search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boomi Pooja"

    • துரைச்சாமியாபுரம் கிராம ஊராட்சியில் சிமெண்ட் ரோடு, வாருகால் ஆகிய திட்டப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே துரைச்சாமியாபுரம் கிராம ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.39.99 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் ரோடு, வாருகால், ஊரணி புணரமைப்பு, மயானக்கூடம் ஆகிய திட்டப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி ஏசுதாஸ், முனியராஜ், துரைச்சாமியாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா, கிளை செயலாளர்கள் வேல்பாண்டியன், கண்ணன், உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர் கதிர், மல்லீஸ்வரன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.9.76 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது.
    • ஊராட்சித் தலைவர் தனலட்சுமி சரவணன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து ஊராட்சிக்குட்பட்ட மறக்குடியில் ரேஷன் கடை இல்லாமல் இருந்தது. இதனால் கிராம மக்கள் ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டனர். அதன்படி அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.9.76 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் தனலட்சுமி சரவணன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சித்ரா வரவேற்றார். இதில் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் இசககி, ஊர் பிரமுகர்கள் வீரபாண்டி, கணபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார்.
    • கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி, பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் 11 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினர் உலகராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின் வரவேற்றார். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் கலந்து கொண்டு ரூ.2.33 கோடி மதிப்பிலான வகுப்பறை கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி, பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முத்து முருகன், கவுரி, ஒப்பந்தக்காரர் தங்கராசு, ஆசிரியர்கள் சீனிவாசன், மோகன்ராஜ், சென்னப்பன், சரவணசெல்வி உள்பட அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரியசாமிபுரம் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய 15-வது நிதிக்குழுவில் இருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெரியசாமிபுரம் ஊராட்சிமன்ற தலைவர் மரிய ஆரோக்கிய சூசை, துணை தலைவர் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டிபட்டி ஒன்றியத்தில் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து டி. சுப்புலாபுரம் வரை கிராம இணைப்பு தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
    • திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளை முகம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் டி.சுப்புலாபுரம் எளிதாக சென்று வர இந்த சாலை ஏதுவாக இருக்கும்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி ஒன்றியத்தில் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து டி. சுப்புலாபுரம் வரை கிராம இணைப்பு தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. சுப்புலாபுரம், பொம்மிநாயக்கன்பட்டி பொதுமக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான கிராம இணைப்பு சாலை கோரிக்கைக்கு தற்பொழுது ரூ.2.29 கோடி மதிப்பில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளை முகம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் டி.சுப்புலாபுரம் எளிதாக சென்று வர இந்த சாலை ஏதுவாக இருக்கும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் மெயின் ரோடு வழியாக 6 கிலோமீட்டர் சுற்றி வந்து செல்லும் நிலை இருந்தது.

    தற்பொழுது விவசாயம் மற்றும் ஜவுளி பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல சிறு பாலங்கள் கட்டுவதற்கும் இத்திட்டப் பணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் கிராம சாலை திட்டத்தில் 2½ கி.மீ. தொலைவிற்கு 5 பாலங்களுடன் நடைபெறும் இத்திட்டத்திற்கு சுப்புலாபுரம் ஊராட்சி தலைவர் அழகுமணி, திம்மரச நாயக்கனூர் ஊராட்சி தலைவர் அக்க்ஷயா தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சோலைமலையான்பட்டியில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது.
    • விழாவில் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கீழவிளாத்திகுளம் ஊராட்சி சோலைமலையான்பட்டி கிராமத்தில் 15-வது நிதிக்குழு ஒன்றிய நிதியில் இருந்து ரூ. 9.92 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் துரைராஜ், கீழ விளாத்திகுளம் ஊராட்சி தலைவர் நவநீத கண்ணன், துணைத்தலைவர் செண்பகராஜ், ஊராட்சி செயலர் செந்தில், ரவிச்சந்திரன், செண்பகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருவந்தா முதல் சோலைசேரி வரையில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
    • இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜை விழாவுடன் நேற்று தொடங்கியது.

    தென்காசி:

    வீ.கே. புதூர் அருகே உள்ள கருவந்தா ஊராட்சியில் கருவந்தா முதல் சோலைசேரி வரையில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் கருவந்தா ஊராட்சி தலைவர் தானியேல் முயற்சியியால் ரூ. 48 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கருவந்தா முதல் சோலைசேரி வரையிலான இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜை விழாவுடன் நேற்று தொடங்கியது. இதில் கருவந்தா ஊராட்சி தலைவர் தானியேல், துணை தலைவர் மங்களம், ஊராட்சி செயலர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள் பேச்சியம்மாள் மாரிச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணம்மாள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • சரவணாபுரம் முதல் சண்முகநாதபுரம் வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சி சரவணாபுரத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத் தின் கீழ் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் சரவணாபுரம் முதல் சண்முகநாதபுரம் வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். துணை சேர்மன் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சரஸ்வதி, முனியராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் விஜயகுமார், தளவாய்புரம் கிளை செயலாளர் வேல்பாண்டியன், சரவணாபுரம் கிளை நிர்வாகிகள் ஜெயராஜ், பெரியசாமி, வாசுதேவநல்லூர் ஒன்றிய உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர்கள் கதிர், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்திற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.
    • பூமி பூஜை விழாவுக்கு பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், நெல்கட்டும் செவல் ஊராட்சியில், மாவீரன் பூலித்தேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றிற்கு பூமி பூஜை செய்து பணி ஆரம்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வாசுதே வநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டி யன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திர மோகன், ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் மகேந்திரன், முனியராஜ், கிளைச் செயலாளர் ஸ்டாலின், ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்ப சாமி, ஓவர்சீஸ் முத்துமாரி, அரசு ஒப்பந்த தாரர்கள் கார்த்தி, மாரித்துரை, பூசைத்துரை, உள்ளார் மணி கண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தென்மலை ஊராட்சியில் தார் சாலை வசதிகள் செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • ரூ.1,86 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வடகாசி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தென்மலை ஊராட்சியில் கடந்த 10 வருடங்களாக சாலை வசதிகள் செய்து தராமல் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி தங்களது ஊர்களுக்கு சென்று வருவதாக தென்மலை, சுப்பிரமணியாபுரம், அருக ன்குளம், செந்தட்டியாபுரம், புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தார் சாலை வசதிகள் செய்து தருமாறு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.

    அக்கோரிக்கையை ஏற்று தார்சாலை அமைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மூலமாக பணி ஆணையை பெற்று பிரதம மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1,86 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வடகாசி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது.

    யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் மீனலதா முத்தரசுபாண்டியன், துனைத்தலைவர் தேவராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், ஒன்றிய துணை செயலாளர் குமார், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கிணை ப்பாளர் முருகன் சாமிநாதன், கிளைச் செயலாளர் கருத்த பாண்டியன், குருசாமி, முருகேசன், ராஜகோபால், பரமன், அருகன்குளம் கூட்டுறவு சங்கத்தலைவர் முத்துராமன், தென்காசி மாவட்ட உதவி செயற்பொறியாளர் மகிழமுத்து, வாசு. ஒன்றிய உதவி பொறியாளர் அருள் நாராயணன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பரமன், தேவபிச்சை, பிச்சைமணி, காளிமுத்து, கிரகதுரை, முத்தையா, வெள்ளகணேஷ், ராஜீவ் காந்தி, குணா, மணி, சங்கர், அருண், சக்தி, உள்ளார் மணிகண்டன், விக்கி, அரசு ஒப்பந்ததாரர்கள் மதன், மனோஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சாலையை அமைத்துத் தர முயற்சிகள் மேற்கொண்ட யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியனுக்கு தென்மலை, சுப்பிர மணியா புரம், அருகன்குளம், செந்தட்டி யாபுரம் புதூர் ஆகிய ஊர்களை சேர்ந்த பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் பணிகளை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 9 -வது வார்டு சுடலை போத்தி தெருவில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, சரவணன், நியமனக்குழு உறுப்பினர் முனீஸ், சுமங்கலி கோமதி சங்கர், பொறியாளர் பாலகிருஷ்ணன், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக விளாத்திகுளம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • ராமச்சந்திராபுரத்தில் கட்டப்பட்டு வரும் கலையரங்க பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    விளாத்திகுளம்:

    புதூர் ஊராட்சி ஒன்றியம், ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக விளாத்திகுளம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    மேலும் கிராமத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள நியாய விலை கடையை புதுப்பித்து புதியக்கட்டிடம் அமைப்பதற்கும், பழுதடைந்த நிலையில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தினை பார்வையிட்டு புதிய கூட்டுறவு சங்க கட்டிடம் அமைப்பதற்கும், வாறுகால் பாலம் அமைப்பதற்கும், கிராமத்தில் கட்டப்பட்டு வரும் கலையரங்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சசிகுமார், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, வருவாய் ஆய்வாளர் மாடசாமி, மின் வாரிய உதவி பொறியாளர் செல்வகுமார், கூட்டுறவு சார் பதிவாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் யுவராம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், கூட்டுறவு சங்க தலைவர் நவநீதகண்ணன், கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×