search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weight loss drink"

    • உடல் பருமன் என்பது தற்போது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது.
    • உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

    உடல் பருமன் என்பது தற்போது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். நீங்கள் உடல் எடை இழப்பு பயணத்தில் இருந்தால், இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். உங்கள் தொப்பை கொழுப்பைக் குறைக்க பல வழிகள் இருந்தாலும், உங்கள் அன்றாட வாழ்க்கையில் முதலில் மாற்ற வேண்டியது உங்கள் காலை பழக்கம்தான்.

    எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது உங்கள் காலை நேரத்தில் ஒரு நல்ல வழக்கத்தைச் சேர்ப்பது முக்கியம். எடை இழப்பு பானமான இஞ்சி மற்றும் எலுமிச்சை தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    இஞ்சி, எலுமிச்சை நீர் சமீப காலங்களில் இயற்கையாகவே உடல் எடையை குறைக்கும் சூப்பர் உணவாக உருவெடுத்துள்ளது. இந்த நேரடியான பானம், வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது, அதன் பல நன்மைகளுடன் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

    காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி எலுமிச்சை தண்ணீரை முதலில் குடிப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். இஞ்சி மற்றும் எலுமிச்சை பானம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. மேலும் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது. பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இந்த கலவையானது எடை இழப்புக்கு உதவுகிறது.

    இஞ்சி எலுமிச்சை நீர் உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி, சிறந்த செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது. வயிற்று உப்புசம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை நிர்வகிப்பதில் எலுமிச்சை, சிட்ரிக் அமிலம் நிறைந்தது, செரிமான சாறுகளை உற்பத்தி செய்கிறது. இஞ்சியில் உள்ள பண்புகளும் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகின்றன.

    உடல் எடையை குறைப்பதில் நச்சு நீக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இஞ்சி எலுமிச்சை நீர் அதற்கு திறம்பட பங்களிக்கிறது. இஞ்சி மற்றும் எலுமிச்சை பானம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துகின்றன, இது உடலின் சிறந்த நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கிறது. வெற்றிகரமான எடை இழப்புக்கு, சுத்தமான உள் அமைப்பு இன்றியமையாதது.

    இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் இந்த பானம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவும்.

    இஞ்சி எலுமிச்சை நீர் இயற்கையான ஆற்றல் எழுச்சியை வழங்குகிறது. இஞ்சி மற்றும் எலுமிச்சை இரண்டும் ஊக்கமளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன, அவை உடல் சோர்வை நீக்கி, ஆற்றலை அதிகரிக்கிறது.

    எனவே இந்த எளிய மற்றும் பயனுள்ள பானத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், இது உங்கள் உடல் அதிகப்படியான கொழுப்புகளை அகற்றி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சீரான உணவுடன் சேர்த்து தொடர்ந்து குடிக்கவும், ஒரு மாதத்திற்குள் எடை குறைவதை நீங்கள் கவனிக்கலாம்.

    • பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது.
    • ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.

    வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது. நமக்கு மார்க்கெட்டில் எளிதாகக் கிடைக்கும் சில காய்கறிகளில் மட்டும் ஜூஸ் செய்து குடிக்கலாம். அப்படிப் பார்த்தால் வாழைத்தண்டும், வெள்ளைப் பூசணியும் ஜூஸ் செய்து குடிக்க ஏற்றவை.

     இவை இரண்டையும் ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம். வாழைத்தண்டை பொடியாக நறுக்கிவிட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். வாழைத்தண்டிலேயே நிறைய நீர்ச்சத்து இருக்கும் என்பதால் அதிக தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அரைத்தடுத்த ஜூசில் சிறிது சீரகத்தூள், சிறிது மிளகுத்தூள், சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கலாம்.

     இதேபோல வெள்ளைப் பூசணியை ஜூஸ் செய்து குடிக்கலாம். இவற்றை வெறும் வயிற்றில் காலையில் குடிப்பது சிறந்தது. குடித்து முடித்த அடுத்த ஒரு மணி நேரத்துக்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. நீங்கள் கேட்டிருந்தபடி சுரைக்காய் ஜூஸ் குடிப்பதை மட்டும் தவிர்க்கவும்.

    சுரைக்காய் ஜூசில் உள்ள கசப்புத்தன்மை காரணமாக வயிறு மற்றும் குடல்பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் பற்றிக்கூட கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே அதைத் தவிர்க்கவும்.

    நெல்லிக்காய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்த ஜூசும் குடிக்கலாம். காய்கறி ஜூஸ் நல்லது என்ற எண்ணத்தில் எல்லா காய்கறிகளிலும் ஜூஸ் செய்து குடிக்கக்கூடாது. எனவே மேற்குறிப்பிட்ட மூன்று ஜூஸ் மட்டும் குடித்துப் பார்த்து உங்கள் உடலுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்று கவனியுங்கள். ஏற்றுக்கொண்டால் தொடரலாம். கூடவே உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்களையும் பின்பற்றினால் நிச்சயம் எடைக்குறைப்பு முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

    • உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஊட்டம்தரும்.
    • உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவு.

    தினையில் உள்ள மாவுச்சத்து, குழந்தைகள் மற்றும் அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. தினையில் புரதச்சத்து அதிகம் உள்ளதால், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவு. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஊட்டம்தரும் தினை பருத்தி பால் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    தினை அரிசி மாவு- 50 கிராம்

    பருத்தி விதை- 200 கிராம்

    கருப்பட்டி- 150 கிராம்

    உப்பு- 1 சிட்டிகை

    ஏலக்காய்தூள்- சிறிது

    சுக்குத் தூள்- சிறிது

    செய்முறை:

    சுத்தமான பருத்தி விதையை 10 முதல் 12 மணி நேரம் ஊறவைத்து நன்றாக அலச வேண்டும். அதில் உள்ள பஞ்சுகள் அனைத்தும் நீங்கும் அளவிற்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அதனை அரைத்து பால் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும் இரண்டு, மூன்று முறை பால் எடுக்க வேண்டும்.

    கருப்பட்டியை நீரில் கரைத்து வடிக்கட்டி கொதிக்க வைக்க வேண்டும் இதனுடன் பருத்திப் பாலை சேர்த்து கொதித்து வந்ததும், தினை அரிசிமாவை கரைத்து அதில் ஊற்ற வேண்டும். தீயை குறைத்து வைத்து நிதானமாக கைவிடாமல் 3 நிமிடம் கிளற வேண்டும்.

    இப்போது ஏலக்காய் தூள், சுக்குத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தூவி இறக்கவும். இப்போது தினை பருத்திப்பால் தயார். காலையில், மாலையில் உடற்பயிற்சி செய்வதற்கு அரை மணிநேரம் முன்பாக இந்த திணை பருத்திப்பாலை அருந்திவர ஊட்டச்சத்து உடலில் சேரும். சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

    ×