search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    சில பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாதாம்... ஏன் தெரியுமா?
    X

    சில பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாதாம்... ஏன் தெரியுமா?

    • வாழைப்பழத்தில் பொட்டாசியம், மாங்கனீசு சத்துக்கள நிறைந்துள்ளன.
    • மாம்பழத்தில் உள்ள என்ஸைம்கள் செரிமான அமைப்பை பாதிக்கக்கூடும்.

    வாழைப்பழத்தில் பொட்டாசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள நிறைந்துள்ளன. எனவே வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் நலம் பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    அதேபோல் மாம்பழம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக்கூடாது. ஏனென்றால் மாம்பழத்தில் உள்ள என்ஸைம்கள் செரிமான அமைப்பை பாதிக்கக்கூடும்.

    பப்பாளிப் பழத்தில் பாப்பைன் (papain) என்ற என்ஸைம் உள்ளது. எனவே பப்பாளி பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் வயிறு மந்தமாகுவதோடு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்திவிடும். எனவே பப்பாளி பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது.

    அன்னாசி பழத்தில் ப்ரோமிலைன் (Bromelain) என்ற என்சைம் உள்ளது. எனவே அன்னாசி பழத்தை சப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. அன்னாசி பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும் போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

    ஆரஞ்சு பழத்தில் அதிகமான அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. எனவே ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதனால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    ஆப்பிளில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே ஆப்பிளை சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதனால் வயிற்றில் வீக்கம் உண்டாவதோடு மந்தமான உணர்வு ஏற்படும்.

    Next Story
    ×