லாமல் போனால் உடலில் இருக்கும் நம்முடைய இயக்கத்துக்கு தேவையான ஆற்றலை உடற்பயிற்சியே உறிஞ்ச ஆரம்பிக்கும். எனவே வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படும். அது பயிற்சிக்குப் பின்பு அதிக சோர்வை உண்டாக்கும்.

    காலையில் டீ அல்லது காபி குடிப்பது உங்களை புத்துணர்ச்சியாக வைக்க உதவும். ஆனால் அதேசமயம் அது உங்களுடைய உடலின் ஆற்றலை குறைக்கவும் செய்யும்.

    டீ, காபி குடிப்பது உடலின் நீர்ச்சத்து அளவை குறைக்கச் செய்யும். குறிப்பாக உடற்பயிற்சிக்குப் பின்பு டீ, காபி எடுத்துக்கொள்வது மேலும் அதிக நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். அதனால் உடற்பயிற்சியின் போதும், அதற்குப் பின்பும் உங்கள் உடலும் தசைகளும் அதிகமாக சோர்வடைந்துவிடும்.

    உடற்பயிற்சிக்கு முன்பு வயிறுநிறைய சாப்பிடக்கூடாது. அதற்காக எதுவும் சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. குறைவாக சாப்பிட வேண்டும். ஆனால் ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

    காலையில் நாம் தேர்ந்தெடுக்கும் ஆரோக்கியமான உணவு தான் தசை வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும். அதனால் அதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இது உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் தசைப்பிடிப்பு போன்றவற்றையும் தவிர்க்க உதவும்.

    சிலர் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வார்கள். சிலர் மாலை நேரங்களில் செய்வார். எந்த நேரமாக இருந்தாலும் உடற்பயிற்சிக்கு முன்பு மிகக் குறைவாகவும் அதேசமயம் ஆரோக்கியமான உணவையும் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது தான் கலோரிகள் எரிக்கப்படுமே அதனால் நிறைய சாப்பிட்டால் தவறில்லை என்று நினைக்கக் கூடாது. உடற்பயிற்சிக்கு முன் நிறைய சாப்பிட்டால் உடற்பயிற்சி செய்யும்போது கொஞ்சம் கடினமாகவும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படும்.

    உடற்பயிற்சியை தொடங்குவதற்கு 10 - 15 நிமிடங்களுக்கு முன்பு ஏதாவது பழங்கள் அல்லது ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடுங்கள். பயிற்சிக்குச் செல்லும் முன்பாக கொஞ்சமாக டிபன் அல்லது ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட நேர்ந்தால் உடனே பயிற்சி செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து செய்வது தான் நல்லது. ஒருவேளை நிறைய சாப்பிட்டு விட்டால் குறைந்தது அந்த உணவு ஜீரணிக்கும் வரை 90 நிமிடங்கள் பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

    உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு முன்பு என்ன சாப்பிட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல தான் உடற்பயிற்சிக்குப் பிறகு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவும் மிக முக்கியம். அதையும் கட்டாயம் திட்டமிட வேண்டும்.

    உடற்பயிற்சிக்குப் பின் அதிக புரதங்கள் கொண்ட உணவுகளையும் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் நிறைந்தெ உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொள்ளும்போது உடற்பயிற்சி சமயத்தில் இழந்த உடல் மற்றும் தசையின் வலிமையைக் கூட்டி புத்துணர்ச்சியையும் எனர்ஜியையும் தரும்.

    குறிப்பாக, உடற்பயிற்சி செய்து முடித்த 30 நிமிடங்களுக்குள் கட்டாயம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வலிமையான தசைகள் உண்டாகும்.

    • எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
    • நட்ஸ் பசி உணர்வை கட்டுப்படுத்த உதவுகின்றன

    தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த 4 நட்ஸ் வகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து பயன்பெறுங்கள்

    ஆரோக்கியமான முறையில் தொப்பையை குறைப்பதற்கான வழியை தேடுகிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் சிறந்ததாக இருக்கும்.

    உடல் எடையை குறைக்க பல வழிகள் இருக்கலாம், உணவு கட்டுப்பாடு முதல் கடுமையான உடற்பயிற்சி வரை எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை செய்து வருகின்றனர். இதற்கு கடின உழைப்பும், பொறுமையும், விடா முயற்சியும் அவசியம். எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டு ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை தங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நட்ஸ் வகைகள் சரியான தேர்வாக இருக்கும். இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. நீங்கள் இதுவரை டயட்டில் நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், இதற்கான முயற்சியை இன்றே தொடங்கலாம். இதற்கு உதவக்கூடிய நான்கு நட்ஸ் வகைகளை இன்றைய பதிவில் காணலாம்.

    பாதாம்

    பாதாம் ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். இருதய ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் எடை இழப்பு வரை பாதாமில் நன்மை பயக்கக்கூடிய சத்துக்கள் ஏராளமாக உள்ளன. நார்ச்சத்து மற்றும் புரதம் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

    புரதம் நிறைந்த பாதாம் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இதை சரியான அளவுகளில் எடுத்துக்கொண்டால் உடல் எடை நிச்சயமாக குறையும். சிறந்த பலன்களைப் பெற பாதாமை ஊற வைத்து சாப்பிடலாம்.

    பிரேசில் நட்ஸ்

    இதில் தாவர அடிப்படையிலான புரதம் நிறைந்துள்ளது. விடாப்படியான தொப்பை கொழுப்பை குறைக்க இது உதவும். மேலும் பிரேசில் நட்சில் குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளது. இதை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

    எடை இழப்புக்கு உதவக்கூடிய நார்ச்சத்தும், புரதமும் பிரேசில் நட்ஸ்களில் அதிகமாக உள்ளன. மேலும் இதில் உள்ள செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகின்றன.

    அக்ரூட் பருப்பு

    இதில் உள்ள நல்ல கொழுப்பு இதய ஆரோக்கியத்திற்கும் எடை இழப்புக்கும் நன்மை பயக்கின்றன. இவை பசி உணர்வை கட்டுப்படுத்த உதவுகின்றன.

    அக்ரூட் பருப்புகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புரதம், வைட்டமின் `ஏ', `டி' மெக்னீசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடல் எடையை குறைக்கின்றன. இதில் உள்ள சத்துக்கள் இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் மற்றும் வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கவும் உதவுகின்றன.

    பிஸ்தா

    சுவை நிறைந்த இந்த பிஸ்தா பருப்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை தினமும் சாப்பிட்டு வர தொப்பை மற்றும் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். இதில் உள்ள புரதம் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதன் மூலம் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தை குறைக்கவும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகின்றன.

    இதில் அதிக அளவு கலோரி இருந்தாலும், நல்ல கொழுப்புகள் உள்ள இந்த நட்ஸ்களை சரியான அளவுகளில் தினமும் சாப்பிட்டு வந்தால் எடையை குறைக்கலாம்.

    தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் கலவைகளை எடுத்துக்கொள்ளலாம். இதனுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை செய்தால் எடை நிச்சயம் குறையும்.

    உணவு உண்ணும் நேரத்துக்கும், உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உணவு உண்ணும் நேரத்துக்கும், உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ஒரு நாளின் தொடக்கத்தில் அதிகமான கலோரிகளை எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது என்று இன்னும் பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

    உடல் எடையைக் குறைக்க விரும்பும், அதற்காக முயற்சிக்கும் பெண்கள், மதிய உணவை முன்னதாக எடுத்துக்கொள்ளும்போது அதிக எடையை இழக்கிறார்கள். ஆனால், அதேநேரம் காலை உணவைத் தள்ளிப்போடும் பெண்களுக்கு உடல் நிறை குறியீடு மோசமாக இருக்கிறது. அதாவது, உடல் உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பதில்லை என்கிறது ஓர் ஆய்வு.

    லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் விரிவுரையாளர் கெர்டா ஒரு பழமொழியை மேற்கோள் காட்டுகிறார், ‘‘காலை உணவை அரசனைப் போல உண்ணுங்கள், மதிய உணவை இளவரசனைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் உண்ணுங்கள் என்கிறது ஒரு பழமொழி. இதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன்’’ என்கிறார் அவர்.

    நாம் என்ன உண்கிறோம் என்பதைவிட, எப்போது உண்கிறோம் என்பது மிக முக்கியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



    சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜோனாதன் ஜான்ஸ்டன், உணவு உண்ணும் நேரத்தைத் தள்ளிப் போடுவது உடல் இயக்கத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும் என்கிறார்.

    பத்து ஆண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், உணவு உண்ணும் நேரத்தை ஐந்து மணி நேரம் தள்ளிப்போடுவது, அவர்களின் உடல் கடிகாரத்தின் உயிரியல் குறியீட்டை தெளிவாக மாற்றியதை ஜோனாதன் கண்டறிந்தார்.

    உணவு உண்பது குறித்து மக்களிடம் பல கேள்விகள் உள்ளன. அந்த கேள்விகளில் முதன்மையானது, எப்போது உண்ண வேண்டும்? எப்போது உண்ணக் கூடாது? என்பதுதன்.

    இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் பேராசிரியர் அலெக்சாண்ட்ரா ஜான்ஸ்டன், உணவு உண்ணும் நேரத்தை முன்னதாக மாற்றுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்கிறார். ஆனால், எதனால் இது ஏற்படுகிறது, எப்போது உண்ணுவது நலம் என்பது போன்ற கேள்விகளுக்கு இனி வரும் ஆய்வுகள்தான் தெளிவான விடை தரும் என்று சொல்கிறார்.
    ×