search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vasudevanallur"

    • வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் பணிகளை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 9 -வது வார்டு சுடலை போத்தி தெருவில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, சரவணன், நியமனக்குழு உறுப்பினர் முனீஸ், சுமங்கலி கோமதி சங்கர், பொறியாளர் பாலகிருஷ்ணன், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    • வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., ராயகிரி பேரூர் செயலாளர் குருசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் மருதப்பன், யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர் சரவண குமார், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், துணைத் தலைவர் மாடசாமி, செயலாளர் பொன் செந்தில்குமார், கவுன்சிலர்கள், பெரி யாண்டவர், பாலமுருகன், தங்க ரத்தினராஜ், நெல் கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி யராஜா, கவுன்சிலர்கள், உள்ளார் தளவாய்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா கணேசன், துணைத் தலைவர் ரமேஷ், செயலாளர் பொறுப்பு சண்முகையா, கவுன்சிலர்கள், வாசுதேவநல்லூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத் தலைவர் லைலா பானு, செயல் அலுவலர் மோகனா மாரியம்மாள் மற்றும் வார்டு உறுப்பி னர்கள், விஸ்வை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிமணிகண்டன், செயலர் உமாமகேஸ்வரி, கவுன்சிலர்கள், சிவகிரி ஆயில் ராஜா பாண்டியன், மருதுபாண்டியன், மாரித்துரை, சி.எஸ்.மணி, வார்டு உறுப்பினர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், விக்னேஷ், முத்துலட்சுமி தங்கராஜ், பாலகுரு, அவைத்தலைவர் துரைராஜ், புல்லட் கணேசன், ராமச்சந்திரன், இளையராஜா, உரக்கடை சக்திவேல், முத்துராஜ், மணிகண்டன், விக்கி, முனியராஜ், மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள், தென்காசி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த திருவேங்கடம், குருவிகுளம், சங்கரன்கோவில் வடக்கு தெற்கு அனைத்து பகுதியி லிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி நீதிமன்றம் அருகே மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் மருதப்பன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் முத்துவேலன், வேலாயுதம், வன்னிராஜா, பேட்ரிக்பாபு, சின்னத்துரை, மாலாதேவி, முருகேசன், குமஸ்தாக்கள் கருப்பையா, ராமராஜ், செல்வகுமார், தங்கப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே எஸ்.டி.குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமையில், சேர்மன் எஸ்.டி.முருகேசன் முன்னிலையில் முதல்-அமைச்சருக்கு மலர்க்கொத்து அளித்து வரவேற்பு அளிக்க ப்பட்டது. இதில் ஒருங்கி ணைப்பாளர் அகஸ்டின், ஆசிரி யர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் யூனியன் கூட்டம் நடைபெற்றது.
    • 4 குழுக்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் யூனியன் கூட்டம் நடைபெற்றது. யூனியன் சேர்மனும் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் நியமனக்குழு,கல்விக்குழு, வேளாண்மைக் குழு, பொது நோக்க குழு ஆகிய 4 குழுக்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், அருணாதேவி பாலசுப்ரமணியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லி புஷ்பம், கிராம ஊராட்சி மேலாளர் தில்லை, மேலாளர் கருத்தப்பாண்டியன், அலுவலர்கள் சிலம்பரசன், முத்துக்குமார், கூடலூர் கிளை செயலாளர் குருசாமி பாண்டியன், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு பேச்சுப்*போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு பரிசுகளை பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் வழங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அரசு கிளை நூலகம் சார்பில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத்தலைவர் லைலா பானு ஆகியோர் தலைமை தாங்கினர். நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், நூலக ஆய்வாளர் கணேசன், வாசகர் வட்ட தலைவர் கணேசன், அய்யன் திருவள்ளுவர் அறப்பணி மன்றம் தலைவர் மாரியப்பன், வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், காந்திஜி சேவா சங்க செயலாளர் தவமணி, செயல் அலுவலர் மோகன மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் சங்க தலைவர் சந்திரன் வரவேற்று பேசினார்.

    இவ்விழாவில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும் நடைபெற்றது. இதில் காமராஜர் மகளிர் உயர்நிலைப்பள்ளி, நாடார் உறவின்முறை தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய ஜவகர் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் மற்றும் 2-ம் பரிசுகளை பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத் தலைவர் லைலாபானு, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், தவமணி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுமங்கலி கோமதி சங்கர், கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள், நூலக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை நூலகர் அமுதா நன்றி கூறினார்.

    • தலையனை பகுதி மக்கள் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தர கோரிக்கை வைத்தனர்.
    • 49 குடும்பம் வசிக்கும் தலையனை பகுதியில் 15 வீடுகள் மட்டும் உள்ளன.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் பழங்குடியினர் பெருமை தின விழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், பழங்குடியினரை பெருமைப்படுத்தும் விதமாக பழங்குடியினர் பெருமை தின விழா பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:-

    தலையனை பகுதி மக்கள் புளியங்குடியில் இருந்து வாசுதேவநல்லூர் வழியாக தலையனை வரை பஸ் வசதியும், வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தரவும் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் பஸ் இயக்கப்படும் எனவும், 49 குடும்பம் வசிக்கும் தலையனை பகுதியில் 15 வீடுகள் மட்டும் உள்ளன. கூடிய விரைவில் நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வாசுதேவநல்லூரில் நடைபெற்ற பழங்குடியினர் பெருமை தின விழா பேரணியில், சிவகிரி தலை யணை, கடையநல்லூர் கலைமான்நகர் பளியர் ஆகிய இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர்.


    இப்பேரணியானது, வாசுதேவநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி பழைய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், தென்காசி தனி தாசில்தார் (ஆதிந) முருகசெல்வி, சங்கரன்கோவில் தனி தாசில்தார் (ஆதிந) பரிமளா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி காப்பாளர்கள், அலுவ லர்கள், பழங்குடியின மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் பாண்டியன், தலையனை பள்ளியின் முன்னாள் தலை மை ஆசிரியரும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜ்மோகன், கிராம நிர்வாக அலுவலர்கள் வாசு தேவநல்லூர் பாலகணேஷ், திருமலாபுரம் முருகானந்தம், நாரணபுரம் 2 கனகவள்ளி, வருவாய் ஆய்வாளர் வள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
    • நேருவின் படத்திற்கு பள்ளியின் தாளாளர் தவமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

    நேருவின் திருவுருவப் படத்திற்கு பள்ளியின் தாளாளர் தவமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாணவர்கள் நேரு பாடல் பாடினார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா மற்றும் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
    • வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி கால்நடைகளுக்கு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கால்நடை களுக்கு தடுப்பூசி செலுத்தப்ப ட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பயனாளி ஒருவருக்கு இலவச ஆடு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், மலையடிக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி குமாரி, தலைமை கால்நடை மருத்துவர் கருப்பையா, கிளை செயலாளர் கார்த்திக், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியமும், ஜல்ஜீவன் இணைந்து நடத்திய களநீர் பரிசோதனை பயிற்சி முகாம்.
    • தண்ணீரின் தரம், தண்ணீரின் சேமிப்பு, பாதுகாப்பு, தண்ணீரால் பரவும் நோய்கள், நீர் மாசு குறித்து விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளிக்கபட்டது.

    சிவகிரி:

    தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியமும், தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல்ஜீவன் இணைந்து நடத்திய களநீர் பரிசோதனை பயிற்சி முகாமை நிர்வாகப் பொறியாளர் கோபால் (திட்ட மற்றும் பராமரிப்பு கோட்டம்) தலைமை தாங்கி தென்காசி யூனியனில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி நிர்வாக பொறியாளர் ஆதிநாராயணன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 யூனியன்களில் பயிற்சி நடைபெற்று வருகிறது.

    இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற செயலர், மக்கள் நல ஒருங்கிணைப்பாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான களநீர் பரிசோதனை பயிற்சி முகாம் வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் வைத்து நேற்று நடைபெற்றது. யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

    பயிற்சி முகாமில் ராஜேஸ்வரி, பிரபாவதி, தனசேகரன், முருகன் ஆகியோர் தண்ணீரின் தரம், தண்ணீரின் சேமிப்பு, பாதுகாப்பு, தண்ணீரால் பரவும் நோய்கள், நீர் மாசு குறித்து விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளித்தனர். பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.

    • வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 23-வது மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.
    • மாணவர்கள் ஓம்கார ஆசனம், விருச்சிக ஆசனம், காலபைரவ ஆசனம் போன்ற பல்வேறு வகையான யோகாசனங்கள் செய்து அசத்தினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு பற்றிய 23-வது மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் 600 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    போட்டியில் பள்ளி மாணவ- மாணவிகள் ஓம்கார ஆசனம், விருச்சிக ஆசனம், காலபைரவ ஆசனம், விபரீத தண்டாசனம் போன்ற பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காண்பித்து அசத்தினர்.

    இதில் மாநில அளவில் பல்வேறு பிரிவுகளாக நடந்த போட்டியில் தரணி பள்ளி மாணவர்கள் பொதுபிரிவில் 43 தங்கம், 23 வெள்ளி, 8 வெண்கலம், சாம்பியன்ஷிப் பிரிவில் 3 மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் ஆப் சாம்பியன் பட்டத்தை வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், சாம்பியன்ஷிப் பட்டத்தை அரியநாயகிபுரம் ஸ்ரீ லட்சுமி மெட்ரிக்குலேஷன் பள்ளியும் தட்டிச் சென்றனர். தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மாநில அளவில் முதல் பரிசு பெற்றனர். 2-ம் பரிசை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ -மாணவிகள் தட்டிச் சென்றனர்.

    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தரணி குழுமத்தின் தலைவர் பழனி பெரியசாமி, சேர்மன் சம்பத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். யோகாசன போட்டிக்கு சிறப்பு விருந்தினராக தரணி பள்ளி நிர்வாகத்தின் தாளாளர் ராமலிங்கம், தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் குழந்தைசாமி ஆகியோர் பங்கேற்று உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கு உண்டான வழிமுறைகளையும், யோகா பற்றிய விழிப்புணர்வையும், நன்மைகளையும் மாண வர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழையும் வழங்கினார்.

    விழாவில் யோகா ஆசிரியர்கள், பள்ளியின் ஆசிரிய- ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரணா யோகா பயிற்சி பள்ளியின் ஆசிரியரும், தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு தென்காசி மாவட்ட செயலாளருமான அருண்குமார் செய்திருந்தார்.

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி குழுமத்தின் நிறுவனர் தொழில் அதிபர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார்.
    • சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் எஸ்.ரகுபதி, நீதிபதிகள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    தற்போது எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரிக்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளது. நேற்று தொடக்க விழா மற்றும் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி குழுமத்தின் நிறுவனர் தொழில் அதிபர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் முன்னிலை வகித்தார்.

    சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பவானி சுப்புராயன், தாரணி மற்றும் பால்தாய் தங்கப்பழம், ரம்யாதேவி முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    சட்டக் கல்லூரியின் துணை முதல்வர் கலைச் செல்வி வரவேற்றார். சட்ட கல்லூரியினை தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

    நூலகத்தை ஐகோர்ட் நீதிபதி பவானி சுப்புராயன், மூட் கோர்ட் ஐகோர்ட் நீதிபதி தாரணியும், முதல் மாணவர் சேர்க்கையினை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியும் தொடங்கி வைத்தனர். கல்லூரி கலையரங்கத்தினை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியை வி.எஸ்.ஆர்.ஜெகதீசன் தொகுத்து வழங்கினார்.


    தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நீதிபதிகள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    திறப்பு விழாவில் நெல்லை மாவட்ட நீதிமன்ற நீதிபதி குமரகுரு, பன்னீர்செல்வம், சிவகிரி நீதிபதி பிரியங்கா, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், தென்காசி தனுஷ்குமார் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார், சங்கரன்கோவில் ராஜா, தென்காசி பழனி நாடார், கடையநல்லூர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி, ராஜ பாளையம் தங்க பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட செய லாளர் சிவபத்ம நாபன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், வாசுதேவநல்லூர் பேரூராட்சித் தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், மகாத்மா காந்தி சேவா சங்கம் தவமணி, சுமங்கலி சமுத்திரவேலு, சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், சிவகிரி நீதிமன்ற அலுவலர்கள், கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சட்டக் கல்லூரியின் பேராசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.

    • வாசுதேவநல்லூரில் கே.சுப்பிரமணிய நாடார்- வடிவம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லூரிகள், பள்ளி செயல்பட்டு வருகின்றன.
    • சட்டக்கல்லூரி தொடங்கு வதற்கு மத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.

    வாசுதேவநல்லூர்:

    வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    வாசுதேவநல்லூரில் கே.சுப்பிரமணிய நாடார்- வடிவம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, மருத்துவ கல்லூரி, மெட்ரிகுலேசன் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    தற்போது இங்கு புதிதாக எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி தொடங்கு வதற்கு மத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று, அதன் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு எஸ்.டி. கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்குகிறார். கல்வி குழுமத்தின் செயலாளர் எஸ்.டி. முருகேசன் வரவேற்று பேசுகிறார். தமிழக சபாநாயகர் அப்பாவு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பவானி சுப்புராயன், தாரணி, ஸ்ரீமதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

    ஏற்பாடுகளை எஸ்.டி. கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குருதி கொடையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
    • சிறந்த வட்டார மருத்துவமனைக்கான விருது வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவமனைக்கு கிடைத்தது.


    சிவகிரி:


    உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குருதி கொடையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் குருதி கொடை சிறப்பாக பெற்று தந்த சிறந்த வட்டார மருத்துவமனைக்கான விருது வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவமனைக்கு கிடைத்தது. இதற்கான விருதை வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய்க்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வழங்கி கவுரவித்தார்.


    இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள், வாசு வட்டார மருத்துவமனை மருத்துவர்கள், அலுவலர்கள், அனைத்து ஊழியர்களும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர்.




    ×