search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பப்பை சுத்தமாகும்"

    • துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும்.
    • கருப்பை சுத்தமாகி புத்திர பாக்கியம் கிட்டும்.

    மூலவியாதியை விரட்டும்

    துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும். இதை செய்யும் முறை மிகவும் எளிதானது. சித்த மருத்துவ கடைகளிலும், துளசி தோட்டங்களிலும் துளசி விதை தாராளமாக கிடைக்கும். இதில் ஒரு பங்கு எடுத்துக் கொண்டு அந்த அளவில் மூன்று மடங்கு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு (மண் சட்டி என்றால் மிகவும் நல்லது) கால் படி தண்ணீர் ஊற்றி, ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்தால் பாயாசம் போல் இருக்கும். இதை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு நோய் சரியாகும். மூல வியாதி உள்ளவர்களுக்கு இது ஒரு கண்கண்ட மருந்து. இந்த பாயாசத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

    உடல் பருமன் குறைக்கும் துளசி

    துளசி இலை சாறை சூடாக்கி எட்டில் ஒரு பங்கு தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். இதனை ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். பெண்கள் மாதவிடாயின் போது துளசி விதைகளை ஒரு ஸ்பூன் நீருடன் அரைத்து அந்த மூன்று நாட்கள் உட்கொண்டால் கருப்பை சுத்தமாகி புத்திர பாக்கியம் கிட்டும்.

    சிறுநீரகக்கற்கள் நீங்கும்

    துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் படிப்படியாக கரையும். இவ் வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷ நீர் கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

    பெண்களுக்கு...

    துளசி இலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக் கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறிய பின் பத்திரப் படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக் கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந் தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (ரத்தப் போக்கு) குணமாகும்.

    ×