search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weight loss"

    • உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஊட்டம்தரும்.
    • உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவு.

    தினையில் உள்ள மாவுச்சத்து, குழந்தைகள் மற்றும் அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. தினையில் புரதச்சத்து அதிகம் உள்ளதால், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவு. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஊட்டம்தரும் தினை பருத்தி பால் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    தினை அரிசி மாவு- 50 கிராம்

    பருத்தி விதை- 200 கிராம்

    கருப்பட்டி- 150 கிராம்

    உப்பு- 1 சிட்டிகை

    ஏலக்காய்தூள்- சிறிது

    சுக்குத் தூள்- சிறிது

    செய்முறை:

    சுத்தமான பருத்தி விதையை 10 முதல் 12 மணி நேரம் ஊறவைத்து நன்றாக அலச வேண்டும். அதில் உள்ள பஞ்சுகள் அனைத்தும் நீங்கும் அளவிற்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அதனை அரைத்து பால் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும் இரண்டு, மூன்று முறை பால் எடுக்க வேண்டும்.

    கருப்பட்டியை நீரில் கரைத்து வடிக்கட்டி கொதிக்க வைக்க வேண்டும் இதனுடன் பருத்திப் பாலை சேர்த்து கொதித்து வந்ததும், தினை அரிசிமாவை கரைத்து அதில் ஊற்ற வேண்டும். தீயை குறைத்து வைத்து நிதானமாக கைவிடாமல் 3 நிமிடம் கிளற வேண்டும்.

    இப்போது ஏலக்காய் தூள், சுக்குத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தூவி இறக்கவும். இப்போது தினை பருத்திப்பால் தயார். காலையில், மாலையில் உடற்பயிற்சி செய்வதற்கு அரை மணிநேரம் முன்பாக இந்த திணை பருத்திப்பாலை அருந்திவர ஊட்டச்சத்து உடலில் சேரும். சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

    • மசாலா பொருட்களின் ராணி என ஏலக்காய் அழைக்கப்படுகிறது.
    • ஏலக்காய் விதைகளில் அதிக அளவிலான நார்ச்சத்து உள்ளது.

    மசாலா பொருட்களின் ராணி என ஏலக்காய் அழைக்கப்படுகிறது. நறுமண பொருளான ஏலக்காய், பிரியாணி போன்ற உணவு வகைகளை சமைக்கும் போதும், தேநீர் தயாரிக்கும் போதும் அதன் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்தியர்கள் ஏலக்காயை கறிகள், ரொட்டி, அரிசி, தேநீர் போன்ற பலவகையான உணவுப்பொருட்களுடனும் கலந்து பயன்படுத்துகின்றனர்.

    இந்தியர்களின் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி என்பது வெறும் மசாலா பொருட்களை சேமித்து வைக்க பயன்படுவது மட்டும் கிடையாது. அதில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமும், மருத்துவ குணங்களும் உள்ளதை நாம் நன்கு அறிவோம். அதேபோல் ஏலக்காய் என்பது வெறும் மணம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படும் மசாலா பொருள் மட்டும் கிடையாது.

    ஏனெனில் அதன் இயற்கையான கூறுகள் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகின்றன. ஏலக்காயில் மறைந்திருக்கும் 5 முக்கியமான ஆரோக்கிய பண்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்…

    செரிமானத்தை மேம்படுத்தும்:

    ஏலக்காய் விதைகளில் அதிக அளவிலான நார்ச்சத்து உள்ளது. அது செரிமான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. ஏலக்காய் விதைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலமாக மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகளை தடுக்கலாம். சமையலில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் உணவை குடல் வழியாக விரைவாக கொண்டு செல்ல உதவுகிறது.

    ரத்த அழுத்தத்தை சீராக்கும்:

    ஏலக்காயில் ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் டையூரிடிக் குணங்கள் உள்ளதால் அது, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த அளவை சமமாக பராமரிக்க உதவுகிறது. ஏலக்காய் சாற்றில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது, இது ரத்த நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கிறது.

    வாய் துர்நாற்றத்தை போக்கும்:

    ஏலக்காய் பல நூற்றாண்டுகளாக வாய் துர்நாற்றத்தை போக்கவும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நன்றாக விருந்து சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்ட பிறகு வாயில் ஒரு ஏலக்காயை போட்டு மென்று சாப்பிட்டால், அவை வலுவான பூண்டு அல்லது வெங்காய வாசனையை கூட அகற்ற உதவுகின்றன. ஏனென்றால் ஏலாக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தை அகற்ற உதவுகின்றன.

    மனச்சோர்வை சமாளிக்க உதவும்:

    ஏலக்காயில் நிறைந்துள்ள மணம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நன்மையை தருகிறது. மனச்சோர்வாக இருக்கும் போது ஏலக்காய் கலந்த ஒரு கோப்பை தேநீர் உங்களுடைய மனநிலையையே முற்றிலும் மாற்றுவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். அதன் சுவை மற்றும் வாசனை உணர்வுகளை தளர்த்த உதவுகிறது.

     உடல் எடையை குறைக்க உதவும்:

    வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பை விரைவாக எரிக்க ஏலக்காய் உதவுகிறது. வயிற்றுப் பகுதியில் உள்ள அதிக கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் தண்ணீரை தக்கவைப்பது போன்ற விஷயங்களுக்கு உதவுவதால், ஏலக்காய் ஒரு முக்கிய எடை இழப்பு மசாலா பொருளாக விளங்குகிறது.

    வழக்கமான உணவில் ஏலக்காயை பயன்படுத்துவது எப்படி?

    1. கொதிக்கும் நீரில் சில திறந்த ஏலக்காய்களை சேர்க்கலாம்.

    2. உணவுக்கு பிறகு வாய் புத்துணர்ச்சியாக்க ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடலாம்.

    3. நிம்மதியான இரவு உறக்கத்திற்கு, படுக்கைக்கு செல்லும் முன்பு பாலில் ஒரு சிட்டிகை ஏலக்காயை மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து அருந்தலாம்.

    4. கறிகள் மற்றும் அல்வா மற்றும் கீர் போன்ற இனிப்பு வகைகளில் சேர்க்கலாம்.

    • வாழைப்பழத்தில் பொட்டாசியம், மாங்கனீசு சத்துக்கள நிறைந்துள்ளன.
    • மாம்பழத்தில் உள்ள என்ஸைம்கள் செரிமான அமைப்பை பாதிக்கக்கூடும்.

     வாழைப்பழத்தில் பொட்டாசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள நிறைந்துள்ளன. எனவே வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் நலம் பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

     அதேபோல் மாம்பழம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக்கூடாது. ஏனென்றால் மாம்பழத்தில் உள்ள என்ஸைம்கள் செரிமான அமைப்பை பாதிக்கக்கூடும்.

     பப்பாளிப் பழத்தில் பாப்பைன் (papain) என்ற என்ஸைம் உள்ளது. எனவே பப்பாளி பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் வயிறு மந்தமாகுவதோடு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்திவிடும். எனவே பப்பாளி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது.

     அன்னாசி பழத்தில் ப்ரோமிலைன் (Bromelain) என்ற என்சைம் உள்ளது. எனவே அன்னாசி பழத்தை சப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. அன்னாசி பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும் போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

     ஆரஞ்சு பழத்தில் அதிகமான அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. எனவே ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதனால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

     ஆப்பிளில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே ஆப்பிளை சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதனால் வயிற்றில் வீக்கம் உண்டாவதோடு மந்தமான உணர்வு ஏற்படும்.

    • உடல் எடை குறைப்பு இன்ஃப்ளுயன்சராக பெரும் புகழ் அடைந்தார், மிலா
    • மிலா, எடை குறைப்புக்கு முன்னரும் பின்னரும் இருந்த நிலையை படங்களாக பதிவிட்டார்

    சமூக வலைதளங்களின் வழியாக பல்வேறு விஷயங்களை குறித்து தங்கள் கருத்துகளை கூறி, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் "இன்ஃப்ளுயன்சர்கள்".

    முக அழகு மற்றும் உடல் தோற்றத்தை மேம்படுத்தும் குறிப்புகளுடன் வெற்றிகரமான இன்ஃப்ளுயன்சராக திகழ்ந்தவர், அமெரிக்காவை சேர்ந்த 35 வயதான மிலா டி ஜெசுஸ் (Mila de Jesus).

    தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பிறந்த மிலா, அமெரிக்க மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநில பாஸ்டன் நகரில் வசித்து வந்தார்.

    அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வந்த மிலா, சுமார் 6 வருடங்களுக்கு முன் எடை குறைப்பிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து, அவரது உடல் மெலிவடைந்து அவர் விரும்பிய உடல் அமைப்பை பெற்றார்.

    மிலா, உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் தனது உடல் இருந்த நிலையை புகைப்படங்களாக வெளியிட்டார்.

    தனது சமூக வலைதள பக்கங்களில் இது குறித்து விரிவாக பதிவிட்ட மிலாவை பல்லாயிரக்கணக்கான பயனர்கள் பின் தொடர்ந்தனர்.

    இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் சுமார் 60 ஆயிரம் பேரும், யூடியூப் வலைதளத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களும் மிலாவை பின் தொடர்ந்தனர்.

    மேலும், மிலா பல அழகு குறிப்புகளை தொடர்ந்து பதிவுகளாக வெளியிட்டு வந்தார்.

    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று மிலா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

    தனது முந்தைய திருமண வாழ்க்கையின் மூலம் 4 குழந்தைகளுக்கு தாய் ஆன மிலா, 4 மாதங்களுக்கு முன் மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிலாவின் திடீர் மாரடைப்புக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

    • புரதச்சத்து குறைபாடு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
    • வே புரோட்டீன் சாப்பிட பயப்படுகிறார்கள்.

    உணவில் புரதச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் அது பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தசைகளின் அடர்த்தி குறையும். எடையைக் குறைப்பது கடினமாகும்.

    புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கி பயன்படுத்தவும் முடிவதில்லை.

    உணவில் புரதச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் அது பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தசைகளின் அடர்த்தி குறையும். எடையைக் குறைப்பது கடினமாகும். வே புரோட்டீன் சாப்பிட பயப்படுகிறவர்கள், வீட்டிலேயே புரோட்டீன் பவுடர் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

    வீட்டிலேயே நீங்கள்தான் தயாரிக்கப்போகிறீர்கள் என்பதால் அதில் செயற்கையான பொருள்களையோ, கெமிக்கலையோ சேர்க்கப்போவதில்லை. அதை செய்வதும் ரொம்பவே சிம்பிள். பட்ஜெட்டும் கம்மி.

     ஹோம் மேடு புரோட்டீன் பவுடர் தயாரிக்க வால்நட்ஸ், பாதாம், பூசணிவிதை, சூரியகாந்தி விதை, பொட்டுக்கடலை மற்றும் சியா சீட்ஸ் ஆகிய அனைத்திலும் தலா 60 கிராம் எடுத்துக்கொள்ளவும். ஒவ்வொன்றையும் வெறும் கடாயில் குறைந்த தணலில் வைத்து வறுத்தெடுக்கவும்.

     வறுத்த பொருட்களை ஒன்றாகக் கலந்து ஆறவைத்து மிக்சியில் நைசாகப் பொடித்துக்கொள்ளவும். இந்த பொடியில் 4 டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கவும். வொர்க் அவுட்டுக்குப் பிறகு, இதை குடிப்பது உங்கள் உடலுக்கான ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யும்.


    தினமும் குடித்து வந்தால் புரதச்சத்துக் குறைபாடும் நீங்கும். எடையைக் குறைப்பதும் எளிதாகும். எனவே வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தி பாருங்கள். உடல் எடையை எளிதாக குறைத்துவிட முடியும்.

    • புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
    • டீ அருந்தினால் தான் உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

    காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை அருந்துங்கள். அதில் சர்க்கரையை சேர்த்துக்கொள்ள கூடாது. காபி அல்லது டீ போன்ற காலைநேர குடிநீர் எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

    காலை உணவை அரசனைப்போல் உண்ண வேண்டும். புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த ஓட்ஸ் மற்றும் முட்டை, பழங்கள் உண்ணலாம்.

    உப்புமா, சிறுபருப்பு தோசை, எண்னெய் சேர்க்காத ரொட்டி, ஆம்லெட், பனீர் போன்றவற்றை தொட்டுக்கொள்ளலாம்.

    மதியம் நிச்சயமாக உங்களுக்கு அளவுகடந்த பசி எடுக்கலாம். அப்போது ஒரு பவுல் நிறைய பழங்கள் அல்லது காய்கறிகள் நிறைந்த சாலட் வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

     கார்போஹைட்ரேட் நிறைந்த சிகப்பு அரிசி, முட்டை, வேகவைத்த சிக்கன் என புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

    எண்ணெய் சேர்க்காத கோதுமை ரொட்டி மற்றும் பருப்பு குழம்பு போன்றவற்றையும் உண்ணலாம்.

    மாலையில் ஒரு கப் காபி அல்லது டீ அருந்தினால் தான் உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இருப்பினும் எண்ணெயில் வறுத்த சமோசா, பஜ்ஜி என உண்பதை தவிர்த்துவிடுங்கள். அதற்கு பதில் ஆப்பிள், நட்ஸ் வகைகள், வேகவைத்த கடலைகள் போன்றவற்றை உண்ணலாம்.

    இரவு உணவிற்கு என தனியாக சமைக்க வேண்டாம். மதியம் என்ன உணவு சாப்பிட்டீர்களோ அதையே இரவும் சாப்பிடலாம். தூங்குவதற்கு முன்பு பசி இருந்தால் சூடாக ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்.

    இந்த டயட்டை நீங்கள் தினமும் பின்பற்றினால் போதும் உங்களது கண்களை நீங்களே நம்ப முடியாத அளவுக்கு உடல் எடையில் நிச்சயம் நல்ல மாற்றம் இருக்கும்.

    • தற்போது பிரபலமாக இருக்கும் சிகிச்சை முறைதான் ஐஸ் தெரபி.
    • ஐஸ் கட்டியை தேய்க்கும்போது சருமத்தில் உள்ள திசுக்கள் சுருங்க ஆரம்பிக்கும்.

    உடலில் ஆங்காங்கே படிந்து இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை குறைப்பதன் மூலம், உடல் எடையை விரைவாக குறைக்க முடியும். இதற்கு உதவும் வகையில் தற்போது பிரபலமாக இருக்கும் சிகிச்சை முறைதான் ஐஸ் தெரபி.

    உடலில் கொழுப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு மென்மையாக தேய்த்து மசாஜ் செய்யும்போது படிப்படியாக கொழுப்பு குறையும்.

     ஐஸ் கட்டியை தேய்க்கும்போது சருமத்தில் உள்ள திசுக்கள் சுருங்க ஆரம்பிக்கும். இதன் மூலம் அங்கே படிந்திருக்கும் கொழுப்பு கரையும். அதுமட்டு மில்லாமல் அறுவை சிகிச்சை மூலம் உண்டாகும் தழும்பு களையும், ஸ்டிரெட்ச் மார்க்குகளையும் இந்த முறையின் மூலம் குறைக்க முடியும்.

     கைகள், தொடைகள், வயிறு போன்ற பகுதிகளில்தான் கொழுப்பு அதிக அளவில் படிந்து இருக்கும். இதனால், அந்த பகுதிகளில் சதை தொங்கத் தொடங்கும். அத்தகைய இடங்களில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும் அரை மணி நேரம் வரை மசாஜ் செய்து வரலாம். இதன் மூலம் சருமத்திசுக்கள் இறுக்கம் அடைந்து உறுதியாகும்.

    ஐஸ் தெரபியோடு, ஊட்டச்சத்து நிறைந்த சரியான உணவுமுறை மற்றும் மிதமான உடற்பயிற்சி களையும் பின்பற்றி வந்தால் முழு பலனையும் அடைய முடியும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும். கீரைகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். சர்க்கரை, இனிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    ஐஸ் தெரபி செய்யும் முறை:

    தற்போது சந்தைகளில், இதற்காக பல்வேறு வகையான மூலிகைகள் அடங்கிய ஐஸ் பேக்குகள் கிடைக்கின்றன. வீட்டில் தயாரிப்பதாக இருந்தால் ரோஸ்மேரி இலைகள், கிரீன் டீ பேக்குகள் 12 ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆற வைக்க வேண்டும். இதை ஐஸ் டிரேயில் ஊற்றி பிரீசரில் வைக்க வேண்டும். இந்த ஐஸ் கட்டிகளை உடலில் கொழுப்பு அதிகம் உள்ள இடங்களில் தேய்த்து வரலாம்.

    ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தின் மீது தடவக்கூடாது. அதை பருத்தி துணியில் சுற்றி பயன்படுத்த வேண்டும். நேரடியாக தடவும்போது. சருமத்தில் எரிச்சல் உண்டாகக்கூடும். ஒவ்வாமை ஏற்படுவது தெரிந்தால், இந்த தெரபியை தொடர்வதைத் தவிர்க்கலாம்.

    • நாள் முழுவதும் விரதம் இருக்கும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள்.
    • விரதம் இருப்பது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    உணவு உண்ணாமல் நாள் முழுவதும் விரதம் இருக்கும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தொடர்ச்சியாக அப்படி விரதம் இருப்பது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிலும் சிலர் 3 நாட்கள் உணவு உண்ணாமல் வெறும் தண்ணீரை மட்டும் பருகும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

    அப்படி சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை வெகுவாக குறைக்க உதவும் என்று நம்புகிறார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆபத்தானது. 72 மணி நேர விரதம் உடலில் என்னென்ன மாற்றங்கள், பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் பார்க்கலாம்.

    `தண்ணீர் விரதம் எனப்படும் 72 மணி நேரம் உணவு உண்ணாமல் இருப்பது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் உடலில் சேமிக்கப்பட்ட கிளைகோஜனை ஆற்றலுக்காக உடல் உறுப்புகள் பயன்படுத்திக்கொள்ளும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதற்கும் வழிவகுக்கும். ஆனால் உணவு உண்ணாமல் விரதத்தை தொடரும்போது உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு வெகுவாக எரிக்கப்படும். அது வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி எடை இழப்பை ஊக்குவிக்கும். ஆனால் அது ஆரோக்கியமான எடை இழப்பு அல்ல.

    72 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பவருக்கு 7 ஆயிரம் கலோரிகள் பற்றாக்குறை ஏற்படும். இது உடலில் சுமார் 900 கிராம் கொழுப்பு இழக்கப்படுவதற்கு சமம். அதனால் உடல் எடையை மோசமாக பாதிக்கலாம். சிலருக்கு இந்த செயல்முறை ஒத்துக்கொள்ளாமல் உடல் எடை அதிகரிக்கலாம். எனவே இத்தகைய உண்ணாவிரதங்களின்போது போதுமான அளவு தண்ணீர் பருகுவது, எலக்ட்ரோலைட், வைட்டமின், தாதுக்களை ஈடு செய்யும் திரவ உணவுகளை உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்க செய்துவிடும்.

    இதுபோன்ற நீண்ட கால உண்ணாவிரத முறைகளை மருத்துவரின் மேற்பார்வையின்றி செய்தால் கடும் ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்.

    மீள முடியாத சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம், சோடியம் பற்றாக்குறை, கால்சியம், மெக்னீசியம் இழப்பு, தசை மெலிந்து போவது உள்பட பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஒரு நாள் மேற்கொள்ளும் விரதத்தையே முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இருக்கையில் ஏதேனும் உடல்நல பிரச்சினைகள் இருப்பவர்கள், நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இத்தகைய விரத முறைகளை தவிர்க்க வேண்டும்.

    அதே வேளையில் மருத்துவ ஆலோசனையுடன் குறுகிய கால விரதம் இருப்பது புற்றுநோய், இதய செயலிழப்பு, அல்சைமர் மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற பிரச்சினைகளை தடுப்பதற்கு உதவும்.

    மேலும் உடலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிவதற்கும், நல்ல பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைந்து நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படுவதற்கும் துணை புரியும். மேலும் இத்தகைய உண்ணாவிரதத்தின் போது கல்லீரல் நொதிகளும் மேம்படலாம். நீண்ட ஆயுளுக்கும், இன்சுலினின் செயல்பாடு மேம்படுவதற்கும் உதவக்கூடும்.

    • சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை குறைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள்.
    • உணவில் பல்வேறு வகைகளை சாப்பிட முடியும்.

    உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று பல்வேறு உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு உண்ணும் உணவில் மாற்றங்கள் செய்வது சரியானதுதான்.

    சிலர் சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை குறைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள். சிலரோ சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று அதனை அறவே தவிர்க்கிறார்கள். உடல் எடை குறைவதற்கு அரிசி சாதம் அவசியம் என்பது சிலருடைய கருத்தாக இருக்கிறது.

    சப்பாத்திக்கு பதிலாக தினை, கேழ்வரகு, கம்பு,சோளம், வரகு, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு தயார் செய்யப்படும் தோசை, இட்லி, ரொட்டி உள்ளிட்டவற்றை உட்கொள்வது நல்லது என்பது சிலருடைய வாதமாக இருக்கிறது. அதனால் எதை சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்? சாதம் சாப்பிட வேண்டுமா? வேண்டாமா? சப்பாத்தியை சாப்பிடலாமா? அல்லது சிறுதானியங்களில் தயாரிக்கப்படும் ரொட்டியை சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது.

    உணவியல் நிபுணர் பூனம் துனேஜாவின் கருத்துப்படி, அரிசி மற்றும் ரொட்டி இவை இரண்டின் ஊட்டச்சத்து மதிப்புகளில் பெரிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும் உடல் எடை இழப்புக்கு இரண்டும் பயனுள்ளதாக இருக்கும். வாரத்தில் 4 நாட்கள் ரொட்டி சாப்பிட்டால், 2 நாட்கள் சாதம் சாப்பிட வேண்டும் என்கிறார்.

    ``இந்த வழிமுறையை பின்பற்றினால் உணவில் பல்வேறு வகைகளை சாப்பிட முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு சிறுதானியத்தை உட்கொள்ளலாம். அதிலும் கம்பு, தினை, கேழ்வரகு, சோளம் உள்ளிடவற்றை கொண்டு தயார் செய்யப்படும் ரொட்டியை சாப்பிடுவது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருக்கும் என்பதால் இன்சுலின் அளவு வேகமாக அதிகரிக்காது. மேலும் இந்த வகை ரொட்டியில் அதிக நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிரம்பி இருக்கும். அதனால் இந்த ரொட்டி சத்து மிக்கது.

    சீராக உடல் எடையை குறைக்க உதவும். அதேபோல் பழுப்பு அரிசியை சாப்பிடலாம். வெள்ளை அரிசியை உட்கொள்வதாக இருந்தால் குக்கரில் வேகவைக்காமல் பாத்திரத்தில் கொதிக்கவிட்டு வேகவைத்து கஞ்சியை வடிகட்டிய பிறகு சாதத்தை உட்கொள்ளலாம்.

    இருப்பினும் அரிசி, ரொட்டி இரண்டையும் உட்கொள்ளும் அளவில் கவனம் தேவை. ரொட்டியில் குளூட்டன் இருக்கும். அரிசியில் அது இருக்காது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடுவதை விட ரொட்டி அதிகம் சாப்பிடுவதுதான் பயனுள்ளதாக இருக்கும்.

    அதிலும் நீரிழிவு நோயால் கடும் பாதிப்புக்கு ஆளானவர்கள் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. அதனை சாப்பிட்டு எடை குறையும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது'' என்கிறார்.

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு அரிசி, ரொட்டி இவை இரண்டையும் உட்கொள்ளலாம்.

    • மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது.
    • கர்பப்பை அழுக்கை வெளியேற்றும்.

    குழந்தைப்பேறு அளிக்கும் சாலியா விதை

    சாலியா விதை மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை லட்டை சாப்பிடுபவர்கள் கர்பப்பை அழுக்கை வெளியேற்றும். கர்பப்பையில் உள்ள நீர்க்கட்டி சரியாகும். கண்டிப்பாக கழிவுகள் வெளியாவது உறுதி. கண்டிப்பாக குழந்தை பிறக்கும்.

    ஒரு கப் சாலியா விதையை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சாலியா விதையை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். அதே கப் அளவுக்கு கருப்பட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனையும் பொடித்து சாலியா விதை பொடியுடன் சேர்த்து சிறிதளவு நெய் சேர்த்து கலந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

    இந்த உருண்டைகளை மாதவிடாய் நாளில் முதல் நாளில் இருந்தே இந்த உருண்டைகளை சாப்பிட வேண்டும். முதல் நாளில் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு உருண்டை. அதுமட்டுமில்லாமல் ஒரு நாட்டுக்கோழி முட்டையும் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாட்களின் போது மூன்று அல்லது ஐந்து நாட்களும் உருண்டைகளும் மற்றும் நாட்டுக்கோழி முட்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

    சாலியா விதையில் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளது. இது ஆங்கிலத்தில் garden cress seeds என அழைக்கப்படுகிறது. இவ்விதையில் வைட்டமின் ஏ, இ, சி, நார்சத்துகள், புரதசத்துகள், இரும்பு சத்துகள் உள்ளது.

    ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

    சாலியா விதைகளில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது. ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க சாலியா உதவுகிறது. ஒரு தேக்கரண்டி சாலியா விதைகளில் 12 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.

    தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும்

    சாலியா விதைகளில் புரதம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், அவை ஆற்றல்மிக்க பால்சுரப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவை பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பாலூட்டி சுரப்பிகளில் இருந்து தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டவும், பராமரிக்கவும் மற்றும் அதிகரிக்கவும் இந்த விதை உதவுகிறது.

    மாதவிடாயை சீராக்கும்

    மாதவிடாயை சீராக்க உதவுகின்றன. கர்ப்பத்தை திட்டமிட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. சாலியா விதைகளில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் பின்பற்றுகிறது, இது ஒழுங்கற்ற மாதவிடாய்களை சீராக்க உதவுகிறது. இது ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளை இயல்பாக்குவதற்கும் ஒரு இயற்கையான வழியாகும்.

    உடல்எடையை குறைக்கும்

    சாலியா விதைகளில், நார்ச்சத்து மற்றும் புரதத்தின் வளமான ஆதாரங்களாக இருப்பதால், பசியின்மை மற்றும் அதிகப்படியான உணவைத் தவிர்க்க உதவுகின்றன. இந்த விதைகளில் உள்ள நல்ல புரதச்சத்து, உடலின் தசைகளை பராமரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    ஃபிளாவனாய்டுகள் (ஆன்டிஆக்சிடன்ட்கள்), ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ உள்ள சாலியா விதைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் பல்வேறு தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும், இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண் போன்ற பல்வேறு தொற்றுகளை தடுக்க உதவுகிறது.

    மலச்சிக்கலைப் போக்கும்

    சாலியா விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து, சீரான குடல் இயக்கத்தை உருவாக்குகிறது. மலச்சிக்கல் மற்றும் வாயு மற்றும் வீக்கம் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளை போக்க உதவுகின்றன. சாலியா விதைகள் ஊட்டச்சத்துக்களின் சக்தியாக இருப்பதால் அதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. சாலியா விதைகளை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின ஆலோசனையை மேற்கொண்டு உடல் பிரச்சினைக்கு தகுந்தார்போல் பயன்படுத்திக் கொள்ளாலாம்.

    • அதிக அளவு புரதமும், இரும்பு சத்தும் உள்ளது.
    • விட்டமின்-இ கண்கள் மற்றும், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

    நம் உடல் எடையை குறைக்கவும், நம் அழகை பராமரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் உணவு பொருட்களில் இந்த கருப்பு கவுனி அரிசியும் ஒன்று. அரிசி உணவுகளுக்கு பதிலாக சிறுதானியங்கள், மருத்துவ குணங்கள் உள்ள மற்ற அரிசி வகைகள் என எடுத்துக்கொள்ளும்போது, உடல் ஆரோக்கியம் மேம்படும். அந்த வகையில், ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

    கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்முறை:

    கருப்பு கப்வுனி அரிசியை இரண்டு, மூன்று தடவை நன்றாக கழுவி அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த அரிசியை நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த அரிசியை ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். வறுத்த மாவை ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

    கஞ்சி செய்வதற்கு ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் கருப்பு கவுனி அரிசி மாவினை போட்டு கஞ்சி பதத்திற்கு காய்ச்ச வேண்டும். (குறிப்பு ஒரு பங்கு மாவிற்கு 5 பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்) காய்ச்சிய கஞ்சியில் காரம், அல்லது இனிப்பு சுவையுடன் பரிமாறலாம். இந்த கஞ்சியை தொடர்ந்து ஒரு மாதம் காலையும், மாலையும் குடித்து வந்தால் நிச்சயமாக ஒரே மாதத்தில் உடல் எடைகுறைவதை நீங்களே உணரலாம்.

    கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்

    மற்ற அரிசி வகைகளான வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசி போன்றவற்றில் இருப்பதை விட கருப்பு கவுனி அரிசியில் குறைந்த அளவு மாவுச்சத்தும், அதிக அளவு புரதமும், இரும்பு சத்தும் உள்ளது. இதில் உள்ள விட்டமின்-இ கண்கள் மற்றும், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

    முக்கியமாக கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து உணவுக்குப் பின் ரத்த சர்க்கரை அளவு உயராமல் சீராக இருக்க உதவுவதுடன், செரிமானப் பிரச்சினைகள், வாயு சம்பந்தப்பட்ட பிரச்சினை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையையும் சரி செய்யக்கூடியது. கூடவே நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள சக்தி வாய்த்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நீரிழிவு, இதய நோய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை தடுக்கவல்லது.

    • முதலில் தர்பூசணி தோலை நீக்கிக்கொள்ள வேண்டும்.
    • ஜூசை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும்.

    உடல் எடையை குறைக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தர்பூசணி- அரை பழம்

    எலுமிச்சி சாறு- ஒரு ஸ்பூன்

    இஞ்சி- 1 துண்டு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் தர்பூசணி தோலை நீக்கிக்கொள்ள வேண்டும். அரை தர்பூசணி பழத்தின் விதை மற்றும் தோல்களை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு இஞ்சியின் தோலை நீக்கிக்விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இஞ்சியுடன் தர்பூசணி துண்டுகளையும் போட்டு அரைத்து எடுத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இந்த வடிகட்டிய ஜூசில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இந்த ஜூசை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறைவதில் நல்ல மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.

    ×